ப்லவ – மார்கழி – ஸ்த்ரீ தர்மம்


பெண்கள் ஏன் ஆசமனம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் சரியாக முறைப்படி செய்வது? மற்றும் ஆசமனம் செய்யும் பொழுது எந்தத் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்?ஆசமனம் செய்வதற்கு நியமம் ஏதேனும் இருக்கின்றதா? ரஜஸ்வலா காலத்திலும் ஆசமனம் செய்யலாமா?

Vidwan’s reply:
ஸ்நானம் செய்து மடி வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பின்பு கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும் என்பது பொது விதி. இது ஸ்த்ரீகளுக்கும் பொருதும்.

ஸ்த்ரீகளுக்கு திருமணமென்பது உபநயனஸ்தானத்தில் ஆகின்றபடியால், திருமணத்திற்க்குப் பின்பு அவர்கள் அவசியம் செய்தல் வேண்டும்.

புருஷர்கள் போல் உட்கார்ந்து கொண்டு ஆசமனம் செய்ய வேண்டுமென்கிற அவசியம் இல்லை. செய்யும் வழக்கமும் இல்லை. ஸ்த்ரீகள் ஆசமனம் செய்யும் பொழுது அச்யுதா, அனந்தா, கோவிந்தா என்று பிரணவம் இல்லாமலும், நம: சப்தம் இல்லாமலும் திருநாமங்களை மட்டும் உச்சரித்து மூன்று தடவை தீர்த்தத்தை உட்கொள்ளவேண்டும்.


ஸ்த்ரீகள் பாகவதம், வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் மற்றும் பகவத் கீதையின் மூலம் சேவிக்கலாமா?

Vidwan’s reply:
ஸ்த்ரீகள் பாகவதம், வால்மீகி ராமாயணம் (சுந்தர காண்டம் உட்பட) மற்றும் பகவத் கீதையின் மூலம் சேவிக்கும் வழக்கம் இல்லை. ஶிஷ்டாசாரத்தில் இல்லை.


ஸ்த்ரீகள் ஸ்ரீசூர்ணம் மற்றும் திருமண் இட்டுக்கொள்ளும்பொழுது பெருமாளுடையத் திருநாமங்கள் ஏதாவது சொல்லி இட்டுக்கொள்ள வேண்டுமா? தன்யாஸ்மி

Vidwan’s reply:
ஸ்த்ரீகள் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்ளும் பொழுது பெருமாளுடைய த்வாதச நாமங்கள் மற்றும் பிராட்டியினுடைய துவாதச நாமங்கள் அவசியம் சொல்ல வேண்டும். அடியேனுடைய ஆசார்யன் சொல்லிக் கொடுத்தது என்னவென்றால் எந்த இடத்தில் திருமண் காப்பு ஸ்ரீ சூர்ணம் தரிக்கின்றோமோ அந்த இடத்தில் கை கூப்பிக் கொண்டு அந்த திருநாமத்தைச் சொல்ல வேண்டும். உதாஹரணத்திற்கு நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளும் பொழுது இந்த இடத்தில் கையைக் கூப்பிக் கொண்டு கேசவாய நம: , ஸ்ரீயை நம: என்று சொல்லவேண்டும்.

த்வாதச நாமங்கள் எப்படி புருஷர்கள் தரித்துக் கொண்டிருக்கிறார்களோ அதேபோல் ஸ்த்ரீகளும் அதே ஸ்தானங்களில் இட்டுக் கொள்ள வேண்டும் என்று இருக்கின்றது, ஆனால் அது வழக்கத்தில் இல்லை.

ஆகையால் எந்த இடத்தில் புருஷர்கள் திருமண் ஸ்ரீசூர்ணம் தரித்துக்கொள்கிறாகளோ, பொதுவாக ஸ்திரீகளால் அவ்விடங்களில்(உதாஹரணமாக, வலது கை, வலது தோளில் இடது கை இடது தோளில் மார்பில் கழுத்தில் போன்ற இடங்களில்) தரித்துக் கொள்வது என்பது சாத்தியமாக இருப்பதில்லை ஆகையால் அவ்விடங்களில் கையைக் கூப்பிக் கொண்டு எம்பெருமான் பிராட்டியின் அந்தந்த திருநாமங்களை அவசியம் சொல்ல வேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top