ப்லவ – புரட்டாசி – ஸ்த்ரீ தர்மம்


ரஜஸ்வலா காலத்தில் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? அப்படி அனுஷ்டிப்பது பாபமா? மேலும் ராம கிருஷ்ண நாம ஜெபமோ அல்லது த்வய மந்திரமோ அந்தச் சமயத்தில் சொல்லலாமா? அடியேன்.

Vidwan’s reply:

ரஜஸ்வலா காலத்திலும் ஏகாதசி வ்ரத அனுஷ்டானம் உண்டு.

குறிப்புகள்:

பகவன் நாமாக்களைச் சொல்வதினால் தவறொன்றுமில்லை.


ப்ரபந்நஸ்த்ரீகளுக்கு ஏகாதசி வ்ரதம் தவிர நடைமுறையில் சிலர் அனுஷ்டிக்கும் இதர வ்ரதங்களை சாஸ்த்ரம் அனுமதிக்கின்றதா? அடியேன்.

Vidwan’s reply:

ஏகாதசி தவிர, பெருமாளைக்குறித்து பிற வ்ரதங்கள் இருந்தால் அதை செய்யலாம்.

உதாஹரணமாக திருவோண வ்ரதம், சனிக்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் வ்ரதம் என நிறைய பேர் செய்வதுண்டு. பெருமாளைக்குறித்து, பெருமாளின் திருநாமத்தில் வ்ரதமிருப்பதில் தவறில்லை.

குறிப்புகள்:

சில க்ரஹங்களில், பங்குனி மாசப்பிறப்பு காலத்தில் மாசி சரடு கட்டிக்கொள்வது அதாவது நோன்பு நூற்கும், அனுஷ்டானம் வழக்கமாக இருக்கும். நோன்பு நூற்று வ்ரதம் மேற்க்கொண்டு, சரடு கட்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. அதுவும் நிர்ஜலமாக அனுஷ்டிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஏதாவது பலகாரம் பண்ணி விட்டு அனுஷ்டிக்கலாம். ஆத்துப்பெரியோர்கள் சொன்னால் அந்த வ்ரதம் இருக்கலாம். ப்ரபந்ந ஸ்த்ரீகள் இருக்கக்கூடிய சில க்ருஹங்களில் இந்த வழக்கமும் கிடையாது.


ஸ்த்ரீ தர்மம் பற்றிய சில கேள்விகள்: குறிப்பாக ரஜஸ்வலா காலம் பற்றியது அடியேனுக்கு உடல் ரிதீயாக சில பிரச்சனைகாள் இருப்பதால் என் ரஜஸ்வலா காலம் 4 முதல் 30 நாட்கள் கூட நீள்கின்றது.

அப்படியிருக்க அடியேன் அக்காலம் முழுவதும் ஒதுங்க வேண்டுமா? இல்லை 4 நாட்கள் மட்டும் ஒதுங்கி இருந்தால் போதுமா?

அடியேன் 5 நாட்களுக்குப் பின் தளிகை செய்யலாமா?

அடியேன் 5 நாட்களுக்குப் பின் பெருமாள் திருவாராதனை பாத்திரங்களை சுத்தம் செய்யலாமா?

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எது சரியான முறை என்று வழிக்காட்டவும். அடியேன்.

Vidwan’s reply:

ரஜஸ்வலா காலம் 4 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நீடிக்கும்பொழுது, சாஸ்த்ரப்படி முதல் மூன்று இரவுகள் ஒதுங்கி இருந்து, நான்காவது நாள் ஸ்நானம் செய்து விட்டு உள்ளே வருகின்றோம். அந்த நான்காவது நாளே விழுப்புக்குச்சமானம் தான். அந்த நான்கு நாட்களுக்குப்பிறகு, சரீரத்தில் சிரமம் இருந்தாலும் ஒதுங்க வேண்டிய அவசியமில்லை.

15 நாட்கள் வரை ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. 16 மற்றும் 17வது நாளில், நான்காவது நாள் போல் விழுப்புக் கணக்கில் இருக்கவேண்டும்.

17 நாட்களுக்கு மேலும் சரீர சிரமம் இருந்தால், விலகி இருத்தல் வேண்டும். இந்த க்ரமத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

பெருமாள் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, பெருமாள் சந்நிதியில் விளக்கு ஏற்றுவது இவையெல்லாம் நம் மனதுக்கு ஒப்பவில்லையென்றால் அவற்றைச் செய்யாமல் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. சாஸ்த்ரப்படி தடையில்லை என்றாலும், அது அவரவர் மனதைப் பொருத்தது.


ஸ்த்ரீகள் துளசிச்செடிக்கு நீர் சேர்த்து, ஸ்லோகங்கள் சொல்லி, கோலம் போட்டு சேவிக்கின்றோம். அதே போல், க்ருஷ்ணபகவானை த்யானித்துக்கொண்டு ஸ்த்ரீகள் துளசியைப்பறித்து பெருமாளுக்குச் சமர்ப்பிக்கலாமா?

Vidwan’s reply:

துளசியைப் பறிப்பதற்கு மந்திரம் உண்டு. அதை உபதேசமாக பெற வேண்டும். அதனால் ஸ்திரீகள் துளசியைப் பறிப்பது வழக்கத்திலில்லை.


ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாமா? அல்லது சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானம் மட்டுமே சேவிக்க முடியுமா?

மேலும், ஸ்த்ரீகள் காரியசித்திக்காக சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானத்தை வாசித்தால் மூலம் பாராயணம் செய்யும் அதே பலன் கிட்டுமா? தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

நம் சம்ப்ரதாயத்தில் சுந்தரகாண்டத்தின் மூலம் பாராயணம் செய்யும் வழக்கமில்லை. ஆனால் அதைக்கதையாகப் படித்தால் தவறில்லை.


ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணத்திற்கு பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கலாமா? அல்லது பரந்யாஸத்திற்கு பிறகு தான் ஜபிக்க வேண்டுமா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணத்திற்குப் பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top