பூர்வாசார்ய ஶ்ரீ ஸூக்திகளில் கேள்விகள்

.தர்ப்பண புண்ய காலம் மற்றும் ஶ்ராத்த திதி நிர்ணயம் விதிமுறைகள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஏதாவது புத்தகம் கிடைக்குமா ?

பத்மாவதி தாயார் ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவதாரமா அல்லது மலையாள, சேரகுலவல்லி போல் ஒரு நாச்சியாரா?

ஸ்ரீதேவியும் ஸ்ரீமஹாலக்ஷ்மியும் ஒருவரா ?

ஸ்ரீ வராஹ அவதாரம், வராஹம் தண்ணீரில் நீஞ்சுமே அல்லாது மூழ்க முடியாது, ஸ்ரீ வராஹ அவதாரத்தால் முடியும் என்று வைத்துக் கொண்டாலும் ஸ்ரீ வராஹப் பெருமானுக்கு ஏன் கோரைக்கிழங்கு நைவேத்யம் ஆகிறது, இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன், தந்தவக்ரன் ஆகிய சகோதரர்களை ஒரே அவதாரத்தில் வென்றுகொன்றபோது ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு ஆகிய சகோதர்களைக் கொல்ல மட்டும் இரண்டு அவதாரம் ஏன்? அவர்கள் சகோதரர்கள் இல்லாமல் இருந்தாலும் இருவர் பெயரிலும் ஹிரண்ய என்ற சொல் வருவதேன்?

1. ஸ்திரீகள் ஶ்ரீமத் பாகவதம் மூலம் படிக்கலாமா? அல்லது உரை மட்டும் படிக்கலாமா?

2. ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீமத் பாகவதம் படிக்க வேண்டுமெனில் எந்தப் பதிப்பகம் வெளியீட்டை படிக்கலாம்? (மொழிபெயர்ப்பு மற்றும் உரை)

1. விஶிஷ்டாத்வைதம் பற்றி அறிய வேண்டுமெனில், எளியமுறையில் புரிந்துகொள்ளும்படி ஏதேனும் புத்தகம் இருக்கின்றதா?

2. நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்ம ஶாஸ்த்ரங்களை அறிந்து கொள்ள வால்மீகி இராமாயணம் அல்லது ஸ்ரீமத் பாகவதம் அல்லது வேறு எந்த க்ரந்தத்தை வாசிக்க வேண்டும்?

3. ஸ்ரீ ஸ்வாமிநாரயணன் அவர்களுடைய ஶிக்ஷாபத்ரி, வசனாம்ருதம் முதலிய புத்தகங்களைப் படித்ததனால் அடியேன் சைவத்தில் இருந்து வைஷ்ணவத்திற்கு மாறியுள்ளேன். ஸ்ரீ ஸ்வாமிநாரயணன் விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தம் சிறந்தது என்றும் பகவத் இராமானுஜருடைய கீதா பாஷ்யம் மற்றும் ஸ்ரீ பாஷ்யம் முதலியவற்றை நாம் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அடியேன் ஞான, அனுஷ்டானத்திற்காக இப்போது அவற்றைப் படிக்கலாமா?

4. தாமஸ, ராஜஸ புராணங்களை நாம் ப்ரமாணங்களாக எடுத்துக் கொள்ளலாமா? ப்ரஹ்ம வைவர்த புராணமும் சிவ புராணமும் ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் மற்றும் வைதிக சித்தாந்தத்திற்கு உண்மையான நிரூபணங்கள் ஆகுமா?

ராதா ராணி உண்மையா? எனில் அவள் மஹாலஷ்மி அவதாரமா? சாதாரண கோபிகையா? தென்னாசார்ய மற்றும் தேசிக சம்ப்ரதாயத்தவர்கள் ஶாஸ்த்ர ரீதியாக ராதாராணியை எப்படிப் பார்க்கிறார்கள்?

அடியேன் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் சேவிக்கலாமா? எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

பகவத் ராமானுஜாசார்யரின் வேதார்த்த ஸங்க்ரஹம் ஆரம்ப பாடம் படிப்பவர்களுக்கா? முறையாக ஸ்ரீ பாஷ்யத்தை கற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

அடியேன் வைஷ்ணவ ஆசார அனுஷ்டானங்களை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன். ஸ்வாமி வேதாந்த தேஶிகரின் அதிகரண ஸாராவளி என்றால் என்ன?

எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்கள் பற்றிய ஶ்லோகம் இதோ:

ஆத்யம் ரங்கமிதி ப்ரோக்தம்
விமானம் ரங்கஸம்ஞிதம்

ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிம் ச
ஸாளக்ராமம் ச நைமிஶம் ।
தோயாத்ரிம் புஷ்கரம் சைவ
நரநாராயணாஶ்ரமம்

அஷ்டௌ மே மூர்தய: ஸந்தி
ஸ்வயம்வக்தா மஹீதலே
எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்களுக்கும், திருவஷ்டாக்ஷர மந்த்ரத்திற்கும் என்ன சம்பந்தம்?

10. 1. விசிஷ்டாத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மத்வாசார்யரின் ஸர்வமூல க்ரந்தங்களைச் சேவிக்கலாமா?

2. நான் என்பது ஶரீரமல்ல, ஜீவாத்மா என்று எப்படி உணர்வது? அந்தச் சிந்தனையுடன் அனைத்து கார்யங்களையும் ஆற்றுவது எவ்வாறு?

3. நம்முடைய ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள கோபம், பொறாமை, மோஹம் முதலான தவறான பழக்கங்களை களைவது எப்படி?

பாதுகா ஸஹஸ்ரம் நித்யம் சேவிக்க ஏதேனும் விதிமுறைகள் இருக்கா? காலையில் சேவிக்க முடியவில்லையென்றால் சாயங்காலம் சேவிக்கலாமா?

கோவிந்தராஜீயம் என்ற க்ரந்தத்தின் ஆசிரியர் யார்? அவரது வம்சம், ஆசார்யன், வாழ்க்கை வரலாறு இவற்றைப் பற்றி விளக்க பிரார்த்திக்கிறேன்.

1A. ஸ்ரீவல்லபாசார்யாரை பற்றிய ஒரு நூலில், அவர் விசிஷ்டாத்வைதத்தின் பெரும்பாலான கொள்கைகளை (சிலவற்றைத் தவிர) ஒப்புக்கொண்டதாக உள்ளது. ஸ்ரீவல்லபாசார்யாரின் சுத்த அத்வைதத்திற்கும், ஸ்வாமி ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

1B. ஆதிசங்கரர் இந்த உலகம் பொய் என்றும், ஸ்வாமி ராமானுஜர் இந்த உலகம் நிஜம் ஆனால் நிரந்தரம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த உலகம் நிஜம் என்பதற்கான வேதத்தில் உள்ள ப்ரமாணங்களை அடியேனுக்குத் தெளிவுபடுத்த முடியுமா?

1C. விசிஷ்டாத்வைதத்தில் சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு ஶரீரம் என்றும் எம்பெருமான் சரீரி என்றும் உள்ளது. அப்படி நாம் எம்பெருமானுடன் ஒன்றிணைந்து இருந்தால் நமக்கு ஏன் அவனைப் போல் எங்கும் வியாபித்திருக்கும் தன்மை இல்லை?

1D. பகவத் ராமானுஜர் தன்னுடைய கீதாபாஷ்யத்தில் கர்மயோகம் ஞான யோகத்தை விட சிறந்தது. ஏனெனில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை விட ஏதேனும் வேலை செய்வது மனிதர்களின் ஸ்வபாவம். மேலும் அது இளைய தலைமுறைக்கு எந்த தவறான வழிகாட்டுதலும் செய்யாது என்று கூறியுள்ளார்.

1E. ப்ரபத்தி மற்றும் எம்பெருமான்தான் உபாயம் மற்றும் உபேயம் என்ற போதிலும், கர்ம யோகத்தை எவ்வாறு செய்வது என்று அடியேனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

ஸ்ரீ. உ. வே. வாசுதேவாசார்யார் ஸ்வாமி கைசிக புராண படனம் ஸாதிக்கும்பொழுது, ராமாயணத்தில் ஸ்ரீராமபிரான் விபீஷணஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டது போல் நம்பாடுவான் ப்ரம்ஹராக்ஷஸ் ஶரணாகதியை உடனே ஏற்றுக் கொண்டார் என்று ஸாதித்தார். ஆனால் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதான ஸாரத்தில் இந்த ஶரணாகதியைப் பற்றி குறிப்பிடவில்லையே? இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

வெளி இடங்களில் சுலபமாக ஜபிக்க பெருமாள் தாயார் தனியன், ஸ்லோகம் ஏதேனும் இருக்கிறதா?

அடியேன் வேலைக்கு செல்கிறேன் . எனக்கு ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் கற்றுக்கொள்ள வேண்டும். வார இறுதி நாட்களில் மட்டுமே எனக்கு தேவையான நேரம் கிடைக்கின்றது . GSPK இல் சான் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகள் உள்ளதா? இல்லையென்றால் ஒன்றைத் தொடங்க முடியுமா?

ஸ்த்ரீகள் எனென்ன காலக்ஷேபங்கள் அந்வயிக்கலாம் என்று தெரியப்படுத்தவும்.

ஸ்ரீவிஷ்ணுவிஜய ஸ்தோத்திரத்தில் 3வது ஸ்லோகத்தில் நமோஸ்து புத்தாய ச தைத்யமோஹிநே,இதில் புத்தாய என்பதில் யாரை குறிப்பிடுகிறார்?

திவ்ய ப்ரபந்தம் வ்யாக்யானம் பற்றி சில சந்தேகங்கள்

1. 4000 படி 6000 படி என்றால் என்ன?

2. எதை வைத்து இப்படி பிரித்துள்ளார்கள்?

3. இவைகளுக்குள் இருக்கும் வேறுபாடு என்ன?

4. முதலில் எதைப் படிக்கவேண்டும். ஏதேனும் வரிசை இருக்கிறதா?

5. இதன் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?

6. இவை ஒவ்வொன்றும் திவ்யப்ரபந்தத்திற்கு வேறு வேறு விளக்கமா? அல்லது அதன் அர்த்ததின் விரிவாக்கமா?

திவ்ய ப்ரபந்தத்தில் “ராமா” என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா? ராமர் என்ற பெயர் தமிழில் எப்படி வரும்?

எங்களுக்குத் தெரிந்த திருக்கோயிலில் க்ருஷ்ணபக்ஷ ப்ரம்மோற்சவம் சமயம் திருத்தேர் மற்றும் பூர்ணாஹுதி அமாவாஸை அன்று வந்தால் அச்சமயம் வேதபாராயணம் பண்ணலாமா?

ப்ரம்மோற்சவம் சமயம் நம் முன்னோர்கள் இங்கே வருவர் என்று சொல்கின்றனர். அப்படியிருக்க ஸ்ரீவைஷ்ணவரல்லாத ஒருவர் திவ்ய ப்ரபந்தம் கோஷ்டியோடு சேர்ந்து சேவிக்கலாமா? அதனால் ஏதேனும் பாபம் ஏற்படுமா?

வேதம் அனாதி என்றால் பரத்வாஜர் மற்றும் இந்திரன் இருவருக்கும் நடந்த கதைப் பற்றி எதில் குறிப்பிட்டுள்ளது? அதுவும் வேதம் பற்றிய கதைதானே அப்படியென்றால் எப்போது நடந்திருக்கும்?

திருவாய்மொழியில் முதல் பாசுரத்தில் முதல் மூன்று அடிகளின் முதல் எழுத்து ப்ரணவத்தைக் குறிக்கும் என்றும் ஆனால் அதன் வரிசை மாறியிருக்கும் என்றும் சொல்வர். சிலர் ஆழ்வார் வேதம் ஓதும் குலத்தில் பிறக்காததனால் இவ்வாறு இயற்றியுள்ளார் என்கின்றனர். இந்தக் காரணம் சரியா? அப்படியென்றால் இதே காரணத்தினால்தான் அமலனாதிபிரானிலும் திருப்பாணாழ்வார் இதேபோல் ப்ரணவத்தை பாசுரத்தில் முதல் எழுத்தாக குறிப்பிட்டுள்ளாரா?.

திருமங்கையாழ்வார் அருளிய கடைசி ப்ரபந்தம் எது? திருநெடுந்தாண்டகமா அல்லது பெரிய திருமடலா? எது என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?

ப்ரபன்னர்கள் ஸ்ரீராம் சரித்ரமானஸ் சேவிக்கலாமா?

அபய ப்ரதாந சாரத்தில் – விபீஷண ஶரணாகதியில் ஶரணாகதியின் 6 அங்கங்கள் உள்ளது அதே போல் த்ரிஜடை தன்னைக் காக்கச் செய்த ஶரணாகதியை மோக்ஷார்த்தமாக செய்த ஶரணாகதி எனக் கொள்ளலாமா?

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ பராசர பட்டர் “ஏக பாத” என்ற ஶ்லோகத்திற்க்கு க்ருஷ்ணன் ஸ்ரீமந்நாராயணனின் பாதி அம்சம் என்கிறார். அதற்கு முந்தைய ஶ்லோகத்தில் நான்கு திருக்கைகளுடன் பர வாஸுதேவரே கண்ணனாக திருவவதாரம் செய்தார் என்கிறார். கீதையில் கண்ணன், தான் பரப்ரம்மம் என்பதையும் இந்த முழு உலகமும் தன் படைப்பு என்று கூறியதையும் வ்யாக்யானத்தில் சாதிக்கிறார். கண்ணன் யாரின் திருவவதாரம்?

மமதா த்யாகம் மற்றும் கர்த்ருத்வ த்யாகம் விரிவான விளக்கம் வேண்டுகிறேன். தன்யோஸ்மி அடியேன்.

ஸ்ரீரங்கத்தில் மூலவர் சுதர்சன ஆழ்வாருடன் 32மூர்த்திகள் (சங்கர்ஷண அனிருத்தாதிகள்…) இருப்பர். இவர்கள் யார்?

ஸ்வாமி தேசிகன் 32 என்ற எண் கணக்கின் படியே ஜய ஜய ஸ்ரீ ஸுதர்ஶந என்ற கோஷத்தை ஸ்ரீ சுதர்சன அஷ்டகத்தில் அமைத்திருக்கிறார். இந்த 32 என்ற எண்ணிற்கும் சுதர்சன ஆழ்வாரும் தனித் தொடர்பு உண்டா? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.

பூர்வாசார்ய ஸ்ரீஸூக்திகள் என்றால் எதை குறிப்பிடுகின்றது?

ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில், விஷ்ணு மற்றும் வாஸுதேவர் போன்ற வ்யாபக மந்திரங்களில் நாராயணனின் ஏகாதச விஷயார்த்தம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. அப்படியிருக்க, ஸஹஸ்ரநாமத்தை ஏன் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்று சொல்கின்றோம்?

ஏன் பீஷ்மர், த்ரோனர், க்ருபாசாரியர் போன்ற பெரியவர்கள் சூழ்ச்சியாய் சொக்கட்டான் விளையாடுவதை கண்டு அமைதியாய் இருந்தனர். மேலும் த்ரௌபதி அவமானப்பட்ட போதும் மௌனம் காத்தனர். அவர்களே, அதர்மம் என்று அறிந்தே இரண்டாம் முறை பகடையாட அனுமதித்தனர், அதோடு அல்லாது அதர்மம் பக்கம் நின்று போர் புரிந்தனர்? இதன் காரணம் யாது?

ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்ர பாடம் மற்றும் ப்ரபந்தம் கற்க ஆசையாக உள்ளது. இணையவழியில், கற்க முடியுமா ஏதேனும் குழுமம் உள்ளதா?

பெரியாழ்வார் திருமொழி 4-6-8ல் “நம்பி பிம்பியென்று” என்ற சொல் யாரைக் குறிப்பிட்டு ஆழ்வார் பாடியுள்ளார்? நம்பி என்பது இங்கே பெருமாளின் திருநாமத்தைக் குறிக்கிறதா? அடியேன்

ராமானுஜாய நம: அடியேன். அடைக்கலம் நான் புகுந்தேனே என்பதையும் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்பதையும் எப்படிப் புரிந்து கொள்வது ஸ்வாமி. நீயே கதி வேறு புகல் இல்லை என்றும் ப்ரத்யக்ஷமாய் கச்சியிலும் திருமலையிலும் பெருமாள் சேவை சாதிக்கிறார் என புரிந்து கொள்வது சரியா? தந்யவாதங்கள் ஸ்வாமி 🙏🙏🙇‍♀️🙇‍♀️அடியேன்.

ஏன் எம்பெருமானார் எம்பெருமானை விடப் பெரியவர்? (ஒரு பாலகனின் கேள்வி)

அடியேனின் குழந்தைக்கு நப்பின்னை யார் , ஆண்டாள் கூட கூறியிருக்கிறாரே என்றெல்லாம் கேட்க, அவர் நீளாதேவியின் அம்சம் என்று மட்டும் அடியேன் உரைத்தேன். நப்பின்னை பிராட்டி பற்றி விவரமாக சாதித்தருள ப்ரார்திக்கிறேன்.

பகவான் என்பவன் விபு, ஜீவன் என்பது அணு; மேலும் பிரிக்க முடியாதது. பகவான் என்பவன் விபு என்றால் அவன் ஜீவனிலும் இருப்பான் என்று அர்த்தமாகுமா? அடியேன்.

ஆழ்வார்கள், அரங்கன் மற்றும் திருமலையப்பனை விட காஞ்சி வரதனுக்கு ஏன் குறைவான பாசுரங்கள் பாடியுள்ளனர்? ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் அவ்விரு க்ஷேத்ரம் போல் சம அளவு உயர்வு ஹஸ்திகிரிக்கு இருந்தும் ஏன் அத்தனை மகத்துவம் ஆழ்வார் பாசுரங்களில் காட்டப்படவில்லை? ஏதேனும் காரணம் உள்ளதா? தயைகூர்ந்து விளக்கவும்.

பரந்யாஸம் செய்த ஸ்ரீவைஷ்ணவர்கள், அத்வைதிகளிடம் பகவத்கீதை பாகவதம் போன்றவை கற்கலாமா?

ஸ்வாமி தேசிகன் ப்ரபந்தஸாரத்தில் ஆழ்வாரின் நாள் ஊர் திங்கள் பாசுரம் எண்ணிக்கை போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் எவ்வம்சம் என்பதை மட்டும் குறிப்பிடாததற்கு தனிக்காரணம் உண்டா? இல்லை அடியேனின் புரிதலில் தவறு இருக்கின்றதா?

“அடியேனுக்குப் பெரியாழ்வார் பற்றிய ப்ரபந்தசாரம் பாசுரத்தில் ஒரு சந்தேகமுள்ளது, ஸ்வாமி தேசிகன் கடைசி வரியில் பாசுர எண்ணிகையை “நானூற்றுஎழுபத்திமூன்று” என்பதற்கு பதில் “நானூற்றூஎழுபத்தொன்றிரண்டும்” என்று அருளியதற்கு தனிக் காரணம் உள்ளதா? விளக்க ப்ரார்திக்கிறேன்.

ஸ்ரீமத் அபிநவ வாகீஷ பிரம்மதந்திர ஸ்வதந்தர பரகால ஸ்வாமியின், ஆசார்யன் தனியன் வேண்டும்,அடியேன்.

அடியேன் கேள்விப்பட்ட வரை, தாயார் கூர்மாவதாரத்தின் பொழுது மந்தர மலையிலிருந்து ஆவிர்பவிக்கிறாள். அப்படியென்றால் தாயாரும் உயர்ந்த ஜீவாத்மாவா? மற்றும் பெருமாளின் முன் அவதாரங்களில் தாயார் இல்லையா? என் மனதும் இதை ஏற்க மறுக்கிறது. தாங்கள் என்னை மன்னித்து எனது ஐயத்தைப் போக்க ப்ராத்திக்கிறேன்.

பூர்வர்களின் ஸ்ரீஸூக்திகள் என்றால் என்ன? அடியேன்.

அடியேன் ஸ்ரீமத் அஹோபில மடத்தைச் சேர்ந்தவள், அடியேனின் ஆசார்யன் பற்றி அறிய விரும்புகின்றேன்.

அடியேன் சம்ப்ரதாயம் மற்றும் அனுஷ்டானங்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். எப்படி அறிவது என்ற வழியை தயை கூர்ந்து தெரிவிக்கவும்.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் : திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருமொழி, பெரியாழ்வார் திருமொழி என அனைத்துப் பதிகங்களுக்கு தலைப்புள்ளது. இத்தலைப்பின் தாத்பர்யம் என்ன என்பதை சாதித்தருள வேண்டுகிறேன். எதைக்கொண்டு இத்தலைப்புகள் வகைப்படுத்தப்பட்டன?

அடியேன், நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் காமதேவனை ப்ரார்த்திக்கின்றாள். இதற்கு உத்தமூர் ஸ்வாமியின் வ்யாக்யானத்தில், “ஸ்வாமி தேசிகன், ஆண்டாள் நைமித்திக கர்மா செய்கிறாள் என்றும் மேலும் அவள் காமதேவனின் அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானைத்தான் ப்ராத்திக்கின்றாள் என்று கூறுகிறார்” என இருக்கின்றது. மேலும் , ஸ்வாமி தேசிகனின் “நாச்சியார் க்ருஷ்ணணைப் பெறுகைக்காகப் பண்ணின காமதேவார்சனம் ஶ்ருங்கார சமாத்யனுகுண க்ருஷ்ண ரூபாந்தர விஷயம்” என்ற வரிகளும் அந்த வ்யாக்யானத்தில் உத்தமூர் ஸ்வாமி குறிப்பிட்டுள்ளார். இவ்வரிகள் ஸ்வாமி தேசிகனின் எந்த க்ரந்தத்தில் வருகின்றது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

பகவானின் பூர்ண, சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களைப் பற்றி விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். சக்தி மற்றும் ஆவேச அவதாரங்களில் ஜீவனைத்‌ தேர்ந்தெடுத்து அவர்களுள் எம்பெருமான் ப்ரவேசிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனின் ஏழு வயது பெண் இக்கேள்விகளைக் கேட்கிறாள், பெருமாளும் ஆதிசேஷனும் எப்பொழுது சந்தித்தார்கள். ஆதிசேஷன் பெருமாளுக்குப் படுக்கையாக எப்படி ஆனார்? எப்பொழுதிலிருந்து பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்துக்கொண்டிருக்கிறார்? விளக்க வேண்டுகின்றேன்.

எனது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால், எனக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கின்றது , நான் என்னென்ன ஸ்லோகங்களைச் சொல்ல முடியும்? மேலும், பெண்கள் வீட்டில் ஸ்ரீமத் இராமாயணம் மூலம், படிக்கலாமா என்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

பாசுரம்/ ஸ்தோத்ரம் சேவித்தல் மற்றும் பாசுரம்/ஸ்தோத்ரம் பாராயணம் செய்தல் என்பதின் வித்யாசம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.

ஸ்வாமி தேசிகன் அருளிய “பரமத பங்கம்” என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தில் பின் வரும் இந்த பங்க்தி எந்த பகுதி (chapter)யில் வரும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.

“சில மனிதர்களின் இயலாமையால் காலப்போக்கில் வேதங்களும், வேதாந்தங்களும் மறைந்தும், நலிவடைந்தும் போயின. இருப்பினும் இன்றளவும் அகஸ்தியர்ம் பரசுராமர், ஆபஸ்தம்பர், வ்யாஸர் முதலிய மகரிஷிகள் அவ்வேதங்களை மலய, மஹேந்த்ர, விந்திய , ஹிமாசலம் போன்ற அறிதான இடங்களில் அநுசந்தித்து வருகின்றனர். ஊழி காலம் முடிந்து மீண்டும் க்ருத யுகத்தில் மறைந்த வேதங்களை அவர்கள் மீண்டும் எடுத்துரைப்பர் என்பதாலும், வேதங்கள் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது” என்று சாதித்திருப்பார்.

பூமா தேவி மற்றும் நீளா தேவி என்பவர்கள் யார்? அவர்களும் ஸ்ரீ தேவியை போல் விபுவா? அவர்கள் ஈஶ்வர கோடியையா அல்லது ஜீவ கோடியைச் சேர்ந்தவர்களா?

த்ரோணாச்சார்யர் (அப்போதைய சேனாதிபதி) மிகச்சிறந்த ஆசானாக இருந்தபோதிலும் மற்ற மஹாரதிகளின் வழியில் தானும் சேர்ந்து ஏன் அபிமன்யுவை கொல்ல துணைநின்றார்? அதில் க்ருப்பாச்சார்யரும் ஏன் பங்குக்கொண்டார்? ப்ராமணர்களாக இருந்ததும் த்ரோணாச்சார்யர் மற்றும் க்ருப்பாச்சார் மஹாபாரத யுத்தத்தில் ஏன் கலந்துக்கொண்டனர்?

அடியேன், பெருமாளின் பரசுராம அவதாரத்தின் முக்கியத்துவம் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?

வராஹ அவதாரத்தில், எம்பெருமான் பூமாதேவியை ஜலப்ரளயத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்கின்றார். ப்ரளயத்தின் போது, எம்பெருமானின் நாபியில் அனைத்தும் (எல்லா உலகங்களும்) வைக்கப்படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு பூமி, ஹிரண்யாக்ஷன் இருப்பதைக் காண்கிறோம். இந்த நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன? சிருஷ்டிக்கு முன்பா அல்லது பின்பா? இதை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்?

சில இராமாயணப் பதிப்புகளில் தாரா (வாலியின் மனைவி) க்ஷீர சாகரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. இது உண்மையா? அதற்கான உண்மையான குறிப்பப எதிலாவது கூறப்பட்டுள்ளதா? பொய் என்றால், அவள் எப்படி வந்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

உங்கள் யூடியூப் சேனல்களிலிருந்து ஸ்தோத்ரங்கள் மற்றும் பிரபந்தங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய வரிசையைக் கொண்ட அட்டவணையை இடுகையிட முடியுமா? சில காரணங்களால் என்னால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கலந்துகொள்ள முடிவதில்லை.ஒவ்வொரு பதிப்பிற்கும் டெலிகிராம் சேனலைப் பின்தொடர முடிவதில்லை. நமது சம்ப்ரதாயத்தை ஆஃப்லைனிலும் கற்க என்னைப் போன்ற பாகவதர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அடியேன் தன்யாஸ்மி.

அடியேன் விசிஷ்டாத்வைதத்தை உதாரணங்களுடன் மிக எளிமையாக விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுக்கு சமீபத்தில் ஸமாஶ்ரயணம் கிடைத்தது. அதற்கு முன்னர் நான் தென்கலை ஸம்ப்ரதாய தனியன்களையும், உபதேச ரத்தினமாலை போன்ற க்ரந்தங்களையும் புத்தகம் மற்றும் ஒலி மூலம் கேட்டு சேவித்து வந்தேன்.

1. தற்சமயம் வடகலை ஸம்ப்ரதாய ஸமாஶ்ரயணம் கிடைத்த பின்னர் உபதேச ரத்தினமாலையைச் சேவிக்கலாமா?

2. அது வழக்கமில்லை என்றால் வடகலை ஸம்ப்ரதாய குருபரம்பரையைப் பின்பற்ற தமிழில் உள்ள க்ரந்தங்களை அடியேனுக்கு தெரிவிக்க வேணுமாய் விண்ணப்பிக்கிறேன்.

www.sadagopan.org இன் e- புத்தகங்களில் ஒன்றான ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தின் உத்திர ஶதகத்தில் உள்ள ஸ்லோகம் 56க்கான தமிழ் மற்றும் ஆங்கில வியாக்கியானம் / விளக்கம குழப்பமாக உள்ளது. கீழ் வரும் ஸ்லோகத்தின் இரண்டாம் பாதியில்

देवीहस्ताम्भुजेभ्यश्चरअणकिसलये समवहद्भयोऽपहृत्य

प्रत्यस्यानन्तभोगं झटिति जलपुटे चक्षुषी विस्तृणानः।

“अक्षिप्योरश्च लक्षम्याः स्तनकलशकनत्कुङ्कुमस्तोमपङ्कात्

देवः श्रीरङ्गधामा गजपतिघुषिते व्याकुलः स्तात् पुरो नः”॥

அதில் “மஹாலக்ஷ்மியின் அழகான திருமார்பில் பூசப்பட்டிருக்கும் குங்குமக் குழம்பிலிருந்து அவர் தனது திருமார்பை விடுவித்துக் கொண்டார்” என்று விளக்கம் இருக்கின்றது. தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

தென்னாசார்ய உபந்யாஸகர் ஒருவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ‘சுக்லாம் பரதரம்’ என்பதை மேற்கோள் காட்டி விஷ்வக்சேனரும் கணபதியும் ஒருவரே என்று கூறினார். இது சரியா?

ஸ்வாமி ஸாதித்த திருக்குருகைப் பிரான் உபன்யாசத்தில் அவர் ஸ்ரீமந் நாதமுனிகள் வம்சம் என்று அறிந்தேன். எனில் இராமானுஜரும் ஸ்ரீமந்நாதமுனிகளின் உறவினரா? பிறகு ஏன் ஆளவந்தார் வரதன் ஆலயத்தில் இராமனுஜரைப் பற்றி திருக்கச்சி நம்பிகளிடம் கேட்டு அறிந்தார்? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி.

துளசி , விஷ்ணுவுக்கு சாபம் அளித்ததால் சாளக்கிராமமாக அவர் ஆனதாகவும், ஜலந்திரன் எனும் அசுரன் மனைவியாக துளசி இருந்தாகவும் கூறப்படும் விஷயங்கள், புராணத்தில் உள்ளதா? இதில் விஷ்ணுவின் பெருமைக்குக் குறை போல் இருக்கின்றது தெளிவிக்க வேண்டுகிறேன்.

ப்ரளயகாலத்தில் எல்லா ஜீவராசிகளும் பெருமாள் வயிற்றில் ஜடமாக இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ருஷ்டிக்கு முன் அந்தக் காலத்தில் ப்ரக்ருதியின் நிலை என்ன? ப்ரளயத்தின் பொழுது ஆலிலை கிருஷ்ணணின் வடிவத்தை நாம் நினைத்துப் பார்த்தால், இலையில் பாலகிருஷ்ணர் இருப்பதற்கு இந்தத் தண்ணீரும் ப்ரபஞ்சமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், மூல ப்ரக்ருதி இந்த வடிவங்களாக வேறுபடுவது ஸ்ருஷ்டியின் போதுதான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். ப்ரளய காலம் ஆலிலை க்ருஷ்ணர் இதை எப்படி புரிந்துகொள்வது?

ஜீவர்கள் மோக்ஷம் அடையும் போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவதாகக் கூறப்படுகிறது, மேலும் அது ஸுத்த ஸத்வத்தால் ஆன நித்ய லோகத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது, அதுவும் நித்யலோகமா? அது எதனால் ஆனது? ஆதிசேஷன் நித்ய சூரியாக இருந்தாலும், பெருமாளை போல் விபுவாக இருக்க முடியாது, அப்படியிருக்க, இரண்டு இடங்களிலும் பெருமாளுக்கு படுக்கையாகவும், இருக்கையாகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்கிறார்? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சம் என்று நம் பூர்வாசார்யர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? அக்காரணத்தினால் தான் ஸ்வாமி தேசிகன் சிறிய திருவடி மீது ப்ரத்யேகமாக ஸ்தோத்திரம் ஏதும் இயற்றவில்லையா ? பரந்யாஸம் செய்து கொண்ட ஶ்ரீவைஷ்ணவர்கள் பெரிய திருவடியைப்போல் சிறிய திருவடியையும் உபாசிக்கலாமா ?

நாவலப்பாக்கம் ஸ்ரீ உ வே வாஸுதேவ தாத்தாசார்யர் ஸ்வாமிகள் எழுதிய “வைணவக் கொள்கையில் வேதாந்த தேசிகன்” (Vedanta Desikan on the Principles of Vaishnavism- ஆங்கில மொழிபெயர்ப்பின் பக்கம் 232) என்கின்ற நூலில், அத்வைத தத்துவஞானி வித்யாரண்யர் சததூஷணியை விமர்சித்தபோது, ஸ்வாமி தேசிகன் ஸம்ஸ்க்ருத “ச” என்ற ஒற்றை எழுத்தை வைத்துக் கொண்டு “ச கார ஸமர்த்தணத்தில்” எதிர் விமர்சித்திருக்கிறார். ”வித்யாரண்யரை ஸ்வாமி தேஶிகன் “ச” என்ற ஒற்றை அக்ஷரத்தைப் பயன்படுத்தி எவ்வாறு எதிர் விமர்சித்திருகிறார்? மேலும் சக்கர சமர்த்தனம் இன்றும் இருக்கின்றதா?

விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், திரௌபதி மகா விஶ்வாஸத்துடன் வஸ்த்ராபஹரணத்தின் சமயம் உதவிக்காக கூக்குரலிட்டு அழுதபோது அவளுக்கு வேண்டிய உதவியை தான் செய்யவில்லை என்னும் மன பாரத்துடன் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டதாக உத்தவனிடம் கூறியதை பெரியோர்களிடமும் உபன்யாஸங்களிலும் அடியேன் பலமுறை கேட்டிருக்கிறேன்.

அடியேனின் மிகப்பெரிய மற்றும் அதிருப்தியான சந்தேகம் என்னவென்றால், பெருமாள் அவளுக்குப் போதுமானதைச் செய்யவில்லை என்று மிகவும் அத்ருப்தியாக உணரும்போது, அவள் உதவிக்காக அழும் வரை அவன் ஏன் காத்திருக்க வேண்டும்? ஏன் காத்திருந்தார்?. பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தை பூங்காவில் விளையாடும்பொழுது கீழே விழுந்து அல்லது காயமடைவதைப் பார்க்கும்போது, விழுந்துவிடாமல் அல்லது காயமடையாமல் பாதுகாக்க அவர்களை நோக்கி விரைந்து செல்கிறோம் இல்லையா? “அம்மா, நான் கீழே விழுந்துவிட்டேன் ரத்தம் வருகிறது, தயவு செய்து என்னைக் காப்பாற்று?” என்று குழந்தைகள் கேட்பதற்காக நாம் காத்திருப்பதில்லையே. லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் நாமே நமது குழந்தைகள் மீது எந்த ஒரு எதிர்ப்பார்பும் இல்லாத அளவற்ற பாசம் வைத்திருக்கும்போது, ஜகன்மாதா மற்றும் ஜகத் பிதாவாக தாயாரும் பெருமாளும் ஏன் ஶரணாகதி செய்து கொள்ளவோ அல்லது உதவி கேட்கவோ காத்திருக்கிறார்கள்? பெருமாள் தாயாரையம், பெரியவர்ளையும் அவமதிக்கும்படியாக என்னுடைய இந்தக் கேள்வி இருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன்.

யாராவது நமக்கு மருந்து மாயம் வைத்ததாக இருந்தால் அது நமக்கு பாதிக்காமல் இருக்க என்ன தேசிக ஶ்லோகம் பாராயணம் பண்ணணும்”

ஸ்ருஷ்டியின் போது 5 ஞானேந்திரியங்கள் கர்மேந்திரியங்கள் என அனைத்தும் படைக்கப்பட்டது என பாகவதத்தில் உள்ளது. ஸ்ருஷ்டிக்கு முன் இந்திரன் என்பவன் இருந்தாரா? அல்லது அவரின் கர்மாவால் இந்திரன் என்று வேறுபடுகிறாரா? இதை எப்படிப் புரிந்துக்கொள்வது.

பெருமாள் சகல விஷயங்களையும் தன் ஆத்ம ஸ்வரூபத்தால் க்ரஹிக்கின்றாரா அல்லது நம் போன்றே தர்ம்பூதஞானத்தால் க்ரஹிக்கின்றாரா?

பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன்

பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன்

பண்டிகை, ஶ்ரார்த்தம் போன்ற நாட்களில் சுமங்கலி ஸ்த்ரீகள் குங்குமத்தினால் திலகம் இட்டுக்கொள்ள வேண்டுமா, ஸ்ரீசூர்ணத்தில் இட்டுக்கொள்ள வேண்டுமா, நெற்றிவகுடு துவக்கத்தில் குங்குமம் இட்டு கொள்வது ஸம்ப்ரதாயபடிச் செய்யலாமா.

மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் ஆசார்ய உபதேசம் பெற்று தான் சேவிக்க வேண்டுமா? ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?

என் மகளுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனை இருக்கிறது, இது குணமடைய வேண்டி எம்பெருமானிடம் ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் இருக்கிறதா?

ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணக்கூடாது என்று சுதர்சனம் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் ஆண்டவன் ஆஶ்ரமம் வெளியிட்டுள்ள ஸ்த்ரீ திருவாராதனம் செய்யும் முறையில் அனைத்து குறிப்பும் அதாவது ஸ்த்ரீகள் பெருமாளை தொட மந்திரம் உட்பட எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எதை பின்பற்றுவது என்று குழப்பமாக உள்ளது.

எங்கள் அகத்தில் எப்போதும் படுக்கையில் படுக்கும் வயதானவர்கள் இருக்கா. சிறு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு அல்பசங்கை போக உதவ வேண்டி இருக்கும். இதுபோன்றவைகளால் ஏற்படும் விழுப்புடன் மாலை பெருமாள் விளக்கு ஏற்றலாமா? இல்லை குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டுமென்றால் சாயங்காலம் (சூர்யாஸ்தமனத்திற்கு பின்) பெண்கள் குளிக்கலாமா?

உப ப்ரம்மணம் என்றால் என்ன? அதில் எந்தெந்த புராணங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது ? தன்யாஸ்மி

அகத்தியர் போன்ற ரிஷிகள் தேவதாந்தரங்கள் மீது துதிகள் பாடியுள்ளனர். உ.தா ஸ்ரீசக்ர ராஜசிம்மாசனேஷ்வரி போன்ற பாடல்கள். அவரே தான் ஆதித்ய ஹ்ருதயத்தை ஸ்ரீராம பிரானுக்கு உபதேசித்தார் என்று இருக்கிறது. அப்படியென்றால் ரிஷிகள் ஆழ்வார்கள் போன்று வைணவர்கள் இல்லையா? எப்படி இதை புரிந்துகொள்வது.

பார்த்தாவை இழந்த ஸ்த்ரீகள் நெற்றிக்கு (திருமண் ஸ்ரீ சூரணம்) எவ்வாறு இட்டுக்கொள்ள வேண்டும்?

பங்குனி உத்திரம் திருநாள் அன்று எம்பெருமானார் கத்யத்ரயம் சேவித்து பெரிய பெருமாளிடம் ப்ரபத்தி செய்துகொண்டார் என்று நம் பெரியோர்கள் கூறி அடியேன் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு ஆசார்யனின் சம்பந்தத்துடன்தானே இக்காலத்தில் நாம் ப்ரபத்தி செய்துகொள்கிறோம். அவ்வாறு இருப்பின் எம்பெருமானார் எவ்வாறு தன் ஆசார்யன் அருகில் இல்லாதபோது தானாகவே ஶரணாகதி செய்து கொண்டார்? இதை எவ்வாறு சரியாக புரிந்துகொள்வது? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.

அடியேன் சில தினங்களாக எதிர்மறை எண்ணங்கள் (negative thoughts) மற்றும் பழைய மிகவும் கசப்பான நினைவுகள் தோன்றி என்னை பகவான் நாமா சொல்லவோ அல்லது சந்தை பாடம் கற்கவோ, ஸ்தோத்ரம் சேவிக்கவோ மற்றும் நித்யானுஸந்தானம் செய்யவோ விடாமல் மிகவும் வருத்துகிறது. அடியேனும் எம்பெருமான் திருநாமங்களை உச்சரித்து அவ்வெதிர்மறை எண்ணத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறேன் ஆனால் என்ன செய்தாலும் அதிலிருந்து வெளியே வர இயலவில்லை. எதிலும் புத்தியை செலுத்தவும் முடியவில்லை. இவற்றிலிருந்து மீண்டு எம்பெருமான் ஸ்மரணையில் புத்தியைச் செலுத்த என்ன வழி என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

ஸம்ஸ்கிருதத்தை வடமொழி என்று பரவலாக சொல்கிறார்கள்.அது மனதிற்கு நெருடலாக உள்ளது. அது தெய்வமொழி அல்லவா. தெய்வம் அனைத்து திசையிலும் வியாபித்திருக்கும் அல்லவா .வடமொழி என்பது வடநாட்டு மொழி என்று அரத்தமா அல்லது வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா.

யாக்ஞவல்க்யர் மிதிலா பற்றி எரிவது போல் ஒரு மாயையை உண்டாக்கியபோது ஜனகர் கலங்காமல் இருந்தார். தன் மக்களைக் காப்பது ஒரு அரசனின் கடமையல்லவா, கலங்காது இருத்தல் சரியா?

சர்வதேச யோகா தினத்தன்று sudarsanam GSPK groupஇல் ‘மன அழுத்தத்திற்கு ஸ்வாமி தேசிகன் தெரிவிக்கும் அரிய மருந்துகளில் ஒன்று யோகா ‘ என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதில் முன்பு வெளியிடப்பட்ட சுதர்சனத்தின் கேள்வி பதில்(Q16JUL21003) ஒன்றும் பகிரப்பட்டது. இதை ஸ்வாமி தேஶிகன் எந்த க்ரந்தத்தில் சாதித்துள்ளார் என்பதை கூற ப்ரார்த்திக்கிறேன். தாஸன்

கருடபஞ்சாஶத் சந்தை வகுப்புக்கு ஏதேனும் தகுதி வேண்டுமா? அப்படியில்லை என்றால் தங்கள் SampradayaManjari YouTube Channelலில் santhai videoவாக பதிவிடவும், முடிந்தால் சந்தை வகுப்பு ஆரம்பிக்கவும்.

அலுவலகத்தில் சந்திக்கும் இடர்களைப் போக்கவும், வேலையில் உயர்வு பெறவும் என்ன ஶ்லோகம் சேவிக்கலாம் என்று வழிகாட்டவும்.

த்யாகராஜ ஸ்வாமி ஸ்ரீராம பக்தர் மற்றும் ஸ்ரீராமனை ஆராத்ய தெய்வமாகக் கொண்டவர் என்று அவரின் கீர்த்தனைகள் மூலம் அறியலாம். இருப்பினும் “மோக்ஷமு கலதா” எனும் கீர்த்தனையில் சரணத்தில் “வீணா கான லோலுடௌ சிவ மனோ” என்று சிவனிடம் மோக்ஷம் கேட்பது போல் தெரிகிறதே? ஸ்ரீராமனிடம் பக்தி கொண்டவர் சிவனிடம் எதற்காக மோக்ஷம் கேட்கவேண்டும்? ஒரு வேளை ஸ்ரீராமனை சிவனாக பாவித்து பாடியுள்ளார் என்று புரிந்து கொள்வதா? விளக்க ப்ரார்த்திக்கிரேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும்.

ஆண்டாளின் திருக்கல்யாணம் (நாச்சியார் திருமொழிப்படி) என்று நடந்தது? திருப்பாவைக்குப் பின் தையொரு திங்கள் என்று பாடுகிறாள் அப்படியானால் ஏன் நாம் போகியன்று ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடுகிறோம்.

எம்பெருமாளின் ஹம்ச அவதாரமும், ஹயக்ரீவ அவதாரமும் ஒன்றா? ஹயக்ரீவ காயத்ரியில் ஹம்சம் என்ற பெயர் வருகிறதால் எழுந்த சந்தேகம்.

திருவள்ளூர் எம்பெருமான் மேல் பாடிய ஸ்ரீ கிங்க்ருஹேஶஸ்துதி இயற்றியது ஸ்வாமி தேஶிகன் என்று கேள்விப்பட்டேன். இது சரியா? இந்த ஸ்துதி தேஶிக ஸ்தோத்ரமாலாவில் இல்லாததால் இந்தச் சந்தேகம். அடியேன்

என் மகன் தவறாமல் நித்யகர்மானுஷ்டானங்கள் செய்துவருகிறான். அவனுக்கு எவ்வித தடங்கலும் இன்றி நல்ல வரன் விரைவில் அமைய, எந்த ஶ்லோகம் / பாசுரம் சேவிக்க வேண்டும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்தோத்ரம், ஶ்லோகம், பாசுரம் என்றால் என்ன? ஏன் தனித்தனி பெயர்களிட்டு குறிப்பிடுகிறோம்.

அடியேன் நவராத்ரி என்பது துர்கா தேவியை 9 நாளும் பூஜிக்கும் வழக்கம் என்றும் சிவன் உரைத்ததோ அல்லது ஶாகேத்ய சம்ப்ரதாயத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். நம் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இருக்கும் பாசுரங்களிலோ, இதிஹாச புராணங்களிலோ நவராத்ரியின் குறிப்பு எங்கேயும் உள்ளதா என அறிய ஆவலாக இருக்கிறது? நம் பூர்வாசார்யர்கள் கொண்டாடியிருக்கின்றனரா? என்று தெளிவிக்கவும்.

வேதம் பற்றிய சந்தேகம்.

1. வேதங்கள் ஏன் மறைந்து எம்பெருமானைப் பற்றி கூறுகின்றன? ஏன் வெளிப்படையாகவே எல்லா இடங்களிலும் கூறவில்லை?

2. எம்பெருமான் ஏன் பல சிறு தெய்வங்களையும், பல ஸம்ப்ரதாயங்களையும் படைத்து மக்களை அவரவர் அறிவிற்கேற்ப பின்பற்ற வைத்திருக்கிறார்? தான் ஒருவனே பர தெய்வம் என்று ஶரணாகதி மார்க்கத்தை அனைவரும் பின்பற்றும்படி செய்திருக்கலாமே?

வேத மஹிமை உபந்யாஸத் தொடரின் முதல் பாகத்தில் ப்ரதான ஶதகம் மற்றும் காஞ்சி பேரருளாளன் பத்திரிகையில் ஸ்வாமி எழுதிய விளக்கவுரைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இவ்விரண்டும் எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்கவும். ebook ஆக இருந்தாலும் பரவாயில்லை. அடியேன்.

நமஸ்காரம் ஸ்வாமின் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியின் பின் புறம் நரசிம்ம பெருமாள் எழுந்தருளியிருக்கும் தாத்பரியம் என்ன ?

பொதுவாக உபநிஷத் பாராயணம் சூர்யாஸ்தமனத்திற்குப் பின் செய்வதில்லை. திருவாய்மொழி என்பது உபநிஷத்தின் ஸாரம் என்கிறோம், ஆனால் உபநிஷத் பாராயணம் போல் திருவாய்மொழி பாராயணத்திற்கு ஏன் அந்தக் கட்டுப்பாடு இல்லை?

ஸ்வாமி தேசிகனின் நவமணிமாலையில், “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….” என்று குறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருக்கும், அம்மாணை, ஊசல் ஏசல் பரவு என்பது என்ன அடியேன்?

ஒரு உபந்யாஸத்தின் மூலம் கார்யவைகுண்டம் என்று ஒன்று இருப்பதாக அறிந்துகொண்டேன். அப்படியென்றால் என்ன? முமுக்ஷூக்கள் அங்கே செல்வார்களா?

ஸ்வாமி தேஶிகன் அருளிய பாதுகா ஸஹஸ்ரத்தில் ஶ்வேத தீபம் என்று ஒன்று வருகிறது. அது எங்கே இருக்கிறது? அந்த ஶ்லோகத்தின் அர்த்தவிசேஷம் என்ன?

18 புராணங்கள் இருக்க ஏன் 6 மட்டும் ஸாத்வீக புராணமாகுகிறது. மற்ற புராணங்களை எம்பெருமான் நினைத்தால் மறையச் செய்திருக்க முடியும் அல்லவா? அப்படி ஒரு நிலை இருந்தால் அனைவரும் விஷ்ணு பக்தர்களாகி ஸத்கதி அடையும் வழியும் கிட்டியிருக்குமே. ஏன் அப்படிச் செய்யவில்லை?தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.

ஏன் திருவாறாயிரப் படி ப்ரதானமாக வடகலையார் ஸம்ப்ரதாயத்திற்கு இருக்கிறது. ஸ்வாமி தேஶிகன் ஏனைய வ்யாக்யானத்தை அவரின் க்ரந்தங்களில் குறிப்பிட்டுள்ளாரா?

“1. தேசிகப் ப்ரபந்தத்தில் (மும்மணி கோவையிலும், நவமணி மாலையிலும் உள்ள தசாவதார பாசுரங்கள் தவிர) நரசிம்மருக்கென்று வேறு பாசுரம் உண்டா?

2. தன்வந்த்ரியின் மேல் ஸ்வாமி தேசிகன் ஏதேனும் பாசுரம்/ஸ்லோகம் இயற்றி உள்ளாரா? ஆம் எனில் என்ன பாசுரம்/ஸ்லோகம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

3. பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் மங்களாசாசனத்தின் போது “பரிணாத பலக்ராசா” என்று தொடங்கும் ஆஞ்சநேயர் பற்றிய ஸ்லோகத்தை ஸ்வாமி தேசிகன் பாராயணம் செய்தார். ஸ்வாமி தேசிகனின் எந்தப் படைப்பு இது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

கோவில்களில் வேங்கடாத்வரி கவியின் லக்ஷ்மி சஹஸ்ரம் சேவிக்கலாமா?

நாச்சியார் திருமொழி பாசுரம் பாராயண நாளுக்குப் பதிலாக கூடாரை வெல்லும் நாளில் பல கோவில்களில் நூறு தடா உற்சவம் ஏன் கொண்டாடப்படுகிறது? மேலும் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அக்காரவடிசில் மற்றும் வெண்ணெய்க்குப் பதிலாக அன்றைய தினம் சர்க்கரைப் பொங்கல் ஏன் அம்சை பண்ணப்படுகிறது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீநிவாஸ கத்யம் மற்றும் பத்மாவதி கத்யம் ஆகிய இரண்டும் வேதங்களின் பகுதியா? அவற்றை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?

தென்னாச்சாயர் ஸம்ப்ரதாயத்தில் “ஸ்ரீ ஶைலேச தயா பாத்ரம்” என்ற தனியன் நம்பெருமாளால் மாமுனிக்குக் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இது உண்மை என்றால், நாம் தேஶிகன் மற்றும் மாமுனி ஆகிய இருவரின் தனியன்களையும் தினமும் சேவிக்கலாமா?

தேசிகன் தனியனை, தேசிகனின் ஸ்தோத்ரம் சேவிக்கும்போது மட்டும் சேவிக்கணுமா? மற்ற ஶ்லோகத்திற்கும் சேவிக்கலமா?

இராமானுஜ குலத்தைச் சேர்ந்தவர்கள் தேஶிகன் ஸ்தோத்ரங்கள்,பாதுகா ஸஹஸ்ரம் மற்றும் தேஶிக ப்ரபந்தங்களைச் சேவிக்கலாமா?

ஸ்ரீரங்கநாதனே மாமுனிகளை தம் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான் என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் நாம் ஏன் மாமுனியின் திருநக்ஷத்ர தினத்தைக் கொண்டாடுவதில்லை? அடியேன் வடகலை ஐயங்கார், பல வித்வான்களிடம் கேட்டு சரியான பதில் கிடைக்காததாலும்,

மேலும் ஏன் இந்த ஸம்ப்ரதாய பேதங்கள் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டியும் இங்கே கேட்டிருக்கிறேன்.

திருவாசிரியம் இயற்பாவில் கடைசி ப்ரபந்தமாகவும் இல்லை,மேலும் சேவாகாலத்தில் கடைசியாக சேவிக்கும் ப்ரபந்தமாகவும் இல்லாதபோது, பெரிய சாற்றுமுறையில் ஏன் சேவிக்கின்றார்கள்?

இல்லத்தில் நாச்சியார் திருமொழி பாசுரங்களைச் சேவிக்கலாமா?

ஹனுமான் திருவடி என்று நம் ஸம்ப்ரதாயத்தில் குறிப்பிடப்படுகிறார். ஏன் அப்பயெரிட்டுக் குறிப்பிடுகிறோம்? ப்ரபன்னர்கள் ஹனுமன் சாலிசா சொல்லலாமா? ஏனென்றால் அதில் “और देवता चित्त ना धरई| हनुमत सेई सर्व सुख करई” என்று வருகிறது. இவ்வரி சற்று முரண்பாடாக இருக்கின்றதால் அடியேன் இதைச் சேவிக்கலாமா என்ற சந்தேகம்.

நம்மாழ்வார் திருவடி தொழல் திருவாய்மொழியின் கடைசி இரண்டு பதிகங்களை அடியொற்றி, எப்படி இரு ஜீவாத்மா எம்பெருமானை அடைகின்றது என்பதைக் காட்டும்படி நடக்கின்றது என்று புரிகிறது. திருமங்கையாழ்வாருக்கும் அவ்வாறு திருவடி தொழல் உத்சவம் நடப்பதின் தாத்பர்யம் என்ன?

“ஸ்வாமி தேஶிகன் பிரபந்த ஸாரத்தில் “”வையகமொண் பொய்கை பூதம் பேயாழ்வார் ..””….என்ற பாசுரத்தில் 12 ஆழ்வார்களையும் பின்னர் “”ஐய்யன் அருள் கலியன் யதிராசர் தம்மோடு”” என்று கடைசியாக யதிராசர் பெயரைச் சேர்த்துள்ளார்.ஆனால் இராமானுச நூற்றந்தாதி திருவரங்கத்தமுதனார் அவரால் இயற்றப்பட்டது. ஸ்வாமி தேஶிகன் எதனால் அமுதனார் பெயரை விட்டுவிட்டு யதிராசர் பெயரைச் சேர்த்தார்.

கருடதண்டகம் போல் ஹனுமனுக்கு நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்துதி ஏதேனும் இருக்கின்றதா?

அஷ்டகா ஶ்ராத்தம் பற்றிய குறிப்பு.

அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணம் பண்ணும் ஒருவர், அந்த நாட்களில் அதே தர்ப்பணம் பண்ணும் மற்றொருவர் அகத்தில் அமுதுசெய்யலாமா?

அஷ்டகா, அன்வஷ்டகா எல்லா வேதங்களுக்கும் ஒரே நாளில்தான் வருமா இல்லை சாம வேதக்காரர்களுக்கு ஏதாவது வித்தியாசம் உண்டா?

முகுந்தமாலாவை குலசேகராழ்வார்தான் அருளினார் என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருக்கிறதா?

திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் அர்ச்சா அவதாரங்கள் பற்றிய கேள்விகள். திவ்ய தேசத்து எம்பெருமானின் திருநக்ஷத்ரங்களை, ஒரு பட்டியல் போல் வெளியிட முடியுமா அந்தத் தினத்தில் அத்திவ்ய தேசத்து எம்பெருமான் பற்றிய பாசுரங்களைச் சேவிக்க உதவியாக இருக்கும்.

ஒரு ப்ரபன்னன் ஜயதேவரின் கீத கோவிந்தத்தைச் சேவிக்கலாமா? ISKCON முறைப்படி பெண்கள் துளசிமாலை அணிந்து “ஹரே க்ருஷ்ணா” ஜபம் செய்யலாமா?

தேசிகர் நாள்பாட்டில் வரும் அடியானது “தீதாகிய மாயக்கலைகளை” அல்லது “தீதாகிய மாயக் களைகளை” இதில் எது சரி?

நம் ஸம்ப்ரதாயத்தில் சந்தைமுறைப்படி ஸ்ரீமத் இராமாயணம், மஹாபாரதம் மற்றும் பாகவதம் கற்கும் வழக்கமுண்டா? இல்லையென்றால் ஏன் அப்படி ஒரு முறையில்லை. இவையெல்லாம் காலக்ஷேப க்ரந்தங்களா?

கத்ய த்ரயம் எப்போது வேண்டுமானாலும் (காலை,மாலை அல்லது இரவு) சேவிக்கலாமா? சேவிக்க விதிமுறைகள் இருக்கின்றதா?

சில ஶ்லோகங்கள் , பாசுரங்களுக்கு பலஸ்ருதியாக மறுபிறவி கிடையாது என்றும், ஸ்ரீவைகுண்டம் செல்வர் என்றெல்லாம் இருக்கிறது. ஆனால் நம் ஸம்ப்ரதாயத்தில் மோக்ஷத்திற்கு ஶரணாகதிதான் உபாயம் என்று இருக்கிறது. அப்படியென்றால் இந்தப் பலஸ்ருதியை எப்படிப் புரிந்துகொள்வது?

Loading

Scroll to Top