ப்லவ – ஐப்பசி – சம்ப்ரதாயம் காட்டும் நன்னெறிகள்


குரு என்பவர் யார்? ஆசார்யன் என்பவர் யார்? இரண்டு பேருக்கும் என்ன வித்யாசம்?

Vidwan’s reply:
குரு என்பவர் நம் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞான விளக்கேற்றுபவர்.

गु – अन्धकार: – இருட்டு

रु – तन्निरोधक: – போக்குபவர்

गुरु: – இருட்டைப்போக்கி ஒளியூட்டுபவர்

ஆசார்யன் என்பவர் எம்பருமானைப் பற்றி நமக்கு உணர்த்துபவர்.

आचिनोति: शास्त्रार्थान् – எவர் ஒருவர் சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவரோ

स्वयं आचरते – எவர் ஒருவர் அதனை நடைமுறையில் கொண்டவரோ

आचरे स्थापयति – எவர் ஒருவர் தங்கள் சிஷ்யர்களுக்கு நல்வழியைக் காட்டுபவரோ அவரே ஆசார்யர் ஆவார்.

ஆக , நமக்கு எந்த ஞானத்தைக் கொடுத்தாலும் அவர் குரு ஆவார். வேதாந்த, ஆத்ம ஞானத்தைக் கொடுப்பவர் ஆசார்யன் ஆவார்.

இந்த உயர் சம்ப்ரதாயத்தில் முதல் ஆசார்யன் யார்? எங்கிருந்து இதன் குருபரம்பரை தொடங்குகிறது?

Vidwan’s reply:
ஸ்ரீமன் நாராயணனே நமக்கு முதல் ஆசார்யன் ஆவார்.

அவரிடமிருந்து தான் இந்த குருபரம்பரையானது தொடங்குகிறது.

இந்த நன்னெறியையும் இதைச்சார்ந்த கதையைப் பற்றி விரிவாக அறிய கீழே உள்ள linkஐ click செய்யவும்

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top