சோபகிருது – ஐப்பசி – ஸ்த்ரீ தர்மம்


ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் (ஆத்ல வேறு யாருக்கும் புஷ்பம் தொடுக்கத் தெரியாத பக்ஷத்தில்)புஷ்பம் (வாழை நார்)தொடுத்துக் கொடுத்து அதை புருஷா ஜலம் தெளித்து பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் பூத் தொடுக்கக்கூடாது என்பது ஶாஸ்திரம். புருஷர்கள் பூத் தொடுக்க கற்றுக் கொள்ளலாம்.


ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் குந்தி ஸ்துதி, கோபிகா கீதம், இந்திரன் செய்த ஸ்ரீஸ்துதி போன்ற புராண ஸ்துதிகளைச் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் ஸ்துதிகளைப் பொதுவாகச் சேவிக்கவேண்டிய அவசியமில்லை என்பதாக ஸம்ப்ரதாயம். ஸ்த்ரீகளுக்கு பெரியவர்கள் சந்தை சொல்லிக்கொடுத்து சொல்லும் வழக்கமில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஸ்தோத்ரம் என்கிற முறையில் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


நவராத்திரியில் தாயாருக்காக வைக்கப்படும் கலசம் மரப்பாச்சி பொம்மைக்கு முன் வைக்கவேண்டுமா? அந்தக் கலசத்தை ஸ்த்ரீகள்தான் வைக்கவேண்டுமா? கைம்பெண்கள் மட்டும் இருக்கும்போது அவர்கள் வைக்கலாமா?

Vidwan’s reply:

நவராத்திரியில் கலசம் வைப்பது, மரப்பாச்சி பொம்மை வைப்பது என்பது சில க்ருஹங்களில் வழக்கமிருக்கிறது. சில க்ருஹங்களில் அவை வைக்காமலே கொலு வைக்கும் வழக்கமுண்டு. இதுதான் ஸம்ப்ரதாயம் என்று இதில் கிடையாது. அவை வைப்பதும், எது முதலில் வைக்கவேண்டும் என்பதும் அவரவர்கள் க்ருஹ வழக்கப்படி பின்பற்றவும்.

பொம்மை வைப்பது என்பதில் முதலில் சுமங்கலி ஸ்த்ரீகள் அல்லது கன்யா பெண்கள் பொம்மை வைப்பதுதான் வழக்கம். யாரும் க்ருஹத்தில் இல்லையென்றால் கொலு வைத்துவிட்டு வெற்றிலை பாக்கு கொடுப்பதற்கும் வாய்ப்பிருக்காது. சுமங்கலியோ கன்யா பெண்ணோ அகத்தில் இல்லையென்றால் அந்த அகத்து புருஷ குழந்தைகளை முதல் பொம்மை வைக்கச்சொல்லலாம் அப்படி இல்லையென்றால் பக்கத்தில் யாரேனும் கன்யா பெண்கள் இருந்தால் அவர்களைக் கொண்டும் பொம்மை வைக்கச் சொல்லலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top