சோபகிருது – சித்திரை – ஸ்த்ரீ தர்மம்


ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளலாமா? பாராயணம் செய்யலாமா? ஏதேனும் விதிமுறை உள்ளதா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளவதென்பது ப்ராசீனமான ஸம்ப்ரதாய வழக்கத்தில் இல்லை. நம் பெரியவர்களின் வழக்கத்திலும் இல்லை. அதாவது ஸம்ப்ரதாயத்தில் என்ன வந்திருக்கிறதோ அதை நாம் செய்துகொண்டிருக்கிறோம்.அந்த ரீதியில் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் நவீன ரீதியில் சில இடங்களில் செய்கிறார்கள். அதை அவரவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது.


ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் வீடு மாற்றிப்போகக்கூடாது?

Vidwan’s reply:

க்ருஹப்ரவேசம் பண்ணுவதில் ப்ரதானமே ஸ்த்ரீகளுக்குதான், அவர்களுக்கு அனுகூலமாகத்தான் நாள் பார்க்கனும். ஒரு க்ருஹத்தினுடைய முக்கியமான அதிபத்னி(தி) என்ற நிலையில் இருப்பவள் ஸ்த்ரீதான். அவள் கர்பகாலத்தில் இருக்கிறப்படியால் பெரியளவில் அலைச்சல் வேண்டாம் என்ற ரீதியிலும், மேலும் அவளும் வ்ரதகாலத்தில் இருக்கின்றபடியாலும் அந்தச் சமயத்தில் வீடுமாறக்கூடாது என்று வைத்திருக்கிறார்கள்.


பதியை இழந்த பத்னி ஒரு வருஷ காலத்தில் தீர்த்த யாத்திரை போவது கிடையாது என்று சொல்லியிருந்தீர்கள்.திவ்ய க்ஷேத்ரம் இல்லாத மற்ற கோயில்களுக்கு ஆத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கோவில்களுக்குப் போகலாமா?செய்யத் தகுந்தது செய்யத் தகாதது சொல்ல வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

பதியை இழந்த பத்னி ஒரு வருட காலத்திற்குள் திவ்யக்ஷேத்ரமல்லாத இதர கோவில்களுக்கு, அவர்கள் மனதிற்குப் போகலாம் என்று தோன்றினால் போலாம் அதனால் தவறு கிடையாது, போகவேண்டாம் என்று தோன்றினால் போகவேண்டாம்.


புருஷர்கள் இல்லாதபோது ஆத்துப் பெருமாளுக்குத் தளிகை கண்டருளப் பண்ணும்போது ஸ்தீர்கள் திருமணி சேவிக்கலாமா?

Vidwan’s reply:

புருக்ஷர்கள் இல்லாதபோது அகத்துப் பெருமாளுக்குத் தளிகை கண்டருளப் பண்ணும்போது ஸ்தீர்கள் திருமணி சேவிப்பது வழக்கமில்லை.


ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி ஸ்த்ரீகள் நாராயணீயம் மற்றும் சங்க்ஷேப இராமாயணம் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

நாராயணபட்டத்திரி பண்ண நாராயணீயம் என்று ஒரு ஸ்தோத்ரம் இருக்கின்றது. அந்த ஸ்தோத்ரத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அது ஸ்தோத்ர பாடம் என்கின்ற ரீதியில் வரும்.

மஹாபாரதத்தில் நாராயணீயம் என்று ஒன்று இருக்கிறது அதுவும் மேலும் சங்க்ஷேப இராமாயணம் இவையெல்லாம் இதிஹாசங்களில் இருக்கின்றபடியினால், இதை ஸ்த்ரீகள் சேவிப்பது ப்ராசீனத்தில் வழக்கமில்லை. ஆனால் நவீனத்தில் இந்த வழக்கம் வந்து கொண்டிருக்கின்றது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top