சுபகிருது – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்


பரிசேஷணத்திற்கு இணையான ஒன்று ஸ்த்ரீகளுக்கு உண்டா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகளுக்கு, பரிசேஷணத்திற்கு இணையாக ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் உட்கொள்ளும் எதுவாக இருந்தாலும் அது நம் அந்தர்யாமிக்கு ஒரு நிவேதனமாக நினைத்துக்கொண்டு உண்ணும் பாவம் இருக்கவேண்டும். அதனால் கோவிந்த திருநாமத்தைச் சொல்லிவிட்டு சாப்பிடுவது நல்லது. ஸ்த்ரீகள், குழந்தைகள் எல்லாருமே முதல் பிடியை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் போது கோவிந்த கோவிந்த கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.


ஸ்த்ரீகள், யாகம் நடக்காத போது யாகசாலைக்குச் சென்று ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் திவ்ய ப்ரபந்தம் ஆகியவற்றை அங்கு சேவிக்கலாமா?

Vidwan’s reply:

யாகசாலைக்குச் சென்றுதான் பாராயணம் பண்ண வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது என்பது முக்கியமான விஷயம். அதாவது ஸ்திரீகளுக்கு திவ்ய பிரபந்தம் சேவிக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. நன்றாக பல தடவை அனுபவித்துச் சேவிக்கலாம். அதைக் கோவிலுக்கு சென்றுதான் சேவிக்க வேண்டும், யாகசாலைக்குச் சென்று தான் சேவிக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. அதனால் யாகம் நடக்காத போது அங்குச் சென்று சேவிக்கலாமா என்றால் அப்படிச் சேவித்தே ஆகவேண்டும் என்று நினைக்க வேண்டாம் என்றுதான் பதில் சொல்லத் தோன்றுகிறது. அப்படியே சேவிக்கவேண்டும் என்றாலும் அங்கே இருக்கக்கூடிய அந்த நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கிக் கொள்ளவேண்டும். அது முக்கியம். ஆனால் இந்தக் காரியம் அங்குதான் சென்று செய்யவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. ஆத்திலேயே அனுபவக்ரமமாக எத்தனை முறை வேண்டுமானாலும் ஸ்த்ரீகள் திவ்ய ப்ரபந்தத்தை பாராயணம் பண்ணிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்த்ரீகள் சொல்வதைப் பற்றி நிறைய விளக்கங்கள் சுதர்சனத்தில் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.


க்ருஹங்களில் புருஷர்கள் திருவாராதனம் செய்துவிட்டு அலுவலகத்திற்குச் சீக்கிரம் கிளம்பிச் சென்றுவிட்டால், அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள், குழந்தைகள் மற்றும் அகத்தில் இருக்கும் பெரியோர்களுக்கும் பெருமாள் தீர்த்தம் சாதிக்கலாமா?

Vidwan’s reply:

க்ருஹத்தில் இருக்கின்ற புருஷர்கள் திருவாராதனம் பண்ணிவிட்டு சீக்கிரம் கிளம்பிவிட்டால், ஆத்தில் இருக்கின்ற குழந்தைகளுக்கு அந்த க்ருஹணியானவள் அவசியம் பெருமாள் தீர்த்தம் கொடுக்கலாம். பெரியோர்களுக்கும் கொடுக்கலாம் என்றுதான் தோன்றது. ஏனென்றால் பொதுவாகப் புருஷர்கள் பரிசேஷனம் பண்ணுவதற்க்கு முன் பெருமாள் தீர்த்தம் சாதிக்கிறது வழக்கம். சாதம் சாதிக்கும் பொழுது ஸ்த்ரீகள்தான் அந்தப் பெருமாள் தீர்த்தத்தைச் சாதிக்கிறார்கள். அதனால் இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படும்போது, அதாவது அகத்துப் புருஷன் அலுவலகத்திற்குச் சீக்கிரம் கிளம்பிப் போய்விட்டால், பெரியோர்களுக்கும் அந்த ஸ்த்ரீயானவள் பெருமாள் தீர்த்தம் சாதிக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.


நமஸ்காரம் அடியேன். நம் வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஸ்திரீகள் கருகமணி கோர்த்த செயின் அணிந்து கொள்ளலாமா? அடியேனுக்குத் தெளிவு படுத்தவும்.

Vidwan’s reply:

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பெரியோர்கள் அனுஷ்டானத்தைப் பார்த்தால் ஸ்த்ரீகள் கருகமணி சேர்த்துக் கொள்வது கூடாது என்றில்லை என்பது தெரிகிறது . பெரிய பெரிய சுமங்கலிகள் எல்லாம் ஆபரணங்களில் கருகமணி சேர்த்து போட்டுக்கொண்டுள்ளதை அடியேன் பார்த்ததுண்டு, சேவித்ததுண்டு. பெரியோர்கள் கருகமணி தரித்துக் கொள்கின்றனர். மங்கள சூத்திரத்தில் பொதுவாக தமிழ்நாட்டு ஸ்த்ரீகள் தரித்து கொள்வதில்லை. அது வழக்கத்திலும் இல்லை. ஆனால் கருகமணி நிஷேதம் அப்படி என்று இல்லை என்று தான் தெரிகிறது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top