சுபகிருது – தை – ஸ்த்ரீ தர்மம்


ஸ்த்ரீகள் யாரேனும் நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்களாக இருந்தனரா? ஆம் என்றால், அவர்களைப் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.

Vidwan’s reply:

நம் ஸம்பிரதாயத்தில் ஸ்த்ரீகள் ஆசார்யகம் பண்ணதாக ஒரு ப்ரமாணமும் இல்லை.


அடியேன் தினமும் ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதனை செய்கின்றேன் அதன் அருளிச்செயலில் என் பாரியாளும் பங்கேற்பார். இது சரியா?

Vidwan’s reply:

ஆத்துப்பெருமாளுக்குச் சேவிக்கும் அருளிச்செயலில் பாரியாள் பங்கேற்பதென்பது அவரவர்கள் அகத்து சௌர்யம். அவர்கள் பங்குக்கொள்வதில் தவறொன்றுமில்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்கு ஒருகால் புருஷர்கள் முன் சொல்ல வேண்டாம் என்று எண்ணமிருந்தால் அவர்கள் தனியாகவும் சேவிக்கலாம்.


ஆத்துக்காரர் பரமபதித்து சுபம் முடிந்த பிறகு ஆழ்வார் ஆசார்யர் ஸ்ரீஸுக்திகள் கற்றுக்கொண்டிருக்கிறவர்கள், மீண்டும் அந்த வகுப்புகளில் தொடர்ந்து ஸேவிக்கலாமா/கற்கலாமா?

Vidwan’s reply:

ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸ்ரீஸுக்திகளைத் தொடர்ந்து கற்கலாம். கற்கவேண்டும். அவ்வாறு கற்பதினால் மட்டுமே கஷ்டத்தையும் மனதையும் மாற்றும்.


பொதுவாக எத்தனை நாட்கள் மாசி நோன்பு சரடை (கன்யா பெண்கள் மற்றும் சுமங்கலி ஸ்த்ரீகள் என இருவரும்) நாம் அணிந்துகொள்ளலாம்?

Vidwan’s reply:

பொதுவாக மாசிசரடை, கன்யா பெண்களும் மற்றும் சுமங்கலி ஸ்த்ரீகளும் பங்குனி மாதம் முழுவதும் அணிந்துகொள்ள வேண்டும். அதற்கு மேல் முடியுமானால் வைத்துக்கொள்ளலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top