ப்லவ – மாசி – ஸ்த்ரீ தர்மம்


ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாமா?

Vidwan’s reply:
ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாம்.


க்ருஹத்தில் புருஷர்கள் இல்லாத நாட்களில், ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியை திறந்து (பெருமாளைத் தொடாமல்) தளிகை அம்சை பண்ணலாமா அல்லது பெருமாள் பெட்டியைத் தொடாமல் தளிகை அம்சை பண்ண வேண்டுமா?

Vidwan’s reply:
ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியைத் திறந்து தளிகை ஸமர்பிப்பது என்பது வழக்கத்திலில்லை.

பெருமாள் பெட்டி மரத்தில் இருக்கும், பெருமாள் தான் உள்ளே ஏளியிருக்கிறார், பெருமாளைத் தொடவில்லை என்று இருக்கு அதனால் என்ன தோஷம் வரும் என்று தெரியவில்லை. பெருமாள் ஏளியிருக்கும் பெட்டிக்கு கோவிலாழ்வார் எனும்படியால், அவருக்கே விசேஷமாக ஸந்நிதி முதலானவை இருக்கின்றபடியால் திறந்து ஸமர்பிப்பதை வழக்கத்தில் வைத்துக்கொள்ளவில்லை.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top