Acaram Anushtanam Tamizh

ப்ரபத்தி செய்த முன்னோர்களுக்கு ஶ்ராத்தம் சமயம் வ்யாஸ பிண்டம் வைப்பதுண்டா?

பையன் ஶ்ரீவைஷ்ணவ அல்லாத பெண்ணை மணந்தால் பெற்றோர்களுக்குக் கைங்கர்யம் செய்யலாமா?

முனித்ரய ஸம்ப்ரதாயம் பற்றிய சந்தேகம்: ஶ்ரீ ஜயந்தி, ஶ்ரீ ராம நவமி, ஶ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி போன்ற நாட்களில் நாம் வ்ரதம் இருந்து மறுநாள் பாரணை பண்ணவேண்டும் என்றிருக்கிறது, அப்படியானால் அன்றைய நாட்களில் எம்பெருமானுக்கு பண்ணிய பானகம், வடைபருப்பு, கோசம்பரி போன்றவைகளையும் உட்கொள்ளக்கூடாதா? எம்பெருமானுக்குப் பண்ணியதை உட்கொள்ளாதது சரியா? மேலும் இவைகளை அடுத்த நாள் வரை வைத்துக்கொள்ளவும் முடியாதல்லவா?

எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கோயில் ப்ரசாதத்தை அகத்திற்கோ அல்லது கோவிலை விட்டு வெளியே எடுத்துவந்தோ உட்கொண்டால் அதன் உயர்வு (புனித தன்மை) குறைந்துவிடுமா?

1.ஸந்தியாவந்தன மந்திரங்களை உரக்க சொல்லவேண்டுமா? அல்லது காயத்ரி மந்திரம் போல் மனதிற்குள்ளேயே சொல்லவேண்டுமா? 2.அமாவாசை போன்ற தர்ப்பணங்களை தெற்குப் பார்த்துதான் பண்ணவேண்டுமா? சிலர் கிழக்கு நோக்கி பண்ணுகிறார்களே. 3.ஸந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர மந்திர ஜபத்தை காயத்ரி உபஸ்தானம் முன்பா அல்லது பின்பா? எப்போது செய்யவேண்டும்? 4.ப்ராத: ஸந்தியாவந்தனம் நின்றுகொண்டு பண்ணவேண்டும் என்றால், சந்தியாவந்தனம் பூர்த்தியாக ப்ராணாயாமம்,காயத்ரி ஜபம் என அனைத்தும் நின்றுகொண்டுதான் பண்ணவேண்டுமா?

US போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்குத் தர்ப்பண சங்கல்பம் என்ன என்று தெரிவிக்க வேண்டும்? இங்கே சித்திரைத் தர்ப்பணம் ஒருநாள் முன்னதாகவே பண்ணும்படி வருகிறது. ஏன் இப்படி வருகிறது?

காலையில் நின்று கொண்டு காலை சற்று உயர்த்தி அர்க்யம் விடுகிறோம். மத்தியானமும், சாயங்காலமும் சாமவேதிகளுக்கு எத்தனை முறை அர்க்யம் விடவேண்டும்? எப்படி விடவேண்டும்? மேலும் எத்தனை வ்யாஹ்ருதி மஹா ந்யாஸம் செய்யவேண்டும்? காயத்ரி மந்திரத்தை எந்தச் சந்தஸ்ஸில் சொல்லவேண்டும்? (தேவி காயத்ரியா/ந்ருசத் காயத்ரியா?)

1)திருவாராதனம் நின்றுகொண்டா, அமர்ந்து கொண்டா எப்படிப் பண்ணவேண்டும்? எது சரி? 2) ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யனிடம் போகுமா? 3) திருவாராதனத்தில் எப்போது எந்த ஆசனத்தில் ஶ்லோகங்கள், ப்ரபந்தங்களைச் சேவிக்க வேண்டும்? 4)அனைத்து ஆசனம் போதும் ஷோடஸ உபசாரம் செய்யவேண்டுமா? அல்லது சர்வோபசாரம் ஸமர்ப்பயாமி என்று செய்தால் போதுமா? 5) திருவாராதனம் செய்த பின் சேவிக்கும் போது என்ன சொல்லவேண்டும்?

நாட்டேரி ஸ்வாமியின் ஶரணாகதி தீபிகா உபந்யாஸம் கேட்டு அடியேன் ஶ்ரீமுஷ்ணம் ஆண்டவனிடத்தில் பரந்யாஸம் பெற்றுக்கொண்டேன். அடியேன் அப்போதே தென்னாசார் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த அகத்தில் மாற்றுப்பெண்ணாக ஆகிவிட்டேன். ஆண்டவன் அடியேனின் பின்புலம் பற்றி ஏதும் கேட்காமல் பரம கருணையோடு பரந்யாஸம் பண்ணிவைத்தார். அடியேனுக்கு முதலியாண்டான் திருமாளிகையில் ஸமாஶ்ரயணம் ஆனது. இன்று சிலர் அந்த பரந்யாஸம் பலிக்காது என்றும், ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அடியேனுக்கு பரந்யாஸம் பண்ணிவைத்த ஆசார்யன் மீதும், ஸ்வாமி தேஶிகன் மீதும், எம்பெருமான் மீதும் ஶரணாகதி பலிக்கும் என்று மஹாவிஶ்வாசம் இருக்கிறது. மஹான்கள் இதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்.

அடியோங்களுக்கு பெண் குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகிறது. வரும் சித்திரைக்குள் முடிகாணிக்கை (மொட்டை போடுவது) பண்ணும்படி அகத்துப் பெரியோர்கள் சொல்கிறார்கள் இல்லையென்றால் குழந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். சிலர் பெண் குழந்தைக்கு முடி கொடுக்கும் வழக்கமில்லை என்றும் கூறுகிறார்கள். இதில் எது நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்களின் வழக்கத்தில் உள்ளது என்றும், எது சரி என்றும் தெளிவிக்கவும்.

சுமங்கலியாகக் காலமானவருக்கு ஏன் திருவத்யயனம் பண்ணுவதில்லை? அந்த ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்குமா?

அடியேனும் அடியேனின் பார்யாளும் ப்ரபத்தி ஆனவர்கள், அப்படியிருக்க ப்ரபத்தி பண்ணாத எங்கள் அகத்துப் பெரியவர்களையும், தேவதாந்தர சம்பந்தம் இருக்கும் அகத்துப் பெரியவர்களையும் நமஸ்காரம் செய்யலாமா?

பெருமாளுக்கு ஏற்றும் ஊதுவத்திக் குச்சியால் ஶ்ராத்தத்திற்கான தொன்னையைத் தைக்கலாமா?

சொந்த பெரிய அக்கா,மதியம் ஆசார்யன் திருவடி அடைந்தால் எத்தனைநாள் தீட்டு காக்கவேண்டும்?

“1.கயா ஶ்ராத்தம் –வைஷ்ணவர்களுக்கு எந்த விதத்தில் முக்கியமானது.? பத்ரிநாத் போன்ற இடங்களில் கயா ஶ்ராத்தம் மாதிரி பண்ணவேண்டுமா அல்லது கயா ஶ்ராத்தம் மட்டும் தானா? பித்ருக்களுக்கு வேறு எங்கேயாவது பண்ண வேண்டுமா? 2.கயா க்ஷேத்ரத்தில் பெண்கள் பிண்ட ப்ரதானம் பண்ணுவதற்கு வைஷ்ணவத்தில் அனுமதி உண்டா? அல்லது ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?”

வடகலை நித்யாநுஷ்டானக்ரமம் (Lifco edition) சந்தியாவந்தனப் பகுதியில் “அச்யுதாய“ என்று தொடங்கும் மூன்று ஆசமன மந்திரங்களை உச்சரித்து இரு முறை நீரைப் பருக வேண்டும் என்றும், அதன் பிறகு “கேசவாய” என்று தொடங்கும் பன்னிரண்டு அங்க வந்தன மந்திரங்களை ஒரு முறை உச்சரிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். ஆனால் Prapatti,com ஸ்ரீ சுந்தர்கிடாம்பி ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ஹத்துடன் வெளியிட்டுள்ள சந்தியாவந்தனம் pdfல் மூன்று ஆசமன மந்திரங்கள் மற்றும் பன்னிரண்டு அங்க வந்தன மந்திரங்களையும் சேர்த்து இருமுறை உச்சரிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இவற்றில் எதை நாம் பின்பற்ற வேண்டும்?

“மாசப்பிறப்பு, அமாவாசை தர்ப்பண நாட்களில் திருவாராதன க்ரமம் பற்றி தெளிவு பெற விரும்புகிறேன். 1. ப்ராத: சந்தியா, திருவாராதனம், மாத்யாஹ்நிகம் பிறகு தர்ப்பணம் என்ற க்ரமத்திலா ? 2. ப்ராத சந்தியா, திருவாராதனம், தர்ப்பணம் பிறகு மாத்யாஹ்நிகம் என்று செய்யலாமா? (பி.கு: மாத்யாஹ்நிகம் எவ்வளவு காலத்திற்கு முன்பே செய்யலாம்)

சூர்யோதய காலத்திற்கு முன் வேத வகுப்பு உள்ளதால் எப்போது சந்தியாவந்தனம் செய்யவேண்டும்?

அடியேனுக்கு ஒரு ஸந்தேகம் , நாம் கோவிலில் இருந்து வந்தபிறகு கால் கை அலம்பிக்கலாமா?

அடியேன் சாப்பிட்ட பிறகு இலையை மாட்டுக்குப் போடலாமா?

திருவாராதனத்தில் எவ்வாறு மற்றும் எப்போதெல்லாம் கண்டை சேவிக்க வேண்டும்? [எந்தெந்த ஆசனத்திற்கெல்லாம், நைவேத்யம் (நிவேதனம்), ஹாரத்தி சமயம் அதுபோல, ஒரு தடவையா, தொடர்ந்தா?எப்படிச் சேவிக்கவேண்டும்]

வெளியிலிருந்து நாம் ப்ரசாதம் கொண்டுவந்து எம்பெருமானுக்கு அம்சை பண்ணினால் திருக்கோயிலின் சாந்நித்யம் குறைந்துவிடுமா?

ஒரு ப்ரபந்நன் தெரிந்தே செய்த பாபத்திற்கும், ப்ரபந்நன் அல்லாதவன் செய்த பாபத்திற்கும் கிடைக்கும் பலன் ஒன்றாகுமா? வேறுபடுமா?

நதி ஸ்நானம் செய்தால் பாபங்கள் போகும் என்கிறார்கள். ஒருவருக்குப் பாபங்கள் போனால் அவருக்கு மோக்ஷம் சித்திகுமா? [நதி ஸ்நானமே பாபமற்றவனாக ஆக்கி மோக்ஷம் கொடுக்குமா?]

எனது 9 வயது பெண் குழந்தை ஒரு ஸ்மார்த்தர் நடத்தும் கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார். சாதுர்மாஸ்யம் சமயம் அவர்கள் அங்கு படிக்கும் குழந்தைகளை அவர்களின் ஸ்மார்த்த ஆசார்யனிடத்தில் சேவித்து ஆசிர்வாதம் வாங்க அழைத்துச் சென்றனர். அடியேனின் மகளுக்கு ஶ்ரீமதழகிய சிங்கரிடத்தில் பரந்யாஸம் ஆகிவிட்டது. எங்கள் குழந்தை அங்குப் படிக்கக்காரணம் அவர்கள் மாநில் மொழியுடன் சேர்த்து ஸம்ஸ்க்ருத மொழியும் சொல்லிக்கொக்கிறார்கள். மேலும் இதர நிறுவனங்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தை நோக்கி செல்லும் நிலையில், இவர்கள் நம் சனாதன தர்மம்படி கலாச்சாரம் சொல்லிக்கொடுக்கிறார்கள். பகவத் கீதை மற்றும் அமரகோஷமும் சொல்லிக்கொடுக்கிறார்கள். என் மகளுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டதால் பள்ளியில் மற்ற குழந்தைகளொடு இவளும் சென்று அவர்களின் ஆசார்யனைச் சேவித்தால் ஏதேனும் குற்றமாகுமா?

ஸந்த்யாவந்தனத்தில் இருமுறை அபிவாதனம் யாரைக் குறித்துச் செய்கிறோம் ? பெரியவர்கள் குறித்தா?

ஏன் பெருமாள் ஆச்சார்யனைச் சேவிக்கும்போது அபிவாதனம் கிடையாது?

அடியேனுக்கு ஒரு சந்தேகம் க்ருஹத்தில் அமாவாசை அன்றைக்கு வாசலில்கோலம் போடலமா?

தினமும் ப்ரதோஷ காலம் என்பது எது? ப்ரதோஷ காலத்தில் ஜபம், பாராயணம், ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் போன்றவைகள் சேவிக்கக் கூடாது என்கிறார்களே. அப்படியென்றால் நித்யமும் சந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர ஜபமும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணமும் எப்படிச் செய்வது?

அடியேனின் அருளிச்செயல் ஆசார்யன் அகத்திற்கு ஏளுகிறார். அவருக்கு எவ்வாறு தண்டம் ஸமர்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கவும்.

விவாஹ தினத்தை நாம் கொண்டாடலாமா? ஆம் என்றால், எதன் அடிப்படையில் கொண்டாட வேண்டும் (திதி/நக்ஷத்திரமா)? அகத்தில் அன்றைய தினம் என்னென்ன பண்ணவேண்டும்?

ஆசார்யன் பாதுகையைப் பெருமாள் சன்னதியில் வைக்கலாமா?

அடியேனுடைய மாமனாரின் சந்தேகம், மஹாப்ரதோஷ காலத்தில் அஷ்டாக்ஷர மந்த்ர ஜபம் செய்யலாமா?

உபநயனம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு முதலில் ஸமாஶ்ரயணம் ஆகி இருக்க வேண்டுமா?

குரோதி தை ஸுதர்ஶநம் இதழில் ஸ்நானஶாடி ஸ்நான வஸ்திரத்தைப் பற்றிய ஒரு பதில் உள்ளது (கேள்வி Q62THAI25014). கடைகளில் இந்த ஸ்நானஶாடி வஸ்திரத்தை என்ன பெயர் சொல்லி கேட்டு வாங்க வேண்டும்?

திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதர் திவ்ய தேசத்தின் சிறப்பும், ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸேது ஸ்நானத்தின் முக்கியத்துவத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பரமாத்மா என்பவன் சித் அசித் என எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உள்ளான் என்று புரிகிறது. எம்பெருமான் எவ்வாறு அந்தர்யாமியாக ஏளியிருக்கிறான் என்பதில் வடகலை தென்கலை ஸம்ப்ரதாய பேதங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். நம் பூர்வர்கள் அந்தர்யாமி எம்பெருமானை எப்படிச் சாதித்துள்ளார்கள் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

தாயாதிக்காரர்களின் பெண், ஆசார்யன் திருவடி அடைந்து விட்டால் எத்தனை நாள் தீட்டு காக்க வேண்டும். தீட்டு முடிந்ததும் பெருமாள் சேவித்தல், ஶ்லோகம் சொல்லித்தருதல், உபந்யாஸம் அந்வயித்தல் எல்லாம் பண்ணலாமா? அல்லது சுபம் முடிந்த பிறகுதான் ஆரம்பிக்க வேண்டுமா? தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது அடியேன்.

மாத்யாஹ்நிகம் வடக்கு திசை நோக்கி பண்ண வேண்டும். இது ஒரு சாரார் கடைபிடிக்கிறார்கள். வடகலை திரிகால சந்தியா வந்தனம் (lifco edition) இதை கூறுகிறது. “Prapatti,com” ஸ்ரீ சுந்தர்கிடாம்பி ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்துடன் வெளியிட்டுள்ள சந்தியாவந்தனம் pdf ல் மாத்யாஹ்நிகம் கிழக்கு நோக்கி பண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்மார்த்தர்களில் ஒரு சிலர் கிழக்கு நோக்கி தான் மாத்யாஹ்நிகம் பண்ணுகிறார்கள்.நான் பார்த்து வளர்ந்ததில் சூரியன் தலைக்கு நேராக வரும் வரை கிழக்கு பார்த்தும், பிறகு வடக்கு பார்த்தும் பண்ணணும். மேலும் அனுஷ்டானங்களில் வேறுபாடுகள் இருப்பதால், அவர் அவர் குடும்ப வழக்கப்படி / ஆத்து பிருஹஸ்பதி கூறுகிறபடி செய்யவும்னும் கேள்விப் பட்டிருக்கிறேன். சரியா? ஏன் இந்த முரண்பாடு? இதற்கு காரணம் என்ன? விளக்கம் தர வேண்டுகிறேன்

நம் சம்பிரதாயத்தில் பாகவதோத்தமர் என்றால் யாரைக் குறிப்பிடுகிறது ?

கும்பமேளா ஶ்ரீவைஷ்ணவர்களுக்கும் முக்கியப்பட்ட நிகழ்வா? ஏன் நம் ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் பெரியோர்கள் இதைப் பற்றி கூறவில்லை?

ஆண்கள் எத்தனை காயத்ரி ஜபிக்கிறார்களோ அத்தனை அஷ்டாக்ஷரஜபமும் பண்ணவேண்டும் என்று காலக்ஷேபத்தில் அடியேன் தெரிந்துகொண்டேன். 1. அந்த அஷ்டாக்ஷரஜபத்தை அவர்கள் காயத்ரீஜபத்தைத் தொடர்ந்தே பண்ணவேணுமா அல்லது ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டு பண்ணவேண்டுமா? 2. காயத்ரீ ஜபத்தைத் தொடர்ந்தே பண்ணவேண்டும் என்றால் த்வயஜபமும் சரமஸ்லோகமும் சேர்த்தே பண்ணவேண்டுமா? அல்லது தனியாகவா? 3. ப்ராதஸ்ஸந்த்யையில் மட்டும் அஷ்டாக்ஷரஜபமா மூன்றுவேளையுமா? 4. சரமஶ்லோகம் ஒருதரம் சொன்னால் போதுமா அல்லது அஷ்டாக்ஷரம் ஜபித்த எண்ணிக்கை சொல்லணுமா?

ஒரு ப்ரபந்நனும் ஒரு முறையாவது கயா ஶ்ராத்தம் பண்ணவேண்டுமா?

பெற்றோர்கள் தங்களுக்கு ஸமாஶ்ரயணம் ஆனபின், தங்கள் குழந்தைக்கு உபநயனம் செய்வது நல்லது என்று ஒரு உபந்யாஸத்தில் கேட்டேன். ஏன் என்று தயவு செய்து விளக்கவும்.

ப்ராஹ்மணர் அல்லாத ஒரு வரை மணந்தால், அந்தப் பெண் அவர் பெற்றோர் வழி ஆசார்யனிடம் ஸமாஶ்ரயண, பரந்யாஸங்கள் செய்துகொள்ளலாமா?

வடகலையார் 4 முறையும், தெங்கலையார் ஒருமுறையும் சேவிப்பதன் காரணம் என்ன? மேலும் திருமண் தரிக்கும் முறையின் பேதத்தின் காரணமும் என்ன? என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

“சட்ட ரீதியாக மனைவியை விவாஹரத்து செய்த ஒருவரின் மனைவி பரமபதித்து விட்டால் (விவாஹரத்து செய்தவர் ஏற்கெனவே பரமபதித்து விட்டார்) பங்காளிகள் தீட்டு காக்க வேண்டுமா? [சாஸ்த்திரத்தில் விவாஹரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.]

எந்தத் திசையில் ஆசமனம், அர்க்ய ப்ரதானம்,ஜபம் .ஸ்ந்த்யாதி ,திக் வந்தனங்கள் எம்பெருமானை மட்டும் நோக்கி அனுஷ்டிக்க வேண்டுமா”

1. குளிக்கும் போது கச்சத்துடன் குளிக்கும் போது சிறு துண்டைக் கச்சமாக கட்டிக் கொள்ளலாமா.. அல்லது 9+5(10+6) தானா??சோப்பு போட்டுக் குளிக்கும் போது சங்கடமாக இருக்குமே?? 2.பஞ்ச கச்சத்துடன் மூன்றாவது துண்டு கட்டிக்கொள்ள ஏதாவது நியமம் உண்டா?. எல்லாரும் மூன்றாவது துண்டைக் கட்டிக்கொள்ளலாமா?

அடியேனின் அகத்துக்காரர் , அவரின் தந்தையுடன் கோவில் உத்ஸவ கைங்கர்யத்திற்குச் சென்றிருக்கிறார். அடியேன் பந்து ஒருவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. அவர்களின் ஆசி பெற அகத்துக்காரருடன்தான் செல்லவேண்டுமா? அவர் கோவில் கைங்கர்யத்திற்கு சென்றிருக்கும் பக்ஷத்தில் குழந்தைகளுடன் சென்று ஆசி பெறலாமா? எது உத்தமம்?

நித்யம் ஒவ்வொரு செயல் பண்ணும்போதும் சொல்ல ஏதேனும் ஶ்லோகம் உள்ளதா?

ப்ரயாக்ராஜ் (த்ரிவேணி சங்கமம்) தீர்த்த ஸ்நானம் மேற்கொள்ளும் முன் நாம் தங்கியிருக்கும் இடத்தில் தீர்த்தமாடிவிட்டுதான் செல்லவேண்டுமா? மேலும் த்ரிவேணி சங்கம நதிக்கரையில் ஶ்ராத்த திதி இல்லாவிட்டாலும் தர்ப்பணாதிகள் பண்ணலாமா?

1. ப்ரதோஷ கால அனுஷ்டானம் பற்றி விளக்கவும். 2. ஞானம், விக்ஞானம், பரக்ஞானம் என்றால் என்ன? 3. ஸ்வாமி தேஶிகன் திருவடி மேல் ஸ்தோத்ரம் பாடாததற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா?

1. யாரெல்லாம் ஸ்வேத தீப வாசிகள் ? 2. ப்ரபத்தி ஆன ஒருவர் பரமபதித்த பின்னர் நேரே ஶ்ரீவைகுண்ட லோகத்திற்குச் செல்கிறார். அப்படியிருக்க எதற்காக அவர்களுக்கு ஶ்ராத்தம்/தர்ப்பணாதிகள் பண்ண வேண்டும்?

நாம் ஒரு திவ்யதேசம் அல்லது அபிமான ஸ்தலம் அருகில் வசித்தால், பண்டிகைகளை அக்கோயிலை அனுசரித்தே நாம் கொண்டாட வேண்டும் என்ற ஒரு வழக்கம் உள்ளதா? விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

1. ப்ரஹ்மசாரிகள் அங்கவஸ்திரம் உடுத்திக்கொள்ள வேண்டுமா? ஆம் என்றால் எப்போதெல்லாம்? 2. அகத்துப் பெரியவர்கள் வெளியூர் சென்றிருந்தால், ப்ரஹ்மசாரி எம்பெருமானுக்குத் திருவாராதனம் பண்ணலாமா?

தாய்மாமா பரமபதித்து விட்டால் எத்தனை நாட்கள் தீட்டு? அவ்வருடம் பண்டிகைகள் கொண்டாடலாமா?

“1) எங்கள் வீட்டில் வளரும் துளசிச் செடியில் இருந்து கிடைக்கும் இலைகளை நான் பெருமாளின் திருவாராதனத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். ஜலதோஷத்திற்கு மருந்தாகத் துளசி கஷாயம் போட பயன்படுத்துவதில்லை. இதனால் என் குடும்பத்தினருக்கு என் மீது சற்று வருத்தம். நான் செய்வது சரியா, அல்லது சிறிது துளசி இலைகளைக் கஷாயம் போட பயன்படுத்தலாமா? 2) ஒரு உறவினர் அல்லது தெரிந்தவரின் இறப்பிற்குப் போகும்போது, நம் திருமண் அழியாமல் இருக்கும் பட்சத்தில் நாமே நம் திருமண்ணை அழிக்க வேண்டுமா?.

மாத ஸங்க்ரமணத்திற்குப் புண்யகால சமயங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. விஷுவிற்கு 20 நாழிகை மற்றும் 10 நாழிகை என்றும், விஷ்ணு பதிக்கு 16 நாழிகை என்றும் ஷடசீதிக்கு 60 நாழிகை என்றும். இரவில் ஸங்க்ரமணம் ஏற்பட்டால் முன் இரவானால் முன் தினமும் பின் இரவானால் மறு தினம் தர்ப்பண காலம் என்று. இவை அனைத்தும் விஷு மற்றும் விஷ்ணுபதிகளில் புரிந்து கொள்ள முடிகிறது. ஷடசீதிக்கு வரும் போது மாதம் பிறந்த பிறகு 60 நாழிகையை எப்படிப் புரிந்து கொள்வது? பகல் 30 பொழுது நாழிகையே, இரவென்றால் அதற்கு வேறு நியமம். சற்று தெளிவிக்க ப்ரார்த்தனை.

நாம் பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் எந்தச் சுப கார்யமும் ஏன் செய்வதில்லை? எம்பெருமான் அவ்விரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துதானே இராம க்ருஷ்ணாதி அவதாரங்களை எடுத்தார். அப்படியிருக்க அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள்தானே. குறிப்பாக இவ்விரண்டு நாட்களைத் தவிர்ப்பதன் காரணம் என்ன என்று விள்ளக்கவும்.

ப்ரபத்தி ஆன ஒருவர் தன் மகளின் சலங்கைப் பூஜைக்குச் செல்லலாமா? அங்கு அவர்கள் நடராஜருக்குதான் பூஜை செய்து சலங்கை கொடுக்கிறார்கள். இதனால் தேவதாந்த்ர ஸம்பந்தம் ஏற்படுமா?

A. பட்டு வஸ்த்ரம் உடுத்திக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாமா? B. தர்ப்பணம் அமர்ந்துகொண்டுதான் பண்ணவேண்டுமா? அல்லது நின்றும் பண்ணலாமா? சில ஶரீர உபாதை காரணமாக நீண்ட நேரம் கீழே அமர இயலாது ஆகையால் இக்கேள்வி.

சிறுதான்ய வகைகளை உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஏகாதசி அன்று உட்கொள்ளலாமா? இது அரிசி சாதம் சாப்பிட்டதற்குச் சமம்மாகுமா?

அடியேனுக்கும் , என் பாரியாளுக்கும் சமீபத்தில் ஆசார்யன் திருவடியில் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் ஆயிற்று. அடியேன் ஒரு பஜனை குழுமத்தில் கடந்த 6 வருடங்களாக பாடகராக இருக்கின்றேன். பல கோயில்களுக்குச் சென்று தாயார்,பெருமாள், சிவன்,பிள்ளையார், அம்பாள் என அனைவரையும் பற்றி பாடுவேன் இருப்பினும் தேவதாந்தரங்களிடம் ப்ரார்த்தனை ஏதும் செய்யமாட்டேன். பரந்யாஸம் ஆனபின் அதைத் தொடராலாமா?

நித்யபடி ப்ரதோஷ காலம் என்பது எவ்வளவு நேரம்? அப்போது செய்ய வேண்டியவை/கூடாதவை எவை? அந்தச் சமயத்திலும் அனத்யயன நாட்களிலும் திருக்கோயில்களில் வேத பாராயணம் செய்யலாமா? மஹாப்ரதோஷம் விசேஷ விதிகள் உள்ளனவா? அன்று கோயில் பாராயணம் செய்யலாமா?

சிலர் காசி/கயாவில் ஆத்ம பிண்டம் கொடுக்கிறார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே ஆத்மபிண்டம் கொடுத்தால், அவர்கள் பரமபதித்த பின் ஶ்ராத்தம் தேவையில்லையா? தெளிவுபடுத்தவும்.

1. நதிகளில் ஸ்நானாதி ஸங்கல்பம் தத்தாங்க தர்ப்பணம் கிழக்கு முகமாக மட்டுமே செய்ய வேண்டுமா அல்லது நதி ப்ரவாக திசையில் செய்யலாமா? (நம் பக்கம் பொதுவாக மேற்கிலிருந்து வருகிறது) 2. கோயிலுக்கு வெளியே பின்புறம் அல்லது முன்புறம் உள்ள புஷ்கரிணியில் அனுஷ்டானம் செய்யும் போது எந்தத் திசையில் செய்ய வேண்டும்?. பெருமாள் இருக்கும் திக்கை நோக்கியா? 3. தற்போதைய நிலையில் மாத்யாஹ்நிகம் காலை வேளையில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படிச் செய்தால் மீண்டும் மாத்யாஹ்நிக வேளையில் செய்ய வேண்டுமா? 4 அமாவாசை மற்றும் இதர தர்ப்பண நாட்களில் கீரை வகைகள், பூசனி, பரங்கி சேர்த்துக் கொள்ளலாமா அல்லது ஶ்ரார்த்தங்களுக்கு உகந்தவைகளை மட்டுமே செய்ய வேண்டுமா?

அடியேனின் பெருமாள் சந்நிதி கிழக்குப் பார்த்திருக்கிறது. அங்கு எம்பெருமான் படங்கள் அனைத்து திசைகளிலும் (தெற்கு உட்பட) வைக்கலாமா?

எனது அகத்துக்காரர் தென்கலை சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை 2 வாரத்திற்கு முன் பரமபதித்துவிட்டார். இவர் இரண்டாவது புத்திரன். எங்கள் அகத்தில் 2 சாளக்கிராம மூர்த்திகள் ஏளியிருக்கிறார்கள். என் கணவர் பெருமாளுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

நம் ஸம்ப்ரதாயத்தில் உத்தான துவாதசி மற்றும் துளசி பூஜை (விவாஹம்) கொண்டாடும் வழக்கம் உண்டா? உண்டு என்றால் எப்படிக் கொண்டாட வேண்டும்?

ஶ்ரீமத் ரஹஸ்ய த்ரய காலக்ஷேபத்தில் எம்பார் வ்ருத்தாந்தம் பற்றி ஸ்வாமி சாதித்தார். அடியேனின் அகத்துக்காரர் ஆக்ஞா கைங்கர்யங்களைச் செய்வதில்லை. அதற்கான அபராத க்ஷமாபனம் யாரிடம் ப்ரார்த்திக்க வேண்டும்? என்னுடைய ஆசார்யனிடமா அல்லது என் அகத்துக்காரரின் ஆசார்யனிடத்திலா?

13 நாள் அபர கார்ய கைங்கர்யம் என்றால் என்ன? ஒரு ப்ரபந்நன் விஷயத்திலும் ப்ரபந்நன் அல்லாதவர் விஷயத்திலும் எவ்வாறு வேறுபடும்? ப்ரபந்நன் அல்லாதவர் பரமபதித்தாலும் நாம் ஏன் “ஆசார்யன் திருவடியை அடைந்தார்” என்றே சொல்கிறோம்?

1) திவ்யப் பிரபந்தங்களுக்கு அனத்யயன காலம் என்பது எது? அக்காலத்தில் நாம் திருப்பல்லாண்டு, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி முதலியவைகளைக்கூட சேவிக்கக்கூடாதா? அனத்யயன காலத்தில் திருவாராதனத்தின்போதுகூட எந்த ஆழ்வார் பாசுரங்களையுமே சேவிக்கக்கூடாதா? 2) சாளக்கிராம மூர்த்திகளின் பெயர்கள், மற்றும் அம்மூர்த்திகளை அடையாளம் கண்டுபிடிக்கும் வழிகள் எந்தக் கிரந்தங்களில் உள்ளன?”

அடியேனின் மகன் ஶ்ரீவைஷ்ணவர் ஒருவரை தண்டம் சமர்ப்பித்து அபிவாதனம் சொல்லிய பின் அவர் அபிவாதனத்திற்கு பதில், “ராமானுஜ தாசன்” என்று சொன்னாலே போதுமானது என்றார். இதில் எது சரி?

ஶ்ரீ உ வே கண்ணன் ஸ்வாமி, உண்பதில் எண்பது என்ற உபந்யாஸத் தொடரில் ஸமாஶ்ரயணம் ஆகாதவர்கள் பண்ணிய தளிகையை (கன்யா பெண்கள், உபந்யாஸம் ஆகாத புருஷர்கள்) சாப்பிடக்கூடாது என்றார். ஸமாஶ்ரயணம் ஆனபின்னும் போதுமான ஆசாரம் கடைபிடிக்க முடியாமல் சம்சாரத்தில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றார். ஸமாஶ்ரயணம் ஆனபின் நாம் கடைபிடிக்க வேண்டியவை என்ன என்று தெளிவிக்கவும்.

அடியேனின் அகத்துக்காரர் திருமண்காப்பு நாள் முழுவதும் தரித்துக்கொள்வார், சில நேரம் உறங்கும் முன் முகம் அலபும் வழக்கம் உண்டு. உறங்கும் போதும் தரித்திருக்க வேண்டுமா?எது சரி?

பக்ஷம்,நக்ஷத்திரம்,நாழிகை கொண்டு ஒரு பண்டிகையை எப்படிக் கண்டுபிடிப்பது? சூர்யோதயத்திலிருந்து எப்படி நாழிகையை கணக்கு பண்ணவேண்டும்? பஞ்சாங்கத்தில் இருக்கிறது என்றாலும், USA போன்ற தேசங்களில் இருக்கும் எங்களுக்கு எப்படிப் பார்க்கவேண்டும் என்று சொன்னால் நாங்களே பண்டிகை நாட்களை பார்க்கச் சௌகர்யமாக இருக்கும்.

1. புரட்டாசி மாத சுதர்சனம் கேள்வி பதில் பகுதியில் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன் கோவிலுக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறி உள்ளது. அப்படிச் சென்றால், குழந்தைக்குச் சடாரி சாதித்துக் கொள்ளலாமா? 2. அவரவர் பிறந்த நக்ஷத்திர தினத்தன்று அவரவர் பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்வது வழக்கத்தில் உள்ளதே. பரந்யாஸாம் ஆன பிறகு நம் பெயரில் அர்ச்சனை செய்யலாமா ?”

பரந்யாஸத்திற்குப் பிறகு ஒரு ப்ரபந்நன் 1.ஆஞ்சநேயரைச் சேவிக்கலாமா? 2.கைங்கர்யம் பண்ணலாமா? 3.ப்ரார்த்தனை பண்ணலாமா?

ஒருவர், வைதீகர், வைதீகர் அல்லாதவர்,புருஷர்,ஸ்த்ரீ பரமபதித்த பிறகு சுப தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் வேத பாராயணம் செய்யலாமா? இல்லை வைதீகருக்கு மட்டும்தான் வேத பாராயணம் செய்ய வேண்டுமா?முந்தைய கேள்வியில் சிறிய தவறு உள்ளதால் மறுபடியும் இந்தக் கேள்வியை முன்வைத்து உள்ளேன்.

1. ஜனன, மரண ஆஶௌச காலங்களில் சந்தியாவந்தனம் அனுஷ்டிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிய ஆவல். 2. மேலும் இரவு, பகல் என்று தொலை தூர பிரயாணங்கள் போது ஸ்நானம் செய்யாமல் ஜலம் இல்லாமல் மந்திரார்த்தமாகச் செய்யலாமா? 3. ஆஶௌச காலங்களில் சங்க்ரஹமாகச் செய்யவேண்டும் என்றும் காயத்ரி ஜபமும் பத்து எண்ணிக்கை செய்யலாம் என்றும் கூறுகிறார்கள். ஜனன, மரண என இரண்டு ஆஶௌசங்களுக்கும் ஒரே மாதிரி நியமங்களா அல்லது வெவ்வேறா? ஶாஸ்த்திரத்தில் இதைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா? விவரம் அறிந்து அனுக்ஷ்டிக்கத் திருவுள்ளம் பற்றி இருக்கிறேன்.

வ்ருத்தி தீட்டில் ஸ்தோத்ர பாடம் சேவிக்கலாமா?

ஸ்நானம் செய்யும் போது வஸ்த்ரம் கச்சத்துடன் இருக்க வேண்டுமா? வெறும் துண்டு மட்டும் போதுமா?

த்ரிகால சந்தியாவந்தனத்தில் காயத்ரி ‌மஹாமந்திர ஜப சங்கல்பத்தில் எண்ணிக்கையை (10, 28, 108 என்று) சொல்லாமல் ..… ப்ராதஸ் சந்த்யா காயத்ரி மஹாமந்த்ரம் கரிக்ஷ்யே என்று சங்கல்பம் செய்யலாமா ? (சங்கல்பத்தில் செய்த எண்ணிக்கைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஜபிக்க கூடாது என்று கூறப்படுவதால் இந்தச் சந்தேகம்).

புஷ்கரிணி அல்லது நதி ஸ்நானம் செய்யும் போது ஆசமனம், அர்க்ய ப்ரதானம் போன்ற அனுஷ்டானங்களை நீரில் நின்ற நிலையில் அல்லது எப்படிச் செய்யவேண்டும்?

பப்பாளி, அன்னாசி, சீதாபழம், Dragon, pear போன்ற பழங்களை ஆசார்யனுக்கும், எம்பெருமானுக்கும் ஸமர்ப்பிக்கலாமா?

நாம் யாருக்கு ஶ்ராத்தம் செய்கிறோமோ அவரின் படத்தை ஶ்ராத்தம் செய்யும் இடத்தில் வைக்கலாமா?

கோவில்களில் சந்தியாவந்தனம் பண்ணும் முறை எப்படி ? கிழக்கு , வடக்கு திக்குகளை நோக்கியா ? அல்லது மூலமூர்த்தியான ஸ்வாமியை நோக்கியா ? ( குறிப்பு :எண்திசைகளும் ஸ்வாமிக்கு ஆடையாக இருப்பதால் திக்குகளை நோக்கிப் பண்ணாமல், ஸ்வாமியை நோக்கிப் பண்ணினால் போதும் – என்று எங்கோ படித்ததாக நினைவு)

வேலை காராணமாக நாங்கள் வேறு நகரத்திலும் என் மாமியார் மாமனார் வேறு நகரத்திலும் இருக்கின்றோம். எனது கணவரும் எனது தந்தையும் நித்யமும் சாளக்கிராம திருவாராதனம் செய்வார்கள். என் புக்கத்திலோ அல்லது பிறந்தகத்திலோ நாங்கள் மாவிளக்கு போடுவோம். ஆனால் இம்முறை வேறு நகரத்தில் இருப்பதால் என்ன செய்வது? நாங்கள் இருக்கும் அகத்திலும் ஏற்றாலாமா? அதாவது இரண்டு அகத்திலும் (புக்ககம் மற்றும் நாங்கள் இருக்கும் நகரம்) மாவிளக்கு ஏற்றலாமா?

ஒருவர் ஆசார்யன் திருவடியை அடைந்த பிறகு சுபம் தினத்தில் வைதீகர் மற்றும் வைதீகர் அல்லாதவர்,புருஷர் மற்றும் ஸ்த்ரீ இவர்களுள் யார் வேத பாராயணம் செய்ய தகுதி உள்ளவர்கள்? சுபத்தில் வேத பரயணத்தில் என்ன பாராயணம் செய்ய வேண்டும்? வேத சாற்றுமுறையில் நமது ஆசார்யன் உரைத்துள்ள வேத பஞ்சாதிகள் மட்டும் தான் சேவிக்கணுமா?

கோயில்களில் இருந்து வெளியே வருவதற்கு முன் சிறிது நேரம் உட்கார வேண்டும் என்ற விதி நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ளதா?

மாத்யாஹ்னிகம் எந்தத் திசையை நோக்கிச் செய்ய வேண்டும்?

குழந்தை பிறந்து ஒரு வயது ஆகும் வரை கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகலமா?

அக்ஷதை ஆசீர்வாதத்தில் ஒருவரை சேவிக்கும் போது அபிவாதனம் செய்யலாமா?

அமாவாஸை அன்று வாசலில் கோலமிடும் வழக்கம் உண்டா?

அமாவாஸை, அதுவும் முக்கியமாக ஆடி, தை அமாவாஸை அன்று வாசலில் பண்டிகை தினம் போல் பெரிய படிக்கோலங்கள் காலையிலேயே போடலாமா?

அமாவாஸை அன்று மடி வேஷ்டி ஸந்தர்ப சூழலில் விழுப்பாகி விட்டால், புது வேஷ்டியோ, பட்டு வேஷ்டியோ தரித்துக்கொண்டு தர்பணம் பண்ணலாமா? வேறு உபாயங்கள் உண்டா? விக்ஞாபித்து அருள பிரார்த்திக்கிறேன்.

அடியேன் பகவத் ப்ரீத்யார்த்தமாய் திருவேங்கடத்தானைக் குறித்து சனிக்கிழமை விரதம் (பழம், பால்,அல்லது தேஹ பாங்கிற்கேற்ப கோதுமை பதார்த்தம் மட்டுமே) அனுஷ்டித்து வருகிறேன். எந்தக் குறிப்பிட்ட வேண்டுதலும் இல்லை. 1. பரந்யாஸம் ஆனவர்கள் இதைத் தொடரலாமா? 2. சனிக்கிழமை துவாதசி வந்துவிட்டால், ஏகாதசி விரதத்தை எப்படி முடித்துக் கொள்வது?

சில சமயங்களில் கோவிலில் பெருமாள் சேவிக்கும் பொழுதோ, அல்லது உற்சவத்தில் பெருமாள் சேவிக்கும் பொழுதோ, அல்லது நம் க்ருஹத்தில் விசேஷ நாட்களில் த்ருப்தியாக திருவாராதனம் ஆகும் பொழுதோ, நம்மையும் அறியாமல் அவனுடைய கல்யாண குணங்களை நினைக்கும் பொழுது, நம் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது, இது அழுகை என்று கருதப்படுமா, கோவிலில் அல்லது பெருமாள் முன்னால் அழக் கூடாது என்று ஸாஸ்திரங்கள் சொல்கின்றன, இது அபசாரம் ஆகி விடுமா? அதே போல் ஆழ்ந்து நம் பிரார்த்தனையை அவன் ஸன்னதியில் அவனிடம் விண்ணப்பம் செய்யும்போது நம்மையும் அறியாமல் நம் கண்கள் முடிகிறது, இதுவும் அபசாரமா?

மஞ்சள் ஶ்ரீசூர்ணத்திற்கும், சிகப்பு ஶ்ரீசூர்ணத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன? யாரெல்லாம் மஞ்சள் இட்டுக்கொள்ளவேண்டும்? நாம் ஆசாரமாக இல்லையென்றால் சிகப்பு இட்டுக்கொள்ளவேண்டுமா?

78 வயது நிரம்பிய கைம்பெண்ணான (widower) எனது மாமியார் இதுவரை ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்துக்கொள்ளவில்லை. இப்போது பண்ணிக்கொள்ளலாமா? ஆம் என்றால் எப்படிப் பண்ணிக்கொள்ளவேண்டும்?

மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணத்திற்குப் பின் பெருமாள் ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?

திருவாராதன சமயத்தில் அர்ச்சனைக்குப் பின் பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டு அதன்பிற்கு மீண்டும் திருவாராதனத்தைத் தொடரலாமா?

என் ஓர்படி பரமபதித்து ஒருவருடம்கூட ஆகவில்லை, இந்நிலையில் நாங்கள் ஆசார்யனையும் திவ்யதேசங்களுக்கும் போய் சேவிக்கலாமா? என் கணவர் கயா ஶ்ராத்தம் செய்யலாமா?

தேங்காய் மூடியைத் துருவி எடுக்காமல், பத்தையாக எடுத்து பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகித்து விட்டு மீதமுள்ள பத்தையை வேறு ஒரு நாள் பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா? அல்லது மொத்த தேங்காயையும் துருவி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பெருமாள் திருவாராதன தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா?

அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டதால் தேவதாந்தரங்களை வழி படுவதில்லை, பரந்யாஸத்திற்கு முன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதுண்டு, சின்ன வயதில் இருந்து வந்த அகத்து வழக்கத்தால். இப்போது நான் நிறுத்தியதை அறிந்து, பரந்யாஸம் ஆன என் பெற்றோர்களே பிள்ளையாரை விஷ்வக்ஸேனராக பாவித்து பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடலாம் என்கிறார்கள். நான் என்னால் இயன்ற வரை பிள்ளையார் விஷ்வக்ஸேனர் இல்லை என்று எடுத்துக் காட்டி விட்டேன், ஆனாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. படிக்கும் குழந்தைகள் இருந்தால் விநாயகர் சதுர்த்தி கொண்டலாம் என்கிறார்கள். அத்துடன் அம்மாவுக்கு ஒரு ஜோஸியர் அவருடைய சின்ன வயதில் (இப்பொழுது அவருக்கு 87 ஆவது திருநக்ஷத்திரம் நடந்து வருகிறது) கேது தோஷம் உள்ளதால் அவர் பிள்ளையை பாதிக்கும் என்று கூறியுள்ளார், ஆகையால் கடந்த 50 வருட காலமாக பிள்ளையார் வழிபாடு செய்து வருகிறார். பரந்யாஸம் ஆகியும் இதை தொடர்ந்து வருகிறார், பாதுகா ஸஹஸ்ரம், மற்றும் தேஶிகர் ஸ்லோகங்கள், தேஶிகர் பிரபந்தம், நித்யம் ஶ்ரத்தையுடன் கடந்த 15 வருட காலமாக பரந்யாஸம் ஆனது முதல் ஆசாரியர் தனியன்களுடன் நித்யம் அனுஸந்தானம் செய்கிறார். அப்பாவும் தனது 92வது வயதிலும் ஒரு நாள் தப்பாமல் பெருமாள் திருவாராதனம் மற்ற அனுஷ்டானங்கள் செய்து வருகிறார். ஏன் இந்தத் தேவதாந்தர மோகம் என்று புரியவில்லை, எப்படி இவ்வளவு பெரியவர்களுக்கு அடியேன் புரிய வைப்பது என்று கவலையாக உள்ளது, தேவரீர் வழி காட்டும் படி விண்ணப்பிக்கிறேன்.

“ஹிரண்யகர்ப சாளக்கிராமம்” என்பது சாளக்கிராமமாக கருதலாமா?

பரிசேஷனம் செய்ய ஏன் மற்றவர்களுடன் ஜலத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது?

புருஷர்களுக்கு (அதாவது அம்மா அப்பா என்று இருவரும் இருப்பவர்களுக்கு, இருவரும் அல்லது ஒருவரோ பரமபதித்து விட்டால்) தலைக்குத் தீர்த்தமாட என்ன நியமங்கள். என்றைக்கெல்லாம் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்யவேண்டும்? என்று விளக்கவும்

திருமண் இட்டுக் கொள்ளும் போது எந்த விரலை உபயோகப்படுத்தலாம்.

1. அடியேனுக்கு நான்கு/ஐந்து தலைமுறைக்கு முன்னான தஸராத்ர ஞாதியின் விவாகமான பெண் பரமபதித்தால் ஆஶௌசம் உண்டா? எவ்வளவு நாட்கள்? 2. உடன் பிறந்த ஒருவருக்கு ஆஶௌசம் என்று தெரிந்து அந்தச் சமயத்தில் அவர் ஒரு ப்ரார்த்தனைக்காக கல்யாண உற்சவம் செய்யப் போவதாக தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது தர்மமா?

காலை மற்றும் மாலை நேர சந்தியாவந்தனங்களை ப்ராயஶ்சித்தம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றால் எத்தனை மணிக்குள் செய்ய வேண்டும்?

1) ஸமாஶ்ரயணம் (பஞ்ச சமஸ்காரம்) செய்து கொண்டவர்களைக் காட்டிலும் பரந்யாஸம் செய்து கொண்டவர்கள் வேறு ஏதாவது சில கர்மங்களை/நியதிகளைச் செய்ய அதிகாரி ஆகிறார்களா? வித்தியாசங்களை விளக்க வேண்டுகிறேன். 2) ஸ்ரீசூர்ணம் என்பது தாயாரைக் குறிக்க, அதன் நிறத்தில் வடகலை மற்றும் தென்கலை ஸம்பிரதாயத்தினருக்கு ஏன் வித்தியாசம் உள்ளது? வடகலை சம்பிராதாயதைச் சேர்ந்தவர்கள் சிலர் சிவப்பு நிறத்தில் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்கிறார்கள். இதில் தவறேதும் உள்ளதா? 3) ஆசமனம் செய்ய உத்தரணி பயன்படுத்தலாமா?

யக்நோபவீதம் மாற்ற வேண்டிய காரணங்கள் குறித்த சம்சயம் 1. 10 / 3 / 11/2 நாட்கள் தீட்டு முடிந்தபின் மாற்ற வேண்டுமா 2. சரம ஶரீரத்தைத் தொட வேண்டிய சந்தர்ப்பத்தில் மட்டும் மாற்ற வேண்டுமா இல்லை துக்கம் விசாரிக்கச் சென்று சரம ஶரீரத்தைப் பார்த்தாலே மாற்ற வேண்டுமா?

ஏகாதசி அன்று எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும் வாழைப்பழத்தை நாம் உட்கொள்ளலாமா?

புரட்டாசி முதல் சனிக்கிழமை மஹாளய பக்ஷத்தில் குல தெய்வ கோயிலில் மாவிளக்கு ஏற்றலாமா? சிலர் மஹாளய தர்ப்பணம் முடிந்ததும்தான் ஏற்றணும் என சொல்கிறார்கள்.? அதற்கான பதில் கூறினால் நல்லது.நன்றி.

வேதத்தில் (உதகசாந்தியில்) நக்ஷத்திரங்கள் க்ருத்திகையிலிருந்து பரணியில் முடிகிறது. ஆனால் பொது வழக்கில் அஸ்வினியில் தொடங்கி ரேவதி என்றல்லவா சொல்லுகிறோம். இதன் தாத்பர்யம் என்ன? ஸ்வாதி நக்ஷத்திரத்திற்கு வேதத்தில் என்ன பெயர்? தேஶிகரின் ப்ரபந்த ஸாரத்தில் பெரியாழ்வார் பாசுரத்தில் அவரின் நக்ஷத்திரத்தை எப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்?

A. தசமி கலக்காத நாளில் ஏகாதசி வ்ரதம் இருக்கவேண்டும் என்றால், எப்படிப் புரிந்துகொள்வது? சூர்யோதய நாழிகையில் இருந்தா? அல்லது 12am முதலா? ப்ரஹ்மமுஹூர்த்தம் காலத்திலிருந்தா? தெளிவிக்கவும். B. மேலும் கர்நாடக தேசத்திற்கும், தமிழ்நாட்டில் பின்பற்றும் பஞ்சாங்கத்தில் பல வேறுபாடுகள் இருக்கின்றன குறிப்பாக ஏகாதசி வ்ரத அனுஷ்டான தினத்தில், அவை என்ன? ஏன் இந்த வேறுபாடுகள்? அடியேன் சித்தாந்த, வாக்கிய பஞ்சாங்கம் என்று இரண்டுவிதம் உள்ளது என கேள்விப்பட்டுள்ளேன் அதனால்தான் இவ்வித்தியாசங்களா? விளக்க வேண்டுகிறேன்.

எங்களின் மகள் விஶ்வகர்மா பிரிவைச் சேர்ந்த பையனை மணந்துள்ளார். a. அகத்தில் நடக்கும் சுமங்கலி ப்ரார்த்தனைக்கு அவளை மங்கலிப்பொண்டாக அமர வைக்கலாமா? (பொதுவாக 5 சுமங்கலிகள் நம் நாத்தனார், பெண்கள் என்று அழைப்பார்கள்) b. எங்கள் பேரனுக்கு எப்படிப் பூணூல் ஸம்ஸ்காரம் செய்வது?

பிறப்புத் தீட்டு 11 நாட்கள் இருக்கும் போது, கோயில் கைங்கர்யம், அகத்தில் திருவாராதனம், ஸ்ரீஸூக்திகளைப் பாரயாணம் செய்தல், காலக்ஷேபம் முதலியவைகளில் அன்வயிக்கக் கூடாது என்பதைப் போல் வேறு என்னென்ன கடைபிக்க/தவிர்க்க வேண்டும்? 12ஆம் நாள் புண்யாகவாசனம் வாத்தியார் செய்துவைப்பாரா அல்லது நானே செய்யவேண்டுமா? தெளிவிக்கவும்.

என் அகத்துக்காரர் தர்ப்பணம் செய்யும்போது, மனப்பாடமாக தெரியாததனால் புத்தகம் பார்த்துச்சொல்வார், அவருக்கு உதவியாக அடியேன் புத்தகத்தைப் பிடித்துக்கொள்வேன். ஸ்த்ரீகள் இதுபோன்ற உதவி செய்யலாமா?

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஸ்த்ரீகளும், த்விஜர்கள் அல்லாதவர்களும் சேவிக்கலாமா? அல்லது அதற்கும் த்வீஜர்கள்தான் சேவிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா?

துவாதசி மற்றும் பாரணை நாட்களில் புளி சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதால் எலுமிச்சம் பழம் உபயோகிக்கலாமா? குறிப்பாக சாற்றமுதில்.

சில 3 பூணூல் தரிப்பதன் காரணம் என்ன?

எங்கள் அகத்து வாத்தியார் , மஹாளயபக்ஷம் நம் கோத்ரத்தைச் சேர்ந்த நம் உறவினர்களுக்கும் செய்யலாம் என்று சொன்னார்? அவ்வாறு செய்யலாமா? தெளிவிக்கவும்.

விளக்கேற்ற ஒரு திரியின் இரண்டு முனைகளை இணைத்தல் சரியான முறையா? எப்படி ஏற்ற வேண்டும் என்பதை விளக்கவும். மூன்று முறை பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது என்ன சொல்லி ஸ்வீகரிப்பது ? (அகால ம்ருத்யு ஹரணம் தவிர்த்து வேறு ஏதாவது சொல்லும் வழக்கம் உண்டா? ) எந்தெந்த திதி, வார, நக்ஷத்ரங்களில் ப்ரஹ்மசாரி க்ஷௌரம் செய்து கொள்ளலாம் ? க்ஷௌரம் செய்யும் ஒவ்வொரு முறையும் புது யக்ஞோபவீதம் போடுவது உசிதமா ? வஸ்த்ரம் இல்லாமல் ஸ்வாமிக்குத் திருமஞ்சனம் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் உண்டா ? (பெருமானின் திவ்யமங்கள விக்ரஹத்திலே வஸ்த்ரம் இருப்பதால் நாம் வஸ்த்ரம் சாற்றி திருமஞ்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதாகச் சிலபேர் சொல்கிறார்களே ! அது எப்படி என்பதை சற்று விளக்கவும்

ஸ்வாமி தேஶிகன் 12 திருமண்காப்பு என்று பன்னிரு நாமத்தில் காட்டியிருக்கிறார். சிலர் 13 திருமண்காப்பு தரிக்க காரணம் என்ன? ஸமாஶ்ரயாணம் ஆனபின் கட்டாயம் 13 திருமண்காப்பு தரிக்கவேண்டுமா?

1. வாழைப்பழத்தைத் தோலுரிக்காமலேயே பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? பொதுவாகப் பழங்களை எப்படி ஸமர்ப்பிக்கவேண்டும்? 2. அகத்திற்கு வருவோருக்குத் தாம்பூலம் கொடுக்கும்போது பெருமாளுக்கு ஸமர்ப்பித்த பழத்தை வைத்து கொடுக்கலாமா?

இந்த வருடம் காயத்ரி ஜபம் தினத்தில் ப்ரயாணம் செய்யும் நிர்ப்பந்தம் வந்துள்ளது, ஆவணி அவிட்டம் அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பின்னர் பண்ணலாமா? இதற்கு ஏதாவது பிராயச்சித்தம் உள்ளதானால், அடியோங்களுக்கு உபதேசிக்கும் படி ப்ரார்த்திக்கிறேன்.

பண்டிகை நாட்களில் ஏகாதசி விரதம் வந்தால் எப்படி அனுஷ்டிப்பது என்று விவரித்ததமைக்கு தன்யவாதங்கள். ஆனால் க்ரஹத்தில் இருவர் மட்டுமே இருக்கும் பக்ஷத்தில் நிர் ஜல உபவாசம் இருக்கும் போது, பெருமாள் திருவாரதனத்துக்குப் பழங்கள் மட்டும் ஸமர்ப்பிக்கலாமா? அது ஏகாதசி கூடிய பண்டிகை நாட்களுக்கும் பொருந்துமா?

பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிப்பது பஞ்சகவ்யம் ஸ்வீகரிப்பதற்குச் சமம் என்று கேள்விப்பட்டுள்ளேன். இதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது, ஆனால் என் அகத்துகாரருக்கு இன்னும் ஆகவில்லை, முக்கூர் அழகியசிங்கரிடம் ஸமாஶ்ரயணம் மட்டுமே ப்ராப்தம் ஆகியுள்ளது, அவருக்கு 60வது திருநக்ஷத்திரம் அடுத்த ஆண்டு சித்திரை மாதத்தில் வருகிறது. அந்தத் தினத்தில், அல்லது அந்த வாரத்தில், சாஸ்திர ரீதியாக சொல்லப்பட்டுள்ளவை மட்டுமே செய்ய வேண்டும் என்றால், அதுவும் பெருமாள் கைங்கர்யமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விவரிக்க விண்ணப்பிக்கிறேன்.

ஒரு நக்ஷத்திரம் ஒரு மாதத்தில் இரண்டுமுறை வருமென்றால் ஏன் இரண்டாவது முறை வருவதைதான் ஜன்ம நக்ஷத்திரமாக கருதுகிறோம்? ஜன்ம நக்ஷத்திரம் கொண்டாட அன்றைய நாளில் எத்தனை நாழிகை அந்நக்ஷத்திரம் இருத்தல் வேண்டும்?

எங்களுக்கு இரண்டு புத்திரர்கள் இருக்கிறார்கள்.இருவரையும் உபநயன ஸம்ஸ்காரம் ஆனபின் வேத அத்யயனத்தில் சேர்க்க ஆசைகொண்டுள்ளோம். 12 வயதுக்கு மேல் இருவரின் ஒருவரை ஶாஸ்த்ர அத்யயனத்திற்கு அனுப்பலாமா? (ஆதாவது ந்யாயம், தர்க்கம், வ்யாகரணம் போன்ற ஶாஸ்த்ரங்கள் வாசிக்க) நம் ஸம்ப்ரதாய முறைப்படி இவையெல்லாம் கற்க எங்கு சேர்க்கவேண்டும? மேலும் யாரேனும் தெனாலி மஹாபரிக்ஷைக்குக் குழந்தைகளைத் தயார் செய்து அனுப்புகிறார்களா? யாரை அணுக வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். எங்களுக்குப் புத்திரர்களை ஸம்ப்ரதாயம் கற்க அனுபிக்கவேண்டும் என்றும், NIOS முறையில் அவர்களை Secondary and Senior Secondary பரிக்ஷைகளுக்கு அனுப்பவும் ஆசைப்படுகிறோம். எங்களின் எண்ணம் சரியானதா?

ஸமாஶ்ரயணம் ஆகாமல் பாஞ்சராத்ர ஆகமங்களை வாசிக்கலாமா? இதற்கும் வேதம் போல் உபநயன ஸம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டுமா? முறையாகப் பயில கேட்கவில்லை ஒரு புத்தகம் போல் படிக்கலாம என்று கேட்கிறேன்.

உண்பதில் எண்பது என்ற உபந்யாஸத் தொடரில் நாம் எம்பெருமானுக்கு ஸமர்பிக்காமல் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது என்றார். அப்படியானால் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை எவ்வாறு எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பது?

ஏன் சில திருக்கோயில்களில் த்வஜஸ்தம்பம் இருப்பதில்லை? திருநாகூர் போன்ற சில திவ்ய தேசங்களில் கூட ஏன் இல்லை? த்வஜஸ்தம்பம் இருக்கும் திருக்கோயில்களுக்கும் இல்லாத திருக்கோயில்களுக்கும் என்ன வித்யாசம்?

திருக்குறுங்குடி, திருக்கரம்பனூர் போன்ற திவ்ய தேசங்களிலும்,அல்லது வெளியில் செல்லும்போது தேவதாந்த்ர ஸந்நிதிகளையோ, புறப்பாடு அல்லது கோயில்களைக் கடக்கும்போது ஒரு ப்ரபந்நன் கைக்கூப்பி நமஸ்கரிக்கலாமா?

ஒருமுறை உடுத்திக் களைந்த வஸ்திரத்தை துவைத்துவிட்டுதான் அடுத்தமுறை உபயோகப்படுத்த வேண்டுமா? உதா காலையில் அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லும் முன் வேறு வஸ்த்திரம் மாற்றி, சாயங்காலம் அனுஷ்டானத்திற்கு காலை உடுத்திய அதே வஸ்திரத்தை உபயோகிக்கலாமா?

அடியேன் ஜபம் பண்ணும்போது வெளிச்சிந்தனைகள் வருகிறதே தடுப்பதற்கு உபாயம் உள்ளதா?

அனுஷ்டானத்திற்கு உபயோகிக்கும் சொம்பு, குளபாத்திரம் (குளவாத்திரம்) முதலியவை எந்த உலோகத்தில் (material)இருக்கவேண்டும்? எதனால் ஆனது உத்தமம் என்றும் எதனால் ஆனது சர்வதா கூடாது என்றும் ஏதேனும் விதி இருக்கிறதா?

சாதுர்மாஸ்ய சங்கல்பம் என்பதை ஸ்ரீவைஷ்ணவ யதிகள் மட்டுமே இன்றளவும் அனுஷ்டிக்கிறார்கள். மற்ற சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த யதிகள் ஏன் அனுஷ்டிப்பதில்லை?

உறவினர்களில் நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் பற்றி அதிகம் தெரியாத போது அவர்கள் பரமபதித்தால் ஆஶௌசம் எப்படி அனுஷ்டிப்பது. பங்காளிகள் என்று தாத்தா காலத்தில் சொன்னவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் என்று தெரிந்தாலும் எத்தனைத் தலைமுறை என்று சரியாக தெரியாத போது 10 நாட்கள் அனுஷ்டிக்க வேண்டுமா. அல்லது 3 நாட்கள் அனுஷ்டித்தால் போதுமா. பொதுவாக உறவு என்று தெரிந்தாலும் துல்லியமாக அவர்கள் இன்னவகையில் உறவு என்று தெரியாவிட்டால் அந்தச் சமயத்தில் ஆஶௌசம் எப்படி அனுஷ்டிப்பது? இந்த மாதிரியான குழப்பமான சூழ்நிலைக்கு என்று உபாயம் ஏதும் உள்ளதா?

அடியேன் சின்ன ஜீயர் USA ஏளியிருந்தபோது அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துகொண்டேன். அடியேனின் அகத்துக்காரரின் குடும்பத்தவர்களின் கொடியாலம் தாதாசார்யாரை ஆசார்யனாகக் கொண்டவர்கள். எனது பெற்றோர்கள் ஸ்ரீமதாண்டவன் சிஷ்யர்கள். எப்போது பாரதம் வருவோம் என்று தெரியாததனால் சின்ன ஜீயர் இங்கே ஏளியிருந்தபோது அவரிடம் ஸமாஶ்ரயணம் செய்துகொண்டேன். மேலும் என் அகத்துக்காரருக்கு இன்னும் ஸமாஶ்ரயணம் ஆகவில்லை. நான் பரந்யாஸமும் செய்யவேண்டுமா?

பரஸமர்ப்பணம் செய்துகொண்டால் மோக்ஷம் நிச்சயம் என்றிருக்க , பித்ருக்களுக்கு வ்யாச பிண்டம் ஏன் கொடுக்கவேண்டும?

சிகை வைத்து கொண்டிருப்பவர்கள் தினமும் ஸ்நானம் செய்யும் போது தலையில் தண்ணீர் சேர்த்துக் கொள்வார்களா? ஶாஸ்திரம் என்ன சொல்கிறது?

இக்காலத்தில் பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிவன், அம்மன் போன்ற மற்ற தேவதைகளின் கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள். மற்ற தேவதாந்தரங்களைக் குலதெய்வமாகக் கொள்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களான நாம் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே வணங்க வேண்டும் என்று நாம் சொன்னால், மற்ற தெய்வங்களை வணங்காவிட்டால் பாவம் வந்து சேரும் என்று கூறுகிறார்கள். இதில் ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறும் நம்மையும் கேலி செய்கிறார்கள். இவர்களை எப்படித் திருத்துவது?

கிணற்று ஜலம், குமுட்டி அடுப்பு இன்று அரிதாக இருக்கிறது அதிலிருந்து மாறியது போல், நாங்கள் வெளியில் சாப்பிடுவதும், வெங்காயம் சாப்பிடுவதும் இக்காலத்திற்கேற்ற மாற்றம் என்று ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள் என்று பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு எப்படிப் பதிலளிப்பது?

ஸ்ரீ வைஷ்ணவர்கள் வீடு வாங்கும் முன்/கட்டும்போது வாஸ்து ஶாஸ்திரம் பார்க்கவேண்டுமா? குறையிருந்தால் அதற்கு பரிகாரம் செய்யவேண்டுமா?

பொதுவாக சாயம் சந்தியாவில் சூர்யோதயம் ஆகும்முன் அர்க்யமும், நக்ஷத்ர ஆரோஹனம் ஆனபின் உபஸ்தானம் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ப்ரதோஷ தினத்தன்று எப்போது அர்க்யம் மற்றும் உபாஸ்தானம் கொடுக்க வேண்டும்? மேலும், அன்றைய தினத்தில் ஜபத்தின் எண்ணிக்கை குறைக்கவேண்டுமா?

நதிகளில் ஸ்நானம், அனுஷ்டானம் செய்ய என்ன விதி என்று தெரிவிக்கவும். வேறொரு இடத்திற்குச் (ஊருக்கு) சென்று நதிகளில் நீராட வேண்டுமென்றால் அகத்திலிருந்து குளித்துவிட்டுதான் செல்லவேண்டுமா? ஸமுத்திர ஸ்நானத்திற்கும் இது பொருந்துமா?

பவித்ரத்தைத் காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் செய்கிறோம். அப்படிக்காதில் வைத்துக்கொள்ளும்போது கையில் தலைமுடியின் ஸபர்ஶம் ஏற்படுகிறது. அது தோஷமா? இதைத் தவிர்க்க தட்டில் வைக்கலாமா?

அடியேனின் அகத்தில் 8 சாளக்கிராம பெருமாள் ஏளியிருக்கிறார். எங்கள் நண்பர் மற்றுமொரு சாளக்கிராம பெருமாள் அளிக்க விரும்புகிறார்.அவரை நாங்கள் ஏளப்பண்ணிக்கொள்ளலாமா? சிலர் ஒற்றைப்படையில் கூடாது என்கிறார்கள். வேறு சிலர் அவரைத் தனியாக வேறு பெட்டியில் ஏளப்பண்ணவேண்டும் என்கிறார்கள். எது சரி ஒற்றைப்படையில் சாளக்கிராம மூர்த்தியை அகத்தில் வைத்துக்கொள்ளக்கூடாதா? தெளிவிக்கவும்.

ஆடிப் பண்டிகை அன்று ஏகாதசி அன்று வந்தால், திருவாராதனத்துக்குப் பண்டிகைத் தளிகை ஸமர்ப்பிக்கலாமா? ஏகாதசி விரதம் தடைப்பட்டு விடுமா?

1) துளஸீ இலைகள் காய்ந்து போனாலும் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாம், என்று உபன்யாசங்களில் கேட்டிருக்கிறேன். அதே போல், நம் வீட்டில் வளரும் துளஸீச் செடிகளில் இருந்து சற்றே மஞ்சள் ஆன இலைகளைத் திருவாராதனத்திற்குப் பயன்படுத்தலாமா? 2) ஆண் பிள்ளைகள் மற்றும் பேரன்களே இல்லாதவர்களின் இறுதி காரியங்களையும் மற்ற சடங்குகளையும் யார் செய்யலாம்? 3) ஆரண்ய காண்டத்தில் (3.48.8) ராவணன் சீதாப்பிராட்டியிடம், “”எனக்குப் பயந்தே சூரியன் தன் கடமைகளைச் செய்கிறான்”” என்று கூறுகிறான். அப்படிபட்ட சூரியனை, சர்வேஸ்வரனான ஸ்ரீ ராமபிரான் ஆதித்ய ஹ்ருதயத்தால் துதித்து, அதே ராவணனை அழித்தார் என்று யுத்த காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நம் ஆசார்யர்கள் ஏதேனும் விளக்கம் அளித்துள்ளார்களா?

ப்ரஹ்மயஜ்ஞம் என்றால் என்ன? க்ருஹஸ்தர்களும் சமிதா தானம் செய்ய வேண்டுமா? க்ருஹஸ்தர்கள் சந்தியா வந்தனம் , ப்ரஹ்மயஜ்ஞம், திருவாராதனம் தவிர கட்டாயம் செய்ய வேண்டிய கர்மா/ஹோமம்/யஜ்ஞம் என்னென்ன?

ப்ராஹ்மணர் அல்லாதோர் ஶ்ரீவைஷ்ணவர்களாக மாறிவிட்டால் அவர்களுக்கு உபநயன ஸம்ஸ்காரம் செய்து வேதம் ஓதலாமா?

துளஸீச் செடிகள் வளர்க்காத வீடுகளில் துளஸீக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒன்றை வைத்துத் திருவாராதனம் செய்யலாமா?

இஜ்யா காலத்தில் திருவாராதனம் செய்ய வேண்டும் என்று ஆஹ்நிகம் தெரிவிக்கிறது. இஜ்யா காலம் என்பது மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு வருகிறது. திருவாராதனம் செய்த பிறகே சாப்பிடலாம் என்றால் காலையில் எழுந்தது முதற்கொண்டு மதியம் வரை சாப்பிடக் கூடாதா. இடையில் அன்னமாக புஜிக்கக்கூடாது என்றால் பழம் பால் மற்றும் வேறு என்ன மாதிரியான பதார்த்தங்களை அல்லது தளிகையைச் சாப்பிடலாம். தற்காலத்தில் காலை உணவைச் சாப்பிடாமல் விடுவது மிகவும் தவறு என்று மருத்துவர்கள் தெரிவிப்பதால் தான் இந்தக் கேள்வி. மேலும் மாலை/இரவு வேளையில் தளிகை செய்யும்போது நடைமுறையில் அதை அப்படியே தான் சாப்பிடுகிறோம். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் உண்ட குற்றம் அதற்கு ஏற்படுமா. மேலும், தொலைதூரப் பயணம் செய்யும் போது கையில் உணவோ அல்லது ரொட்டி முதலானவைகளையோ கொண்டு செல்ல அனுமதி உள்ளதா?

வபனம் செய்து கொண்ட பின் கண்டிப்பாக பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா ஸ்வாமி? நகரங்களில் சர்வாங்க க்ஷௌரம் செய்துகொள்ள கடினம் என்பதால் முகத்தில் மட்டும் செய்துகொள்வது சரியாகுமா. சில முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு முன்பு மட்டும் சர்வாங்கம்(இடுப்பு அளவு மட்டுமே) செய்து கொள்ள முடிகிறது. இது சரியானதா ஸ்வாமி.

தற்காலத்தில் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு கிணற்று தீர்த்தத்திற்கு வழியில்லை. ஆனால் அனுஷ்டாங்களுக்கும் திருவாராதனத்திற்கும் தொட்டியில் இருந்து வரும் தீர்த்தத்தை எடுக்கக் கூடாது என்று பல பெரியோர்களும் சொல்லக் கேட்கிறோம். அப்படியானால் நகரத்தில் வசிக்கும் அடியோங்கள் மாதிரி பல பேருக்கு பகவத் ஆராதனம் செய்ய வழியே இல்லையா ஸ்வாமி?

கோவில்களில் கைங்கர்யத்திற்குச் செல்லும் போது முடிந்தவரை மடியாக செல்கிறோம். எனினும் இடையில் யார் மீதாவது பட நேர்ந்தால் கோவிலில் சென்று தீர்த்தமாட முடியவில்லை. இந்தச் சமயத்தில் லகுவாக மந்த்ர ஸ்நானம் (ஆபோஹிஷ்டா மந்திரங்களைச் சொல்லி ப்ரோக்ஷணம்) மட்டும் செய்யலாமா? மந்த்ர ஸ்நானத்திற்குச் சங்கல்பம் உண்டா? அல்லது ரிஷி சந்தஸ் தேவதைக்குப் பிறகு மந்திரத்தை மட்டும் சொல்லி ப்ரோக்ஷித்துக் கொண்டால் போதுமா ஸ்வாமி?

மடி என்பது வஸ்திரம் விழுப்பில்லாமல் இருப்பது என்று புரிகிறது. அதாவது முந்தைய நாள் இரவு நனைத்து உலர்த்தி மறுநாள் காலை ஸ்நானத்திற்குப் பிறகு எடுத்து உடுத்திக் கொள்வது. பகலில் துவைத்து உலர்த்திய வஸ்திரங்களை விழுப்பில்லாமல்(படுக்கையில் படுக்காமல்) மடியாகவே இருந்து எடுத்து வைத்தால் அது சரியாகுமா ஸ்வாமி. இடையில் கால் மிதியடி/திரைச்சீலை ஆகியவற்றைத் தொடுவதால் மடி குறைந்துவிடுமா? குடும்பத்தில் மற்றவர்கள் (குளித்திருந்தாலும்) மீது படுவதாலும் மடி குறைந்துவிடுமா. சணலில் செய்த கோணியை மிதியடியாக பயன்படுத்தினால் விழுப்பு இல்லை என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். அது வாஸ்தவம் தானா ஸ்வாமி.

நாம் ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிற போது நடுநிசி நேரம் இரண்டு மணி காலை தீர்த்தமாடலாமா?

முன் காலத்தில் அகத்தில் நெல் புழுக்கி காயவைத்து புழுங்கல் அரிசி கிடைக்கும். தற்போது அந்த வசதிகள் இல்லை. கடையில் புழுங்கல் அரிசி வாங்கிச் செய்யும் பதார்த்தங்களைப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா?. (பெருமாளுக்குக் கூடாது என்றால் நாமும் உபயோகிக்க முடியாது)

ஒரு ப்ரபந்நன் ஐயர் அகத்துப் பூணூல், கல்யாணம், சீமந்தோந்நயனம் போன்ற விசேஷங்களுக்குப் போகலாமா? தாம்பூலம் வாங்கிக் கொள்ளலாமா?

அடியேனின் புக்ககத்துக் குலதெய்வம் யாரென்று தெரியவில்லை. அகத்துப் பெரியவர்களிடமும் விசாரித்து விட்டோம்.என் கணவருக்கு பரந்யாஸம் ஆகிவிட்டது .குலதெய்வ வழிபாடு என்பது ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு எந்த அளவு முக்கியம் என்பதையும் எப்படி அறிவது என்பதையும் தெரிவிக்கவும். நாங்கள் தேம்பாறை தட்டை ஸ்வாமி வழி வந்தவர்கள். இக்குடும்பப் பெயர் வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா?

நாம் பொதுவாக தாயார் உயிருடன் இருக்கும்போது, பிதா பரம்பதித்த பின்னர் அவருக்கு ஶ்ராத்தாதிகள் எல்லாம் பண்ணுகிறோம். ஆனால் பிதா இருக்கும்போது , தாயார் பரமபதித்து விட்டால் அவருக்கு ஶ்ராத்தம், தர்ப்பணம் போன்றவைகளை ஏன் செய்வதில்லை. அவர்கள் பித்ரு லோகம் அடைந்தபின் அவருக்கு எள் மற்றும் ஜலம் தேவைப்படாதா? அடியேனுக்கு இக்கேள்வி பல காலமாக மனதில் உறுத்திக்கொண்டிருந்தது, அவர்தான் நமக்கு ஜனனம் தந்து பல த்யாகங்கள் செய்தவள்.

துளஸீ பறிக்கக்கூடாத நாட்களில் துவாதசி, அமாவாசை மற்றும் சில நாட்களோடு சேர்த்து சஷ்டியும் ஒரு நாளாக ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சஷ்டி அன்று நாம் துளசி பறிக்கக்கூடாதா?

ஏன் அமாவாஸை, ப்ரதமை, அஷ்டமியன்று புதிய சந்தை வகுப்புகள் (ப்ரபந்தம், ஸ்தோத்ரபாடம்) நடத்தப்படுவதில்லை?

கோயில்களில் அர்ச்சனை செய்யும்போது பெயர், கோத்ரம் சொல்லிச் செய்கிறோம். ஒரு ப்ரபந்நன் இவ்வாறு அர்ச்சனை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மேலும் சிலர் இப்படிச் செய்வது நம் ஸம்ப்ரதாயத்தில் இல்லை என்கிறார்கள். இதில் எது சரி, நம் ஸம்ப்ரதாயத்தில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யலாமா? ஒரு ப்ரப்ந்நன் செய்யலாமா?

பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலே ஒருவர் ஸ்தோத்ர பாடங்கள் மற்றும் ப்ரப்ந்தங்கள் சேவிக்கலாமா? அடியேனுக்கு இன்னும் ஆகவில்லை ஆனால் விடாமல் தேஶிக ஸ்தோத்ரங்கள், பரப்ந்தங்கள் சேவித்துக் கொண்டிருக்கிறேன். அதைத் தொடரலாமா?

அடியேனுக்கு, என் 2 வயது ப்ராயத்தில் பரந்யாஸம் ஸ்ரீமதழகிய சிங்கரால் பண்ணப்பட்டது என்பது சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். அதன் பின்னரே நித்யானுசந்தானம், ஆசார்யன் தனியன் சேவிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுநாள் வரை பின்பற்றாததற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டுமா? மேலும் என் அகத்துக்காரர் பரகால மடத்தைச் சேர்ந்தவர்கள். அடியேனுக்கு இன்னும் ஸமாஶ்ரயணம் ஆகவில்லை. ஆன பின் ஸ்ரீஸந்நிதி மற்றும் பரகால மடம் என இரண்டு தனியங்களையும் அனுசந்திக்க வேண்டுமா?

கைவல்யத்தைப் பற்றியது. சாங்கிய மதத்தை மற்றும் பகவான் கபிலர் சித்தாந்ந்ததைப் பின்பற்றுபவர்கள் இந்த கைவல்ய மார்கத்தில் ஈடுபடுவார்கள் என பகவத் விஷய காலஷேபத்தின் மூலம் அறியப்பட்டது. யுக யகமாக அதே அனுபவத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தான் சித்தர்களா? சித்தபுருஷர்களா?

ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம் 9வது ஸ்கந்தத்தில் அம்பரீஷ வயாக்யானம் மற்றும் த்வாதசி பாரணை துர்வாச முனிவர் மற்றும் ஜலபாரணை குறித்தம் வருகிறது. ஜலபாரணை செய்ததால் முனிவர் கோபம் கொண்டு சபிக்க சக்ராயுதம் அவரைத் துரத்த எல்லோரும் ப்ரம்ம ருத்ராதிகளும் கூட அவரைக் கைவிட்டதால் எம்பெருமானின் கட்டளைப்படி பக்தனிடமே வந்து சரண்டைந்து அம்பரீஷன் சகராயுதத்தை வேண்ட முனிவர் காப்பாற்றப்பட்டார். அடியேனுடைய இதில் ஒரு சம்சயம், ஒரு ஆண்டிற்குப்பிறகுதான் துர்வாசர் அம்பரீஷனிடம் திரும்பி வந்து கேட்டார் என்றும், மன்னனும் பாரணை செய்ததாக கூறப்பட்டள்ளது. ஒரு வருடகாலம் பல ஏகாதசி துவாதசி வந்திருக்குமே.

மாத்யாநிகத்தில் நாம் சூர்யனைக் கைகளால் “பஶ்யேம” எனும் மந்திரம் சொல்லிக்காணுகிறோம்.இப்போது அடியேன் வசிக்கும் க்ருஹத்திலிருந்து ஒருவேளை சூரயனைக் காணமுடியாவிடில், மேலே ஆகாசத்தைப் பார்த்து இந்த மந்திரத்தைச் சொல்லலாமா?

ஆசார்யாள் திருநக்ஷத்ர நாட்களில்(மாதம் மற்றும் வருடாந்திர) கட்டாயம் செய்ய வேண்டியது ஏதாவது உண்டா?

அடியேனுக்கு ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இன்னும் ஆகவில்லை அதனால் எனக்கு ஸ்ரீமத் இரஹஸ்யத்ரயம் சேவிக்கத் தகுதியில்லையா? இவை ஆகாமல் எப்போதும் ஜபிக்க ஏதேனும் நம் இராமானுஜ ஸம்ப்ரதாயத்தில் மந்திரம் இருக்கிறதா (இதர க்ருஷ்ண ஸம்ப்ரதாயங்கள் போல்)

திருவாராதனத்தின் சமயம் பெருமாளுக்குப் பழம் ஸமர்ப்பிக்க மிகக் குறைந்த அளவே இருந்தால் (1 அல்லது 2 பழம் மட்டும்) பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? மேலும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த பின் அப்பழங்களை என்ன செய்வது?

பட்டு வேஷ்டிக்கு மடி உண்டா? அதை நனைக்காமலே எத்தனை தடவை உடுத்திக்கொண்டாலும் மடி என்று கொள்ளலாமா? ஒருவேளை மற்ற வேஷ்டியைப் போல் நனைத்து விட்டால் மடி போய்விடுமா?

ப்ரபந்நன் சூர்ய நமஸ்காரம் (என்ற யோகா முறை) செய்யலாமா? அந்த யோகா செய்வதனால் தேவதாந்திர சம்பந்தம் ஏற்பட்டுவிடுமா?

ஒரு பிள்ளைக்கு அப்பா அம்மா‌ இருவரும் இல்லை அவர் உறவினர் ஒருவர் பூணூல் போட்டு வைக்கிறார், அவர் பரமபதித்து விட்டால் அந்தப் பிள்ளைக்கு ஏதனும் நியமம் உண்டா என்று தெரிவிக்கவும்.

அடியேன் பகவத் ஸங்கல்பம் என்றால் என்ன? நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பகவத் ஸங்கல்பமா? முடிவு நாம் எடுக்கிறோம் அது எப்படி பகவத் ஸங்கல்பத்தினால் நடக்கிறது என்று சொல்கிறோம்.அப்படியென்றால் நடப்பது எல்லாமே பகவத் ஸங்கலபமா?

கோவில்களில் பெருமாளுக்குத் தளிகை ஸமர்ப்பிக்கும் பொழுது வைச்வதேவ ஆராதனை செய்யப்படுகிறதா?

கோவில்களுக்கு உள்ளே மற்றும் வெளியே நடக்கும் கோஷ்டிகளில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் பங்கு பெறலாமா ? யாரெல்லாம் பங்கு பெறலாம்?

குடும்பத்தில் யாரேனும் ஒருவர் ஒரு வருடத்திற்குள் பரமபதித்திருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் மலைமேல் இருக்கும் பெருமாளைச் சேவிக்கக்கூடாதா? அடியேன் உடைய பிதா வழி பாட்டி மற்றும் தாத்தா பரம பதித்து விட்டார்கள் (90+வயது). இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அடியேன் வெளிநாடு செல்ல இருப்பதால், அத்திகிரி வரதனைச் சென்று சேவிக்கலாமா?

அடியனுக்கு 57 வயது, என்னுடைய கணவருக்கு 60 வயது. எங்கள் இருவருக்கும் ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. பரந்யாஸம் செய்து கொள்ளப் போகிறோம். எங்களுக்கு ஒரே மகள். அவள் விஷ்வகர்மா வகுப்பில் ஒருவரை மணந்து கொண்டு அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். வேறு குலத்தில் மணம் முடித்த ஒரே பெண்ணை பெற்ற எங்களைப் போன்ற பெற்றோர்களின் சரம கைங்கர்யங்களை யார் செய்வார்கள்? அதற்கு என்ன விதிமுறைகள்?

ஜ்யோதிஷ ஶாஸ்த்ரப்படி ரோகிணி நக்ஷத்திரம் மற்றும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி சேரும் நாளை ஜயந்தி என்கிறார்கள். அதனால் ஜயந்தி என்றால் அது ஸ்ரீ ஜயந்தியையே குறிக்கும். அப்படியானால், வராகர், நரசிம்மர் முதலான மற்ற பெருமாள்களின் அவதார தினத்திற்கு வேறு பெயர்கள் உள்ளதா? நாம் அந்த நாட்களையும் ஜயந்தி என்று கூறுகிறோமே?

நம்முடைய யக்ஞோபவீதம் தரையில் படக்கூடாது என்பதனால் நாம் வெறும் தரையில் படுத்து உறங்க கூடாது என்று ஒரு உபந்யாசத்தில் கேள்விப்பட்டேன். ஆனால் நாம் பெருமாளையோ, பெரியவர்களையோ தரையில் விழுந்து நமஸ்கரிக்கும்பொழுது யக்ஞோபவீதம் தரையில் படுகிறதே, அப்பொழுது என்ன செய்வது?

உபநயனம் ஆகாத சிறுவர்களுக்கு ஸ்வரத்துடன் ஸந்த்யாவந்தனம் கற்றுக் கொடுக்கலாமா? ஸந்த்யாவந்தனம் செய்வதற்கு ஸங்கல்பம் ஏதேனும் உள்ளதா ?

தான்தோன்றிமலை பெருமாள், அடியேனுடைய க்ருஹத்துப் பெருமாள் ஆவார். அதனால் அடியேன் திருமலைக்குச் செல்லலாமா , கூடாதா?

சித்திரை மாதத்தில் புது இல்லம் வாடகைக்குக் குடி போகலாமா? பால் காய்ச்சலாமா ?

1.பஞ்சாங்கத்தில் ஒரு நக்ஷத்திரம் அல்லது திதி ஒரு நாளில் சில நாழிகைகள் இருக்கிறது. (உ.தா: ஸ்வாதி 28.01 அல்லது துவாதசி 15.00) சூரிய உதயத்திலிருந்து அந்த நக்ஷத்திரம் அல்லது திதி எல்லா இடத்திலும் அதே நாழிகை இருப்பதாகக் கொள்ளலாமா? உதாரணமாக “A” என்ற இடத்தில் சூரிய உதயம் காலை 6:30 மணி, “B” என்ற இடத்தில் 7:00 மணி. துவாதசி பத்து நாழிகை என்றால், “A” என்ற இடத்தில் 10:30 மணி வரையிலும் “B” என்ற இடத்தில் 11 மணி வரையிலும் துவாதசி இருப்பதாகக் கொள்ளலாமா? 2. மார்ச் 21 அன்று பஞ்சாங்கத்தின் படி ஏகாதசி திதியே இல்லை. அன்று துவாதசி 60 நாழிகை இருந்தும், நாம் ஏன் முதல் நாள் ஏகாதசி அன்வயிக்காமல் அன்றைய தினம் ஏகாதசி அன்வயித்தோம்?

கோவில் கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது, அனுஷ்டானங்களைத் தாமதமாகவோ அல்லது குறைத்தோ செய்யலாம் என்று நம் ஶாஸ்த்ரங்களில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா ? உதாரணம்:- காலாதீதமாக அர்க்யம் விடுதல், சீக்கிரமாக உபஸ்தானம் செய்தல்.

ப்ரபத்திக்குப் பிறகு ப்ரபந்நன் நித்ய, நைமித்திக கர்மாக்களைச் செய்யாவிட்டால் மோக்ஷம் கிட்டாதா?

துவாதசி அன்று மாமியார் ஶ்ராத்தம் வந்தால், பாரணை பண்ணலாமா? பாரணை காலம் காலையில் மற்றும் ஶ்ரார்த்தம் காலை 11மணிக்கு மேல் வருவதால் எப்படி அனுஷ்டிப்பது?

ஆராதனம் தர்ப்பணம் முதலானவை பற்றிய அடியேனுடைய கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன். ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளியில் உள்ள ஒரு திருநாமம் ஸ்ரீ பில்வ நிலயாய நம: என்பது. வில்வம் (பில்வம்) என்கிற புனித வ்ருக்ஷம் தாயாருடன் தொடர்புடையது. அப்படி இருக்க ஏன் பொதுவாக வில்வத்தைச் சிவபெருமானுக்கே ஸமர்ப்பிக்கிறார்கள். ஏன் பெருமாளுக்கு ஸமர்ப்பிப்பதில்லை? மேலும் திருமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தனுர் மாதத்தில் வில்வ இலையைச் ஸமர்ப்பிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஏன் அவ்வாறு தனுர் மாதத்தில் மட்டும் ஸமர்ப்பிக்கிறார்கள்? ஆங்கில நாட்காட்டியின் படி நள்ளிரவுக்குப் பிறகு மறுநாள் பிறக்கிறது. அவ்வாறு இருக்க சூர்ய உதயத்திற்கு முன் செய்யப்படும் தனுர் மாத ஆராதனை சங்கல்பத்தின்பொழுது நாளை (உம்- பானு வாஸர) எவ்வாறு குறிப்பிட வேண்டும்? ஆங்கில நாட்காட்டி படியான அன்றைய நாளா அல்லது முதல் நாளா? சூர்ய உதயத்திற்கு முன் தளிகை அமுது செய்யப்படுவதால் நாம் ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி என்று கூற வேண்டுமா அல்லது ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி என்று கூற வேண்டுமா ? தன்வந்திரி பெருமாளுடன் தொடர்புடைய நட்சத்திரம் எது? எந்த திதி அல்லது நட்சத்திரத்தில் நாம் தன்வந்திரி பெருமாளுக்கு ஆராதனம் செய்ய வேண்டும்? 27 யோகங்களில் ஒன்றான வ்யதீபாத யோகம் தீங்கானது என்றும் தேவ, பித்ரு காரியங்களுக்கு மட்டும் உகந்தது என்றும் கூறப்படுகிறது. அதனால் அந்த வ்யதீபாத காலத்தில் ஏதேனும் குறிப்பிட்ட பெருமாள் ஆராதனை/ ஜபம்/ தானம் செய்ய வேண்டுமா? கீழ்வரும் ஸ்லோகத்தின் படி வ்யதீபாத காலத்திற்கும், விஷ்ணு சக்ர ஸ்வரூபாய என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? வ்யதீபாத மஹாஸத்வ சர்வபாபப்ரணாஶந ஸஹஸ்ரபாஹோ விஶ்வாத்மந் க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே । வ்யதீபாத நமஸ்தேஸ்து நமஸ்தே விஶ்வமங்கள விஷ்ணுசக்ரஸ்வரூபாய நமஸ்தே திவ்யதேஜஸே ।। அமெரிக்காவில் இந்த வருடம் மகர ரவி மாலை 4.15 மணிக்கு பிறந்தது. அடியேனால் அதுவரை பட்டினி இருந்து மாலை 4.15ற்கு தர்ப்பணம் செய்ய இயலவில்லை. அதனால் அடுத்த நாள் காலை தர்ப்பணம் செய்து விட்டு போஜனம் செய்தேன். இவ்வாறு மாலையில் மகர ரவி பிறக்கும் பொழுது தர்ப்பணம் செய்வதற்கு முன்பு போஜனம் செய்யலாமா அல்லது அடுத்த நாள் காலையில் போஜனம் செய்வதற்கு முன் தர்ப்பணம் செய்யலாமா எது சரி?

கணுப்பிடி குளித்துவிட்டு ஸ்வரூபத்தில்தான் வைக்க வேண்டுமா? சில இடங்களில் குளிக்காமல் வைக்கிறார்களே? தயவு செய்து விளக்கவும்.

அடியேன் வெளிநாட்டில் இருக்கும் பொழுது, சில நேரங்களில் வெவ்வேறு சமயத்தில் மாசப்பிறப்பு மற்றும் அமாவாசை அனுஷ்டிக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது எந்தத் தேசம் வைத்து அடியேன் அனுஷ்டிக்க வேண்டும்.?தயவுசெய்து கூறவும்.

கணுப்பிடி வைப்பதன் தாத்பர்யத்தைத் தயவுசெய்து அடியேனுக்கு விளக்கவும். என்னுடைய மாமனார் அவருடைய சகோதரிகளுக்குக் கணுவன்று என் கணவரைப் பணம் அனுப்பச் சொல்கிறார். இந்த வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமா?

பஞ்சகவ்யம் சாப்பிடுவதால் உடலிற்குச் சுத்தி ஏற்படுகிறது, தவிர அறிவியல் ரீதியாக தகவல் இருந்தால் விளக்கமளிக்க ப்ராத்திக்கிறேன்.

சந்த்யாவந்தனத்தைச் செய்யாமல் எந்தக் கார்யத்தைச் செய்தாலும் பலன் இல்லை என்றும் எல்லாச் சடங்குகளுக்கு முன்பும் சந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அப்படியிருக்கையில் பிரம்ம முஹூர்த்தத்தில் அல்லது அதிகாலை வேளையில் செய்யப்படும் க்ருஹப்ரவேசம் முதலான சடங்குகளின் போது இது எப்படிச் சாத்தியமாகும்?

அடியேன் பிராமணன் அல்லன். ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் சிஷ்யன். சமாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் ஆகியுள்ளது. தனியாக இருக்கிறேன். முடிந்த வரையில் ஆசார அனுஷ்டானம், ஜபம், பெருமாள் ஆராதனம் முதலானவற்றை ஆசார்யன் மற்றும் பெருமாள் ப்ரீதிக்காக செய்து வருகிறேன். அடியேனுக்கு பரந்யாஸத்தின் பொழுது ஆசார்யன் இந்தத் தேக முடிவில் மோக்ஷம் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார். அதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை குறைவு இல்லை. சரம கைங்கர்யத்தின் முக்கியத்துவத்தை மாறனேரி நம்பி மற்றும் பெரிய நம்பி அவர்கள் வாழ்க்கை மூலம் நன்கு அறிந்து, தர்ப்பணம் முதலானவற்றை செய்து வருகிறேன். எனக்கு குழந்தைகள் இல்லை மற்றும் என்னுடைய குடும்பத்தினருக்கு இந்த சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லை. அதனால் எனக்கு சரம கைங்கர்யங்கள் நடக்க வாய்ப்பு இல்லை. வைகுண்ட ப்ராப்தி மற்றும் எம்பெருமான் திருவடி ப்ராப்தி ஆசார்ய அனுக்ரஹத்தால் உண்டு என்பதில் எனக்கு முழு விசுவாசம் இருந்தாலும் சரம கைங்கர்யத்திற்கு பதிலாக ஏதேனும் ஆசார அனுஷ்டானங்களோ அல்லது பரிஹாரங்களோ கைக்கொள்ளலாமா? அடியேன் இதை வினவுவது பெருமாள் மற்றும் ஆசார்ய ப்ரீதிக்காகவே தவிர மற்றபடி விசுவாசக் குறைவினால் அல்ல.

ஒருவர் முனித்ரய மடத்தில் சமாஸ்ரயணம் செய்து கொண்டு பிறகு ஸ்ரீ மடத்தில் பரந்யாஸம் செய்து கொண்டால், ஸ்ரீ ஜெயந்தி மற்றும் கார்த்திகை தீபம் பண்டிகைகளை எந்த ஸம்ப்ரதாயத்தின் படி கொண்டாட வேண்டும்?

1) திருவாராதனத்தை இரண்டு சாளக்ராமங்களை வைத்து செய்யலாமா? (அதாவது இரண்டு தனித்தனி பெட்டிகளில் வைத்து மற்ற ஆசனங்களைச் செய்வது, ஸ்நானாசனத்தை இரண்டு சாளக்ராமங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வது). 2) திருவாராதனத்தை (சமஸ்க்ருத ஸ்லோகங்கள் இல்லாமல்) அந்தந்த ஆசனதிற்குப் பொருத்தமான ஆழ்வார்/தேசிக பிரபந்த பாசுரங்களை மட்டும் சொல்லிச் செய்யலாமா? 3) திருவாராதனத்தில் சந்தனம் அரைப்பதற்கு சர்வார்த்த தோய (அல்லது) அர்க்கிய வட்டிலில் இருந்து நீரை எடுக்கலாமா?

வாடகை வீட்டில் புகுதற்குப் பங்குனி மாத நன்னாளில் பால் காய்ச்சலாமா?

அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா என்றால் என்ன? ஏன் அந்த நாட்களில் நாம் தர்ப்பணம் செய்கிறோம்?

துவாதசி நாளில் வாழை சம்பந்தமான காயோ, பழமோ ஏன் சாப்பிடக்கூடாது?

அடியேன் மாதப்பிறப்பு, அமாவாசை மற்றும் தகப்பனாரின் ஶ்ராத்தம் ஆகியவற்றை வருடந்தோறும் செய்து வருகிறேன். அஷ்டகா, அன்வஷ்டகா ஆகியவற்றையும் செய்து வருகிறேன். இந்தச் சோபக்ருது வருடம் மாசி மாதம் அஷ்டகா, அன்வஷ்டகா தர்ப்பணங்கள் செய்யத் தவறிவிட்டேன். இப்பொழுது என்ன செய்வது?

பெருமாளை ஏன் அக்ஷதை சேர்த்து வழிபடக் கூடாது? இந்தத் தடை சாளக்கிராம பெருமாளுக்கு மட்டுமா அல்லது விக்ரஹ, த்வாரகா சிலா பெருமாள்களுக்குமா?

ந்ருஸிம்ஹ அவதாரம் ஒரு சதுர்த்தசி மாலைப் பொழுதில் நிகழ்ந்தது. மஹாப்ரதோஷ காலம் என்பது த்ரயோதசியின் மாலைப்பொழுது ஆகும். அப்படியிருக்க, நாம் மஹாப்ரதோஷ காலத்தில் சிறப்பாக லக்ஷ்மீ ந்ருஸிம்ஹரை ஏன் வழிபடுகிறோம்? மேலும் மஹாப்ரதோஷ காலத்தில் ந்ருஸிம்ஹரையும், ஸ்ரீராமரையும் தவிர ரங்கநாதன் போன்ற பிற பெருமாள்களை வழிபடலாகாது என்கிறார்களே? ஸ்ரீராமருக்கும் மஹாப்ரதோஷ காலத்திற்கும் என்ன தொடர்பு என்று விளக்கவும். ந்ருஸிம்ஹருக்குப் பானக நைவேத்யம் ஏன் செய்கிறோம்?

ஸ்ரீவராஹந்ருஸிம்ஹனாக அஹோபிலத்திலும், சிம்மாசலத்திலும் மட்டும் வழிபடக் காரணம் என்ன?

அகத்தில் உள்ள சாளக்கிராம பெருமாளைப் புகைவண்டியில் ஏளப் பண்ணி கொண்டு போகலாமா? ஆம் எனில், அதற்கு உரியமுறை யாது? மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?

தர்ம ஶாஸ்த்ரத்தில் கூறப்பட்டுள்ள சத்ரய, ப்ராஜாபத்ய, க்ருச்ரங்களைச் தற்போது எவ்வாறு கடைபிடிப்பது? இவையெல்லாம் தற்காலத்திய நடைமுறையில் சாத்தியமா?

நெருங்கிய உறவினரை இழந்தவர்க்கு ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் இரங்கல் தெரிவிப்பது எப்படி?

ஆழ்வார், ஆசார்யார் உற்சவ திருமேனிகளுக்கு வர்ண வஸ்த்ரங்கள் சாற்றலாமா?

துவாதிசி, சூரிய உதயத்திற்கு முன் முடிந்து விட்டால் பாரணை எப்போது செய்ய வேண்டும்? சூரிய உதயத்திற்கு முன்னதாகவா அல்லது சாதாரண துவாதசி போலா?

கோவிலில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும் பொழுது, பட்டாச்சார் ஸ்வாமி இளநீரை ஒரு வட்டிலுக்கு மாற்றாமல் அப்படியே பெருமாள் திருமேனியில் சேர்க்கிறாரே? இதற்கு ஏதும் காரணம் உண்டா?

பெருமாளுக்குத் திருமஞ்சனத்தின் பொழுது ஒரே ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை வஸ்திரம் மட்டுமே சாற்ற வேண்டும் என்று ஆகம ஶாஸ்திரத்தில் ஏதேனும் உள்ளதா ?

க்ருஹத்தில் நடைபெறும் விழா அல்லது சடங்குகளின் பொழுது அதை நடத்தி வைக்கும் ப்ருஹஸ்பதி கர்த்தாவை விட வயதில் இளையவராக இருந்தாலும் கர்த்தா சம்பாவனையின் பொழுது அவரை தரையில் விழுந்து சேவிக்கலாமா?

1) திருவாராதனத்தில் சாளக்கிராம பெருமாளுக்குச் சந்தனத்தோடு சேர்த்து குங்குமத்தையும் ஸமர்ப்பிக்கலாமா? 2) திருவாராதனத்தில் உள்ள ஸேவாகாலம் (திருப்பாவை, திருப்பல்லாண்டு போன்ற ஆழ்வார் பாசுரங்களை அனுசந்தித்தல்) வடகலை ஸம்பிரதாயத்தில் உள்ளதா? 3) திருமலையிலும் திருச்சானூரிலும் உள்ள கோயில் மதில் சுவர்களில் கருடனோடு சேரந்தோ அல்லது தனியாகவோ சிங்கத்தின் சிலைகள் உள்ளன.

அந்தர்யாமி பெருமாளுக்கும், ஆவேச அவதார பெருமாளுக்கும் என்ன வித்தியாசம்? எங்கு, எப்படிப் பெருமாளின் ஆவேசம் நிகழ்கிறது?

12. 1.அப்பா பரமபதித்தபின் பிள்ளை அமாவாசை/மாதப்பிறப்பு தர்ப்பணம் எப்போது தொடங்கவேண்டும். 2.பெண் மட்டும் இருந்தால் அப்பா அம்மாவுக்கு மாஸுகம், ஶ்ராத்தம் செய்ய வேண்டாம் என்று ஒரு பிரபல உபந்யாஸகர் சொல்கிறார். சரியான விளக்கம் அனுக்ரஹிக்கவும்.

பித்ரு தர்ப்பணத்தின்போது முதலில் எள்ளைக் கையில் எடுத்து பிறகு அதில் தீர்த்தம் சேர்த்து விடுவதுதான் சரியான முறையா? அல்லது தீர்த்தத்தோடு எள்ளை முதலிலேயே கலந்து, பிறகு அந்த எள் சேர்த்த தீர்த்தத்தையே புக்னத்தின் மேல் விடலாமா?

திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு, பாலாஜி என்ற பெயர் உள்ளது. அந்தப் பெயரின் உண்மையான அர்த்தம்/காரணம் என்ன? இந்தப் பெயரை வைத்து இன்னும் சிலர் அவரை முருகன் என்றும் சக்தி என்றும் சொல்வதைக் கேட்பதற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

பரஸமர்ப்பணத்திற்குப் பிறகு க்ருஹ சாந்தி, ஸர்ப்ப சாந்தி போன்ற பரிஹாரங்களைக் குடும்பத்திற்காக செய்யலாமா? தயவு செய்து விளக்கவும்.

தாயாருக்குக் குங்கும அர்ச்சனை செய்வது போல, பெருமாளுக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை குங்குமத்தில் செய்யலாமா? (புஷ்பம் தவிர வேறு எதில் செய்யலாம்?)

திருவாராதன சமயத்தில் திவ்ய பிரபந்தம், தேசிக ஸ்தோத்ரம் போன்றவற்றை சேவிக்கும் பொழுதும், கோவிலில் பெருமாளை ஸேவிக்கும் பொழுதும் நமக்கு கண்களில் கண்ணீர் வருகிறது. குறிப்பாக திருவாராதனத்தின் பொழுது இவ்வாறு கண்களில் கண்ணீர் வருவது சரியா? ஸ்லோகங்கள் ஸேவிக்கும் பொழுது, வார்த்தைகள் வராமல் கண்ணீர் வருகிறதே. ஏதேனும் தவறு செய்கிறோமா?

தஸாசு ஏகாதசி அன்று வந்தால், முதலில் உப்புமா சாப்பிட்டுவிட்டு, பலி பார்த்துவிட்டு பின் சொஜ்ஜி சாப்பிடலாமா? அடியேனின் பெரியம்மா ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார்கள். சபண்டிகரணத்தன்று பெரியம்மாவின் சகோதர சகோதரிகள் மற்றும் அடுத்த தலைமுறையினர் அங்கு சாப்பிடலாமா?

அடியேனுக்குச் சில ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் உண்டு. அவர்கள் விநாயகரை வழிபடுவது, விநாயக சதுர்த்தி கொண்டாடுவது என்று வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விநாயகரை விஷ்வக்ஸேனராக வழிபடுவதில்லை. நம் ஸம்ப்ரதாயத்தில் கௌரிதனயனான விநாயகரை வழிபடுவது சரியா?

பரந்யாஸம் ஆன ஒரு ப்ரபந்நன் ப்ராயஶ்சித்த பரந்யாஸம் எப்போது எவ்வகையில் எங்ஙனம் செய்து கொள்ள வேண்டும்? இங்ஙனம் செய்து கொள்வது அவசியமா?

விஶ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த ஆண், கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்த பெண்ணை விவாஹம் செய்து கொள்ளலாமா?

அடியேனின் சம்பந்தி மனைவி 4 நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். என்னுடைய மகன் சபிண்டீகரணத்தில் ஸ்வாமிகள் ஸ்தானம் ஸ்வீகரிக்கலாமா?

பரந்யாஸத்திற்குப் பிறகு வெளிநாடு போகலாமா?

இறந்தவர் உடலின் முன்பு தரையில் விழுந்து சேவித்தல் அல்லது கைக்கூப்பி நமஸ்கரித்தல் சரியா, தவறா? இறந்தவருக்கு வேறு எவ்வாறு மரியாதையை செலுத்தலாம்.

ஆந்தை தாயாரின் வாகனம் என்று சொல்லப்படுகிறதே. இதைப்பற்றிய ப்ரமாணம் உண்டா என்பதை அடியேனுக்குத் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து கொள்ளாவிட்டால் ஒருவருக்குத் திருவாராதனம் செய்யும் தகுதி இல்லை என்று உள்ளது. இந்நிலையில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ளும்வரை, ஒருவர் எவ்வாறு தோஷம் இன்றி பெருமாளுக்கு ஆராதனம் செய்யலாம்?

க்ருஹத்தில் எவ்வாறு சுதர்சன பூஜை செய்ய வேண்டும்? சுதர்சன யந்த்ரத்தை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது என்று ஒரு உபன்யாசத்தில் கேட்க நேர்ந்தது. அவ்வாறெனில் எந்த உலோகத்தால் அதைச் செய்ய வேண்டும்? மேலும் யந்த்ரத்தை முறையாக எவ்வாறு ப்ரதிஷ்டை செய்ய வேண்டும்? சக்கரத்தாழ்வாரை ஜபிக்க வேண்டிய மந்திரம் எது? சுதர்சன யந்த்ரத்தை க்ருஹத்தில் ப்ரதிஷ்டை செய்வதால், ஏதேனும் அதிகப்படியான நியமங்கள் கடைபிடிக்கப்பட வேண்டுமா?

என்னுடைய தாத்தாவின், தம்பியின் பேரனுடைய பார்யா பரமபதித்துவிட்டார்கள். எனக்கு எத்தனை நாள் தீட்டு? குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா? இறந்தவர்களை நான் பார்த்து சுமார் 20 வருடங்கள் ஆகின்றது. தீட்டு விஷயம் தெரியப்படுத்தவும்.

அடியேனின் க்ருஹத்திற்கு அருகில் உள்ள (குரோம்பேட்டை) கோவிலின் ப்ரஸாதம் பற்றிய கேள்வி. அடியேன் ஜிஎஸ்பிகேவில் உபன்யாசம், காலக்ஷேபங்கள் (குறிப்பாக ஸ்ரீவாசுதேவாசார் ஸ்வாமி) கேட்கும் வழக்கமுடையவன். அதனால் நிறைய பயன் பெற்றுள்ளேன். அடியேன் காலை மாலை இருவேளையும் கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவன். கோவிலில் மீதமுள்ள ப்ரஸாதங்களை (பெரும்பாலும் சாதத்தை) அந்தந்த தளிகை மற்றும் நைவேத்தியம் செய்த பாத்திரங்களிலேயே வைத்து கோவிலுக்கு வெளியே வைத்து விடுகிறார்கள். இதை அந்தப் பகுதியில் உள்ள மாடுகள் நேரடியாக அந்த பாத்திரத்தில் இருந்து எடுத்து உண்கின்றன. இது சரியான பழக்கமா? அந்தப் பகுதியில் உள்ள நாய்களும் சில சமயம் இந்த பாத்திரங்களைத் தீண்டுவதற்கும், அந்த ப்ரசாதங்களை உண்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இது சரியான செயலா அல்லது இதனால் அனாசாரம் ஏதும் ஏற்படுகிறதா? இதைப் பற்றி நான் ஏற்கனவே கோவிலில் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறியும் எந்தப் பயனும் இல்லை. இதனால் எனக்கு அந்த ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பம் நிலவுகிறது. கோவில் ப்ரசாதத்தை ஏற்றுக் கொண்டால் அது அனாச்சாரம் ஆயிற்றே என்ற பயமும், அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது பாபம் என்றும் அடியேனுக்குத் தோன்றுகிறது. தயவுசெய்து இந்த விஷயத்தில் ஸ்வாமிகளைக் கேட்டு அடியேனுக்குத் தெளிவு ஏற்படுத்த வேண்டுகிறேன்.

ஆத்தில் கார்த்திகை தீபம் அன்று முதலில் சிறியதாக சொக்கப்பானை ஏற்றி அதன் பிறகு மற்ற விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று கேள்விப்பட்டேன். அந்தச் சொக்கப்பானை என்பது அகல் விளக்கில் எண்ணெய் விட்டு எள் முடிந்து வைத்த காடாத்துணியைத் திரியாக பயன்படுத்தலாமா?

அடியேன் ஆத்துக்காரர்க்கு பூர்வீகம் எந்த ஊர்னு தெரியாது, பூர்வீக பெருமாள் யாருன்னு தெரியலை, குலதெய்வம் என்று சேவிக்க ஏதேனும் உபாயம் இருக்கா? (அடியேனுக்கு ஆசார்ய அனுக்ரஹத்தில் பரந்யாஸம் ஆயிடுத்து)

1) திருவாராதனத்தின் போது பெருமாளுக்குச் சமர்ப்பிக்கும் திருத்துழாய் முழுவதையும் கோயிலாழ்வாரில்/பெருமாள் பெட்டியில் விடவேண்டுமா? அல்லது அவற்றில் சிலவற்றை நாமும் நமது குடும்பத்தினரும் ப்ரஸாதமாக ஸ்வீகரிக்கலாமா? 2) பழைய/கிழிந்த பெருமாள் வஸ்த்ரங்கள், கிழிந்த/உடைந்த பெருமாள் படங்கள்/பொம்மைகள், பெருமாள் படம் போட்ட நாள்காட்டிகள் இவற்றை எப்படி அப்புறப்படுத்துவது? எனக்கு இவற்றைக் குப்பையில் ஏறிய மனமில்லை. 3) அமாவாசை தர்ப்பணம் செய்து முடித்த தர்ப்பங்களை/கூர்ச்சங்களை எப்படி அப்புறப்படுத்துவது?

1) பொதுவாக பெருமாள் மற்றும் தாயாரின் உற்சவ மூர்த்திகளின் கண்கள் ஏன் மூடியே உள்ளன? 2) பெருமாளின் உற்சவ மூர்த்திகளுக்கு (உதாரணம்: நம்பெருமாள், வரதர், சாரங்கபாணி, பார்த்தசாரதி) திருமண் அணிவிக்காமல் ஏன் திலகம் அணிவிக்கப்படுகிறது? 3) பெருமாள் மற்றும் தாயாரின் மூல மற்றும் உற்சவ மூர்த்திகளில் உள்ள திருச்சிவிகையில் பூதம் போன்ற ஒரு உருவம் உள்ளதே. இதன் பின்னே ஏதாவது காரணம் உள்ளதா?

ஸ்ரீசூர்ண ப்ரதிஷ்டை மற்றும் துளசி மாலை ப்ரதிஷ்டை எவ்வாறு செய்ய வேண்டும்?

அகத்துப் பெருமாளுக்கு அகர்பத்தியை ஏற்றலாமா?

அமாவாஸை அன்று கோலம் போடலாமா?

க்ரஹண காலத்தில் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும்? முக்யத்வம் விளக்கவும்.

க்ரஹணம் சம்பவிக்கும் நாளில் புண்ய காலத்திற்குப் பிறகு குளித்தபின் தர்ப்பணம் செய்பவர் மற்றும் தர்பணம் செய்யாதவர் முக க்ஷௌரம் (முடி திருத்தம்) செய்து கொள்ளலாமா? தர்ப்பணம் செய்தவர்கள் இரவில் பலகாரம் செய்ய வேண்டுமா? உதாஹரணத்திற்கு சமீபத்தில் முடிந்த சந்திர க்ரஹணம் சம்பவம்.

நான் 43 வயது ப்ரம்ஹச்சாரி. எனக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது, பரந்யாஸம் ஆகவில்லை. நான் பரமபதித்த பிற்கு அந்திம க்ரியைகள், ஶ்ராத்தம் செய்ய யாருமில்லை. நான் இப்போதே எனக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? செய்யலாம் என்றால் ஒருமுறை செய்தால் போதுமா அல்லது என் ஆயுட்காலம் வரை செய்யவேண்டுமா?

அடியேனின் பையனுக்கு சமீபத்தில்தான் உபநயனம் ஆனது. அவனுக்கு அடியேன் சந்தியாவந்தனம் கற்றுக்கொடுத்துள்ளேன். அவனுக்கு ஒரு Reference போல் கொடுக்க சந்தியாவந்தன மந்திரங்கள் எங்கே கிடைக்கும்? எப்படிச் செய்யவேண்டும் எந்த திசை என்ற விளக்கங்களுடன் ஏதேனும் புத்தகம் உள்ளதா? நாங்கள் ஸ்ரீஸந்நிதி சிஷ்யர்கள்.

1. திருவாராதனம் முடித்தபின் கொடுக்கப்படும் பெருமாள் தீர்த்தம் என்பது என்ன? ” A) அது தப்ரதிக்ரஹ பத்ரம் என்று ஒவ்வொரு ஆசனத்திலு(அதாவது அர்க்யம், பாத்யம்) நாம் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கும் ஸ்நானாசன தீர்த்தமா? திருமஞ்சன தீர்த்தமல்லாத ஸ்நானாசன தீர்த்தமா? அல்லது இரண்டும் கலந்த தீர்த்தமா? அப்படித் தரும் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்? B) பெருமாளுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்தால் அந்தப் பாலை என்ன செய்யவேண்டும்? 2. எங்கள் அகத்தில் குழந்தைகள் பள்ளி/கல்லூரிக்குச் செய்வதால் தளிகை சீக்கிரம் பண்ணிவிடுவார்கள். அதனால் நாங்கள் திருவாராதனத்திற்கு என்று தனியாக அமுது தயார்செய்கிறோம். இப்படிப்பட்ட சமயங்களில் போஜ்யாசனத்திற்குத் தளிகை எப்ப்டி ஸமர்ப்பிப்பது என்று தெளிவிக்கவும்.

அடியேன் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவருக்கு வருஷாப்திகம் வரை என் மச்சினர் பிள்ளை காரியம் செய்கிறான் என்றும் அதன்பின் வரும் ஶ்ராத்தம் யார் செய்யலாம் என்ற என் கேள்விக்கு அடியேனுக்கு பேரன் இருக்கிறானா என்று கேட்டிருந்தீர்கள். எனக்கு இரண்டு பெண்கள்.சிறிய பெண் மூலமாக ஒரு பேரன் இருக்கிறான்.அந்த என் பேரனுக்கு வயது 12. உபநயனம் ஆகிவிட்டது.

ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இவை இரண்டும் வேவ்வேறு ஆசார்யர்களிடம்/மடங்களில் பண்ணிக்கொள்ளலாமா? யாரை ஆசார்யனாக கொள்ளவேண்டும்? அப்படிச் செய்தால் பண்டிகை போன்ற காலங்களில் யாருடைய ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்ற வேண்டும்?

1. அகத்தில் பெருமாள் சந்நிதியில் எத்தனை விளக்கு ஏற்றவேண்டும்? 2 விளக்குகளா அல்லது ஒற்றை விளக்கு ஏற்றாலாமா? 2. நம் முன்னோர்களின் படங்களை பெருமாள் சந்நிதியில் வைக்கலாமா?

1. கார்த்திகை மாதம் முழுவதுமே இரண்டு விளக்கேற்றி சாயங்காலம் வேளையில் வாசலில் வைக்கவேண்டுமா? 2. பாஞ்சராத்ர தீபத்திற்கு முதல் நாள் நித்யம் ஏற்றும் இரண்டு விளக்குகளைத் தவிர கூடுதலாக விளக்கேற்ற வேண்டுமா? ஶாஸ்த்ரப்படி இது சரியா? அன்றைய தினம் தானே அண்ணாமலையார் தீபமும் வருகிறது? கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும் திருக்கார்த்திகை போல் நிறைய விளக்கேற்ற வேண்டுமா?

க்ரஹண காலத்தில் சில நக்ஷத்ரங்களுக்கு ஏற்படும் தோஷத்திற்குப் பரிகாரம்/ஶாந்தி ஹோமம் செய்கிறார்கள். நம் ஸம்ப்ரதாயத்தின்படி அவைகளை எவ்வாறு செய்யவேண்டும்? பெரியவர்களின் வழக்கம் என்ன?

வயதில் சிறியவர்கள் பரமபதித்தால் அந்தப் பித்ருசேஷத்தை பெரியவர்கள் ஸ்வீகரிப்பதில்லை என்று இருக்கிறது.எல்லாமே ஆத்மா எனறிருக்கும்போது சின்னவர்கள் பெரியவர்கள் என்ற பேதம் ஏன் ஏற்படுகிறது. என்னிடம் சிலர் கேட்டார்கள்.அவர்களுக்காக கேட்கிறேன்.

ஏகாதசி துவாதசி அமாவாஸை ஆகிய நாட்களில் அரிசிக்குப் பதிலாக சிறு தானியங்கள்- Millets (இதில் பலவகை உள்ளது)) சேர்த்துக் கொள்ளலாமா? ஏகாதசியன்று இந்த சிறு தான்யங்களை எப்படி உடைப்பது? மேலும் எந்தெந்தச் சிறு தான்யங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

க்ரஹண கால தர்ப்பணத்தில் ஆசமனம் பண்ணவேண்டுமா?

மாதப் பிறப்பு தர்ப்பணம் மாதம் பிறப்பதற்கு முன்பே பண்ண வேண்டுமா? அல்லது மாதம் பிறந்த பின்னால் பண்ண வேண்டுமா?

அடியேன் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.எனக்கு இரண்டு பெண்கள்.என் மச்சினர் பிள்ளைதான் இப்போது கணவருக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்கிறான். வருஷாப்திகம் முடிந்ததும் பின்னர் வரும் ஶ்ராத்தம் யார் செய்ய வேண்டும். மச்சினர் மகனே செய்யலாமா அல்லது அவனால் முடியாவிட்டால் என்ன செய்வது என்று சொல்லுங்கள்.

கயா ஶ்ராத்தம் ஸமாஶ்ரயம் ஆகாதவர் செய்யலாமா? பலன் கிடைக்குமா? தம்பதியாகத்தான் செய்யவேண்டுமா?

ஏகாதசி விரதம் இருக்கும் ஒருவர் கோயிலில் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் தரும்போது சாப்பிடலாமா?

அடியேன் அகத்தில் அடியேன் ஆசார்யனான ப்ரக்ருதம் ஸ்ரீமதழகிய சிங்கரின் படம் உள்ளது. அவருக்கும் எபெருமாள் படங்களுக்கு பூ வைப்பது போல் வைக்கலாமா?

எந்த வயதில் பரந்யாஸம் செய்துகொள்ளலாம்? சிறு வயதிலேயே பரந்யாஸம் செய்துகொள்ளலாமா? அது சரியா?

பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோக்கிக்கும் மணியைப் பாதுகாராதனத்திற்கு உபயோகிக்கலாமா?

சில ஜைன மத நண்பர்கள் திருமலை என்பது ஜைன கோயில் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எம்பெருமானின் திவ்யதேசம் என்று புரிய வைக்க புராணச் சான்றுகள் அல்லது மேற்கோள்களைத் தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனின் மாமியார் இதுவரை புரட்டாசி மாவிளக்கு ஏற்றியதில்லை ஆனால் எங்கள் பெரிய மாமனார் அகத்தில் மாவிளக்கு ஏற்றும் வழக்கமுண்டு. எங்கள் மாமனார் தற்போது இல்லை. நாட்டுப்பெண்கள் நால்வரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருக்கின்றோம்.நாங்கள் புதியதாக மாவிளக்கு ஏற்ற ஆரம்பிக்கலாமா?

ஸ்ரீவைஷ்ணவர்கள் காசி மற்றும் கேதாரிநாத் போகலாமா?

சாயம் சந்த்யாவந்தனம் எந்த்த திசையை நோக்கிச் செய்ய வேண்டும்? முழுவதுமே வடக்கு முகமாகச் செய்ய வேண்டுமா அல்லது அதில் அர்க்யப்ரதானம் மட்டும் மேற்கு முகமாகச் செய்ய வேண்டுமா?

அடியேன் லௌகீகத்தில் Biotechnology ஆராய்ச்சியில் மாணவனாக பணிபுரிகிறேன். அதனால் இக்கேள்வி. நாம் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும் ஆசாரம் வழிவகுக்கிறது அல்லவா? ஆனால் பசு சாணத்தில் நிறைய கிருமிகள் இருக்கிற பட்சத்தில் நாம் ஏன் அதை சுத்தி செய்ய பயன்படுத்துகிறோம். என்றுமே நம் ஶாஸ்திரங்கள் மீது அடியேனுக்கு முழு நம்பிக்கை உண்டு. இருப்பினும் அறிவியல் கண்ணோட்டத்தில் காண்பதால் இந்தச் சந்தேகம். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

அகத்தில் இருக்கும் புருஷாளுக்கு சைனஸ் தொந்தரவு இருப்பதால் தினமும் தலைக்குத் தீர்த்தமாட முடியவில்லை. அந்த நாட்களில் அவர்கள் பெருமாளுக்குத் திருவாராதனம் பண்ணலாமா?

நம் ஸம்ப்ரதாயப்படி அகத்தில் செல்லப்ராணிகள் வளர்க்கலாமா? அவை உள்ளே வரலாமா?

1. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, துவாதசி மற்றும் அமாவாஸை அன்று துளசி க்ரஹிக்கூடாது என்றுள்ளது, மன்வாதி யுகதினம் என்று ஒரு வார்த்தை உள்ளது அப்படியென்றால் என்ன என்று தெரிவிக்கவும் ஸ்வாமி. 2. ஒரு வருடத்தில் என்றைக்கெல்லாம் நாம் துளசியைச் செடியிலிருந்து க்ரஹிக்கக்கூடாது?

அடியேனுக்கு போதுமான இடமில்லாததால், ஆசார்யன் பாதுகைகளை சாளக்கிராம மூர்த்தி எழுந்தருளியிருக்கும் பெட்டிக்கு முன் வைத்துதான் பாதுகாராதனம் செய்கிறேன். இப்படிச் செய்யலாமா?

வேலைக்காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளிநாடு செல்லலாமா? பொதுவாக வெளிநாடு செல்வது கூடாது என்றிருக்கும் காரணம் என்ன? பாரத பூமி கர்மபூமி என்பதால் மட்டுமா அல்லது வேறு காரணங்களும் இருக்கிறதா? ஜம்பு த்வீபம் என்று நாம் சொல்வது போல் வெளிநாடுகளைக் குறிக்க என்ன பெயர் இருக்கிறது?

கர்ம் விபாகா என்ற ஶாஸ்த்ர க்ரந்தத்தில் நாம் செய்யும் அபசாரங்களுக்கு எந்த மாதிரி ரோகம் வரும் என்ற குறிப்புள்ளது என்று கேள்விப்பட்டுள்ளேன். அதில் ஒன்று எம்பெருமானும் சிவனும் ஒன்று என்று நினைத்தால் உதர சம்பந்தமான ரோகம் வரும் என்று இருப்பதாக சொல்கிறார்கள். இதை ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படிப் புரிந்துகொள்வது? நம் பெரியவர்களில் இவ்வார்த்தைக்கு என்ன சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்?

துலா ஸ்நானம் எப்போது செய்யவேண்டும்? சந்தியாவந்தனம் செய்யும் முன் பண்ணும் ப்ராத ஸ்நானம் போதா? அல்லது மாத்யாஹ்நிக ஸ்நானம் முன்னரா? அல்லது இரண்டுவேளையில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாமா?

எனது மாமனார் சமீபத்தில் ஆசார்யன் திருவடி அடைந்தார். எனது கணவர் அவர்களுக்கு ஒரே புத்திரன் ஆவார், நாங்கள் ஒரு வருடத்திற்கு கோவில்களுக்கோ, திவ்ய தேசத்திற்கோ, மலைமேல் இருக்கும் க்ஷேத்ரங்களுக்கோ போகலாமா?

தர்ப்பணம் காவேரியில் செய்துவிட்டு வந்த பிறகு பெருமாள் திருவாரதனம் செய்யலாமா? பெருமாள் ஆராதனதிற்குப் பிறகுதான் பித்ரு தர்ப்பணம் என்று நியதியா? விளக்கவும்.

நாங்கள் Gated Communityல் இருக்கின்றோம். அடியேனுக்கு மட்டும் ப்ரஸமர்ப்பணம் ஆகியிருக்கிறது. அடியேனின் பார்யாளுக்கு நவராத்திரி சமயம் ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் கொடுக்கும் வெற்றிலை பாக்கு குங்குமம் தேங்காய் பழம் போன்றவற்றை நாங்கள் உபயோகிக்கலாமா? அது தேவதாந்தர சம்பந்தம் ஏற்படுத்துமா?

அகத்து பெருமாளுக்கோ கோவிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கோ கண்டருளப்பண்ணிய தேங்காயைத் தளிகைக்கு உபயோகிக்கலாமா? அந்தத் தளிகையை எம்பெருமானுக்கு அமுது செய்விக்கலாமா?

“அத2 புருஷோ ஹ வை நாராயணோ” என்று ஆரம்பிக்கும் நாராயணோபநிஷத் ஒரு தனி ப்ரஶ்னமாக கருதப்படுகிறதா இல்லை வேதத்தின் ஒரு ப்ரஶ்னத்தினுடைய ஒரு பாகமாக கருதப்படுகிறதா?

ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் மோக்ஷப்ரபத்தி போல் ஆசார்யனிடம் பண்ணிக்கொள்ள வேண்டுமா அல்லது நம் அகத்தில் பெருமாள் சந்நிதியில் பண்ணிக் கொள்ளலாமா ? அப்படிப் பண்ணிக் கொள்ளலாம் என்றால், நம் மனத்தாலும், நினைவாலும் ஏற்படும் எண்ணிலடங்கா பகவத மற்றும் பாகவத அபசாரங்களுக்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி எப்படிப் பண்ண வேண்டும் என்பதை விளக்க ப்ரார்த்திக்கின்றேன். மேலும் வார்த்தைகளாலும் மற்றும் செயல்களாலும் ஏற்படும் பாகவத அபசாரங்களுக்கு பாதிக்கப்பட்ட பாகவதரிடம் க்ஷமாபணம் கேட்டு ப்ராயஶ்சித்தம் செய்யலாம் என்று நான் புரிந்து கொண்டிருப்பது சரியாய் என்றும் விளக்க வேண்டுகிறேன்?

நாம் சுலபமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேதங்கள் வியாசரால் பிரிக்கப்பட்டிருந்தால், உபாகர்மாவின் வெவ்வேறு தேதிகள் எப்போது தோன்றின? ஒவ்வொரு வேதத்திற்கும் அவை ஏன் வேறுபடுகின்றன? உத்ஸர்ஜனம் அனைவருக்கும் பொதுவான தேதியா இல்லை நாட்கள் வேறுபட்டுள்ளதா?

பட்டுப் பூச்சியிலிருந்து பட்டு எடுக்கப்படும்பொழுது ஸ்த்ரீகள் பட்டுப் புடவை உடுத்திக் கொள்வது மடி என்று சாஸ்திரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?

ஆவணி அவிட்டத்தின் போது முதலில் உபாகர்மாவை முடித்து ஊர்த்வபுண்ட்ரம் தரித்த பின் பெருமாள் திருவாராதனம் பண்ண வேண்டுமா? முறையான செயல்முறையை விளக்க ப்ரார்த்திக்கின்றேன்?

ஸ்வாமி, அடியேனுடைய பெரிய மச்சினர் ( சின்ன மாமனார் புத்ரன் ) இரண்டு நாட்களுக்கு முன் ஆசார்யன் திருவடி அடைந்து விட்டார். அஶௌசத்தினால் ஆவணி அவிட்டம் பண்ணவில்லை. அஶௌசம் முடிந்த பின் ஆவணி அவிட்டம் பண்ண வேண்டுமா என்பதை தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

முனித்ரய மற்றும் கோபாலார்ய தேசிக சம்ப்ரதாயத்தைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீஜயந்திக்குப் பின் எப்பொழுது பாரணை பண்ண வேண்டும்.

ஏகாதசி/துவாதசி அல்லாத ஞாயிறு /திங்கள் /புதன்/வியாழக் கிழமைகளில் க்ஷௌரம் செய்துகொள்ளலாமா?

பிச்சம் ஏகாதசி (நாம் கொண்டாடும் ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி ) மற்றும் ஹரிவாசரம் (அதாவது துவாதசிக்கு முந்தைய நேரம்) இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவ்வாறு தெரிந்து கொள்வது ?

வ்ருத்தி தீட்டும் இறப்பு தீட்டுபோல் காக்க வேண்டுமா அல்லது தளர்வுகளுடன் காக்கலாமா? அதாவது குழந்தை பிறந்த சந்தோஷத்தை கொண்டாட உறவினர் வீட்டுக்குச் செல்வது , இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவது , குங்குமம் இட்டுக்கொள்வது, வெற்றிலை பாக்கு பெற்றுக்கொள்வது போன்றவைகளை செய்யலாமா?

யஜ்ஞம் ஸ்வாமி தனது வேத வைபவம் தொடரில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: 1. புத்தகங்களைப் பார்க்காமல் வேதங்கள் பாராயணம் பண்ண வேண்டும் 2. வேதங்களைக் கற்று, தினமும் பாராயணம் செய்யாமல், அதற்குப் பதிலாக ஸ்தோத்ரபாடம் போன்ற வேறு ஏதாவது பாராயணம் செய்வது பாவம். இவற்றிற்கான ப்ரமாணங்களை மேற்கோடிட்டுக் காட்டுமாறு ப்ரார்த்திக்கின்றேன்.

அஹோபில மடத்தின் சிஷ்யர்கள் ஆசார்ய பாதுகா ஆராதனம் நித்யமும் பண்ண வேண்டுமா அல்லது துவாதசி அன்று மட்டுமே பண்ண வேண்டுமா? மடத்தில் துவாதசி அன்று மட்டும் பண்ணுவதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன்.

அடியேன் அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் பண்ணுபவர்கள் மட்டுமே இரவில் பலகாரம் எடுத்துக் கொள்ள வேண்டுமா? க்ருஹத்தில் தர்ப்பணம் செய்யாதவர்களும் இரவில் பலகாரம் எடுத்துக் கொள்ளலாமா அல்லது சாதத்துடன் சேர்த்து உணவு உட்கொள்ள வேண்டுமா?

அடியேனுடைய அப்பாவிற்கு பங்காளி(பெரியப்பா/சித்தப்பா வினுடைய பார்யாள்) தீட்டு. பத்து நாள் தீட்டு காக்கப் பட்டது. அவர் வரும் நாட்களில் பண்டிகைகள் கொண்டாடலாமா

பாதுகா ஆராதனம் தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன் a. நான் ஒவ்வொரு துவாதசியிலும் பாரணைக்கு முன் பாதுகா ஆராதனை செய்கிறேன். மற்றும் ஆசார்ய திருநக்ஷத்திரத்தில் நைவேத்யமாக பழங்கள் அல்லது கல்கண்டு மட்டுமே அம்ஸிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லி இருக்கிறார்கள். கேசரி, பாயசம் போன்ற சமைத்த உணவுகளை ஏன் பாதுகைகளுக்கு அம்ஸிக்கக் கூடாது என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன். b.எனது ஆசார்யன் ப்ரக்ருதம் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர். ஆனால் நான் 45வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளை ஆராதனை செய்து கொண்டு வருகின்றேன். ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரின் பாதுகைகளையும் நான் பெற வேண்டுமா என்று பதில் அளிக்க ப்ரார்த்திக்கின்றேன் ? c.பாதுகா ஆராதனைக்கு என்று தனியாக தட்டுகள், வட்டில்கள் மற்றும் விளக்குகளை பயன்படுத்துகின்றேன். இவற்றை நான் பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை. [என்னிடம் ஒற்றைத் திருமணி மட்டுமே உள்ளது. அதை நான் பெருமாள் மற்றும் பாதுகா ஆராதனத்திற்கு உபயோகப்படுத்துகின்றேன். இது சரியா? இல்லை நான் பாதுகா ஆராதனத்திற்கு மற்றொரு திருமணி வாங்கி உபயோகப் படுத்த வேண்டுமா என்று தெளிவிக்க ப்ராத்திக்கின்றேன். d.ஏன் நாம் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம்? மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம்? e.பாதுகா ஆராதனம் பெருமாள் சந்நிதியில் இருந்து கொஞ்சம் தள்ளி பண்ணும் படி எனக்கு சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் பெருமாளை விட ஒருவனுடைய ஆசார்யனே அவனுக்கு மேல் என்று சொல்லி இருக்கும்போது ஏன் பாதுகா ஆராதனம் பெருமாள் ஆராதனத்துடன் சேர்ந்து பண்ணப் படுவதில்லை . மேலும் பாதுகாவிற்கு ஏன் துளசி சேர்க்கக் கூடாது? f. வரும் அக்டோபரில் அமெரிக்காவில் சூர்ய க்ரஹணம் ஏற்படுகிறது. சூர்ய கிரகணத்தின் போது பெருமாள் ஆராதனை (ஜபம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் தர்ப்பணம் ஆகியவற்றுடன்) செய்யப் போகின்றேன். பாதுகைகளுக்குத் திருமஞ்சனம் க்ரஹணத்தின் போது செய்ய வேண்டுமா அல்லது கிரகணத்திற்குப் பிறகு செய்ய வேண்டுமா என்பதை தெளிவிக்கப் ப்ரார்த்திக்கின்றேன் ?

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹருக்கு நீராஜனதீபம் தேங்காய் மூடியில் ஏற்றலாமா?

நாம் நித்யமும் தேவரிஷி, காண்டரிஷி தர்ப்பணம் செய்து வந்தால்(உபாகர்மா நாளில் செய்வது போல்) மாலையில் பலகாரம் மட்டுமே உட்கொள்ள வேண்டுமா?

மகாலக்ஷ்மி நமது தாயாராக இருக்கும் போது நாம் ஏன் நமது வடகலை சம்ப்ரதாயத்தில் வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடுவதில்லை?

ஶரணாகதி என்பது நாம் நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடுதல் என்பதும் அதன் பின் நம் பரத்தைப்பற்றி கவலைக்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என்பது சென்ற சுதர்சனம் மூலம் புரிந்துகொண்டேன். ஒருவருக்கு செய்த ஶரணாகதி கவலைதரும்படி இருந்தால் அவர் தன் ஆத்மாவைச் சரியாக ஸமர்ப்பிக்கவில்லை என்று அர்த்தமா? அவர் மீண்டும் அதை ஸமர்ப்பிக்கவேண்டுமா? அல்லது நாம் நம் பரத்தைச் சரியாகச் ஸமர்ப்பிக்கவில்லை என்றாலும் நம் ஆசார்யன் தானே நமக்காக ஸமர்ப்பிக்கிறார். அவர் அதைச் சரியாகதானே செய்திருப்பார். அதனால் செய்த ஶரணாகதி குறையில்லாமல் தானே இருக்கும். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

.எம்பெருமானுக்கு நாம் ஏற்றும் தீபங்களில் சில சந்தேகங்கள்: 1. திருமலையப்பனுக்குப் புரட்டாசி சனிக்கிழமை மாவிளக்கு ஏற்றுகிறோம். இதை என் இஷ்ட எம்பெருமானான ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றாலாமா? அல்லது ஸ்ரீரங்கநாதனுக்கு உரித்தான பங்குனி ரேவதி அன்றோ அல்லது வைகுண்ட ஏகாதசி அன்று ஏற்றலாமா? தாயாருக்கு ஆடி/தை வெள்ளிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றலாமா? 2. கும்ப/கட தீபத்தின் ஏற்றம் என்ன? விசேஷ நாட்களில் நாம் நித்யம் ஏற்றும் அகல் விளக்கிற்கு பதில் கும்பத்தில் நீர் நிரப்பி அதில் விளக்கு ஏற்றலாமா? 3. புருஷர்கள் அடுக்கு தீபத்தை எம்பெருமானுக்கு காட்டிய பின் தீபத்திரி கருகாமல் இருக்க அணைக்கலாமா? 4. வடதேசம் போல் நம் ஸம்ப்ரதாயத்தில் விசேஷ நாட்களில் அகண்ட தீபம் ஏற்றும் வழக்கம் உண்டா? உண்டு என்றால் எப்படி ஏற்றவேண்டும்?

கோயில்களில் கொடுக்கப்படும் பலிஹரணத்தைப் பலிக்குப் பின் கோயிலை பராமரிக்கும் ஸ்த்ரீகள் சுத்தம் செய்யலாமா?

எங்கள் பந்துக்களில் ஒருவர் அவர் நடைபயிற்சி செய்யும்போது காயாத்ரி ஜபம் செய்துகொண்டு நடக்கிறார். இது சரியா?

கோயில்களில் கோதா கோஷ்டியினர் கருவறைக்கு வெளியே ப்ரம்மோற்சவம் சமயம் உத்ஸவ எம்பெருமானுக்குப் புறப்பாடு ஆகும்போது ஆரத்தி காட்டலாமா?

கயா ஶ்ராத்தம் செய்தபிறகு அக்ஷய வடத்தில் கொத்தவரங்காயை விட்ட பிறகு அந்தக் காயை மடத்திலோ ஆஸ்ரமத்திலோ வழங்கும் கதம்ப ப்ரசாரத்தில் கலந்திருக்கும் பக்ஷத்தில் அந்தப் பிரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா ? தெரியாமல் ஸ்வீகரித்து விட்டால் என்ன செய்வது?தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

இரண்டு வருடத்திற்கு முன்பு பரஸமர்ப்பணம் செய்துகொண்டேன். ஆனால் இன்றுவரை என்னால் தெரிந்தோ தெரியாமலோ நிஷித்தமான வஸ்துக்கள் உண்பது, சந்தியாவந்தனம் முதலிய நித்யகர்மாக்கள் செய்யாமல் இருத்தல் என்று பாபங்கள் செய்கிறேன். இதனால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் இருக்கிறதா?

ஶரணாகதி கண்டிப்பாக பலன் தரும்.எந்தப் பலனுக்காகவும் ஶரணாகதி பண்ணலாம்.இப்படி இருக்க ஒரு லௌகீக பலனுக்காக ஒரு ஆகிஞ்சன்யனால் மஹா விஶ்வாஸத்தோடு செய்யப்பட்ட ஶரணாகதி பலிக்காமல் போவதற்கு அவரவர் கர்மாதான் காரணமா? தெளிவிக்க பிரார்த்திக்கிறேன்.

ஒருவரின் சிறியதகப்பனார் (தந்தை வழி) பரமபதித்துவிட்டால் பண்டிகைகள் கொண்டாடுவது, கோலம் போடுவது முதலியவற்றை ஒருவருட காலம் தவிர்க்க வேண்டுமா?

பத்து என்றால் என்ன? எவையெல்லாம் பத்து கணக்கில் சேரும்.பக்ஷணங்கள், புளிக்காய்ச்சல் மற்றும் ஊறுகாய் பத்தில் சேருமா?

கடவன் முடவன் முழுக்கு என்பதன் தாத்பர்யம் என்ன? இதையொட்டி ஏதேனும் கதை இருக்கிறதா?

ஒருவர் அகத்து மாஸ்யத்திலோ,ஶ்ராத்தத்திலோ நிமந்த்ரணம் இருப்பவர் அன்று காலை திருவாராதனத்திற்குப் பின் அவர்களுடைய அகத்திலோ, அருகிலுள்ள கோவிலிலோ பெருமாள் தீர்த்தம், மற்றும் பாதுகா தீர்த்தம் ஸ்வீகரிக்கலாமா?

போஜ்யாசனத்தில் கண்டருளப்பண்ணுதலுக்கும் அம்சை பண்ணுவதற்கும் உள்ள வித்யாசம் என்ன? எப்படி இரண்டையும் செய்தல் வேண்டும் என்று விளக்கவும்.

என் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவரின் வருஷாப்திகத்தில் ஶ்ராத்தத்தில் என் நாத்தனார் கணவர் அதாவது என் கணவரை விடப் பெரியவர் ஆகாரம் ஸ்வீகரிக்கலாமா? இது போன்றே என் அண்ணா,மன்னி மற்றும் அத்திம்பேரும் பெரியவர்களே.அவர்களுக்கான விதி என்ன?

அடியேனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஓரு குழந்தைக்கு 7 வயது ஆகிறது. இன்னும் ஓரு குழந்தைக்கு 4 வயது ஆகிறது. என் இரு குழந்தைகளை சாளக்கிராமத்துக்கு பூஜை செய்ய அனுமதிக்கலாமா?”

அமாவாஸை அன்று ஶ்ரார்த்தம் வந்தால், தர்ப்பணம் ஶ்ரார்த்தம் முடிந்த பிறகா அல்லது தர்ப்பணத்திற்குப் பிறகு ஶ்ரார்த்தமா?

பரேஹனி தர்ப்பணம் –மறுநாள் காலை சூர்ய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டுமா??பலர் ஶ்ரார்த்தம் முடிந்தவுடன் செய்கிறார்கள்…எது சரி??

சீமந்தோந்நயனம் என்பது முக்கியமான ஸம்ஸ்காரம் என்றால், அந்த ஸம்ஸ்காரத்தை ஏன் முதல் கர்பத்திற்கு மட்டும் செய்கிறார்கள்?

1. ஸ்வாமி, நான் பிறப்பால் சைவம் , தற்போது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றி வருகிறேன். நான் சமீபத்தில் எனது நகரத்தில் உள்ள ISCKON கோவிலிலிருந்து ஸ்ரீமத் பாகவதம் 1வது ஸ்கந்தத்தை வாங்கினேன். இதுபற்றி நான் சில இளம் ஸ்ரீவைஷ்ணவர்களிடம் கேட்டபொழுது , அவர்கள் இஸ்கான் பாகவதத்தில் தவறான மொழிபெயர்ப்புகளும், விளக்கங்களும் உள்ளன என்றும், ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அவர்களின் க்ரந்தங்களைப் படிக்கக் கூடாது என்றும் சொன்னார்கள்.மேலும், ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ISCKON புத்தகங்களை அவர்களும் வைஷ்ணவர்கள் என்பதால் படிக்க முடியுமா ? நான் தற்போது விதேசத்தில் வசிக்கிறேன், இங்கு ஸ்ரீ ராமானுஜ ஸம்ப்ரதாய படைப்புகள் பற்றிய புத்தகங்கள் பெற முடிவதில்லை. எனவே, அவர்களின் சித்தாந்தம் நமது வேதாந்தத்தில் இருந்து சற்று வேறு பட்டிருந்தாலும் அவர்களின் க்ரந்தங்களைப் படிப்பது தவறா என்பதை தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன். 2. வடகலை திருமண் ஸ்ரீசூரணத்தை u வடிவு முத்திரையில் பதித்து வைத்துக் கொள்ளலாமா? 3.நான் தற்போது திருமண்ணை ஆரஞ்சு வர்ண ஸ்ரீசூர்ணத்துடன் தரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் அவற்றை தரித்துக் கொள்வது சரியா, அல்லது நான் மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஸ்ரீசூர்ணம் தரித்துக் கொள்ள வேண்டுமா? 4. திருமண் காப்பிற்கும் கோபிசந்தனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்க ப்ரார்த்திக்கின்றேன் 5.சில ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசகர்கள் விஷ்ணுவின் புண்ய ஸ்தலங்களான ஸ்ரீரங்கம், மேல்கோட்டை போன்ற இடங்களிலிருந்து வரும் திருமண்ணைதான் தரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் என் திருமண் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஊர்த்வபுண்ட்ரத்தின் மூலம் தெரியாமல் தரித்துக் கொள்ள முடியுமா?அவை கிடைக்குமிடம்(மூலம்) வேறாக இருந்தால் தொடர்ந்து தரித்துக் கொள்ளலாமா அல்லது தவிர்க்க வேண்டுமா?

.ப்ரஹ்மச்சாரிகள் ஆயுஷ்ய ஹோமம் (தங்களுக்கே), ஶ்ராத்தத்தில் அல்லது ஸமாஶ்ரயணத்திற்கான ஹோமம் செய்யலாமா?

சாளக்கிராம திருமஞ்சனத்தில் தேன் சேர்கலாமா மதுபர்கம் அமுது செய்யலாமா?

ப்ரபத்திக்குப் பின், ஒரு ப்ரபன்னன் திருடுவது, ஏமாற்றுவது, துரோகம் செய்வது, பொய் சொல்வது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடும்போது, அதன் விளைவுகளால் அவருக்குப் பாதிப்பு ஏற்படுமா ? அவர் செய்து கொண்ட ஶரணாகதிக்குப் பலன் இருக்குமா?

உடல் உறுப்பு தானம் பற்றி ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் கண்ணோட்டத்தைப் பற்றி தெளிவிக்க பிரார்த்திக்கின்றேன்.

பெருமாள் திருவாராதனத்திற்குப் பூக்களைத் தேர்ந்தெடுக்க என்னென்ன நியமங்கள் உள்ளன. நறுமணம் மட்டுமே முக்கியம் என்றால் கனகாம்பர பூவிற்கு நறுமணம் உண்டு. அதனால் கனகாம்பரத்தை நாம் எம்பெருமானுக்குச் சாற்றலாமா?

கோயிலில் பெருமாள் திருமஞ்சனத்தின் போது சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகுவல்லி மட்டும்தான் சேவிக்க வேண்டுமா? நாராயண வல்லியும் சேவிக்கலமா கூடாதா? விளக்கவும்.

ஜப மந்திரங்களை பொதுவாக எத்தனை முறை ஜபிக்க வேண்டும். தீர்த்தங்கள் ஜபிக்கும் போது எத்தனை முறை சேவிக்கவெண்டும்.விளக்கவும்.

மாமனார் பரமபதித்த பின் முதல் ஒரு வருடம் மனைவியோ, நாட்டுப் பெண்ணோ எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடலாமா? மாமனாரின் மாஸிகம், மற்றும் ஶ்ராத்தத்தன்று சாயந்திரம் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பது சரியா? முறை உண்டா? கொடுக்கலாமா?

நமது ஸம்ப்ரதாயத்தின்படி சுதர்சன ஹோமத்தில் பக்தர்கள் எந்த நாணயங்களைச் சேர்க்க வேண்டும்? (நாம் இப்போது ரூபாய் நாணயங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்)

ஆசார்யன் திருவடியில் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு கன்யா ஸ்திரீக்கும் மற்றும் ப்ரபத்தி பண்ணிக் கொண்ட ஒரு வைஷ்ணவ ஸ்த்ரீ ஒரு சைவ குடும்பத்தில் வாக்கப்பட்டாலும் அவளுக்கும் மோக்ஷம் கட்டாயம் கிட்டுமா என்பதை விளக்க பிரார்த்திக்கின்றேன்

ஆனி சுதர்சனத்தில் ஆசார்யன் பரமபதித்து விட்டால் சிஷ்யனுக்கு ஒரு நாள் தீட்டு என்று உள்ளது. இது நம் ஸம்ப்ரதாய ஆசார்யனுக்கு மட்டுமா அல்லது நாம் ஶ்லோகங்கள் மற்றும் ப்ரபந்தங்கள் கற்றுக் கொள்ளும் ஆசார்யனுக்கும் உண்டா?

கல்யாணங்களில் ஸ்தாலிபாகம் சேஷஹோமம் எதற்காக பண்ணுகிறார்கள் என்பதை விவரமாக ஸாதிக்க ப்ராத்திக்கிறேன்.

அடியேனுடைய தகப்பனார் 13.08.2011 சுக்ல பக்ஷ திதியில் ஆசார்யன் திருவடி அடைந்தார். இந்த வருடம் அவருடைய ஶ்ராத்த கார்யங்களை என்று பண்ண வேண்டும் அன்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

பொதுவாக நாம் ஶாஸ்த்ரம் என்று சொல்லும்போது நாம் எதை அடிப்படையாக வைத்துக்கொள்கிறோம்? மனு ஸ்ம்ருதியா அல்லது ஆபஸ்தம்ப சூத்ரமா?

சில சந்தேகங்கள்: 1. ஒரு ப்ரபன்னனின் கடைசி மூச்சு வரை தேவதாந்திர சம்பந்தம் இருந்தால் ப்ரபத்தி பலன் தருமா? 2. ஒரு ப்ரபன்னன் கடைசி நேரத்தில் தேவதாந்திர சம்பந்தத்தை விட்டுவிட்டு எம்பெருமானிடம் சரணடைந்தால் , ப்ராயஶ்சித்தப் ப்ரபத்தி செய்யாவிட்டாலும் பெருமாள் அவரை ஏற்று மோக்ஷம் அருள்வாரா? அல்லது அந்த ப்ரபன்னர் அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்த பின்னர் பெருமாள் அவருக்கு மோக்ஷத்தை வழங்குவாரா?. 3. ப்ராயஶ்சித்த ப்ரபத்தி எத்தனை முறை செய்யலாம். ப்ரபத்தி போல் ஒரே ஒரு முறை தான் செய்ய வேண்டுமா?ப்ராயஶ்சித்த ப்ரபத்தியும் த்வய மந்திரத்தை உட்கொண்டிருக்குமா?

அடியேன் நமஸ்காரம். ஆவணி அவிட்டம் குறிப்பிட்ட நாளில் ஏதோ ஒரு அசந்தர்ப்பத்தினால் பண்ண முடியாது போனால் பின்னால் வேறொரு நாளில் பண்ண முடியுமா?

எப்பொழுதாவது தவறோ அல்லது ஏதாவது அபாரதம் செய்தாலோ ப்ரபத்தி பலனில்லாததாகி அடியேனுக்கு ப்ரபத்தி கிட்டாது என்ற எண்ணம் எப்போதும் உண்டு. அப்படி இல்லை ப்ரபத்தி நிச்சயம் பலனைத் தரும் என்று பல மகான்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அடியேன் புரிந்து கொண்டிருப்பது சரியா என்று விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அறியாமல் செய்யும் அபராதங்கள் ஒரு ப்ரபன்னனின் பாபக் கணக்கில் சேராது என்றும் , ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் அறிந்தே செய்கின்ற பாபங்களும் கழிந்து விடும் என்றும், இல்லை லகு சிக்ஷைக்கு பிறகு மோக்ஷம் கிட்டும் என்பது அடியேனுக்குத் தெரிந்திரிந்தும் அடியேன் ஏதாவது அபராதம் செய்தால் ப்ரபத்தி பலனில்லாமல் போய்விடும் என்கின்ற பயம் இருந்து கொண்டே இருக்கின்றது. ப்ராரப்த கர்மாவினால் அடியேனுக்கு இந்தப் பயம் ஏற்படுகின்றதா ? இந்தப் பயத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

ஸ்வாமி தேஶிகன் திருமணியின் அம்சம் என கொள்ளப்படும்போது பிந்தைய ஆசார்யர்களின் பாதுகாராதனத்திற்குத் திருமணி சாதிக்கலாமா?”

1. சந்தியாவந்தனம் செய்யும்போது ஸ்ரீ ஸந்நிதி சிஷ்யர்கள் காயத்ரி ஆவாஹண மந்திரம் சொல்லமாட்டார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா? 2. ப்ரபன்னர்கள் ஸ்ரீராம சரிதமானஸ் சேவிக்கலாமா?

ஸ்ரீவைஷ்ணவர்கள் கைகளில் கல் இழைத்த மோதிரம் அணிந்து கொள்ளலாமா?

ஏகாதசியன்று அரிசி உப்புமாவிற்கு பதில், சிறுதான்ய உப்புமா சேர்த்துக் கொள்ளலாமா?

கோவிலில் கொடுத்த சுதர்சன யந்திரத்தை அகத்துப் பெருமாள் சன்னிதியில் வைத்துக்கொள்ளலாமா?

அடியேன் தெலுங்கு ப்ராஹ்மணர் ஆவேன். பகவத் இராமானுஜாசார்ய சம்ப்ரதாயத்தில் சமீபத்தில்தான் பயணிக்கத் தொடங்கியுள்ளேன். அடியேன் ஸ்ரீவைஷ்ணவனாக வாழ ஆசைப்படுகிறேன். ஸ்ரீவைஷ்ணவ அஹாரநியமம்படி இயன்றளவு கடைப்பிடிக்கின்றேன். ஆனால் வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணிக்கும்படி உள்ளது. அங்கு சைவ உணவு கிடைக்கும் ஆனால் நிஷித்தமான வஸ்துக்களான வெங்காயம் பூண்டு போன்ற வஸ்துக்கள் இல்லாமல் உணவு கிடைக்குமா என்று தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் என்ன செய்யவேண்டும்? வழிகாட்டவும்.

முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஜயந்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி போன்ற பண்டிகைகளை, ஏகாதசி போல் அனுஷ்டித்து மறுநாள் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் சேர்த்து, புளி சேர்க்காமல் துவாதசி தளிகை போல் பாரணை செய்யவேண்டுமா?

அடியேன் USல் வசித்துவருகிறேன். எப்போதும் திருமண்காப்பு இட்டுக்கொண்டுதான் வெளியில் செல்வேன். சிலர் திருமண்காப்பு என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு புரியும்படி எப்படி பதில் சொல்வது? சிலர் இதைக்கண்டு ISCKON அமைப்பை சேர்ந்தவரா என்று கேட்கின்றனர். அடியேன் ஸ்ரீவைஷ்ணவன் என்பதையும் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்யாசத்தை எப்படி தெரிவிப்பது?

ஆசார்யன் பரமபதம் அடைந்தால் (திருநாட்டை அலங்கரித்தால்), சிஷயனுக்கு தீட்டு எவ்வளவு நாள்??

“சில சந்தேகங்கள். 1. பையன் இல்லாதவர்களுக்கு மூத்த மாப்பிள்ளை காரியங்கள் செய்தார். பேரனும் இருக்கிறான். ஸ்கூல் படிக்கும் காரணத்தினால் மாப்பிளையே முன்னின்று எல்லாம் செய்தார். தவறு ஏதேனும் உள்ளதா என்பதை தெரியப்படுத்தவும். அகத்து வாத்தியாரிடம் கேட்ட பிறகே செய்யப்பட்டது. 2. இப்படிப் பெண் பிள்ளை இருக்கும் வீட்டில் அப்பா அம்மாவிற்கு வருடா வருடம் ஶ்ராத்தம் உண்டா? அப்பா சென்றபிறகு அம்மாவிடம் கைப்புல் வாங்கி செய்கிறோம். அம்மாவிற்கு பிறகு என்ன முறை? 3. தாத்தா செய்த பாவம் புண்ணியம் தலைமுறைக்கே என்பர். ஆனால் தவறு செய்த தாத்தா உயிருடன் இல்லாமல் இருக்க அவருக்கு தண்டனை எப்படிக் கிடைக்கும்? அதைப் பையனோ பேரனோ அனுபவிப்பது கஷ்டம்தானே? 4. இன்னாருக்கு இன்னார்தான் பிறக்க வேண்டும் என்பது விதிதான். அப்படியிருக்க கணவன் மனைவி என்பதும் போன ஜென்ம தொடர்பா? அல்லது விதியா?

1A. பஞ்ச ஸம்ஸ்காரம் என்பதை எளிய வகையில் என்னவென்று சொல்லி விளக்கலாம்? இது ஒரு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கான சடங்கு என்று கூறலாமா? B. அடியேனின் சம்பந்தி தென்கலை ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஸ்வயமாசார்யர்கள். ஆனால் அவர்கள் பஞ்சஸம்ஸ்காரம் ஏதும் செய்து கொள்ளவில்லை. அடியேனின் பெண், மாப்பிள்ளை மற்றும் பேரக்குழந்தைகள் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துக்கொள்ள ஆசை ஆனால் அவர்கள் அகத்துப் பெரியவர்கள் அதைத் தடுக்கின்றனர். அவர்களுக்கு என்னவென்று சொல்லி புரியவைப்பது? தெளிவிக்கவும். C. ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராகமல் மற்றொருவர் தடுப்பது சரியா? D. மேலும் எம்பெருமானின் ப்ரீதியைப் பெற்று மோக்ஷம் அடைய பக்தி/ப்ரபத்தி தான் உபாயம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அடியேனின் ஆசார்யனிடம் ப்ரார்தித்து எனது பெண், மாப்பிள்ளை, பேரக்குழந்தைகளுக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் ஆகாமலே ப்ரபத்தி செய்ய முடியுமா? E. தென்கலை ஸம்ப்ரதாயத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யும்போதே ப்ரபத்தியும் செய்வார்களா?

துவாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் என்ன செய்யவேண்டும் என்கிற விவரிக்கவும்.

முந்தைய நாளோ அல்லது குளிப்பதற்கு முன் நாம் நறுக்கிய காய்கறிகளை தளிகைக்கு உபயோகப்படுத்தி அதனை எம்பெருமாளுக்கு கண்டருளப் பண்ணலாமா?

பொதுவாக சாப்பிட்ட பின் இலையில் துளி அன்னம் மீதி வைக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் ஶ்ராத்தத்தில் சாப்பிட்ட பிறகு இலையில் கொஞ்சம் அன்னம் மீதி வைக்கலாமா? ( போக்தாக்கள் அல்லாதவர்கள்).

நித்யபடி ஸ்நானம் செய்யும்போது நாம் என்னென்ன கடைபிடிக்கவேண்டும். என்ன சங்கல்பம் பண்ணவேண்டும்? ஸ்நானம் என்றால் தலைக்குத் தீர்த்தாமடுதல் என்று அர்த்தமா?

அமாவாஸை தினத்தில் பெருமாள் திருவாராதனத்தின் போது தளிகை தயாராக இல்லை என்றால் பித்ரு தர்ப்பணம் செய்தபிறகு திருவாராதனத்தை பூர்த்திச் செய்யலாமா?

புருஷர்கள் அன்றைய தினம் ஸ்நானம் மற்றும் ப்ராத: சந்தியா பண்ணும்வரை விழுப்பா (தீட்டு) ?

ஒரு 10 நாள் பங்காளியின் இறப்புத் தீட்டு காக்கும் சமயம் நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா? சந்தியாவந்தனம்/காயத்ரி ஜபம் செய்யலாமா? பத்துநாள் தீட்டு காக்கும்போது ஏன் நாம் உள்பாத்திரங்கள், வஸ்த்ரங்களைத் தொடக்கூடாது என்கிறோம்?

ஒரு ப்ரஹ்மச்சாரி உபநயனம் ஆனவுடன் வேதாத்யயனம் செய்யவேண்டும் என்றிருக்கிறது. அவன் ந்யாயம், மீமாம்ஸா, வ்யாகரணாதிகள், விஶிஷ்டாத்வைத்த சித்தாந்தங்கள் எல்லாம் படிக்கவேண்டும் என்பதின் முக்கியத்துவம் பற்றி தெளிவிக்கவும். மேலும் ஒருவன் ஏன் ஶாஸ்த்ரம் படிக்கவேண்டும் என்பதையும் விளக்கவும். நம் ஸம்ப்ரதாயத்தில் பெண்குழந்தை ஶாஸ்த்ரம் வாசிக்கலாமா?

அகத்தில் த்வாதசி சமயத்தில் ஆசார்யன் பாதுகை ஆராதனத்தில், சாளக்கிராம ஆராதனத்தில் சாதிக்கும் அதே திருமணியை சாதிக்கலாமா?, அல்லது வேறு திருமணிதான் சாதிக்க வேண்டுமா?

அகத்தில் 2 திருமணிகள் பயன்படுத்தலாமா?

பிதாவின் ப்ரத்யாப்தீக ஶ்ராத்தத்தை ஜேஷ்டனும், கனிஷ்டனும் தனித்தனியே செய்ய நேர்ந்தால் மாதா எங்கிருக்கவேண்டும்? பின்பற்றவேண்டிய முறைகளிருப்பின் தயை கூர்ந்து விளக்கவும்.

“தாயார் ஜீவித்திருக்க தகப்பனாரின் வருஷாப்தீகம் முடிந்தபின் கயா ஶ்ராத்தம் பண்ணலாமா?,பிரயாண சௌகர்யத்தால் கனிஷ்டன் ஜேஷ்டனுக்கு முன்னால் கயா ஶ்ராத்தம் பண்ணலாமா?”

நாங்கள் இருந்த வீட்டை இடித்து விட்டு Flat கட்டுகிறோம். வீடு முடிந்ததும் க்ருஹப்ரவேசம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை,ஏனெனில் ஏற்கனவே முதலில் க்ருஹப்ரவேசம் பண்ணியிருப்பதால் சாந்தி ஹோமம் பண்ணிபால் காய்ச்சி சாப்பிட்டால் போதும் என்கிறார்கள்.எது செய்வது உசிதம் என்று சொல்ல வேண்டுகிறேன்.

அகத்திக்கீரையை துவாதசி அன்றுமட்டும்தான் உட்கொள்ளவேண்டுமா அல்லது இதர நாட்களிலும் எடுத்துக்கொள்ளலாமா?

முனித்ரய ஸம்பரதாயம் பற்றிய சந்தேகம்: நாம் பல சந்தர்ப்பங்களில் விரதம் இருக்கின்றோம் (ஏகாதசி, ஶ்ரவண துவாதசி, ஸ்ரீ இராம நவமி, ந்ருஸிம்ஹ ஜயந்தி, க்ரஹண காலம் ஒருவேளை மோக்ஷம் சூர்ய அஸ்தமனம் பின் சம்பவித்தால்), இப்படி இருக்கும் சமயங்களில் அடுத்தநாள் பாரணை தளிகைதான் பண்ணவேண்டுமா அல்லது எப்போதும் போல் தளிகை பண்ணலாமா?

அடியேனுடைய மாமியார் பெருமாள் திருவடி அடைந்து 15 நாட்கள் ஆகிறது. அடியேனும் அடியேன் ஆத்துக்காரரும் இனி என்ன என்ன அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.

எனது பெண்ணும் வரப்போகும் மாப்பிள்ளையும் பஞ்ச சம்ஸ்காரம் மற்றும் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள். அவர்களின் விவாஹத்தை ஜெய்ன/அல்லது இதர திருமண மண்டபத்தில் நடத்தலாமா?

அடியேனின் சிறியதகப்பனார் சென்ற மாதம் ஆசார்யன் திருவடி அடைந்தார். நான் செய்ய வேண்டிய கர்மங்கள் என்ன? எனக்கும் க்ஷேத்ர தரிசனம் மலை தரிசனம் கிடையாதா அல்லது மேலும் பண்டிகை, அகத்துப் பெருமாள் கைங்கர்யங்ககள் பண்ணலாமா?

நம் ஸம்ப்ரதாயத்தில் ஜபம் செய்யும்போது துளசி, வேப்பம் அல்லது தாமரை மாலைகளை ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஏன் உபயோகிப்பதில்லை? ஸ்த்ரீகள் ஜபம் செய்ய என்ன மாலையை பயன்படுத்தவேண்டும்?

வர்ணாஶ்ரமம் என்பது பிறப்பினாலா அல்லது கர்மாவினாலா (நாம் இந்த பிறவியில் செய்யும் கர்மா) ஏற்படுகிறது? கர்மா என்றால் ஒருவன் ப்ராஹ்மணன் செய்யும் செயலை செய்தால் அவனும் ப்ராஹ்மணன் ஆகிவிடலாம் அல்லவா? இதற்கு ஏதும் ப்ரமாணம் இருக்கிறதா தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஒருவர் யக்ஞோபவீதம் மாற்றிக்கொள்ள கால நிர்ணயம் உள்ளதா? உதா: உணவு உட்கொள்ளும் முன் அல்லது மாத்யாஹ்னிகம் முன் என்று.

புதிய த்வாரகா சிலாவை ஆராதன சாளக்கிராமங்களுடன் சேர்த்து வைத்து ஆராதனம் பண்ணலாமா? வழிமுறைகள் உண்டா (ப்ரதிஷ்டை போன்ற நியமங்கள்)

பகவதி என்றால் நம் தாயாரைக் குறிக்குமா அல்லது பார்வதி தேவியையா ? கேரளாவில் உள்ள பகவதி தெய்வம் பற்றிய கேள்வி.

உபநயனம் செய்யுமுன் சுமங்கலி ப்ரார்த்தனை புதிதாகச் செய்ய ஆரம்பிக்கவேண்டுமா? இதுவரை செய்ததில்லை. போன வருடம் மாமியார் சுமங்கலியாக பரமபதித்தார்.அதனால் இந்தச் சந்தேகம்.” ஆம் எனில் ஸ்ரீவைஷ்ணவ க்ருஹங்களில் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?”

பரந்யாஸம் ஆகும்முன் மற்றும் ஆனபின்னர் ஒருவர் நுட்பமாக அனுஷ்டிக்க வேண்டியவற்றை விவரிக்க வேண்டுகிறேன். உ.தா உணவுப்பழக்கம்,சஞ்சாரம் முதலியவை.

விருத்தி தீட்டில் தளிகை பண்ணலாமா. அடுப்பு தொடலாமா?

மாமனார் பரமபதமடைந்து வருஷாப்தீகம் முடியும்வரை நாட்டுப் பெண் எண்ணெய் ஸ்நானம் செய்யலாமா?

அடியேனுக்கு ஆசார்ய ஸம்பந்தம் இன்னும் ஏற்படவில்லை சில சந்தேகங்கள்: Q1. மாத்வ ஸம்பரதாயம் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பரதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே விஷ்ணு பக்தர்கள் என்கின்ற ரீதியில் ஸ்ரீவைஷ்ணவர்கள்தான். ஆனால்கூட அவரவர்களுடைய கொள்கையில் வித்தியாசம் உண்டு. அதுதான் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்பது‌. Q2. ப்ரபத்தி செய்தால் மோக்ஷம் என்று ஶாஸ்த்ரம் சொல்லுகிறது. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காது என்று சொல்லவில்லை. பக்தி செய்தால் மோக்ஷம் கிடைக்காதா என்ற கேள்வியே சரியான புரிதல் இல்லாததினால் வந்திருக்கிறது என்று நினைக்கின்றேன். மோக்ஷத்திற்கு நேர்காரணமாக இந்த ப்ரபத்தி என்பது வருகின்றது. பக்தி என்பது ப்ரபத்தியை மூட்டி அந்த மோக்ஷத்திற்குக் காரணமாக அமையும். உதாஹரணத்திற்கு, பத்து படிக்கட்டு ஏறி 11ஆவது படிக்கட்டில் மாடிக்குப் போகமுடியும் என்கின்ற போது, பத்தாவது படிக்கட்டு ஏறினால்தான் மாடிக்குப் போக முடியுமா? 1,2 படிக்கட்டு ஏறினால் போகமுடியாதா என்று கேட்பது போல் இருக்கிறது. அந்த ரீதியில் பக்தி என்பது கட்டாயம் வேண்டும். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. Q3. பக்தியில் பல நிலைகள் உண்டு. சாதாரணமான பக்தி என்பது ஒரு மனிதனுக்கு யாராக இருந்தாலும் எப்போதுமே தேவை. ப்ரபத்திக்குக்கூட அந்தச் சாதாரணமான பக்தி தேவை. அது இல்லாமல் இருக்க முடியாது. ப்ரபத்தி என்று சொன்னால் அவன் பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் கிடையாது. பக்தியோகம் என்பது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பது போல் தியானம் அது. அது நம்மால் பண்ணமுடியாது என்ற ரீதியில் இருக்கின்றது. ப்ரபத்தி பண்ணுபவனுக்கும் அடிப்படையான பக்தி கட்டாயம் இருக்கும். அதனால் அவன் பக்தி இல்லாதவன் என்று சொல்ல முடியாது. Q4. ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பண்ண உபநயனம் ஆகியிருக்கவேண்டும் என்கின்ற நிர்பந்தம் கிடையாது. Q5. மஹாலக்ஷ்மீ தாயாரும் ஸ்ரீமன் நாராயணனும் கட்டாயம் ஒருவர் கிடையாது. இரண்டு பேர்.

மந்த்ராலயம் (ஜீவ சாமாதிக்கு) ப்ரபன்னர்கள் போகலாமா? போய்ச் சேவிக்கலாமா?

மாஹாளயபக்ஷத்தில் மாவிளக்கு ஏற்றலாமா?

நாட்டுப்பெண் கர்ப்பவதியாய் இருக்கும் பக்ஷத்தில் மாமனார் தர்ச/ஸங்க்ரமண ஶ்ரார்த்தம் பண்ணலாமா?

கர்பாதான ஸம்ஸ்காரம் என்றால் என்ன? அந்த ஸம்ஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஸ்ரீ வைஷ்ணவர்கள் சிலர் மஞ்சள் ஶ்ரீசூர்ணமும், சிலர் சிகப்பு சூர்ணமும் இட்டுகொள்கிரார்களே? இதில் எது உகந்தது? தாத்பரியம் என்ன?

ஏகாதசி அன்று துளசி ஸ்வீகரிக்கலாமா? விரததத்திற்குப் பங்கம் உண்டாகுமா?

Q1. ஸ்ரீவைஷ்ணவராக மாற ஆசைப்படும் ஒருவர், பூண்டு வெங்காயம் சாப்பிட்டால் ஸ்ரீவைஷ்ணவராகும் தகுதியை இழக்கின்றாரா? குடும்பச்சூழல் காரணமாய் சாப்பிட நேர்ந்தால் அது பாபமாகுமா? Q2. ஸ்ரீவைஷணவர் துளசிமாலையை நித்யமாகவே கழுத்தில் தரிக்கலாமா?

அடியேனின் மாமனார் பரமபதித்து சிலநாட்களே ஆனதால், த்வஜஸ்தம்பம் இருக்கும் கோவில்களுக்கு போகக்கூடாது என்று கூறினார்கள். அதன் காரணம் என்ன என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அகத்தில் இருக்கும் புருஷர் ஸம்ப்ரதாய முறையைப் பின்பற்ற விருப்பமில்லையென்றால், அவ்வகத்து ஸ்த்ரீ சாளக்கிராம பெருமாளுக்கு ப்ரசாதம் அமுதுசெய்யலாமா? வேறு என்னவெல்லாம் பண்ணலாம்?

அடியேனின் திருத்தகப்பனார் டிசம்பர் மாதம் பரமபதித்துவிட்டார். அடியேன் நதி ஸ்நானம் செய்யலாமா?

அபர காரியத்தில் சபீண்டிகரணத்தில் விஷ்வே தேவர், விஷ்ணு மற்றும் பித்ரு ஸ்தானங்களில் இருந்தால், ஒவ்வொரு ஸ்தானத்துக்கும் எத்தனை நாட்கள் எந்த மாதிரி தீட்டு உண்டு? பிராயச்சித்தம் எத்தனை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்

பங்குனி மாதத்தில் வீடு மாறலாமா?

ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் அவளது பர்தா க்ஷௌரம் செய்துகொள்ளக்கூடாது?

நம் தூரத்து உறவினர் அல்லது தெரிந்தவர்கள் இல்லங்களில் அசந்தர்ப்பம் நிகழ்ந்தால் (வெளியூரில் நாம் நேரே செல்லமுடியாத சூழ்நிலையில்) அவர்களை விசாரிக்க குறிப்பிட்ட நாட்களில்/கிழமைகளில் மட்டும்தான் செய்ய வேண்டுமென வழக்கம் உள்ளதா? அப்படியெனில் எந்த நாட்கள் உகந்தது.

வைர நகை அணிவது பற்றி ஶாஸ்த்ரம் என்ன சொல்லுகிறது? ஒருவர் கட்டாயம் வைரக்கல் நகை அணியவேண்டுமா அல்லது அது வேறும் ஆடம்பர ஆணிகலனாகுமா?

துக்கம் திங்கள் விசாரித்து விட்டு வந்ததற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?

நம் ஸம்ப்ரதாய முறைப்படி ஒரே கோத்ரத்தைச் சார்ந்த பெண்ணும் பிள்ளையும் திருமணம் செய்துக்கொள்ளலாமா?

13/01/2022 அன்று போகி பண்டிகை வைகுண்ட ஏகாதசி இரண்டும் சேர்ந்து வந்தது. அப்படி வந்தால் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டுமா அல்லது பண்டிகைத் தளிகை செய்து பெருமாளுக்கு அமுது செய்தபின் அதை உட்கொள்ளலாமா?

ஶரணாகதி செய்தபின் நம் சகோதரர்களுக்காக கணு பண்டிகை கொண்டாடலாமா? ரஜஸ்வலை காலத்தில் கணுப்பிடி வைக்கலாமா?

மாஸிகம் ஒரு மாதத்தில் தடங்கல் ஆனால், அதை அடுத்த மாஸிகத்தோடு சேர்த்து பண்ணாலாமா? அப்படிப் பண்ணும் போது என்ன விதிமுறைகளை அனுஷ்டிக்க வேண்டும்.

பொதுவாக சமூகத்தில் கணவனை இழந்த பெண்களைச் சுபகாரியங்களில் பங்கேற்க அனுமதிப்பதில்லையே. அவர்கள் ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? நம் ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா? இது ஶாஸ்த்ரரீதியான விஷயமா?அல்லது காலப்போக்கில் மனிதர்கள் கொண்டு வந்ததா? இந்தச் சமூக நிலைபாடு ப்ரபத்தி செய்த ஶ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீகளுக்குத் தகுமா? ப்ரபத்தி செய்தவரகள் நித்ய சுமங்கலிகளானபடியினால் கணவனை இழந்தவர்களாயினும் அவர்களைச் சுபகாரியங்களில் சேர்த்துக்கொள்வது தவறா? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். கேள்வியில் தோஷம் இருந்தால் அடியேனை க்ஷமிக்கவும்.

தினமும் காகத்திற்கு சாதம் வைக்க வேண்டுமா?

அனுஷ்டானங்கள் என்றால் என்ன என்று காணொளி மூலம் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

தர்ப்பண காலத்தில் புருஷர்கள் போல் ஸ்திரீகளும் பலகாரம் பண்ண வேண்டுமா?

22. a. அடியேன், எனது தகப்பனார் குடும்பத்தை விட்டு பிரிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இறந்து விட்டார் என்று 2018ல் தெரிய வந்தது. என் தாயார், அவருக்கு எந்த வித காரியமும் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது குடும்பத்தில் ஏற்படும் சில விஷயங்கள் பித்ரு தோஷத்தாலோ என்று நினைக்க வைக்கிறது. நான் 6 வருடத்திற்கு முன்பு அவருடன் தொலைபேசி மூலம் பேசியும் இருக்கிறேன். பரமபதித்த திதி தெரியாமல் எப்படி காரியம் செய்வது என்பதற்கு வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன். b. மேலும் இச்சமயத்தில் கோவிலுக்கு போவதோ ஸமாஶ்ரயனம் செய்து கொள்வதோ சரியாகுமா என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன். குறிப்பு: நான் எனது மாமாவிற்காக இந்த வருடம் ஐப்பசி மாதம் நிமித்திக ஸ்தானத்தில் அமர்ந்தேன்.

அடியேன் எங்களுக்கு ஒப்பிலியப்பன் தான் குல தெய்வம். அதனால் க்ருஹத்திலும் உப்பு இல்லாமல் தான் தளிகை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமா? 24. பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

அஷ்டாக்ஷர ஜபம் செய்யும் முறையை தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். த்வயம் மற்றும் ஶரம ஸ்லோகத்தையும் சேரத்தே ஜபிக்கலாம., நின்று கொண்டு செய்யலாமா அல்லது அமர்ந்துகொண்டு தான் செய்ய வேண்டுமா, எத்தனை வேளைகள் செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின்பு எனக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் என்னால் ஆசார்யன் தனியன்களைச் சேவிக்க முடியவில்லை. இது ஆசார்யனுக்கு செய்யும் தவறாகுமா?

எந்த வயது முதல் ஏகாதசி வ்ரதம் அநுஷ்டிக்க வேண்டும்.

ஏகாதசி நாளன்று பெரிய பெருமாள் அமுது செய்த (குறிப்பாக அரவணை/க்ஷீரான்னம்) ப்ரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெறும் போது அந்த ப்ரசாதத்தை என்ன செய்ய வேண்டும். அப்படியே வைத்து மறுநாள் உட்கொள்ளலாமா?

அடியேன் எனக்கு ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொள்ள வேண்டும். நான் தனியாக செய்துகொள்ளலாமா அல்லது ஆத்துக்காரருடன் தான் செய்துகொள்ள வேண்டுமா?

தீட்டு சமயங்களில் ராம நாமத்தை மனதுக்குள் ஜபிக்கலாமா?

ஆஶௌச காலத்தில் வலைஒளியில்(YouTube) வெளியிடப்பட்டிருக்கும் உபன்யாசங்களை கேட்கலாமா? அஶௌச காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

நாம் ஸந்யாஸிகளை ஸேவிக்கும் பொழுது ஏன் அபிவாதனம் சொல்லுவதில்லை.

மாத்யானிஹம் பண்ணிய பிறகுதான் ஆத்துப்பெருமாளுக்கு திருவாராதனம் பண்ண வேண்டும் என்று சொல்லப்படடிருக்கின்றது. ஆனால் குழந்தைகள் வேலைக்குப் போவதற்கு முன் சாப்பிட்டுவிட்டு கையிலும் எடுத்துக்கொண்டு போகவேண்டும். இது காலை 8.00 மணிக்கு முன் தயாராக வேண்டும். திருவாராதனம் பண்ணித்தளிகை இதற்கு முன் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தச்சூழலில் காலை 7.30 மணிக்கு முன் மாத்யானிஹம் பண்ணித் திருவாராதனம் முடித்து தளிகை பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றேன். இது சரியா அல்லது திருவாராதனம் பண்ணிவிட்ட பிறகு அதற்கு உரிய சமயத்தில் மாத்யானிஹம் பண்ணலாமா? தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

சொந்த மைத்துனர் பரமபதித்தால் அந்த வருடப்பண்டிகைகளை கொண்டாடலாமா? இல்லை ஒரு வருடம் தீட்டு காக்க வேண்டுமா?

பரஸமர்ப்பணம் செய்துகொண்டபின் ஆடி, தை வெள்ளிக்கிழமை புற்றுக்கு பால் தெளிப்பது, கொலுவைப்பது போன்றவை இதர தேவதாந்திரங்களுடன் சம்பந்தப்பட்டதாகுமா?

10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும், அக்குடும்பங்களில் ஏற்படும் தீட்டிற்கு 10 நாட்கள் மற்றும் 1 வருடம் அஶௌசம் அனுசரிக்க வேண்டுமா?

முந்தைய மாத வெளியீட்டின் இணைப்பை தெரிவிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

என் பேரனுக்கு 9 வயது முடிந்து 10-ஆவது வயது நடந்துகொண்டிருக்கிறது. உபநயனத்திற்கான சரியான வயதை அறிய விரும்புகிறேன். குறிப்பாக உபநயனம் எந்த வயதில் பண்ண வேண்டும்? ஒற்றைப்படை வயதிலா அல்லது இரட்டைப்படை வயதிலா? எந்த வயதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்? முடிந்த வயதையா அல்லது நடந்துகொண்டிருக்கும் வயதையா? ஒற்றைப்படை வயதில் உபநயனம் செய்யக் கூடாது, இரட்டைப்படை வயதில் தான் செய்ய வேண்டும் என்கிறார்களே அது சரியா தவறா. தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

நீரிழிவு நோய் காரணமாக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அடியேன் பழுப்பு அரிசியை (கைக்குத்தல் அரிசி) மட்டுமே பயன்படுத்தி வருகின்றேன். பெருமாளுக்கு திருவாராதனம் செய்தபின் அம்சை பண்ண இந்த அரிசியை உபயோகப்படுத்தலாமா?

a.ஐயங்கார்களின் முக்கிய பண்டிகைகள் என்னென்ன? b. தீபாவளி அமாவாஸை அன்று சிலர் க்ருஹங்களில் லட்சுமி பூஜை செய்கிறனர். ஆனால் அன்றைய தினத்தன்று பெரியவர்கள் தர்ப்பணம் செய்வதனால் பண்டிகை கொண்டாடுவதில்லை. c.நம் பெரியவர்கள் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடினர் என்று பட்டியலிட்டு அதை பற்றிச் சிறிது விளக்கம் அளிக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

அத்யயனம் மற்றும் அனத்யயன காலங்களைப் பற்றி விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸந்த்யாவந்தனத்தில் துரீய அர்க்யம் எந்தக் காலத்தில் ஸம்பவிக்கும்? – அந்தந்த ஸந்த்யாவந்தன காலத்திற்கு முன்பு ஸந்த்யாவந்தனம் செய்வதாக இருந்தாலா (அ) பின்பு செய்வதாக இருந்தாலா? முன்போ (அ) பின்போ, இவ்வளவு மணி நேரத்திற்குள் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்ற கணக்குள்ளதா? உதாஹரணமாக காலை ஸந்த்யாவந்தனத்தை விடியற்காலை 4 மணிக்கோ அல்லது 11 மணிக்கோ பண்ணலாமா?.

த்வாதசி திருவாராதனம் முடிந்து பாரணை செய்த பின் மாத்யாஹ்நிகம் செய்யலாமா?

மஹாளய பக்ஷத்தில், ஒரு வேளை மட்டும் சாதம் சாப்பிடவேண்டும் என்கிற நியமம் மஹாளய பக்ஷ ஆரம்ப தினத்திலிருந்து மஹாளய பக்ஷ தர்ப்பணம் தினம் வரையிலா அல்லது பக்ஷம் முழுவதுமா?

யஜ்ஞோபவீதம் செய்யும் முறை, ப்ரதிஷ்டை பண்ண, செய்ய வேண்டிய அநுஷ்டானங்களைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

மந்த்ரஸாலகட்ட ஶ்ராத்த ப்ரயோகம் என்றால் என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஜபம் செய்யும் போது நாம் எப்படி எண்ணிக்கை வைத்துக் கொள்வது? ஒவ்வொரு விரலுக்கும் 3 என்று கணக்கிட்டு கொள்வேன். ஆனால் ஒரு விரலுக்கு 2 எண்ணிக்கை மட்டுமே என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். எது சரி?

சமீபத்தில் எங்களுக்கு 10 சாளக்கிராமங்கள் மற்றும் 2 துவாரகா மூர்த்திகள் கிடைக்கும் பாக்யம் பெற்றோம். மூர்த்திகளுக்கு என்ன செய்ய வேண்டும், அவற்றை எப்படி ஏள பண்ண வேண்டும் என்று விரிவாக வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.

ஏன் நாம் 4 முறை நமஸ்காரம் செய்கிறோம்?

நம் க்ருஹங்களில் பெருமாள் சன்னதியில் ஆலிலை க்ருஷ்ணர், குழலூதும் க்ருஷ்ணர் விக்ரஹங்களை ஏள பண்ணி வைத்துக்கொள்ளலாமா?

கோஷ்டி நடக்கும்போது சாஷ்டாங்கமாகச் சேவிக்கின்றோம். அப்பொழுது நடுவில் யாராவது நின்று கொண்டு இருந்தால் சேவிப்பது சரியா?

ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதர தேவதாந்திரங்களை ஏன் சேவிக்க கூடாது. ஏன் அவர்களுடைய கோவில்களுக்குச் செல்லக்கூடாது? சென்றால் தோஷம் ஏற்படுமா?

ஸ்ரீ சந்நிதி ஸம்ப்ரதாயத்தின்படி அஷ்டாக்ஷரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களுக்கான த்யான ஶ்லோகங்களை அர்த்தத்துடன், அதாவது எந்தத் திருமேனிக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிக்றேன்.

அமாவாஸை தர்ப்பணத்துக்கு (வடகலை யஜுர் சம்ப்ரதாயம்) கையில், ஆசனத்தில் எவ்வளவு கட்டைப்புல் வைத்துக் கொள்ள வேண்டும்? தாம்பாளத்தில் இரண்டு வரிசை கிழக்கு மேற்காக எத்தனை பில்கள் வைக்க வேண்டும்?

“திவ்யதேச க்ஷேத்ரங்கள் மற்றும் பிற கோவில்களில் மூலவருக்கும் உற்சவருக்கும் (பெருமாள் உபய நாச்சியார் உட்பட) வஸ்த்ர ஸமர்ப்பணம் செய்வதற்கான நியமங்களைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

சமீபத்தில் என் சம்பந்தி ஸ்வாமி ஸ்ரீ ஆசார்யன் திருவடி அடைந்தார். மாஸ்யம், அமாவாஸை தர்ப்பணம் இரண்டும் செய்ய வேண்டுமா? மாஸ்யம் செய்வதால் அமாவாஸை தர்ப்பணம் செய்யத்தேவையில்லை என்று சில வாத்தியார் சொல்கிறார்கள். என் ஜாமதாவின் சந்தேகத்தை தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

எங்கள் வீட்டில் 3 ஹிரண்யகர்ப சாளக்கிராமம் உள்ளது. எனது பர்த்தா நித்யமும் பால் மற்றும் ஜலம் கொண்டு திருவாராதனம் செய்து வருகின்றார். கடந்த சுதர்சனத்தில் 1 அல்லது 4 அல்லது அதற்கு மேல் சாளக்கிராமம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 3 சாளக்கிராமங்களுக்குத் திருவாராதனம் செய்யலாமா தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

ஓய்வுக்குப் பிறகு பகவத் கீதை, பாகவதம், சுந்தரகாண்டம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் தினமும் ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வேன். முந்தைய சுதர்சனத்தில், ஸ்த்ரீகள் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கக் கூடாது என்று விளக்கப்பட்டுள்ளது . நான் 1000 நாமங்களை பகவத் ப்ரீதியினால் சங்கல்பம் மற்றும் பலஸ்ருதி இல்லாமல் பாராயணம் செய்கிறேன். பகவத் ப்ரீதியினால் பெண்கள் பகவத் கீதை, சுந்தரகாண்டம் மற்றும் பாகவதம் ஆகியவற்றைப் படிக்கலாமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.

பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ணும் பொழுது, திருத்துழாயை எல்லாவற்றிலும் சேர்க்க வேண்டுமா அல்லது சாதத்தில் மற்றும் சேர்த்தால் போதுமா? உப்பு பதார்த்தங்களில் சேர்க்கலாமா?

மஹா ப்ரதோஷத்தன்று கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் என்ன? அச்சமயத்தில் ஸ்தோத்ரப் பாடங்களைச் சேவிக்கலாமா?

.ஒரு ப்ரபன்னன் தன் ஶரீரத்தை விட்டுப்புறப்பட்டவுடன் எப்போது ஸ்ரீவைகுண்டத்தை அடைவான்? இப்படி இவன் அடைகிறான் என்பதை ஆழ்வார் ஆசார்யர்கள் எந்த ஸ்ரீ ஸூக்திகளில் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் விளக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுக்கு ஆசார்யன் அனுக்ரஹத்தினால் ப்ரபத்தி ஆகிவிட்டது. ஶரணாகதி செய்தவர்கள் பாகவத அபசாரம் படக்கூடாது என்று நம் பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். அடியேனுக்கு இதில் ஒரு சந்தேகம். பாகவத அபசாரம் என்று எவற்றைக் குறிப்பாக ஶாஸ்த்ரம் கூறுகிறது? பிறகு யார் பாகவதர்கள் என்று நம் ஸம்ப்ரதாயம் கூறுகிறது? ப்ரபத்தி ஆகி உண்மையான ஶ்ரீவைஷ்ணவர்களாய் இருப்பவர்கள் மட்டும் தானா? அல்லது எம்பெருமானிடம் போல் பிற தேவதாந்திரங்களிடமும் பக்தி கொண்டவருமா? கேள்வியில் தோஷம் இருந்தால் க்ஷமிக்கவும்.

தலைமுடி க்ஷௌரம் செய்த பின்னர் ஒவ்வொரு முறையும் பூணூல் மாற்றுவது அவசியமா? அடியேன் தினமும் பெருமாள் திருவாராதனம் செய்கின்றேன், அதனால் இச்சந்தேகம்.

இந்தக் குழுமத்தில் சேர்வது எப்படி?

வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் சாற்றலாமா? (நிறைய மூர்த்தங்கள் உள்ளன). துளசியும் சாற்றுவேன்.

கோவிலில், ஒரே பவித்திரத்தைச் சில நாட்களுக்கு மீண்டும், மீண்டும் பயன்படுத்தலாமா?

அடியேன் க்ருஹத்தில் ஒரு சாளக்கிராமமும் , ஒரு துவாரகா லக்ஷ்மியும் தனித்தனியாக ஏளியிருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் சேர்ந்தே திருமஞ்சனம் செய்யலாமா? அடியேனுடைய பர்த்தாதான் திருவாராதனை செய்கிறார்.

அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதம் தெரியாது, ஆனால் தேஶிகன் ஸ்லோகங்கள், ஸஹஸ்ரநாமம், பாதுகாஸஹஸ்ரம் ஆகியவற்றைத் தினமும் பாராயணம் செய்வேன். அடியேனுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள சம்யுக்தங்களின் பயன்பாடு தெரியாததால் நிறைய தவறுகள் இருக்கும்.அடியேனுக்கு அறுபது வயதுக்கு மேல், ஸம்ஸ்க்ருதம் படிக்க முடியாது. தினப்படி வாழ்க்கையில் பலவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்து போய்விடுகின்றேன். ஆனால் அடியேனுக்கு அனைத்து ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்களையும் சேவிக்க ஆசை. நான் தவறாக உச்சரித்தால் எனக்கு க்ஷமாபணம் உண்டா?

ஒரு வருடத் தீட்டு இருக்கும் போது புண்ணிய நதிகளில் நீராடலாமா? அடியேனின் ஆத்துக்காரர் தான் கர்த்தா. எல்லா மாசியங்களும் செய்கிறார். நாங்கள் இருவரும் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடலாமா? தன்யோஸ்மி

தர்ப்பணம் மற்றும் ஶ்ராத்த தினங்களில் தாம்பூலம் பெற்றுக் கொள்ளலாமா?

மன்வந்தரம் என்று எது சொல்லப்படுகிறது. இவர்களுக்கு என்று தனியாக உலகம் இருக்கிறதா. இப்போது இருக்கிற வைவஸ்தவ மனு எங்கிருந்து ஆட்சி செய்கிறார்?

கயா பித்ரு ஶ்ராத்தம் ஸ்ரேஷ்ட புத்திரன் தான் செய்ய வேண்டுமா? ஏனென்றால் அடியேனுடைய கணவர் இளைய மகன். மேலும் அடியேன் உறவினருக்கு ஒரே மகள், ஆகையால் மருமகன் மாமனாருக்கு கயா ஶ்ராத்தம் செய்யலாமா.

க்ருஹங்களில் பெருமாள் சன்னிதியில் அந்தந்த கிழமைக்கான கோலங்களை போடலாமா?

ஏன் குழந்தைக்கு முதன்முதலில் முடிஇறக்கும்போது அதை பகவானுக்கு ஸமர்பிக்கிறோம்? இதன் தாத்பர்யம் என்ன?

அடியேன், சமீபத்தில் எங்கள் மகளும் மருமகனும் 2 வருடங்கள் மேற்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல நேர்ந்தது, சமுத்திரத்தைக் கடந்ததற்கு சாஸ்திர விதிமீறல் ஏதேனும் உள்ளதா? அதற்கு பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா?

அடியேன் தாய்வழி அத்தை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் நியமிக்கப்பட்ட மடத்தின் அதிகாரியிடத்தில் இருந்து பஞ்சசம்ஸ்காரம் பெற்றுள்ளார், ஆனால் எந்த மந்திரமும் நினைவில் இல்லை, அவர் மீண்டும் வேறு ஆசார்யனை அணுகி ஸ்மாஶ்ரயணம் மற்றும் பரந்யாஸம் செய்துக்கொண்டு தான் மந்திரோபதேசம் பெற வேண்டுமா?

அடியேன் ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் செய்துகொண்டுள்ளேன். எனக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் விருப்பமில்லை. ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் மோதகம் செய்து கொண்டாடி மகிழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பரந்யாஸம் செய்து கொண்டுள்ளனர்.இதை எப்படி அவர்களுக்குச் சொல்லி புரியவைப்பது?

ஒரு கோவிலில் பிரசாதம் ப்ராமணரால் தயாரிக்கப்படுகிறது, ஆனால் அவர் ஸ்ரீவைஷ்ணவர் அல்ல. ஸ்ரீவைஷ்ணவராகிய நாம் அந்த ப்ரசாதத்தை உட்கொள்ளலாமா?

ஒரு ப்ரபந்நன், பஞ்சசம்ஸ்காரம் செய்துக்கொள்ளாத ஒரு ஸ்ரீவைஷ்ணவருடைய அகத்தில் உணவு உட்கொள்ளலாமா?

அடியேன் அடுத்த மாதம் ஆக்லாந்து நாட்டிற்குப் பயணம் செய்ய உள்ளேன். அங்கே 6 மாதங்கள் தங்கபோகின்றேன்.சாளக்கிராம மூர்த்திகளை எவ்வாறு எடுத்துச்செல்ல வேண்டும், மேலும் என்னென்ன ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும் என்று தெளிவு படுத்த ப்ராத்திக்கின்றேன்.

பித்ரு பக்ஷ காலத்தில் தர்ப்பணம் திருவாராதனத்திற்கு முன் செய்ய வேண்டுமா? மற்றும் அந்தச்சமயத்தில் கோவில் அல்லது மடத்திலோ பெருமாளுக்கு வாச கைங்கர்யம்(பாராயணம்) செய்யலாமா?

அடியேனின் தாயார் 2 மாதங்களுக்கு முன்பு திருமோகூர், அழகர் கோயில், பெரியாழ்வார் திருவரசு கோயில்களுக்கு சென்று சேவித்து விட்டு திரும்பும் வழியில் ஒரு கார் விபத்தில் பரமபதித்து விட்டார். அடியேனின் சகோதரன் காரியங்கள் செய்து கொண்டு இருக்கிறார்.பெண் என்ற முறையில் அடியேன் பரமபதித்த அவர்களுக்காக என்னென்ன அனுஷ்டானங்கள் கடைப்பிடிக்க வேண்டும், எந்தெந்த ஸ்தோத்திரங்கள் சேவிக்கலாம்?

அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். நாம் பஞ்சசம்ஸ்காரம் ஶரணாகதி பற்றிய உண்மையான அர்த்தமும் மகத்துவமும் தெரியாமல், ஸ்ரீவைகுண்ட ப்ராப்த்தியைப் பற்றிய நம்பிக்கையும், ஞானமும் இல்லாமல், நமது ஆசார்யரிடத்தில் பஞ்சசம்ஸ்காரம் சரணாகதி செய்வதை ஒரு சடங்காகச் செய்து வந்தாலும், ஸ்ரீய:பதியான எம்பெருமான் நமக்கு மோக்ஷம் கொடுப்பாரா? எனது கேள்வியில் ஏதேனும் தவறு இருந்தால் க்ஷமிக்கவும்.

வரும் கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ த்ரியோதசியில் என் அக்கா திருமதி சரோஜாவிற்கு வருஷாப்தீகம் நடக்க இருக்கிறது. இதுவரை அனைத்து மாசியம், ஊனம் நடந்து வருகிறது. ஆனால் கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி பஞ்சாங்கத்தில் இல்லை. எப்படி வருஷாப்தீகம், ஊனாப்தீகம், சோதகும்பம் போன்றவைகளை நடத்துவது? எந்த நாட்களில் நடத்துவது? ஒன்றும் புரியவில்லை. தயவுசெய்து விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனின் மூத்த மைத்துனர் மாமனாருக்கு மஹாளய திதியில் தர்ப்பணம் செய்கிறார். அதே நாளில் என் மகளின் நக்ஷத்ரம் வருகிறது. இதில் ஏதாவது தவறு இருக்கிறதா? அப்படி செய்யலாமா?

அடியேன் பர்த்தாவினுடைய குடும்பத்தில் தாயாதிகள் (மாமனாரின் 4 சகோதரர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள்) உள்ளனர். மேலும் எங்களில் பெரும்பாலோர் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வசிக்கிறோம். சமீபத்தில் மாமனாரின் மூத்த சகோதரர் மற்றும் மூத்த சகோதரரின் மகன் பரமபதம் அடைந்தனர். நாங்கள் 10 நாட்கள் தாயாதிகள் தீட்டு அனுசரித்தோம். இருப்பினும் நம் தாயாதிகள் திருவடி அடையும் போது சில மரபுகளைக் கடைப்பிடிப்பதில் எனக்கு சில க்லேஷம் இருக்கின்றன. வித்வான்கள் எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க ப்ரார்த்திக்கிறேன். அது எங்களுக்கும் எங்கள் வருங்கால சந்ததியினருக்கும் முறையான அனுஷ்டானத்தை பின்பற்றி வழிநடக்க உதவும். a) எங்கு இருந்தாலும் 10 ஆம் நாள் என் கணவர் குழி தர்ப்பணம் பண்ண வேண்டுமா (என் மாமனார் உயிருடன் இருக்கிறார்)? b) பெருமாள் கோவில்களுக்கு சென்று கைங்கர்யம் செய்யலாமா? c) டோலோத்ஸவத்தில் பெருமாளை ஆத்தில் ஏள பண்ணலாமா? d) புரட்டாசி மாவிளக்கு மற்றும் பிற பெருமாள் மற்றும் ஆசார்யன் திருநக்ஷத்திரம் கொண்டாடலாமா? e) இதர பண்டிகைகள் – வருஷ பிறப்பு, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கணு கொண்டாடலாமா? நீண்ட கேள்விக்கு க்ஷமிக்கணும் .தயவு செய்து விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. உபந்யாஸங்கள் நிறைய கேட்க கேட்க ப்ரபத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அடியேனுடைய க்ருஹத்தில் பெரியவர்கள் இதர தேவதாந்திரர்களை வழிபடுவதுடன், பெருமாள் சந்நிதியில் அவர்களின் படங்களை வைத்தும், அவர்களுக்காக சில பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இருக்கின்ற பக்ஷத்தில் நான் ப்ரபத்தி செய்து கொள்ளலாமா? ப்ரபத்திக்குப் பிறகு அடியேன் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்று தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுக்கு பத்து நாட்கள் பங்காளி தீட்டு. இதன் நடுவே மறுபடியும் மற்றொரு 10 நாள் தீட்டு வந்துவிட்டது. இப்பொழுது தீட்டு எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? குழித் தர்ப்பணம் எப்படி பண்ணவேண்டும்? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்

அடியேனுக்கு ஸமாஶ்ரயணமும் பாரண்யாஸமும் ஆகிவிட்டது. சரஸ்வதி பூஜையை எப்படி கொண்டாடுவது? முன்பு சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்வோம். இப்பொழுது ஹயக்ரீவப் பெருமாளை சேவிக்க வேண்டுமா?

அபராஹ்னம் என்றால் என்ன. அபராஹ்னம் காலத்தில் தான் தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அடியேன் தர்ப்பணாதிகள் செய்ய மதியம் 1 மணிக்கு மேல் ஆகிறது. அது சரியான சமயமா என்று தெரியவில்லை. தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

அனைவரும் ஸ்வீகரித்த பின் எஞ்சியிருக்கும், பெருமாள் தீர்த்தம் மற்றும் திருவாராதனத்திற்காக திருக்காவேரியிலிருந்து கொணர்ந்துவந்த தீர்த்தங்களைத் மீண்டும் உபயோகப்படுத்தலாமா அதவாது தளிகைக்கு பயன்படுத்தலாமா? இல்லையெனில் எஞ்சியிருக்கும் அந்தத் தீர்த்தத்தை என்ன செய்ய வேண்டும்?

நம் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த மணமகன், இச்சம்ப்ரதாயத்தைச் சாராத ஒரு ஸ்த்ரீயை மணக்கும்போது, அவனுக்கு பித்ரு காரியம் செய்யும் தகுதி உண்டா?? மேலும் மணமகள் நமது அனுஷ்டானங்களுக்குத் தகுதி பெறுவதற்கு நாம் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கலாமா?

பொதுவாக ஶ்ரவண வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? திருவேங்கடமுடையானுக்கு, ஒப்பிலியப்பனுக்கு சுமங்கலிகள் எவ்வாறு ஶ்ரவண வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும்?

சரும நோய் பிரச்சனைகள் தீர என்ன தேஶிக ஸ்தோத்ரங்கள் சொல்லலாம்?

ஏகாதசி அன்று நாம் ஏன் துளசியை(திருத்துழாய்) ஸ்வீகரிக்க கூடாது ?

அடியேனுக்கு சம்ஸ்காரங்கள் எதுவும் தெரியாது, தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் ஸமாஶ்ரயணமும், பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா?ஆன பின் அந்தத் தேசத்தில் தொடர்ந்து வாழும் சூழல் வந்தால் அங்கேயே வாழலாமா இல்லை இந்தியாவிற்கு மீண்டும் வர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றதா?

ஆனி மாசம் ஸுதர்சனத்தில் பித்ரு தோஷம், நாக தோஷம், எல்லாவற்றிற்க்கும் பரிகார ஶ்லோகம் இருக்கின்றது என்ற குறிப்பு இருந்தது. அதே போல் அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தின் மீது வெறுப்பும் பொறாமையும் மச்சினருக்கு இருந்தால் அதைப் போக்க ஏதாவது தேசிக ஶ்லோகம் உண்டா ? அவர்களின் பொறாமை குழந்தைகளைப் பாதிக்காது என்று நம்புகிறேன். மேலும், தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் ஒருவராது நாக தோஷத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள். அந்த பக்ஷத்தில் அது நம் குழந்தைகளைப் பாதிக்காது இருக்க கருடபஞ்சாஶத் அல்லது கருடதண்டகம் நாம் சொல்லலாமா அல்லது குழந்தைகள் தான் அவற்றைச் சொல்ல வேண்டுமா?

வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் பண்ணிக் கொள்ளலாமா அல்லது தடையேதும் இருக்கிறதா? அவர்கள் பரந்யாஸம் பண்ணின பிறகு அங்கேயே வாழலாமா?

ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எப்படி முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன் ?

ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி, ஸர்வ ஏகாதசி, ஸ்மார்த்த ஏகாதசி இவை மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் எனென்ன ?

ஆஹார நியமனம் படி, ஸாத்வீக குணமும் பகவத் த்யானமும் வளர, ஒருவர் எந்தெந்த காய்களும் பழங்களும் உட்கொள்ள வேண்டும் என்ற பட்டியலைத் தர வேண்டுகிறேன். அதை ஒரு காணொளியாக போட்டால் மிகவும் சௌகர்யமாக இருக்கும் என்று ப்ரார்த்திக்கிறேன். அடியேன்

பெரிய நம்பி அவர்கள் மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம க்ரியைகள் எதன் அடிப்படையில் ஒற்றுக்கொள்ளப்பட்டது? இது எப்படி அவரின் வர்ணாஶ்ரம தர்மத்திற்கு விரோதமாகாது? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஹரிவாஸரம் என்றால் என்ன?

துவாதசி அன்று ஆசார்யன் பாதுகைக்கு திருமஞ்சனம் முதலில் செய்ய வேண்டுமா?. அல்லது பெருமாள் திருவாராதனம் முதலில் செய்ய வேண்டுமா?

கல்யாணம் அன்று மற்றும் பெருமாள் ஆத்துக்கு ஏளும்போதும் எடுக்கும் மஞ்ச நீரில் மூணாவது சேர்க்கலாமா?

ஆஶௌசத்தினால் ஒரு வருடத்திற்குப் பண்டிகை இல்லையென்றால், எந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டும், எதைக் கொண்டாடக்கூடாது? பெருமாளுக்கானப் பண்டிகைகளை நாம் கொண்டாட வேண்டும் என்றும் , நமக்காக கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் எங்கள் வாத்தியார் கூறினார். உதாரணமாக, திருவாடிப்பூரம் அன்று அது தாயார் திருநக்ஷத்ரம் என்பதால் பெருமாள் தாயாருக்கு ப்ரசாதம் அம்சை பண்ணலாமா? அல்லது எதையும் கொண்டாடக்கூடாது என்பதால் எதையும் செய்யக்கூடாதா? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீ பாத தீர்த்தத்தின் முக்கியத்வம் யாது?எப்படி ஸ்வீகரித்துக்கொள்ள வேண்டும்? யார் ஸ்வீகரிக்கக்கூடாது? எப்போதெல்லாம் ஸ்வீகரிக்கலாம் விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

துவாதசி நாட்களில் காலையில் பொதுவாக எத்தனை மணிக்குள் பாரணை செய்யத் தொடங்க வேண்டும்? துவாதசி நிறைய நாழிகள் இருந்தால் எத்தனை மணிக்குள் செய்தல் வேண்டும்?

தற்சமயம் வித்வான்கள் மூலம் சந்த்யாவந்தனம், ஸம்ஹிதா தானம் எனப் பல இணைய வழி வகுப்புகளின் வாயிலாக கற்றுக்கொள்கிறேன்.ஒருவன் இக்கர்ம்மாக்களைச் செய்வதனால் ப்ராமணன் ஆகிறான், மேலும் இதில் தன்னை மேம்படுத்தவும் அதாவது தேஜஸ், அரோக்கியம் வேண்டி ப்ரார்த்திக்கவும் ஸ்லோகம் வருகிறது. அடியேனின் கேள்வி யாதெனில், ப்ராமணர்கள் என்பவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு எந்த வித்தில் தேவை. சமூகம் அவர்கள் மூலம் பெறும் பயன் யாது? ஸ்வாமி. அடியேன் இதை ப்ராமணனான ஒருவர் அறிந்தால் அருவம் சரி இச்சமூகமும் சரி இத்தனை நல்லது உள்ளதா என்று அறிய முடியும் மேலும் ப்ராமணர்களும் தங்கள் கர்மாக்களை விடாதுச் ஶ்ரத்தையாக செய்வார்கள். மேலும், ஒரு புரிதல் இருந்தால் இவர்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் நாங்கள் ஏன் செய்யக்கூடாது என பல விதண்டாவாதக் கேள்விகள் தவிர்க்கப்படலாமோ என்று ஒரு எண்ணம்.

நீர் என்பது ஓர் அசித்தாக இருக்கும் பக்ஷத்தில், ஒருவர் தலைக்கு தீர்தாமாடுவதினால் எப்படி சுத்தி அடைவார்கள்? அதனால் தீட்டு எப்படி நீங்கும் என்பதை தெளியப்படுத்த விண்ணப்பிக்கின்றேன். அதே போல் மஞ்சள் குங்குமம் ஏன் மங்களகரமானதாக கருதப்படுகிறது? ஏதனால் அதை மங்களப் பொருட்கள் என்று கூறுகின்றோம்? தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

ப்ரதோஷகாலத்தின் சமயம் நாம் ஏன் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகிறார்கள்?

நித்யமும் நமக்கு யார் ஸமாஶ்ரயணம் செய்வித்தார்களோ அந்த ஆசார்யனின் தனியன் மட்டும் சேவித்தால் போதுமானதா? அல்லது அவரின் ஆசார்யன் தனியனும் சேர்த்து சேவிக்க வேண்டுமா?

பாகவதர்கள்/சிஷ்யர்கள் தங்கள் ஆசார்யன் அல்லது அவரின் தேவிகளின் திருவத்யயன ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? தெளிவிக்க வேண்டுகிறேன். அடியேன்.

ஸுதர்ஶன யந்த்ர ப்ரதிஷ்டா விதிமுறைகளை விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்?

ப்ராத: சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் கடந்துவிட்டால் ஸ்நானம் பண்ணாமல் செய்யலாமா அல்லது ஸ்நானம் செய்துவிட்டு ப்ராயச்சித்தத்துடன் செய்ய வேண்டுமா?

ப்ரபத்திக்குப் பின் , ஸ்மார்த்தர்கள் செய்யும் பஜனைகளைக் கேட்கலாமா? ஸ்ரீமன் நாராயணன் பற்றிய பாடல்களுக்கு மட்டும் பங்கேற்க முடியுமா. பெருமாள் அல்லாது அந்நிய தேவதாந்திரங்களின் கர்நாடக சங்கீத பாடல்களை நம் கலைஞர்கள் கச்சேரிக்காகப் பாட முடியுமா? விளக்கம் கோரி ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்மார்த்த உபந்யாஸ்கர்களுடைய ராமாயணம் பாகவதம் உபந்யாஸங்கள் போன்றவற்றைக் கேட்கலாமா? அவர்களுக்கோ அல்லது அவர்களுடைய அமைப்பிற்கோ நன்கொடை வழங்கலாமா? அது கைங்கர்யத்தில் சேர்த்தி ஆகுமா?.

அமாவாஸை தினங்களில், தர்ப்பணம் பண்ணுபவர்கள் அகத்தில், பெருமாள் திருவாதனத்திற்கு பயத்தம்பருப்பு, சுண்டைக்காய் குழம்பு பண்ணுவது உண்டு. ஆனால் சில அமாவாஸை தினங்களில் (ஐப்பசி, தை) துவரம் பருப்பு மற்றும் மோர்க்குழம்பு பண்ணுவது உண்டு. இந்த இரண்டு மாதங்களில் வரும் அமாவாஸை தவிர வேறு மாதங்கள் ஏதேனும் உண்டா என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.

108 திவ்ய தேசங்களின் பட்டியல் எப்பொழுது தொகுக்கப்பட்டது? ப்ருந்தாவனம், வெண்ணாற்றங்கரை போன்ற க்ஷேத்திரங்களுக்குத் தனிப்பட்ட பாசுரங்கள் இருந்தும், அவை திவ்ய தேசங்களாக ஏன் கருதப்படவில்லை?

ஆத்து பெருமாளுக்குத் திருவாராதன காலத்தில் திருமஞ்சனம் செய்யும் பொழுது ஸுக்தம் மட்டும் தான் சேவிக்க வேண்டுமா அல்லது திருமஞ்சன கட்டியம் அதன் பின் ஶீக்ஷாவல்லீ, ஆநந்தவல்லீ, ப்ருகுவல்லீ போன்றவற்றையும் சேவிக்கலாமா ? அமாவாஸை , ஏகாதசி , மற்றும் விசேஷ நாட்களில் விஸ்தார திருவாராதனம் செய்து மற்ற நாட்களில் மானசீக திருவாராதனம் செய்யலாமா? நித்யம் மடி வேஷ்டி, மற்றும் சுத்தம் செய்வதும் என்னுடைய சோம்பேறித்தனத்தினால் பின்பற்ற முடியாமல் இருக்கின்றது. எனக்கு கஷ்டமாக இருப்பதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன். நித்யமமும் சாளக்கிராம மற்றும் விக்ரஹங்களுக்கு எல்லா உபசாரங்களை மேற்கொண்டு திருவாராதனம் செய்கின்றேன். அடியேன் மிகவும் லௌகீகமானவன்.

திருமணமான புருஷர்கள் மற்றும் ஸ்த்ரீகளை ஏன் கச்சம்/ மடிசார் அணிந்துக் கொள்ளச் சொல்கின்றார்கள்? அதாவது, அவர்கள் மட்டுமே அதை அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உள்ளதா? விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்?

பந்துக்களில் ஒருவர் ஆசார்யன் திருவடியை அடைந்தால் எத்தனை நாட்கள் அஶௌசம் என்பதை அறிய கணகியல் புத்தகம் அல்லது விளக்கப்படம் ஏதேனும் உள்ளதா? ஒருவருக்கு எத்தனை நாட்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது ? விளக்க ப்ரார்த்திக்கிறேன்

“1. ஸூன்ய திதி என்றால் என்ன? அன்றைய தினத்தின் திதியாக எதை எடுத்துக் கொள்வது. அன்று ஏகாதசியாக இருந்தால் என்னச் செய்வது. 2. அதே போல், அதிதி என்றால் என்ன. அன்றைய தினத்தின் திதியாக எதை எடுத்துக் கொள்ள வேண்டும்.”

அமாவாஸை மற்றும் ப்ரதமை நாட்களில் திவ்யப்ரபந்த பாசுரங்களைச் சேவிக்கலாமா?

ஜீவ இம்சை கூடாது என்கிற பக்ஷத்தில் பட்டு புடவை அணிந்து கொள்வது சரியா? பட்டு வஸ்த்ரம் மடி என்றும் சொல்கிறார்கள். இந்த தலைமுறையினர் கேட்கும் இக்கேள்விக்கு அடியேனால் பதில் கூற முடியவில்லை. விளக்கம் தர ப்ரார்த்திக்கிறேன்.

நமக்கு ஒரு நல்லது நடக்கும் பொழுது பகவானுடைய க்ருபை மற்றும் நம் பெரியோர்களின் ஆசீர்வாதம் என்று சொல்கிறோம். ஆனால் அதே நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது இது நாம் செய்த கர்மா என்று சொல்கிறோம் இது சரியா . இதை எப்படி புரிந்து கொள்வது . அடுத்த தலைமுறையினருக்கு எப்படி புரிய வைப்பது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஶ்ரார்த்த திதி ஏகாதசி அன்று வரும் பக்ஷத்தில் a. ப்ராமணர்களுக்கு அன்னம் சாதிப்பது பாவத்தில் சேர்த்தி ஆகுமா? b. கர்த்தா, கர்த்தாவினுடைய அம்மா மற்றும் ப்ராதாக்கள் அன்னம் ஸ்வீகரிக்கலாமா? c. கைம்பெண்ணாக இருக்கும் ஸ்த்ரீ அம்மா அப்பாவினுடைய ஶ்ரார்த்த உணவை ஸ்வீகரிக்கலாமா?

அடியேனுக்கு ஶ்ராத்த விஷயமாக ஒரு சந்தேகம், தெளிவுப்படுத்த ப்ரார்த்திக்கிறேன். 4-5 சகோதரர்கள் இருந்து, மூத்தவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அல்லது பிற காரணங்களால் ஶ்ரார்த்தம் செய்ய முடியவில்லையென்றால், மற்ற சகோதரர்களில் யாரேனும் ஒருவர் அதைச் செய்ய முடியுமா?

ஆடி மற்றும் தை அமாவாஸை நாட்களில் மேலும் ஆடி, தை, சித்திரை மற்றும் துலா மாச பிறப்பு நாட்களில் என்ன தளிகை செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்த பிரார்த்திக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவரல்லாத, சரணாகதி செய்து கொண்ட பாகவதர்கள் கொடுக்கும் ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? நிராகரித்தால் பாகவத அபசாரம் ஏற்படுமா? தன்யாஸ்மி ஸ்வாமி. ஏதேனும் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்க ப்ரார்த்திக்கிறேன். அடியேன் தாஸன் ஸ்வாமி.

கடந்த மாத சுதர்சனம் வெளியீட்டில் அபசாரங்களுக்கான ப்ராயச்சித்தம் பற்றி ஸ்வாமின் குறிப்பிட்டிருந்தார். நேரம், இடக்கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுநோய் அல்லது பிற காரணங்களால் சில காரியங்களைச் செய்ய இயலாமையால் ஏற்படும் அபசாரங்களுக்கு எப்படி பர்யாச்சித்தம் செய்வது? தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவனாக இருக்க ஆசைப்படுகிறேன். பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள் என்ன ஸ்வாமி? அடியேன்.

தீபாவளி பண்டிகையை சாஸ்த்ரோக்தமாக எப்படி கொண்டாட வேண்டும். மேலும், மத்தாப்பு, பட்டாசு என்பது எல்லாம் காலமாற்றத்தினால் சேர்க்கப்பட்டதாக இருக்கும், என்ற எண்ணம் அடியேனுக்கு வெகு காலமாக இருக்கின்றது. நம் பெரியோர்கள் எப்படி கொண்டாடினார்கள். அடியேன் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் தாஸன். என்னுடைய கேள்வி அர்த்தமற்றதாக இருக்கலாம். க்ஷமிக்கணும். நாம் விசிஷ்டாத்வைதத்தின் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம், உஜ்ஜீவனத்திற்காக நாம் ப்ரபத்தி மார்கத்தைப் பின்பற்றி, விடுபட்ட ஆத்மாக்கள் நித்யவிபூதியில் எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யும் பிராப்தத்தையும் பெரும் இந்த மேன்மையான சம்ப்ரதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பதையும் நாங்கள் பாக்யமாக கருதுகிறோம். ஆனால் பெருமாள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன (தானே தனித் தோன்றல்) மற்றும் இந்த அண்ட சராசரத்தை எதற்காக உருவாக்க வேண்டும் ? அவர் எந்த கர்மாவிற்கும் கட்டுப்படாதபோது இந்த சம்சாரத்தில் இருந்து நம்மை உயர்த்த எம்பெருமான் ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கின்றார்? அவர் ஏன் இருக்கிறார் மற்றும் இந்த பிரபஞ்சத்தை எதற்காக உருவாக்கினார்? தன்யாஸ்மி.

மதுரை மீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணத்திற்காக அழகர் சீர் கொடுக்க வருகிறார் என்று பார்க்கின்றோம். அப்படியிருக்க ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏன் அம்பாளைச் சேவிக்க கூடாது? அதே போல், நாம் ஏன் வரலக்ஷ்மி நோன்பும் கொண்டாடுவதில்லை.

தீபாவளியினைப் பற்றி ஸ்வாமி தேசிகன் எங்காவது குறிப்பிட்டுள்ளாரா? தெளியப்படுத்த ப்ராத்திக்கின்றேன்.

எப்படிச் சாப்பிட வேண்டும்? ஸ்ரீ தேசிகனின் உபதேசம்.

நவராத்ரியின் தாத்பர்யம் என்ன அடியேன். நம் சம்ப்ரதாய திருக்கோயில்களில் அம்பு போடுதல் என்ற உத்ஸவம் நடக்கின்றது இவ்வுத்ஸவம் இராவண வதத்தைக்குறிக்கின்றதா? மேலும், நவராத்ரி சமயம் குறிப்பாக ஸ்த்ரீகள் பாராயணம் செய்ய ஏதேனும் விசேஷமான ஸ்தோத்ரமோ/ ப்ரபந்தமோ இருக்கின்றதா அடியேன்.

ஏகாதசி அன்று ஸ்த்ரீகள் பால், தயிர் மற்றும் வெண்ணெய் உட்கொள்ளலாமா? தயைக்கூர்ந்து தெளிவு படுத்தவும். அடியேன்.

பரந்யாஸம் செய்துகொண்ட ஒருவர், ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலிலோ அல்லது திருவஹீந்திரபுரம் சேஷ கிணற்றிலோ புற்றுக்குப் பால் தெளிக்கலாமா?

ப்ரபத்தி செய்து கொண்டப்பிறகு பெயர், கோத்ரம் மற்றும் நட்சத்திரம் சொல்லி கோவிலில் அர்ச்சனை செய்யக்கூடாது என்கிறார்கள், தெளிவு படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

பெண்கள் தனது பெற்றோர்களின் ஶ்ராத்த தினத்தன்று காலையில் கோயிலுக்குச் செல்லலாமா?

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் காஞ்சியிலிருந்து சேலம் வந்தார்கள். எங்கள் ப்ரபிதாமஹ கோடிகன்னிகாதானம் தாதாச்சார்யார் அவர்கள். என்னுடைய பிதா மற்றும் பிதாமஹ இவர்களுக்கு குலதெய்வம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படாததால் எங்கள் குலதெய்வம் யார் என்று தயவுசெய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

பரமபதத்தில் யாருக்கும் பசி, தாகம், உறக்கம் கிடையாது என்கின்ற பக்ஷத்தில் பகவானுக்கு ஸமர்ப்பிக்கும் ப்ரசாதத்தின் நிலை என்ன?

துவாதசிக்கு என்னென்ன காய்கறிகள் சேர்க்கலாம்?

அடியேன் GSPK யில் கற்றுக்கொண்ட ஸ்தோத்ர பாடங்களை மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் திருவை சொல்லி கற்றுக்கொள்ளலாமா? ஸ்தோத்ர பாடங்களை கற்றுத் கொள்ள கால நியமங்கள் உண்டா ஸ்வாமி?

புரட்டாசி மாதம், திருமலையில் ப்ரம்மோற்சவம் நடக்கும் சமயம் (த்வஜாவரோஹனம் வரை) மாவிளக்கு ஏற்றக்கூடாது என்கிறார்களே? விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

அடியேன் சென்ற சுதர்சனத்தில்,Q12Jul21004 என்ற கேள்வியின் பதிலாக ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது என்று இருக்கின்றது, இதற்குப் பூர்வாசார்ய ப்ரமாணம் அல்லது சாஸ்த்ர ப்ரமாணம் இருக்கின்றதா அடியேன்.

அடியேன் ப்ரமாண அல்லாத சமூகத்தை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவன், எங்கள் குல தெய்வம் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள். எங்கள் தாத்தா ஸ்ரீ பெரும்புதூரில் முத்ராதாரணம் செய்துகொள்வார். மேலும் அவர் எங்கள் க்ராமத்தில் விடாது நகர் சங்கீர்தநம் செய்தும் , ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் படியும் வாழ்ந்தார். ஆனால் அவருக்குப்பின் அது நின்று விட்டது. எங்கள் அப்பா நாங்கள் எல்லோரும் திருவிழா காலங்களில் மட்டும் கோவிலுக்குச் செல்வோம். சம்ப்ரதாயமும் அறியாது போனோம். அடியேனுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயப்படி தாத்தா போல் இருக்க அவா. ஆனால், எங்கள் ஆசார்யன் யார் என்று தெரியாது. எப்படி முத்ராதாரணம் பெறுவது, வேறு ஆசாரியரிடம் சென்று, எப்படி எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று நல் வழி காட்டவும். மேலும் ப்ராமணர்கள் போல் அடியேனும் சந்தியா வந்தன அனுஷ்டாநம் செய்யலாமா? அடியேனுக்குத் தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

க்ரந்த சதுஷ்டய காலக்ஷேபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, ஸ்த்ரீகளும் கேட்கும் அதிகாரமுள்ள காலக்ஷேபம் எவையவை என்று விளக்க ப்ராத்திக்கிறேன். அடியேன்.

“இந்திரன், அகல்யா போன்றவர்களுக்கு இன்னும் மன்னிக்க முடியாத நிறைய குற்றங்கள் செய்தும் பெருமாள் அவரை தேவேந்திர பதவியில் வைத்து அனுகூலம் செய்வது ஏன்?

ஸ்த்ரீகள் துளசியைப் பறிக்கலாமா? எங்கள் கோவிலில் நம்மாழ்வார் மோக்ஷ வைபவத்திற்காக ஆண்டாள் கோஷ்டியினர்தான் துளசியைப் பறிப்பார்கள், இந்த முறை சரியா? அடியேன்.

அடியேன் பௌர்ணமி அன்று தர்ப்பணம் செய்யலாமா? பித்ரு பக்ஷமன்று தர்ப்பணம் முதலில் செய்ய வேண்டுமா? அல்லது திருவாராதனை முதலில் செய்ய வேண்டுமா?

ஏகாதசிக்கும் அரிசிக்கும் உள்ள தொடர்பு யாது? ஏன் முழு அரிசியை கட்டாயம் தவிர்த்து வேண்டுமானால் பின்ன அரிசி எடுத்துக்கொள்ளலாம் என்றுள்ளது? அடியேன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

“அடியேனுடைய கேள்விக்கு முந்தைய இதழில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது(009 சுமங்கலியாக பரம்பதித்த ஜீவனின் க்ரமா தர்பணம் தொடர்பாக) அடுயேனுடைய க்ருதக்ஞையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் அடியேனுடைய அல்ப ஞானத்திற்குத் தெளிவுபெறவில்லை. அடியேனுடைய ஐயம், எல்லா கர்மாக்களை செய்யும்போது பகவத் ப்ரீதி என்றுதான் செய்கிறோம். எல்லாம் அவனுக்கே சென்றடைகிறது. இதில் ஐயமில்லை. இருந்தாலும் தர்ப்பணம் செய்யும்போது மாதா, மாதாமஹன் மாத்ரு பிதாமஹன் ப்ரபிதாமஹன் என்று சொல்லும் போது அவர்களுடைய பெயரைச் சொல்லி அர்க்யம் விடுகிறோம். ஆனால் சுமங்கலியாக பரம்பதித்த அந்த ஜீவனின் பெயரைச் சொல்லி தர்ப்பணம் செய்ய மகனுக்கு யோக்யதை வரும் வரையில் அந்த ஜீவனின் கதிஎன்ன அடியேனைத் தெளிபெறச்செய்ய ப்ரார்திக்கிறேன்.

அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போது ஜபிக்க வேண்டும்?

சகுனம் பார்த்தல் என்றால் என்ன?

ஒரு தேங்காயின் ஒரு மூடியை மட்டும் உபயோகித்து இன்றைய தளிகை செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றோம் என்றால், அதன் மற்றொரு மூடியை மறுநாள் தளிகைக்கு உபயோகப்படுத்தலாமா? அப்படி உயோகித்த அந்தத் தளிகையை பெருமாளுக்கு நிவேதனம் செய்யலாமா? தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யதேவதாந்த்ரங்களை வழிபடக்கூடாது என்று இருக்கின்றது, அப்படியிருக்க ஹனுமனை மட்டும் ஏன் வழிபடுகின்றோம்? ஹனுமான் ஒரு ப்ரபந்நரா? அல்லது பக்தி யோகியா? அல்லது முமுக்ஷூவா? என்ன என்று புரிந்துக்கொள்வது? அடியேன்.

“ஸத்₂யம் ப்₃ரவி:மி மனுஜ:ஹ ஸ்வயமு:ர்த்₄வ ப₃ஹுஹு யோ: ம:ம் முகு:ந்த₃ நரஸிம்ஹ ஜன:ர்த₃னே:தி₂ | ஜி:வன் ஜபத்₂ய்னு தி₃னம் மரனே: ருனி:வ ப:ஶ:ந க:ஶ்த ஸத்₃ரு:ஸ:ய த₃த₃:மி முக்தி₂ம்” என்ற இந்த நரசிம்ம சரம ஸ்லோகம் எங்கு இருக்கின்றது? தெரிவிக்க ப்ரார்த்திக்கின்றேன். அடியேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி தமது விரோதி பரிஹாரம் என்ற க்ரந்தத்தில் “பிராட்டிக்கு “ஸர்வேஷ்வரத்வம்” மற்றும் “ப்ரம்மைக்க லக்ஷணமான கரணத்வம்” இருக்கு என்ற நினைப்பே மோக்ஷத்திற்கு தடையாக மாறும் என்கின்றார். [Here is Vangipurathu Nambi’s Virodhi Pariharangal in Telugu script: https://archive.org/details/in.ernet.dli.2015.396199 And here is the specific page: https://imgur.com/a/c0NUyY1″] அப்படியானால் விஷ்ணுவும் பிராட்டியும் இருவேறு ஆத்மாக்களா? அல்லது ஒரு ஆத்மாவின் இரு உருவங்களா/ அவதாரங்களா? அதே போல் ஸ்ரீ, பூமி மற்றும் நீளா தேவிகளும் மூன்று வேறு ஆத்மாக்களா? அல்லது ஒரு ஆத்மாவின் மூன்று அவதாரங்களா? விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அடியேன் ராமானுஜ தாசன்.

“ஸ்ரீ மந்த்ரத்தின்” மந்த்ரோபதேசம் பஞ்ச சம்ஸ்காரம் சமயம் ஸ்ரீ அஹோபில மடத்தில் மட்டும் தான் உபதேசிப்பார்களா? அல்லது மற்ற வடகலை சம்ப்ரதாய மடங்களிலும் உபதேசிப்பரா? அடியேன்.

க்ஷத்ரபந்து, முசுகுந்தன், விபீஷணன், கத்வங்க மஹாராஜா போன்றவர்களைத்தவிர, வேறு யாரேனும் ஸ்வநிஷ்டை செய்துள்ளார்களா? அவர்களைப்பற்றிய நம் இதிகாச புராணங்களில் ஏதேனும் குறிப்புள்ளதா? அடியேன்.

வேதங்கள் அபௌருஷ்யமானது என்றால் ரிக் வேதம் ஏன் இப்படிச் சொல்கின்றது “அஸ்மா இது³ ஸ்தோமம்ʼ ஸம்ʼ ஹிநோமி ரத²ம்ʼ ந தஷ்தேவ” – “ஒரு தச்சன் தேர் செய்வது போல் இதனை அவனுக்காக நான் உருவாக்கியிருக்கேன்”. இதனை எப்படிப் புரிந்துக்கொள்ள வேண்டும் அடியேன்.

அமேரிக்கா என்பது ஜம்புத்வீபமா அல்லது க்ரௌஞ்சத்வீபமா? சங்கல்பம் செய்யும் போது என்ன என்று சொல்லி சங்கல்பிக்க வேண்டும் தெரிவிக்க ப்ராத்திக்கின்றேன். அடியேன்.

அடியேனுக்கு ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் இரண்டும் ஆயிற்று. புருஷர்கள் போன்றே ஸ்த்ரீகளும் 12 திருமண் தரிக்க வேண்டுமா? அடியேன்.

அடியேன் நமஸ்காரம். எங்கள் ஆத்துப்பக்கத்திலே ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அங்கே அடியேன் எப்போதும் போவதுண்டு. ஆத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை பண்ணுவோம். பரந்யாஸம் பண்ணிக்கொண்ட பின் பிள்ளையார் கோயில் செல்லக்கூடாது என்கிறார்களே. அதை பற்றி விளக்கம் வேண்டும்.

நமது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் தாளிப்பதற்குச் சமமான சொல் என்ன?

ஒரு கைம்பெண் தன் மகன் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால், தானே தனியாக “கோ” தானம் செய்யலாமா? சாஸ்த்ரம் கூறுவது என்ன தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

அடியேன் வடகலை சம்ப்ரதாயத்தைச் சேர்த்தவன். அடியேன் சிறு வயதில் இருந்தே நெற்றியில் ஸ்ரீசூர்ணம் சிவப்பு வண்ணத்தில் இட்டுக்கொள்கிறேன். அடியேனின் தகப்பனாரை பார்த்து அந்தப் பழக்கம். அடியேனின் தகப்பனார் மஞ்சள் இட்டுக்கொள்கிறார் சிலகாலமாக. அடியேனின் தகப்பனார் சொன்ன காரணம், வைதீகாள் மஞ்சள் நிறத்தில் இட்டுக்கொள்வார்கள் என்று. பெரியவர்கள் சிவப்பும் மஞ்சளும் இட்டுக்கொள்ளும் வித்யாசத்தை அடியேனுக்கு போதிக்க ப்ரார்த்திக்கிறேன். அடியேன் வேதாந்த தேசிகனின் படத்தில் சிவப்பு நிறத்தில் ஸ்ரீசூர்ணம் இட்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். பன்னிரு திருமண் இட்டுக்கொண்டாலும் சிவப்பு உகந்ததா?

அடியேன் ஆஹாரநியமத்தை அனுஷ்டிக்க முயன்று வருகிறேன். வெளியிடங்களில் உணவு உட்கொள்வதை தவிர்த்துவிட்டேன் (Work from home காரணமாக இது முடிந்தது). அடியேனுக்கு 36 அகவை ஆகிறது. ஆசார்யன் அனுக்ரஹத்தில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புத்தி வருவதுபோல் இருக்கிறது . அடியேனின் சிற்றறிவுக்கு ஆஹாரநியமத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. முயற்சித்து வருகிறேன். அடியேனுக்குப் பெரியவர்கள் எந்தெந்த காய்கறிகளை உண்ணலாம் என்று பரிந்துரைத்தால் மிகுந்த உதவியாய் இருக்கும். அடியேனுக்குத்தெரிந்த காய்கறிகளின் பட்டியல்: -> கீரை வகைகள் (முருங்கை மற்றும் சிறு கீரை தவிர) -> வெண்டைக்காய் -> கொத்தவரங்காய் -> செளசெள -> சேனைக்கிழங்கு -> சேப்பங்கிழங்கு -> கருணைக்கிழங்கு -> வாழைக்காய் -> பூசணிக்காய் -> பரங்கிக்காய் -> வெள்ளரிக்காய் -> தக்காளி ஆஹாரநியமத்தைப் பற்றி ஏதேனும் உபன்யாசம் இருந்தால் அடியேனுக்குப் பரிந்துரைக்கும் படி பணிகிறேன். வாசக தோஷம் இருந்தால் மன்னிக்கவும். அடியேனின் அறியாமையைப் பொறுத்தருள ப்ரார்த்திக்கிறேன்.

சென்ற கேள்வியின் தொடர்ச்சியாக, புழுங்கல் அரிசியால் செய்த உணவைப் பெருமாளுக்கு அம்சை செய்ய முடியாது. ஆதலால், புழுங்கல் அரிசியால் செய்த உணவைத் தவிர்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இட்லி, போன்ற உணவில் புழுங்கலரிசி உபயோகிப்பது சரியா?

நான் ஸ்மார்த்த குடும்பத்தில் வாக்கப்படும் படியாயிற்று. இருப்பினும், பெருமாளின் அனுக்ரஹத்தால் நானும், என் பெண்களும் ப்ரந்யாஸம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அடியேன் ஶ்ராத்த சமயம் மற்றும் அமாவாஸை நேரம் எந்த சம்ப்ரதாயத்தை பின்பற்ற வேண்டும் (எவ்வழியின் ஸ்வரூபத்தில் இருக்க வேண்டும்? அதாவது மடிசார்கட்டு தொடங்கி மற்றவை). [குறிப்பு : இதே போல் முன்பும் கேள்வி வந்தது]

ப்ராயச்சித்த ப்ரபத்தி பற்றி விளக்க ப்ரார்த்திக்கின்றேன். அதை அனுஷ்டிக்கும் முறைப்பற்றியும் சாதிக்க வேண்டும், அடியேன்.

சாளக்கிராம ஆராதனைக்கு பால்,மற்றும் ஜலம் சேர்த்து ஆராதனை செய்யலாமா? அல்லது வெறும் சுத்த ஜலம் மட்டும் போதுமா? எது சரியான முறை என்று கூறவும். அடியேன்.

பெருமாளுக்கு (சாளக்கிராம) ஆராதனத்தின் போது அமுது செய்யும் சமயம், எல்லா தளிகைகளையும் பெருமாள் சன்னிதிக்கு கொண்டு வைத்து செய்யவேண்டுமா அல்லது தளிகை அறையில் பெருமாளை ஏளச்செய்து அமுது செய்யலாமா? (பெருமாள் சன்னிதியும் தளிகை அறையும் தனியாக உள்ளன). தன்யோஸ்மி

அமாவாஸை தர்ப்பணத்தில் தாயார் ஜீவிதராக இருந்தால், மாத்ருவர்கம் பாட்டி கொள்ளுபாட்டி இருவருக்கும் தர்ப்பணம் செய்தால் போதும் என்கின்றனர் சிலர். இது சரியா? தயைகூர்ந்து விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஆத்துப்புருஷர்கள், பெருமாள் திருவாராதனை செய்ய ஈடுபாடில்லாத பக்ஷத்தில், ஸ்த்ரீகள் பெருமாள் படங்கள், விக்ரஹங்கள் , சாளக்கிராமத்திற்கு என்ன மாதிரியான பூஜைகள் செய்யலாம்? மேலும் ஸ்த்ரீகள் பெருமாளுக்கு அபிஷேகம், மங்களார்த்தி, அர்ச்சனை போன்றவை செய்யலாமா? ஸ்ரீவைஷ்ணவம் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இப்பொழுது தான் அடியேனுக்கு ஆவல் ஏற்பட்டிருக்கின்றது.

ஏகாதசி வ்ரதம் எப்படி இருக்க வேண்டும். மேலும், துவாதசி பாரணை எப்படி உட்கொள்ள வேண்டும் (துவாதசி அன்று ஏகாதசி வ்ரதத்தை எப்படிப் பூர்த்தி செய்வது) என்பதை தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

(இந்தக் கேள்வி பரக்கால மடத்தைச் சேர்ந்த என்னுடைய ஒரு உறவினர் கேட்டது.) நம் அகங்களில் மாலையில் பெருமாள் விளக்கு ஏற்றும் பொழுது, கொல்லைப்புறக் கதவை மூடி, முன் வாசற்கதவைத் திறந்து வைக்கின்றோம். காலையில் எந்தக் கதவை முதலில் திறக்க வேண்டும்? திருவாராதனம் செய்யும் பொழுது முன்வாசல் கதவை திறந்து வைக்க வேண்டுமா? ஸ்நானம் பண்ணாமல் ப்ராத: சந்தியாவந்தனம் பண்ணலாமா? இச்சந்தேகங்களை நிவ்ருத்திக்க பார்த்திக்கின்றேன்.

உற்றார் உறவினர்களில் யாரேனும் பெரியோர்கள் பரமபதம் அடைந்துவிட்டால், அவர்களின் ஸ்தூல சரீரத்தைக் கடைசியாக தரிசிக்க நேரும் பொழுது அவர்களுடைய நற்கதிக்கு நாம் ஏதேனும் ப்ரபந்த பாசுரங்கள் அல்லது ராமநாம கீர்த்தனைகள் சேவிக்கலாமா ? எப்பொழுது எந்த நேரத்தில் சேவிக்க வேண்டும்? விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

தினமும் மாலையில் வாசலில் விளக்குகேற்றி வைக்கலாமா அல்லது கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் தான் ஏற்றி வைக்கவேண்டுமா?

ப்ரம்மமுகூர்த்ததில் பெருமாள் சன்னதி மற்றும் துளசிமாடம் இவ்விரண்டு இடத்திலும் விளக்கேற்றி வைக்கலாமா?

அடியேன் ஆத்துக்காரர் மூன்று மாதம் முன்பு ஆசாரியன் திருவடி சேர்ந்தார். அடியேனின் புத்ரர்கள் அமாவாஸை தர்ப்பணம் இப்போதே செய்ய வேண்டுமா அல்லது ஆப்தீகம் முடிந்ததும் செய்யலாமா?. அடியேனுக்கு தேவரீர் மூலம் விளக்கம் வேண்டும். க்ஷமிக்கவும்.

ப்ரபத்தி செய்துகொண்டால், பரமபதம் அடைந்த பின் மோக்ஷம் உறுதி என்று நம் பெரியோர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள் குழந்தைகளும் பாகவதாக்களே என்றும் அவர்களை காயப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ப்ரபத்திக்குப் பின்பு சிலர் நாம் மோக்ஷம் கண்டிப்பாக பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் நமது சாஸ்திரத்தை முழுவதுமாக அறிந்தும், கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றோ இளைய தலைமுறையினரையோ , மற்றவர்களையோ , நாட்டுப்பெண்களையோ காயப்படுத்துகிறார்கள் , அவமதிக்கிறார்கள். மேற்கண்ட செயல்களுக்கு ஒருவருக்கு மோக்ஷம் கிடைக்குமா? ப்ரபத்தி செய்து கொண்டபின் ஆசாரியனின் உபதேசத்தைப் பின்பற்றி ஒரு முன்மாதிரியாக இல்லாமல் , இம்மாதிரியான தவறான அணுகுமுறை காரணமாக ப்ரபத்தி மீது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. தயவுசெய்து வழிகாட்டவும்.

திருவாய்மொழி சந்தை கற்றுக்கொள்ள , ஸமாஶ்ரயணம் , பரந்யாஸம் அவசியம் என்று ஏதேனும் விதிமுறை உள்ளதா? குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாமா?” அடியேன்.

“அடியேன். ஸ்வாமி நமஸ்காரங்கள். வ்ரத நாட்கள், பித்ரு கார்ய நாட்கள், அமாவாஸை, மாசப்பிறப்பு போன்ற நாட்களில் , புது வஸ்த்ரம் அணிந்து கொள்ளலாமா?

பிரம்மசாரிகளுக்குத் தீட்டு கிடையாது என்றால், அவர்கள் பெருமாள் ஆராதனம் செய்யலாமா? அடியேன்.

போதாயன அமாவாஸைக்கும், அமாவாஸைக்கும் வித்யாசம் என்ன? அமாவாஸை தர்பணத்தை ,போதாயன அமாவாஸை அன்று ஏன் செய்வதில்லை? மேலும், சில மாதங்களில் மட்டும் மாறி வருவதன் தாத்பர்யம் என்ன என்பதை தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

ஏன் ஸ்ரீ வைஷ்ணவத்தில் வடகலை, தென்கலை என ஸம்ப்ரதாய பேதம்? ஜகதாசாரியரான ஸ்ரீ இராமானுஜர் காலம் தொட்டே இந்த பேதம் இருந்ததா?

ஹிரண்ய ஶ்ராத்தம் என்பதில் ஹிரண்யம் என்பதின் அர்த்தம் என்ன?

பித்ரு காரியம் செய்யும் போது கொடுக்கும் தானத்தின் உயர்வு என்ன? பொதுவாக தானம் செய்வதற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதைச் சாதித்தருள வேண்டும்.

க்ரஹண காலத்தில் செய்ய வேண்டியவை யாவை?

சூர்யோதயம் ஆகும் சமயம்தான் எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும் என்கிறார்கள், ஸ்தீரிகளுக்கும் இது பொருந்துமா?

அடியேன், அஹோபில மடம் வெளியிட்ட திருவாராதனம் சம்பந்தமான புத்தகத்தில், சந்தியாவந்தனாதிகள் முடித்த பின் தான் திருவாராதனம் செய்ய வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. இது ப்ராதஸ் மற்றும் மாத்யாநிகமும் சேர்த்தா? இல்லை ப்ராதஸ் சந்தியாவந்தனம் மட்டுமா என்பதை தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்.

குறைந்தபக்ஷம் திருவாராதனம் மற்றும் காலக்ஷேப சமயங்களிலாவது கட்டாயம் ஸ்வரூபத்தில் இருக்க வேண்டும் என்பதின் பொருள் என்ன? அதன் முக்கியத்துவத்தைத் தெரியப்படுத்த ப்ரார்திக்கிறேன். அடியேன்.

திருவாராதனத்தில், சாளக்கிராம பெருமாளுடன் வெள்ளிச் சடாரிக்கும் சேர்த்து திருமஞ்சனம் செய்யலாமா?

பொதுவாக தர்ப்பணம் செய்யும் போது இரண்டு வர்கங்களுக்கும் தர்ப்பணம் செய்கிறோம். சந்தேகம் என்னவென்றால், சுமங்கலியாக பரமபதித்த பார்யாளுக்கு மகன் ப்ரத்யாப்திக ஶ்ராத்தம் மட்டும் செய்கிறான். மற்ற தர்ப்பணாதிகள் செய்வதில்லை. பரமபதித்த மனைவியாகிற அந்த ஜீவனுக்குப் பிதா இருக்கும்போது அமாவாஸை தர்ப்பணாதிகள் அந்த ஜீவனுக்குச் செய்வதில்லை. பிதா தன்னுடைய பித்ரு மற்றும் மாத்ரு வர்கத்தக்கு மட்டும் தர்ப்பணம் செய்கிறான். சுமங்கலியாகப் பரமபதித்த அந்த ஜீவன் தன்னுடைய வர்கத்துடன் சபிண்டிகரணத்தில் சேர்ந்தாலும் அந்த ஜீவன் தர்ப்பணாதிகள் செய்யும்போது தனித்து விடப்படுகிறதா தன்னுடைய கணவன் பரமபதம் அடையும் வரை அதன் நிலை என்ன? பெரியோர்கள் விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் குறிப்பாக, கடைபிடிக்க வேண்டிய ஆசார அனுஷ்டானங்கள் யாவை?

பரேஹனி தர்ப்பணம் அடுத்த நாள் தான் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் ஸ்நானம் செய்த பின்னா? அல்லது செய்யும் முன்பா? தர்ப்பணம் செய்யும் அந்த நாள் இரவு சாதம் தவிர்க்கப்பட வேண்டுமா?வேறு கடைபிடிக்க வேண்டிய நியமனங்கள் யாது? தெளியப் படுத்த ப்ரார்திக்கிறேன்.

நாம் செய்யும் எந்த கைங்கர்யமெல்லாம் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்கும்?

நம் பூர்வாசார்யர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்கும்படி காட்டிய அனுஷ்டானம் என்னென்ன?

பயத்தைப் போக்கவும், உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தவும் ஏதேனும் ஶ்லோகம் உண்டா?

ஶ்ரவண விரதத்தின் மகிமை என்ன? எப்படிக் கடைபிடிக்க வேண்டும் (வ்ரத அனுஷ்டானம் யாது)?

வெள்ளிக்கிழமை நாளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உட்கொள்ளலாமா? நெல்லிக்காய் என்றெல்லாம் உட்கொள்ளக்கூடாது என்ற நியமம் இருக்கின்றதா?

ஒரு உபன்யாஸத்தில் சீதை சந்தியாவந்தனம் செய்ததாகவும் வேதம் கற்றதாகவும் கேட்டேன். மற்ற யுகங்களில் பெண்கள் இவ்வாறு செய்தார்கள் என்றால், ஏன் கலியுகத்தில் அது தொடராது மாறுபட்டுள்ளது? எதனால் இந்த தடை வந்தது? தெளியப்படுத்த ப்ரார்திக்கிறேன்

கோவில் திருவாராதனம் என்றால் என்ன என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்

பகவத் அனுக்ரகத்தினால் மட்டுமே எக்காரியமும் செய்ய இயலும். அப்படியென்றால் நாம் செய்யும் தர்ம அதர்மாதிச் செயல்களுக்கு, பகவான் மறைமுகக் காரணமாக இருக்கின்றாரா? தெளியப்படுத்தவும் அடியேன்.

ப்ரபந்நனின் மீதமுள்ள புண்ணிய பாபத்தினை, விரஜை கடக்கும் முன் பெருமாள் வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கிறார் என்கிறார்கள். அப்படியிருக்க அவரை அறியாமல் சேர்கின்ற அந்த பாபத்தினை எப்படிக் கழிப்பார்? அதே போல் நம் புண்ணியம், வேறு ஒரு சேதனனுக்குச் சேர்கிறது என்றால், அது அவர் பெருமாளிடம் சேரும் நாளைத் தாமதிக்குமா?

எல்லாம் விதி/கர்மாவின் படி நடக்கிறது என்றால் புத்திசாலித்தனம் தேவையா?

நான் என்னும் அகங்காரத்திற்கும் சுயமரியாதைக்கும் இடையிலுள்ள வேறுபாடு காண்பது எப்படி?

அடியேன் ஸ்ரீமந் நாராயணா! நம் ஸம்ப்ரதாயத்தில் இதர தேவதாந்தரங்கள் குலதெய்வம் ஆகுமா? க்ரஹத்து குலதெய்வம் துக்கச்சி, ஐயப்பன் அப்படி சொல்றா. தயவுசெய்து சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும். ஸ்ரீமந் நாராயணா.

ஸ்ரீவைகுண்டத்திற்கும் கோலோகத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அடியேன்

சங்க்ரமணம்(சித்திரை விஷு போன்றவை) மற்றும் அமாவாஸை நாட்களில் பண்டிகையும் வரும்போது (தீபாவளி போன்றவை) நாம் பண்டிகை கொண்டாடலாமா? பண்டிகை உணவு தயாரிக்கலாமா? இந்தக் கேள்விக்கு, தர்ப்பணம் பண்ணுபவர் பார்வையிலிருந்தும் மற்றும் மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் பார்வையிலிருந்தும் பதில் அளிக்கப் பிரார்த்திக்கிறேன்?

ஸ்ரீவைஷ்ணவர்கள் நாராயணீயம் ஸேவிக்கலாமா?

நமது அனுஷ்டானத்தை விஞ்ஞானத்துடன் எப்படி ஒப்பிடுவது. உதாஹரணத்திற்கு சாஸ்த்ரங்களின் படி, க்ரஹண காலத்தில் சாப்பிடக்கூடாது. இந்த முறை மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்று பல நடைமுறைப் பழக்கங்களைக் குழந்தைகளுக்கு விளக்க முடியவில்லை. இப்படி சரியான விளக்கம் தர முடியாததால் நம் ஸம்ப்ரதாயத்தில் இருந்து நம் குழந்தைகளை இழக்க நேரிடும். தந்யோஸ்மி

வெளிநாடு செல்லும் போது சாளக்கிராம மூர்த்தியை என்ன செய்வது, நித்யாராதனத்தை எப்படித் தொடர்வது?

விஶிஷ்டாத்வைதம் தத்வத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெளியப்படுத்தவும்

ஸ்வாமி, அடியேன் ப்ராமண குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் என்ன ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்ற வேண்டும் என்று தயவுசெய்து விளக்கவும்.

ஸம்ப்ரதாயத்தின் முக்கியத்துவமும் அதன் அர்த்தமும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கு வழியை தெளியப்படுத்தவும்.

106 திவ்யதேசங்களில் நாம் திருப்பிருதியை பார்க்க முடியுமா? அது எங்கே அமைந்துள்ளது? ஜோஷிமட்டும் திருப்பிருதியும் வேறு என்று நினைக்கிறேன். தயவு செய்து விளக்கவும்?

பாவ கர்மங்களினால் ஒரு ஜீவன் விலங்கு, தாவரம் போன்ற கீழான நிலையை அடைந்து விட்டால் அந்த ஆத்மா எப்படி புண்ணியம் செய்து ஒரு மேலான நிலை அடையும்? தாவரமானது தன்னைப் புசிக்கத்தந்ததை அடையலாம் எனக் கொண்டால், விலங்குகள்?

பாரதத்தைக் கர்ம பூமி என்றும், கர்மத்தைத் தொலைக்க ஜீவன்கள் இங்கு உள்ள புண்ணிய க்ஷேத்ரங்களில் உள்ள நதிக்கரையில் நீராடி, தானம், தவம் செய்து முக்தி அடையவேண்டும் என்ற பக்ஷத்தில், போக பூமி எனப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களின் நிலை என்ன?

நமது ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில், நித்ய கர்மானுஷ்டானம் என்பது யாது? எவையெல்லாம் நித்ய கர்மானுஷ்டானம் என்று தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன், எனது தந்தை கொரோனாவால் பரம்பதித்தபடியாலும், அதே சமயம் அடியேனும் அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதனால் எந்த ஈமக்ரியைகளும் என்னால் செய்ய இயலவில்லை.எனது மூத்த சகோதரன் 13 நாள் காரியம் வரை அனைத்தும் செய்தார். சுமார் ஒரு மாதம் கழித்து ஆத்து வாத்யாரின் வழிகாட்டுதலின் படி, 10 நாள் தர்ப்பணம் மட்டுமே செய்தேன். தந்தையின் அந்திம காரியம் செய்ய முடியாமல் போனது வருத்தமளிக்கிறது, இதற்கு ஏதேனும் ப்ராயச்சித்தம் உண்டா?

ஶ்ராத்தம் நாள் தவிர, அமாவாஸை போன்று நாம் தர்ப்பணம் செய்யும் இதர நாட்களில், காக்கைக்கு உணவு அளிக்கலாமா/அளிக்க வேண்டுமா?

இலவம் பஞ்சு கொண்டு விளக்கேற்றலாமா?

அடியேனுக்குச் சிறு வயதிலே பரந்யாஸம் ஆகி விட்டது, மீண்டும் ஒரு முறை செய்யலாமா?

அடியேன், பொதுவாக சிகப்பு மஞ்சள் என இரு வர்ண ஸ்ரீசூர்ணம் இருக்கிறது. இதில் புருஷர்கள் பரந்யாஸம் ஆன பின் சிகப்பு ஸ்ரீசூர்ணம் தரிக்கலாமா?

பெருமாளுக்கு எந்த வகை புஷ்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்? எவையெல்லாம் உகந்தது எனத் தனிக்குறிப்புள்ளதா?

அமாவாஸை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் தர்ப்பணம் திருவாராதனம் முன் செய்ய வேண்டுமா அல்லது பின்னர் செய்ய வேண்டுமா?

ஆஶௌச காலத்தில் சந்தியாவந்தனம் செய்யலாமா?

ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கி அருந்தின பிறகு கை எச்சிலா? அலம்ப வேண்டுமா?

ஆசாரம் என்றால் என்ன? அனுஷ்டானம் என்றால் என்ன? என்பதைத் தெளியப்படுத்த ப்ரார்திக்கின்றேன்.

நாம் காலை மற்றும் இரவு செய்யும் பாபங்கள் சாயம் மற்றும் காலை சந்தியாவந்தனத்தில் போகிறது. ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் உள்ள அபராத பரிஹாரம் என்னும் அதிகாரத்தில், ப்ராயச்சித்தமானது நாம் அறிந்து செய்த பாபங்களுக்கு என்று ஸ்வாமி சாதித்துள்ளார் அதன் தாத்பர்யம் யாது? தயை கூர்ந்து விளக்கவும்.

ப்ரபத்திக்குப் பின் கடல் தாண்டி போகலாமா?

அடியேனுக்கு அஶௌசம் 10 நாட்கள். பாராயண வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் பிரபந்தம், பிற ஸ்லோகங்கள் ஸந்தை ஸேவிக்கலாமா?

எனக்கு மூத்த தாயாதி பரமபதித்துவிட்டார். தசம தினம் வெள்ளிக்கிழமை வரும் பக்ஷத்தில் வியாழன் அல்லது வெள்ளி என்று ஸர்வாங்க வபனம் செய்யவேண்டும்?

பிறந்தநாள் என்பதை நக்ஷத்திரப்படியும். ஒருவர் பரம்பதித்த தினத்தைத் திதிப்படியும் ஏன் அனுஷ்டிக்கின்றோம்?

திருவாராதனத்தில் பண்ணும் ஶோஷனம், தாஹனம், ப்லாவனம் என்பதின் முக்கியத்துவம் என்ன?

அடியேன் அகத்தில் ஸ்ரீ சுந்தர காண்டம் பாராயணம் செய்து வருகிறேன். இஷ்டகாம்யமான பலன்களை பெற (எ.கா. வேலை கிடைக்க, ரோக நிவர்த்தி பெற, திருமணம் நடக்க) என்ன விதமாக ஸங்கல்பம் செய்துக் கொள்ள வேண்டும்?

திருக்கோயில்களில் அங்கப்ரதக்ஷிணம் செய்ய ஸம்ப்ரதாயப்படி அனுமதி உண்டா? ஈரத்துடன் கோவிலுக்குள் சென்று அங்கப்ரதக்ஷிணம் செய்யலாமா (திருமலை போன்ற கோவிலில்)?

1. “சகோதரர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்தால் ஶ்ராத்தம் ஒன்றாக செய்வது உசிதமா? தனியாகச் செய்வது சரியா? 2. ஒரு முறை தனியாகவோ அல்லது ஹிரண்ய ஶ்ராத்தம் (வெளிநாட்டில் இருக்கிறோம். கொரோனா சமயத்தில் இந்தியா வர முடியவில்லை) செய்தாலோ மறுமுறை ஒன்றாக செய்யலாமா?

ஸ்வாமி தேஶிகனின் ஸ்ரீ ஸூக்தியான ஸ்ரீ ந்யாஸ விம்ஶதி சரணாகதியைப் பற்றி மிக உயர்வாக கூறுகிறது. தென்கலை ஸம்ப்ரதாயத்தில் ஸமாஶ்ரயணம் மட்டும்தானே உள்ளது. பரந்யாஸம் வழக்கத்தில் இல்லையே. ஏன் இந்த வேறுபாடு? தென்கலை ஸம்ப்ரதாயத்தை சேர்ந்தவர்கள் பரந்யாஸம் வாங்கிக் கொள்ளலாமா? அடியேனின் சந்தேகத்தை தீர்க்குமாறு பிரார்த்திக்கிறேன்.

ஒரு மடத்தைச் சேர்ந்த சிஷ்யர் வேறொரு மடாதிபதியிடமிருந்து தீர்த்த ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?

நம் பூர்வர்கள் வழிகாட்டியபடி ஸ்வதர்மானுஷ்டானம் மிகவும் முக்கியம் என்று புரிகிறது. ஒரு அத்வைதீ அல்லது மத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய ஸம்பந்தம் பெற்றபின் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?

நாம் ஏன் 4 முறை சேவிக்கின்றோம்? மற்றவர் ஏன் ஒரே ஒருமுறை சேவிக்கின்றனர்?

ஏகாதசியன்று ஏகாதசி விரதம் இல்லாதவர்களுக்கு உணவு பரிமாறுவது தவறாகுமா? உ.தா நம் அகத்திற்கு வரும் விருந்தினர்கள் ஏகாதசி விரதம் கடைபிக்கவில்லை என்றால் அவர்களுக்கு அன்னமிடலாமா?

இன்றைய காலத்தில் மிக குறைந்த அளவே நித்ய ஔபாசனம் செய்கிறார்கள். இருப்பினும் அகத்தில் நடக்கும் உபநயனம், சீமந்தோன்னயனம் முதலிய மங்களகரமான விசேஷங்களுக்கு முன் ஔபாசனம் செய்கின்றார்கள். அந்தச் சமயம் இத்தனை நாட்கள் பண்ணாததற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்யவேண்டுமா?

ஸ்ரீ உ வே கண்ணன் ஸ்வாமி அவரது வேத வைபவம் உபந்யாஸத் தொடரில் ஒருவர் பேருந்து போன்ற போக்குவரத்தில் பயனித்துவிட்டுவந்தால் தீர்த்தமாடிவிட்டுதான் வேத கோஷ்டீக்குப் போகவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இன்றைய காலத்தில் வேத பாரயணத்திற்குச் செலவதற்கே பொது போக்குவரத்துகளில் பயணிக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கும் சமயத்தில் என்ன செய்வது?

1. ஸ்மார்த்த வைஷ்ணவ சம்பிரதாயம் எப்போது துவங்கின? ஆதிசங்கரர் தான் பிராமணர்களை இப்படி வகுத்தாரா? 2. அவரவர் கர்மாபடிதான் அனைத்தும் என்றால் அவன் சம்பிராதயம் விட்டு விலகி மணம் முடிப்பதும் அவனது விதியா? இதனை நம்மால் மாற்ற முடியுமா?

எங்கள் அகத்துப் பெரியவர்காள் சாளக்கிராம பெருமாள் வைத்து திருவாராதனம் பண்ணியதில்லை. இன்று அடியேன் பண்ண ஆசைப்படுகிறேன். எங்கு சென்று சாளக்கிராம பெருமாளை பெறுவது? எப்படிப் பெருமாளை அகத்திற்கு ஏளப்பண்ணவேண்டும்?

தினமும் அகத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன். அது போல குளங்களிலும், காவிரி போன்ற ஆறுகளிலும் குளிக்கும் சமயம் செய்யவேண்டிய சங்கல்பம் எது என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும் ஸ்த்ரீகளுக்கு உண்டான சங்கல்பம் எது. என்பதையும் தெரிவிக்க பிரார்த்திக்கிறேன்.

அடியேனுக்குத் திருமணமாகியவுடனே ஸமாஶ்ரயணம் ஆகிவிட்டது. எங்கள் அகத்தில் அன்றெல்லாம் பெரிதாக ஸம்ப்ரதாய அனுஷ்டானங்கள் பின்பற்றியதில்லை. இன்று அடியேன் பரந்யாஸம் செய்ய ஆசைப்படுகிறேன். அச்சமயம் ஆசார்யன் மந்திரோபதேசம் செய்யமாட்டார் என்று கூறுகிறார்கள். அடியேன் எப்படி மந்திரோபதேசம் பெற்றுக்கொள்வது? எப்படி ஜபம் செய்யவேண்டும் என்பதை அறிய என்ன வழி?

பெருமாள் திருவாராதனம் செய்ய, தளிகை தயாராக இருக்க வேண்டுமா? தளிகை இன்னும் ஆகவில்லையென்றால் ஆராதனத்தை நடுவில் எங்கு நிறுத்திவிட்டு பின்னர் தொடர் வேண்டும் என்று விளக்கவும்.

மாத்யாஹ்நிக ஸ்நானம் பற்றிய சில சந்தேகங்கள்: 1. பெருமாள் சேவிக்க கோவிலுக்குச் சென்று வந்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் பண்ணலாமா? (உ.தா தனுர் மாத காலத்தில் பிம்மாலையே பெருமாள் சேவிக்க போகும்படி இருக்கும்) 2. மார்கழி மாதத்தில் சாப மாச திருவாராதனம் பிம்மாலையே செய்கிறோம். அந்தத் திருவாராதனம் செய்தபின் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்துவிட்டு இஜ்யாராதனம் பண்ணி பெருமாளுக்குத் தளிகை அம்சை பண்ணலாமா? 3. ஸங்க்ரமண புண்யகாலத்தில் பிம்மாலை தர்ப்பணம் பண்ணும்படி வந்தால், மாத்யாஹ்நிக ஸ்நானம் மற்றும் இஜ்யாராதனத்தை மத்யானம் பண்ணலாமா? 4. அப்யங்க ஸ்நானம் (எண்ணெய் தேய்த்து தீர்த்தமாடுதல்) என்பது ப்ராத ஸ்நானம் செய்தபிறகுதான் செய்யவேண்டும் என்று தர்மஶாஸ்த்ரம் சொல்கிறது. அப்படியென்றால், தீபாவளி பண்டிகையன்று ப்ராத ஸ்நானம் மற்றும் ப்ராத ஸந்தியாவந்தனம் (பிம்மாலையே)செய்துவிட்ட பின்னர்தான் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா? 5. தர்பபணம் மற்றும் மாத்யாஹ்நிகம்,பெருமாள் திருவாராதனம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?

சங்கோஷ்டீ 2022, T20 யில் பழவேரி ஸ்ரீ உ வே லக்ஷ்மீந்ருஸிம்ஹாசார்யார் (பாலாஜி) ஸ்வாமி, ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமியால் 8 நிமிடத்தில் திருவாராதனம் செய்வது எப்படி என்று குறிப்பு வெளியிட்டுள்ளார் என்று சாதித்தார். அதைப் பற்றி விரிவாக/அந்த நூல் எங்கு கிடைக்கும் எனத் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஏகாதசி அன்று ஒரு ப்ரபன்னன் ப்ரசாத உபயம் பண்ணலாமா?

பர்த்தாவை இழந்த பத்னி வருஷாப்திகம் முடியும் வரை அந்த ஒரு வருஷ காலத்தில் ஸ்ரீரங்கம் முதலான திவ்ய தேசங்கள் சென்று பெருமாளையும் உத்ஸவங்களையும் சேவிக்கலாமா? ஆசார்யனனை நேரில் சென்று சேவிக்கலாமா என்ன வழக்கம் என்று சொல்ல ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத ஸப்தமியன்று, ஸப்த அர்க ஸ்நானம் மற்றும் பீஷ்ம தர்ப்பணம் செய்ய வேண்டுமா? ஸ்த்ரீகள் தர்பைப்புல், பவித்ரம் மற்றும் பூணூலைத் தொடலாமா?

இந்தக் கேள்வி ஜோதிடம் சம்பந்தமானது இல்லை என நினைக்கிறேன். நைத்ருவ காஶ்யப கோத்ரமும் காஶ்யப கோத்திரமும் ஒரே பிரிவா அல்லது வேறு வேறா. இரண்டு பேரும் சம்மந்தம் செய்து கொள்ளளாமா?

ஒருவர் எந்தெந்த மாதத்திலும், எந்தெந்த நாட்களிலும் வபனம் (க்ஷௌரம்) செய்துகொள்ளலாம் மற்றும் செய்துகொள்ளக்கூடாது என்று தெரியப்படுத்தவும். மேலும் க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்.

திருக்கோவிலின் வெளியில் இருக்கும் கடைகளிலிருந்து திருத்துழாய் வாங்கி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கின்றோம். அந்தப் பெருமாளின் திருத்துழாயை ஆத்துப் பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? குறிப்பாக என்றெல்லாம் திருத்துழாய் பறிக்கக்கூடாது என்றிருக்கிறதோ அன்றைய தினத்தில் அவற்றைச் சாற்றலாமா?

துவாதசியன்று அகத்தில் இருக்கும் ஆசார்யன் பாதுகைக்கு என்ன செய்யவேண்டும்?

பாகவத அபசாரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவரல்லாத பிற சந்யாசிகளுக்கும் பொருந்துமா?

பித்ரு சேஷம் (தேவச சாப்பாடு) மீதியிருந்தால் என்ன செய்யவேண்டும்? பசுமாட்டிற்குக் கொடுக்கலாமா? அல்லது அடுத்தநாள் சாப்பிடலாமா?

ஶ்ராத்தத்திற்கு முதல் நாள் பெருமாள் கோயில் பிரசாதம் ஸ்வீகரிகலமா?

ப்ராஹ்மணர்கள் ஏன் ஆஹாரத்தில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொள்வதில்லை?

ஆசார்யன் அனுக்ரஹித்த மந்திராக்ஷதை ஒரு பை அளவு சேர்ந்துள்ளது. அவ்வக்ஷதையை கல்யாணம் போன்ற விசேஷத்திற்குப் பயன்படுத்தலாமா? பெருமாள் ப்ரசாதம் பண்ண உபயோகிக்கலாமா? என்று தெளிவிக்கவும்.

எங்கள் உறவினர் ஒருவர் அகத்தில் நம் பூர்வாசார்யர் (ஸ்ரீ ரங்கநாத யதி – தேம்பரை ஆண்டவன் என்று நினைக்கிறோம்) பாதுகை கிடைக்கப் பெற்றார்கள். வெகுநாட்கள் உபயோகிக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. அப்பாதுகையை என்ன செய்வது என்று வழிகாட்டவும்.

ப்ரசாதம்/உணவு உட்கொள்ளும்போது அங்க வஸ்த்ரத்தை எப்படி உடுத்திக்கொள்ளவேண்டும்?

மார்கழி மற்றும் தை மாதத்தில் ஶ்ரீ நம்மாழ்வார் பிறந்த ஊரிலிருந்து புறப்பட்ட பிறகு நாலாயிர திவ்ய பிரபந்தம் கோவில் மற்றும் நம் அகத்தில் சேவிக்க கூடாது என்ற நியதி பற்றி விளக்கவும்.

மடி வஸ்த்ரம் பற்றிய கேள்விகள் ஈர வஸ்த்ரம் என்பது மடியாகுமா? அல்லது நன்கு உலர்ந்திருக்க வேண்டுமா? அப்படி உலரவில்லையென்றால் 7 முறை வஸ்த்ரத்தை உதறிவிட்டு உடுத்திக்கொள்ளலாமா? மடி வஸ்த்ரத்தைக் கொடியிலிருந்து ஒரு குச்சி கொண்டுதான் எடுக்கவேண்டுமா அல்லது கையால் எடுக்கலாமா? வஸ்த்ரங்களை ப்ளாஸ்டிக் கயிறு அல்லது கொடியில் உலர்த்தலாமா? மரக்குச்சியினால் வஸ்த்ரத்தை எடுக்கும்போது ஒருகால் தவறி கீழே விழுந்த்து விட்டால் மடி போய்விடுமா? மடி வஸ்த்ரம் இரண்டு சூரியன் சமயம் வரை கொடியில் உலர்ந்தால், அது மடி என்றாகுமா? அதை உடுத்திக்கொண்டு திருவாராதனம் செய்யலாமா? காலை சந்தியாவந்தனம் மற்றும் திருவாராதனம் செய்யும்போது மடி வஸ்த்ரம் உடுத்திக்கொள்கிறோம். வேலைக்குச் செல்லும்போது வேறு ஆடை உடுத்திக்கொள்கிறோம். மீண்டும் அகத்திற்கு வந்தபின் தீர்த்தமாடி சாயம் சந்தியாவந்தனம் செய்யும்போது காலை உடுத்திக்களைந்த மடி வஸ்த்ரத்தையே உடுத்திக்கொள்ளலாமா?

திருவோண விரதம் அனுஷ்டிக்கும்போது கோயில் பிரசாதம் (உப்பு போட்ட தயிர் சாதம், புளியோதரை போன்றவை ) ஸ்வீகரிக்கலாமா?

சிலர் திருத்துழாயைக் காதில் சூடிக்கொள்வார்கள். அதன் காரணம் என்ன? அப்படிச் சூடிக்கொள்ளலாம் என்றால் காது மடலின் உட்பகுதியிலா அல்லது வெளிப்பகுதியிலா எங்கு சூடிக்கொள்ளவேண்டும்?

ஏன் தென்னிந்திய திருக்கோயில்களின் உள்ளே சங்க நாதம் எழுப்பக்கூடாது என்கிறார்கள்? சங்க நாதம் ஒலிப்பதுப்பற்றி ஆகமத்தில் ஏதேனும் குறிப்பிருக்கிறதா?

கல்யாணம் ஆகாத ஒருவர் பரமபதித்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. அவருடைய தாயார் கைப்புல் வாங்கி மாஸ்யம் முதலியன நடைபெறுகிறது . ஒரு வருடம் முடிவதற்கு முன் அவருக்காக கயா ஶ்ராத்தம் பண்ணலாமா? தாயார் போகவில்லை. கயா போகும் ஒரு பந்துவைக் கொண்டு செய்யலாமா?

கயா ஶ்ராத்தம் செய்யும்போது சில காய்கறிகள், பழங்களை நாம் விடுகிறோம். நாம் அங்கே விட்டுவிட்ட காய்கறியோ, பழமோ மடம் அல்லது கோவில்களில் ப்ரசாதமாகக் கொடுக்கும்போது நாம் அதை உட்கொள்ளலாமா? அல்லது ஏற்காமல் இருக்கலாமா? ஒருகால் அறியாமல் நாம் சாப்பிட்டிருந்தால் அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா?

ஹனுமத் ஜெயந்தி என்று கொண்டாடப் படுகிறது. எந்த நாளில் என்ற குறிப்பு இருக்கிறதா? வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில், மாதத்தில் கொண்டாடுகிறார்கள். அதனால் எது சரியான தினம் என்ற குழப்பம் வருகிறது.

தர்ப்பண நாட்களில் பொங்கல் (பலகாரமாக) சாப்பிடலாமா?

ஏகாதசி விரதம் இருக்கும் தினம் பெருமாளின் திருத்துழாயை உட்கொள்ளலாமா?

காம க்ரோதங்களை வென்று எப்போதும் எம்பெருமான் சிந்தனையோடே இருக்க வழி என்ன?

அடியேனின் தாயார் 44ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரஸமர்ப்பணம் செய்தவர். அவர் சில நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்துவிட்டார். அடியேன் ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் பரந்யாஸம் பெற்றுள்ளேன். அடியேனின் வருத்தம் மற்றும் கேள்வியானது, என் தாயாரிடம் தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த அபசாரங்களுக்கு என்ன ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். அவர்களுக்குக் கட்டாயம் பித்ரு கார்யங்களைச் சரியாக செய்வேன்.

பெண்ணின் கல்யாணத்திற்கு எத்தனை நாள்களுக்கு முன்பு வரை பெண்ணின் தகப்பனார் ஶ்ராத்ததிற்குச் சுவாமிகள் ஆக இருக்கலாம்.

பத்து நாள் பங்காளிகள் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்? அதேபோல் 3 பங்காளிகள் யார் , தாயாதிகள் யார்? என்று விளக்கப்ரார்த்திக்கிறேன்.

சில க்ருஹங்களில் 12 மாதங்களும் தர்ப்பணம் செய்கிறார்கள்.அஷ்டகா.அன்வஷ்டகா தர்ப்பணமும் செய்கிறார்கள்.சில க்ரஹங்களில் 4மாத தர்ப்பணம் மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.கேட்டால் எங்காத்துப் பெரியவா அனுஷ்டித்து வந்தது என்கிறார்கள். குழப்பத்தைத் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

தனுர் மாதம் தவிர மற்ற எந்த மாதத்தில் சூர்யோதயத்திற்கு முன் திருவாராதனைச் செய்யலாம்? சில சமயம் பிம்மாலையே கோவிலுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்ல நேர்ந்தால் எப்போது திருவாராதனம் செய்யவேண்டும்? அதேபோல் அந்தச் சந்தர்ப்பங்களில் எப்போது சந்தியாவந்தனம் செய்யவேண்டும்?

“1.சாளக்கிராம திருவாராதனத்தின் பொழுது திதி,வாரம், நட்ச்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டுமா.? 2.தனுர் மாத ஆராதனத்திற்கு முன்பே ப்ராத சந்தியாவந்தனம் எப்போது செய்ய வேண்டும்?”

ஏகாதசி அன்று 2 விரதங்கள் அனுஷ்டிக்குமாறு ப்ரமாணங்கள் கூறுகின்றன. ஒன்று, நிர்ஜலமாக இருப்பது. மற்றொன்று, ஜாகரண விரதம். ஜாக்ரண விரதம் நம் ஸம்பிரதாயத்தில் அனுஷ்டிப்பது உண்டா? இதைப் பற்றி நம் ஆசாரியார்கள் வித்வான்கள் கருத்து என்ன என்று சாதிக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

பாதுகா ஸஹஸ்ரநாமம் மாலை அல்லது இரவில் சேவிக்கலாமா? மாலையில் பாதுகா ஆராதனம் பண்ணலாமா?

கோயில்களில் கிடைக்கும் புளியோதரை, பொங்கல் (கலந்த சாதம்) போன்ற ப்ரசாதத்தை காலை, மதியம் அல்லது இரவு உணவாக உண்ணும் போது பரிசேஷனம் செய்ய வேண்டுமா?

பெருமாள் திருவாராதனம் மாத்யானிகம் செய்த பிறகுதான் செய்ய வேண்டுமா?

ஆழ்வார் ஆசார்யன் ப்ரதிஷ்டாபனம் இல்லாத மற்றும் ஶடாரி சாதிக்காத விஷ்ணு கோவில்களில் நாலாயிரம் சேவிக்கலாமா ?

யஸ்யாபவத்…, அஹோபிலே….என்று அஹோபில மடத்தவர்கு இருப்பது போல், ஆண்டவன் ஆச்ரம சிஷ்யர்களுக்கு ஏதேனும் உண்டா?

மார்கழி மாதத்தில் ஒருவர் காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானம் என்ன? குறிப்பாக பெருமாள் திருவாராதனம் பண்ணாதவர்கள் , க்ருஹத்தில் இல்லாமல் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

ஒருவர் உபன்யாசகர் ஆவதற்கு என்ன அளவுகோல், விதிமுறைகள் ? இந்தக் கேள்விக்கு க்ஷமிக்கப் ப்ரார்த்திக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், க்றிஸ்தவர்கள், ப்ராமணர்கள் அல்லாதவர்கள், பெண்கள் என்று அனைவரும் உபன்யாசகர்களாக மாறி, அனைவருக்கும் ரஹஸ்யத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், இது சரியா என்று தேவரீர் விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன், ராமானுஜ சம்பந்தம் இல்லாத ப்ராமணர் அல்லாதவர்கள் கோவில்களில் பாதுகா ஸஹஸ்ரம் சேவிக்கலாமா என்று தேவரீர் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

“ப்ரபன்னர் ராகவேந்த்ரர் ஶ்லோகம் சொல்லலாமா? மந்த்ராலயாத்திற்குப் போய்சேவிக்கலாமா? அவரை ஆசார்யனாக ஏற்கலாமா?

ஆத்தில் பெருமாளுக்கு ஏற்றும் சொக்கப்பானையில் எத்தனை, என்னென்ன தான்யங்கள் வைக்க வேண்டும்.

க்ருஹத்தில் ஏளியிருக்கும் சாளக்கிராம மூர்த்தி பின்னமாகி விட்டால், அவருக்கு நித்ய திருவாராதனம் செய்யலாமா?இல்லையென்றால் திருவாராதனைக்குப் புதிய சாளக்கிராம மூர்த்தி ஏளப் பண்ணவேண்டுமா? சாளக்கிராம மூர்த்தியை எங்கே எப்படிப் பெறுவது என்பதையும் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன் ?

பெருமாள் திருமஞ்சனத்தின் போது உபநிஷத் பாராயணம் செய்கிறார்கள்?

தனுர்மாசத்தில் அதிகாலை திருவாராதனத்திற்கான உபாதானம் அதாவது, மலர்கள், துளசி போன்றவை எப்போது பறிக்க வேண்டும்? அன்றைய‌ தின சூர்யோதயத்திற்கு முன்னா அல்லது முந்தைய நாளா?

வேதங்களைப் போல திவ்ய பிரபந்தம் சேவிப்பதற்கு ஏதேனும் நிபந்தனைகள், வரைமுறைகள் இருக்கின்றனவா? (ஸ்ரீ உ வே Dr.V.கண்ணன் ஸ்வாமிகள் வேதம் பாராயணத்தின்போது மனதில் கொண்டு பின்பற்ற வேண்டிய பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார். ஸ்வரூபத்தில் இருப்பது, அனத்யயனம், சந்த்யாகாலம், அஶௌசகாலம் முதலியன போல் வேறு என்ன என்று தெளிவிக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

ஆசார்யனின் திருவத்யயனத்தை எவ்வாறு க்ரமமாக கொண்டாடுவது?

நாம் அணிந்த தங்க நகைகளை, துளசி நீரில் நங்கு சுத்தம் செய்தபிறகு அகத்தில் ஏளியிருக்கும் பெருமாளுக்குச் சாத்தலாமா? அவருக்குச் சேர்பித்தபின் நாங்கள் மீண்டும் அணியமாட்டோம் என்ற எண்ணத்தில் அவருக்குச் சாத்தி அனுபவிக்கலாமா?

பெருமாளுக்குச் சாற்றிய துளசி மாலைப் பற்றிய சில கேள்விகள் அவரின் துளசி மாலையை ப்ரசாதமாக ஸ்வீகரித்து ஜபம், தர்ப்பணம், திருவாராதனத்திற்கு உபயோகிக்கலாமா? துளசி மாலையை தாமரை மணி மாலையோடுதான் அணிய வேண்டுமா? தனியாக அணியக்கூடாதா? துளசி மாலையை ஒரு நாள் முழுதும் அணியலாமா? அல்பஶங்கை சமயமும் அணியலாமா? தீட்டுச் சமயங்களில் அணியலாமா?

பெருமாளுக்குப் புதியதாக மரப்பெட்டி வாங்கியுள்ளேன் அதில் பெருமாளை ஏளப்பண்ணுவதற்கு முன் எப்படிச் சுத்தி படுத்த வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

மகர ரவி தர்ப்பணம் பற்றிய கேள்வி அடியேன் பஞ்சாங்கத்தில் சனிக்கிழமை மகர ரவி 43-52 என்று இருக்கிறது. அப்படியென்றால் மகரமாச தர்ப்பணம் என்று பண்ண வேண்டும்? சனிக்கிழமையா? அல்லது ஞாயிற்றுக்கிழமையா?

ப்ரதோஷ காலத்தில் சந்தியாவந்தனத்தின் போது எத்தனை காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்? 10 அல்லது 28?

தீர்த்தவாரி உற்சவத்தின் போது நாம் முங்கி எழுவது ஸ்நானம் என்றாகுமா? அதை ஸ்நானஸாடி உடுத்திக் கொண்டு, ஸங்கல்பம் செய்துதான் செய்ய வேண்டுமா?

ஆசாரம் என்றால் என்ன? அதைப் பற்றி விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்.

எனது க்ருஹஸ்த வாழ்க்கையில் அடியேன் இதுவரை வைஶ்வதேவம் செய்ததில்லை, இந்த உபதேசத்தை யாரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அடியன் தெரிந்து கொள்ள முயற்சித்தேன். தேவரீர் தயவு செய்து வழிகாட்ட ப்ரார்த்திக்கிறேன்.

YouTubeல் ஹிந்து மற்றும் ப்ராமணர்கள் அல்லாதவர்கள், சம்ப்ரதாய விஷயங்கள் பற்றி சாதிக்கும் உபன்யாஸங்கள் பார்க்கிறோம். அது சரியா? அவற்றை நாம் கேட்கலாமா?

வேதங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனி ஸ்வரம் இருப்பதாகவும், வேதத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்த வார்த்தையின் நிகழ்வுகளுக்கு ஸ்வரம் ஒன்றுதான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் ஒரே அனுவாகத்தில் ஸ்வாஹா, பவதி போன்ற சில வார்த்தைகள் வெவ்வேறு ஸ்வரங்கள், எப்படி வருகின்றன? வேதங்கள் ஓர் வழிப் பரம்பரையில் வந்தனவை என்றால், பாடபேதம் எப்படி உருவானது? (அதாவது, ஆந்த்ர பாடம் திராவிடப் பாடம் போன்றவை)?

க்ருஹத்தில் நித்யபடி சேவாகாலத்தின் போதும், ப்ரபந்த பாராயணத்தின் போதும் திருவிருத்தம் ப்ரபந்தம் சேவிக்கலாமா என்பதை தேவரீர் தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் இக்கேள்வியை சென்ற சுதர்சனத்திலும் கேட்டிருந்தேன், ஐயங்கார் பையன் ஒரு வட தேசத்துக்ஷத்ரிய பெண்ணை மணந்திருந்தால் அவனால் ப்ரபந்நர்களான தன் தாய் தந்தை ஆசார்யன் திருவடி அடைந்தபின் அவர்களுக்கு அந்திம ஸம்ஸ்காரம் பண்ணமுடியுமா?

வெளிநாட்டில் வசிப்பதனால் என் தாய் தந்தையற்கு ஶ்ராத்தம் பண்ண சரியான வசதி கிட்டாதனால் சிரமமாக இருக்கிறது. இந்தியா வரும் போது அவர்களின் ஶ்ராத்த திதியன்று எந்த மாதத்திலும் பண்ணலாமா அல்லது அந்த மாதம் அந்த திதியில்தான் பண்ணவேண்டுமா? என்னால் அவர்கள் பரமபதித்த திதியன்று இந்தியா வரஇயலவில்லை.

கைசிக ஏகாதசி அன்று ப்ரபத்தி ஆனவர்களுக்கு ஷஷ்டியப்தபூர்த்தி வந்தால் என்ன செய்வது? அடியேனுடைய நாத்தனார் பேரன்களுக்குக் கைசிக ஏகாதசி அன்று யஜ்ஞோபவீதம் (பூணூல்) போடுகிறார்கள். அடியோங்கள் தாய்மாமா மாமி, ப்ரபத்தி ஆனபடியால் அன்று போஜனம் செய்ய இயலாது. பல வைஷ்ணவ கல்யாண விசேஷங்களில் அவா குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே போஜனம் செய்ய மடி தளிகை‌செய்து சிலரை போஜனம் பண்ணச் சொல்லுகிறார்கள். மற்றவர்களை விட்டு விடுகிறார்கள். கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும் என்று பொதுப்பந்தியில் போஜனம் செய்ய நிர்பந்தம் ஏற்படுகிறது இதற்கு தீர்வு என்ன என்பதை ப்ரார்த்திக்கிறேன்.

சுபக்ருது ஐப்பசி மாதம் அடியேன் கேட்டகேள்வியின் தொடர்ச்சி. பஞ்சாங்கமே ப்ரதானம் ஆகையால் சந்திரனைப் பார்க்க முடியாவிட்டாலும் க்ரஹணகாலத்தை அனுசரித்து தர்ப்பணம் பண்ணவேண்டும் என்று வித்வான்கள் பதிலளித்திருந்தனர்.அடியேனின் கேள்வி, இது விமோசன ஸ்நானத்திற்கும் பொருந்துமா? அதாவது மேகமூட்டமாக இருந்து சந்திரனைப் பார்க்க முடியாமல் போனாலும் விமோசன ஸ்நானம் செய்யவேண்டுமா? உ.தா: ஜூலை 28,2018 அன்றைய சந்திரக்ரஹண காலம் 3.49am தொடங்கி விமோசனம் 6.21am ஆனால் காலை சந்திரனை காணமுடியவில்லை. இப்படிப் பட்ட நேரத்தில் காலை விமோசன ஸ்நானம் செய்துவிட்டு நம் நித்யகர்மானுஷ்டானங்களைத் தொடரலாமா? அல்லது அன்று மாலை சந்திரன் தெரியும்வரை காத்திருந்துதான் மேலே நித்யகர்மாக்களைச் செய்யவேண்டுமா?

ஏன் வடகலையார் மணவாளமுனிகளின் திருநக்ஷத்ரம் கொண்டாடுவதில்லை? அதேபோல் அவர்கள் ஸ்வாமிதேஶிகனைக் கொண்டாடுவதில்லை? மணவாளமாமுனிகள், ஸ்வாமி தேஶிகன் பற்றி ஏதேனும் க்ரந்தத்தில் குறிப்பிட்டுள்ளாரா? மேலும் நம் ப்ரதமாசார்யன் ஸ்வாமிதேஶிகன் ஆனபடியால் அப்படிச் செய்வதில்லையா? அவர்களும் அதேபோல் ப்ரதமாசார்யன் மாமுனியானபடியால் ஸ்வாமிதேஶிகனின் திருநக்ஷத்ரத்தைக் கொண்டாடுவதில்லையா?

புரட்டாசி மாதம் பால் காய்ச்சி, வீடு மாறலாமா?

எங்கள் க்ருஹத்தில் வழக்கம் இல்லை , தெரிந்து கொள்ளவதற்காக, காக்காக்கு சாதம் வைக்கறது பற்றி விளக்கம் வேண்டும், பெண்கள் அதை செய்வது சரியா?

நமஸ்காரம், பரந்யாஸத்திற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவை?

க்ரஹண காலத்தின் சமயம் வேத பாராயணம் செய்யலாமா?

ப்ரபத்திக்கு முன் சரஸ்வதி பூஜை அன்று சரஸ்வதி பொம்மை வைத்து ஆராதனம் செய்து வந்தோம். ப்ரபத்திக்குப் பின் ஹயக்ரீவர் ஆராதனம் மட்டுமே. சரஸ்வதி பொம்மையை என்ன செய்வது? “

திருஷ்டி போன்றவற்றை ஒரு ப்ரபந்நனின் நம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும். அவர்களின் கண்திருஷ்டி நம்மைப் பாதிக்காமல் இருக்க பெரியவர்கள் (கற்பூரம், உப்பு மிளகு) சுத்திபோடுவது என்ற வழக்கம் வைத்துள்ளார்கள், அதை ஒரு ப்ரபந்நன் பின்பற்றலாமா?

நமஸ்காரம், சில சமயங்களில் சிலருடைய தீய பார்வை மற்றும் எண்ணங்களிடம் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காத்துக் கொள்ள எண்ண செய்வது?

அடியேன் பூனாவில் உள்ளேன்.அடியேனுக்கு ப்ரபத்தி ப்ரக்ருதம் அழகியசிங்கரிடம் ஆனது.இங்கே சந்த் ஞானேஸ்வர் மிக பிரபலம். ஜீவ சமாதி உள்ளது. அவர் விஷ்ணு பக்தர். அடியேன் அங்கே போகலாமா?

புரட்டாசி மாதத்தில் திருவிளக்கு (மாவிளக்கு) ஏற்றும் வழக்கம் உண்டு.ஆனால் ப்ரபத்தி ஆனவர்கள் விளக்குஏற்றி வைக்காமல் மாவை கலந்து பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணால் போதும், இல்லையென்றால் பிரார்த்தனையாக அது ஆகிவிடும் என்று சொல்கிறார்கள். குழப்பத்தை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் அடியேன். மேலும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒன்று நவராத்திரி கொலு அல்லது மஹாளயபக்ஷம் அல்லது திருமலையில் பிரம்மோற்சவம் வரும் தினங்களில் சில பேர் ஏற்றக்கூடாது என்றும் ஐப்பசி ஶ்ரவணத்தில் ஏற்றலாம் என்று சொல்கிறார்கள்.தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன் அடியேன்.

அடியேன் சமீபத்தில் ஒரு இராமானுஜ குலம் என்ற கோஷ்டி எம்பெருமான் கோயிலில் திவ்ய ப்ரபந்தம் சேவிப்பதையும், அதில் ஒருவர் எம்பெருமான் திருமஞ்சனம் சமயம் வேதவிண்ணப்பம் செய்வதையும் கண்டேன். இராமானுஜ சம்பந்தம் பெற்றபின் ஒருவரின் வர்ணாஶ்ரம தர்மமும் மாறிவிடுமா?

a. ப்ரம்ஹா மற்றும் சிவனுக்கு நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பாகவதர்கள்/ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ற ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளதா? b. அவர்கள் நாராயணனுக்கு ஸ்தோத்திரம், கைங்கர்யம் செய்பவர்கள்/அடியவர்கள் என்று இதிஹாச புராணங்கள் மூலம் தெரிகிறதே. அவ்வாறு இருந்தால் ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம் அடியவர்க்கு அடியவர்கள் என்று எண்ணி அவர்களைத் துதிப்பதில்லையே ஏன்? c. அவர்கள் நாராயணன் ஒருவன் தான் பரமாத்மா என்ற தத்துவத்தை உணர்ந்தவர்கள் போல் தெரிகிறதே, அவ்வாறு இருக்க அவர்கள் ஏன் அந்தத் தத்துவத்தை அவர்களின் பக்தர்களுக்குக் காட்டுவதில்லை?”

அல்ப த்வாதசி காலங்களில் மாத்யாஹ்நிகம் செய்த பிறகுதான் பாரணை பண்ணவேண்டுமா? (காலம் அவசியம் இல்லையா)

பொதுவாக வடகலையார்கள் ஸ்வாமி தேஶிகனைப் பின்பற்றும் போது, அஹோபில மடம், ஆண்டவன் ஆஶ்ரமம் என்ற ஸம்ப்ரதாயங்கள் இருக்கும் காரணம் என்ன? பொதுவாக வடகலையார்கள் ஸ்வாமி தேஶிகனைப் பின்பற்றும் போது, அஹோபில மடம், ஆண்டவன் ஆஶ்ரமம் என்ற ஸம்ப்ரதாயங்கள் இருக்கும் காரணம் என்ன?

தர்ப்பணதிற்கு முன் பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரிக்கலமா?

ஶ்ரார்த்த தினம் அன்று திருவாராதனத்தில் சாளக்கிராமத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது என்று ப்ருஹஸ்பதி கூறுகிறார். இது சரியா?

பித்ரு தோஷம் என்றால் என்ன? ஸமாஶ்ரயணம், பரந்யாஸம் ஆகி, தர்ப்பணம், ஶ்ராத்தம் தவறாமல் செய்யும் ஒரு ப்ரபந்நன் பித்ரு தோஷம் பற்றி கவலைப்பட வேண்டுமா?

க்ரஹணம் பற்றி சில கேள்விகள் 1) க்ரஹண காலத்தில் கொடுக்கும் தானத்திற்கு தோஷம் உண்டா? நாம் வேறு பாகவதர் தரும் தானத்தை ஸ்வீகரிக்கலாமா? 2) புண்யகாலம் திருமஞ்சனம் மிகவும் விசேஷம் என்று இருக்கும்போது திருக்கோயில்கள் மூடப்படுவதன் தாத்பர்யம் என்ன? 3) க்ரஹண காலத்தை புண்யகாலம் என்கிறோம் அப்படியிருக்க க்ரஹணம் விட்ட பின் சுத்தமண்டல ஸ்நானம் ஏன் செய்கிறோம். க்ரஹணகால தீட்டு என்று ஏன் கூறுகிறார்கள்? 4) பொதுவாக விமோசன ஸ்நானம் செய்தபின் நாம் கடைபிக்க வேண்டிய அனுஷ்டானங்கள் என்ன?

“வ்ருத்தி தீட்டு என்று வந்தால் ஶ்லோகம், பாசுரம் சேவிக்கலாமா? ‘கோயிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வேறு எந்த மாதிரி வேண்டலாம்? அல்லது.வ்ருத்தி தீட்டில் சாதாரணமாக எப்பொழுதும் போல் ஶ்லோகங்களும் ,திருவாராதனம், தவிர, ஸேவிக்கலாமா?”

எங்கள் அகத்து வழக்கப்படி கட்டுமாவடி வீரன்னார் கோயிலில் குழந்தைக்கு முடிகொடுத்து விட்டு பின் திருமலைக்கு முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம். ஆனால் இன்று அனைவருமே ஸ்ரீமத 46ஆம் பட்டம் அழகிய சிங்கரிடன் பரந்யாஸம் பெற்றவர்கள் ஆகையால் திருவேங்கடமுடியானுக்கு கொடுத்தால் போதுமா என்ற அடியேனின் சந்தேகத்திற்கு முன்னரே வித்வான்கள் பதிலளித்தனர். ஆனால் எங்கள் அகத்து பெரியவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அகத்து வழக்கத்தை எப்படி மாற்றுவது என்று தயங்குகிறார்கள். அவர்களுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

நாம் அஸ்மத் குருப்யோ நம: , அஸ்மத் பரம குருப்யோ நம: என்று ப்ரார்த்திக்கும்போது எந்த ஆசார்யனை த்யானிக்க வேண்டும்? அடியேனுக்கு ஸ்மாஶ்ரயணம் ஸ்ரீமுஷ்ணம் பெரியாண்டவனிடமும் பரந்யாஸம் ப்ரக்ருத ஆண்டவன் ஸ்வாமிகளாலும் செய்விக்கப்பட்டது. ஆகையால் இக்கேள்வி.

ஒருவர் பாகவத அபசாரம் பட்டிருந்தால் ப்ரயாஶ்சித்த ப்ரபத்தி செய்தால் அவ்வபசாரம் போய்விடுமா? மேலும் அவர் யாரிடம் பாகவத அபசாரம் பட்டிருந்தாரோ ஒருவேளை அந்தப் பாகவதர் ஆசார்யன் திருவடி அடைந்துவிட்டால், தான் அவரிடம் பட்ட அபசாரத்தை எப்படிப் போக்கிக்கொள்வது?

“GSPKவில் வேத மஹிமை உபன்யாசத் தொடரில் நாவல்பாக்கம் ஸ்ரீ உ.வே. கண்ணன் ஸ்வாமி சாதித்த விஷயங்களில் அடியேனுக்கு சில சந்தேகங்கள். 1. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வானிடமோ அல்லது பாடசாலையிலோ வேதம் கற்றுக்கொள்ளலாமா? 2. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வான்களை, கீழேவிழுந்து சேவிக்க வேண்டுமா? இங்கே வேதவித்வான்கள் என்று எண்ணி கீழேவிழுந்து சேவிப்பது சரியான அனுஷ்டானமா அல்லது ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லர் என்று எண்ணி அஞ்சலி நமஸ்காரத்தோடு நிறுத்தி விடுவது சரியா? நம் ஆழ்வார் ஆசார்யர்கள் இதில் எந்த அனுஷ்டானத்தை ஆதரிக்கின்றனர்? “

குழந்தைகள் பிறக்காத தம்பதிகள் எப்படி ஷட்டியப்தபூர்த்தி செய்துகொள்ள முடியுமா?

வெள்ளை சங்குப்பூ பூக்கிறது.பெருமாளுக்குச் சாத்தலாமா?

நாய் போன்ற செல்லப்ராணிகளை ஏன் நாம் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது?

பழைய உணவு சாப்பிட்டப்பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா? கோவிலுக்குச் செல்லலாமா?

ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பது ஸ்நானம் செய்வதற்குச் சமம் என்கிறார்கள். எந்த ஸ்நானம்? விரிவாக விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியோங்கள் ப்ரபத்தி ஆனவர்கள்.வடகலை. இங்கு தென்கலை ஸம்ப்ரதாய திவ்ய தேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும் போது அடியேன் சில கைங்கர்யம் ‌‌‌செய்து கலந்து கொள்வேன். இது சரியா?

அடியோங்கள் ஆத்துப் பெருமாள் சாளக்கிராமம் மற்றும் நிறைய திவ்ய தேசங்களின் பெருமாள் படம் , அபிமான ஸ்தலப்பெருமாள் படங்கள் இருக்கிறது.ஆனால் சில பேர் பரன்யாஸம் ஆனவர்கள் சாளக்கிராம் மற்றும் ஆசார்யன் வைத்து கொள்.இந்த பெருமாள் படம் வேண்டாம் என்கிறார்கள்.அப்படியா? குழப்பம் தீர ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனின் ஆசார்யன் ஸ்ரீமத் அழகியசிங்கர். அவர் மடாதிபதி ஆனபடியால் உத்தமமான கைங்கர்யபர்களைக் கொண்டுள்ளதால் அடியேனைப்போன்ற சாமானியர்களுக்கு பெரிதாக ஶரீரரூபமாக கைங்கர்யம் செய்யும் வாய்ப்போ அல்லது தகுதியோ இல்லை. இருப்பினும் ஆசார்யனுக்கு கைங்கர்யம் செய்ய இயலவில்லையே என்று மனம் வருந்துகிறது. அடியேனைப் போன்ற சாமானியன் அழகியசிங்கர் போன்ற மடாதிபதிக்கு அவர் மனமுகக்கும்படி வேறு எவ்விதங்களில் கைங்கர்யங்களைச் செய்யலாம்?

கடையில் வாங்கிய புது வஸ்த்ரத்தை, முதல் முறை துவைக்கும் வரை அதை மடிவஸ்த்ரமாகத் தரிக்கலாமா?

மஹாளய பக்ஷம் பற்றி: மஹாளய பக்ஷம் முழுவதுமே ஶ்ராத்த தளிகை பண்ண வேண்டுமா? மஹாளய தர்ப்பணம் (மத்யாஷ்டமிக்குப் பின்) செய்தாயிற்று என்றால் அதன்பின் எப்போதும் போல் தளிகை பண்ணலாமா? தம்பதிகள் இருவரும் 15 நாட்கள் முழுவதுமே தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா?

உப்பு போட்டு அடுப்பில் ஏற்றினால் அந்த உணவு பத்தாக கருதப்படுமா?

பஞ்சஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமாளை காம்யார்த்தமாக சேவிக்கின்றார்கள் என்றால் அவர்களை பாகவதர்கள் என்று கொள்ளலாமா?

நமஸ்காரம், அடியேனுக்கு வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்தாலும், அது எடுபடுவது இல்லை, சில நாட்கள் கழித்து அவ்விடத்தில் வேலை செய்ய முடியாமல், திரும்ப வேலை தேட வேண்டி உள்ளது, வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்கு கஷ்டமாக உள்ளது, இதற்கு உபாயம் ஏதும் உண்டா.

பாகவத அபசாரம் பட்டுவிட்டால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? அல்லது எம்பெருமாள் சிக்ஷை கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா?

பெருமாள் தாயர் படங்கள் தனித்தனியே இருந்தால் தாயர் படம் பெருமாளின் வலது புறம் அல்லது இடது புறம் வைக்க வேண்டுமா? இந்தப் பக்கம்தான் தாயர் படம் என்று ஏதேனும் முக்கியத்வம் இருக்கிறதா?

வேலைக்குச் செல்வோர்கள் பணி முடிந்து திரும்பிய பின் சாயம் சந்தியாவனம் செய்யும் முன் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா அல்லது சந்தியாவனத்தில் வரும் ப்ரோக்ஷன மந்திரங்களே சுத்தியைத் தருமா? அஷ்டாக்ஷர ஜபம் அதில் செய்யவேண்டியிருப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்தது.

பரந்யாஸம் செய்துகொண்ட ஐயங்கார் பையன் வடதேச க்ஷத்ரிய பெண்ணை மணக்கலாமா? அப்படி மணந்தால் அவன் தன் தந்தைக்கு அந்திம கார்யம் செய்ய முடியுமா?

அடியேன் முந்தைய இதழில் கேட்ட ப்ரஹ்ம யஜ்ஞம் கேள்வியின் தொடர்ச்சி, இந்த ப்ரஹ்ம யஜ்ஞத்தின் ஆசமனத்தின் சிறப்பு என்ன? ஏன் மந்திர உச்சாடனம் இல்லாமல் செய்யவேண்டும்? அடியேன்.

சந்தியாவந்தனம் என்பது நேரத்தின் சம்பந்தத்தோடு செய்யவேண்டிய ஒன்று என்றும் ஸ்நானம் செய்யும் முன்னரும் செய்யலாம் என்றும் புரிகிறது. ஸ்நானம் செய்யாமல் சந்தியாவந்தனம் செய்ய என்ன க்ரமம்? மேலும் அதற்கு எவற்றையெல்லாம் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்?

வர்ஷாப்தீக க்ரமத்தில் போக்தாக்கும் கர்த்தாவிற்கும் என்ன நியமங்கள்? அடியேன்

துலா ரவி தர்ப்பணம் பற்றிய கேள்வி அடியேன் பஞ்சாங்கத்தில் துலா ரவி 58-28 நாழிகையில் பிறக்கிறது என்றுள்ளது. அப்படியென்றால் தர்ப்பணம் என்று செய்ய வேண்டும்? திங்கட்கிழமையா அல்லது செவ்வாய் கிழமையா? சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு தர்ப்பணம் பண்ண வேண்டுமா? அல்லது முன்பா? எப்போது தர்ப்பணம் பண்ண வேண்டும்?

அடியேனுக்கு அவ்வப்போது துர்ஸ்வபாவம் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முன்பெல்லாம் டிவி போன்ற கேளிக்கை விஷயங்களில் ஈடுப்பட்டு வந்தேன் ஆனால் ப்ரந்யாஸம் செய்தபின் காலத்தைக் கழிக்க சரியான வழி என்ற புரிதலால் அவையெல்லாவற்றையும் அறவே தவிர்த்து விட்டேன். ஆனால் அகத்தில் இருக்கும் பெரியவர்களோ, சொந்தங்களோ கேளிக்கைப் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் அப்படிப் பேச நேரும்போது ஏதோ ஒரு பொய்ச்சொல்லி தவிர்க்கின்றேன்.இப்படிச் செய்வதால் பாகவத அபசாரம் ஏற்படுமா? அவர்களிடம் அபசாரப் படாமல் இக்கேளிக்கைப் பேச்சிலிருந்து மெல்ல விலகுவது எப்படி? அகத்தின் வேலைகளை முடித்துவிட்டு எம்பெருமான் விஷயமான உபந்யாஸங்கள், 108 திவ்ய தேச வைபவம், காலக்ஷேபம் போன்றவற்றில் ஈடுபடுவதையும், பேசுவதையுமே மிகவும் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் இச்சிறிய வயதில் இவ்விஷயங்களில் அடியேன் ஈடுபடுவதை விரும்பவில்லை. அவர்களிடம் எப்படி எடுத்துரைப்பது? சில நேரம் அவர்கள் இப்படிச் சொல்வது எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

ஶ்ரவண துவாதசி எப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

க்ருஹத்தில் ஒரு நாள் முழுவதும் பெருமாள் சன்னதியில் தீபம் எரிந்துகொண்டு இருக்கலாமா?

திருவாராதனை சமயங்களில் நாம் எத்தனை பில் பவித்ரம் அணிந்து கொள்ளணும், எத்தனை பில் வரை அணிந்துக் கொள்ளலாம்.

சில vitamin குறைபாடுகளுக்காக நம் ஸம்ப்ரதாயத்தவர் சிலர் மஷ்ரூம், பூண்டு போன்ற நிஷித்த வஸ்துக்களை எடுத்துக்கொள்ள நேர்கிறது. இக்காய்களைத் தவிர்த்து நம் vitamin குறைபாடுகளை நீக்க வழி இருக்கிறதா?

எந்த ஹோமமோ, பூஜையோ ஆரம்பிக்கும் முன் இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணபதியை ஆவாஹணம் செய்கிறார்கள். அவ்வாறு நம் ஸம்ப்ரதாயத்தில் யாரை த்யானம்/ஆவாஹணம் செய்ய வேண்டும்?

ஶ்ரவண வ்ரதம் நிர்ணயம் ஶ்ரவண நக்ஷத்ர தினமும், ஶ்ரவண வ்ரத தினமும் வேறுபடுவது சாத்தியமா? ஶ்ரவண நக்ஷத்ரம் சூர்யோதயத்தில் இருந்து 12 நாழிகை இருக்கும் தினம் போதுமானதா ? அப்படியில்லாவிட்டால் முந்தைய தினத்தில் விரதம் அனுஷ்டிக்கலாமா ?

ஶ்ரவண-துவாதசி வ்ரதம் ( ஸ்ரீஸந்நிதி நிர்வாஹம்) வேதை – நக்ஷத்திரம், திதி – விலக்கப் பட வேண்டியது என்ன ? நக்ஷத்திரம்-திதி (ஶ்ரவண-த்வாதஶி) ஸம்பந்தம் குறைந்தது எவ்வளவு நாழிகைகள் இருக்க வேண்டும்?

17) ஶ்ரவண-துவாதசி அன்று 1) ஶ்ரவண வ்ரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் இல்லாதவர்கள், த்வாதஶி பாரணை பண்ணலாமா ? 2) அல்லது த்ரயோதசியில் தான் பாரணை என்று இருக்கும் போது, ஏகாதசியில் கௌணமாகவும் துவாதசி ப்ரதானமாகவும் கொண்டு உபவாஸ வ்ரத அனுஷ்டானம் செய்யலாமா ?

ஆவணி (ஸிம்ஹ மாஸம்)  ஶ்ரவணம் நக்ஷத்ரம் தினத்தில் தான் ஸ்ரீ ஹயக்ரீவ ஜயந்தியும் ஸ்ரீ வாமன ஜயந்தியும் கொண்டாடப் படுகிறதா ?

அடியேன் ஸ்வாமி வரப்போகும் சூரிய க்ரஹணம் பற்றிய சந்தேகம், மாலை 5 மணியளவில் ஸ்பர்ஸம் என்றும் அன்றைய தினம் போஜனம் இல்லை என்றும் பஞ்சாங்கத்தில் இருக்கிறது. அப்படியென்றால் 25ஆம் தேதி அன்றைய நாள் முழுவதும் போஜனம் உட்கொள்ளக் கூடாதா அல்லது காலையில் போஜனம் செய்து பின்னர் மறுநாள் சூர்யோதயத்திற்குப் பின் போஜனம் செய்ய வேண்டுமோ. விளக்கப்ரார்த்திக்கிறேன்.

நான் தென்கலையார். எங்களுக்கு ஸமாஶ்ரயணம் உண்டா? பரந்யாஸம் உண்டா? இவை உண்டு என்றால் நம் ஊரில் பக்கத்தில் உள்ள ஆசார்யன் இடம் ஸமாஶ்ரயணம் செய்து கொள்ளலாமா? அல்லது ஸ்ரீரங்கத்துக்குத்தான் செல்ல வேண்டுமா?”

ப்ரந்யாஸம் செய்யாதவர்களை ஒரு ப்ரபன்னன் சேவிக்கலாமா?

மஹாப்ரதோஷ சமயம் விஷ்ணு ஆராதனம் கூடாது – சரியா?

பெருமாளுக்குக் கண்ணாடி பாத்திரத்தில் தயிர் தோய்த்து அம்சை பண்ணலாமா?

மஹாப்ரதோஷம் ப்ரதான காலம் – சூர்ய அஸ்தமனத்திற்கு 1.1) முன்பா அல்லது பின்னரா – ப்ரதானம் எது  ? 1.2) எத்தனை நாழிகைகள் – முன்பும் பின்பும் (குறைந்த பக்ஷம், கட்டாயம்)

3) மஹாப்ரதோஷம் சமயம் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஆராதனம் விதி இருக்க & பொதுவாக மற்ற எல்லாம் (ஶ்லோகம்) நிஷேதமாய் இருக்க விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா – இது விஷ்ணுபரமா? ந்ருஸிம்ஹபரமா?(முக்கூர் லக்ஷ்மீ நரஸிம்ஹாச்சார் சுவாமி வ்யாஸம்) ந்ருஸிம்ஹ பர அனுஸந்தாந்தனத்துடன்  என்று கொண்டு, சொல்லலாமா ? ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஸந்நிதியில் / ப்ரதோஷ ஆராதனம் போது ப்ரதோஷ கால விலக்கு என்றில்லாமல் (ஸ்ரீ ந்ருஸிம்ஹன் ஶ்லோகம், பாசுரம் மட்டும் என்ற) எந்த அநுவாகம், ஶ்லோகம், பாசுரம் வேண்டுமானாலும் ஸேவிக்கலாமா ?

மஹாப்ரதோஷம் சமயம், மாஸிக ஶ்ரவண/ திருவோண நக்ஷத்ர ஸேவா காலம் கோஷ்டி ஸாயம் கால வேளையில் அனுஷ்டிக்கலாமா ? பாரணை/ ததீயாராதனை குறைந்தது எத்தனை நாழிகைக்கு மேல் (அஸ்தமன பின்பு) செய்யலாம் ?

புரட்டாசி ஶ்ரவணத்தையொட்டி தேசிக உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும்.அந்தச் சமயம் அத்யாபக கோஷ்டி பாகவதர்களுக்குத் தினமும் மதியம் ததீயாராதனை பிரசாதம் ஸாதிக்க 1-30-3-30 சென்று விடுவேன். காலையும் மாலையும் கோவிலில் ஆராதனை நடக்கும். தற்போது என்ன குழப்பம் என்றால் அந்த மதிய வேளையில் காலக்ஷேபம் , ஸ்தோத்ரம், திவ்ய ப்ரபந்தம் வகுப்பு இருக்கிறது.அடியேன் என்ன செய்வது?

அடியேன் தாஸன் , என் பையன் USAவில் இருக்கான் அவன் பெண் குழந்தைக்கு 2 வயதாகுகிறது, அவர்கள் இந்தியாவிற்கு வர மேலும் 2 வருடமாகும். அக்குழந்தைக்குக் காதுகுத்தி முடிஇறக்கனும். பெண் குழந்தையென்பதால் 5 வயதிற்கு மேல் செய்தால் சரியாக இருக்குமா எனத்தெரியவில்லை. ஆகையால் அங்கேயே முடியிறக்க, சிறிய முடியை எடுத்து மஞ்சள் துணியில் முடித்து எங்கள் குலதெய்வமான சோளிங்கர் நரசிம்மனுக்கு இங்கு வரும் சமயம் சேர்க்கலாமா? திருப்பதி மற்றும் திருவள்ளூர் எம்பெருமானுக்கும் முடியிறக்கும் வழக்கம் உண்டு. என்ன செய்யலாம் என்று ஆலோசனை வழங்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனுக்கு அவ்வப்போது துர்ஸ்வப்னம் வருகிறது, அவ்வாறு வந்தால் அதைத் தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்கிறது, இதைத் தவிர்க்க என்ன செய்வது..

தசாகத்திற்கு (10ம் நாள்) போய் விட்டு வந்தால் பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டுமா? (தீட்டு இல்லாதவர்கள்)

அடியேன் வ்ராத்ய வர்ணத்தைச் சேர்ந்தவன். a. எனக்கு இருக்கும் உபநயனம் மற்றும் வேதம் ஓதும் அதிகாரத்தை எப்படிப் பெறுவது? அவைகளைப் பெற ஏதேனும் ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டுமா? b. மோக்ஷம் பெற ப்ரந்யாஸம் கட்டாயமா? தென்னாசார்யர் ஸம்ப்ரதாயகாரரகள் அது அவசியம் இல்லை என்கிறார்கள். ஆனால் எனக்கு வடகலை ஸம்ப்ரதாயப்படி செய்ய வேண்டும் என்ற ஆசை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏன் இந்த வேறுபாடு?

யாரேனும் க்ருஹத்தில் தவறிவிட்டால் ஒரு வருடம் கோலம் போட கூடாது என்கிறார்கள் அதனுடைய வைதிக ரீதியான சமாதானம் என்னவென்று தெரியபடுத்த ப்ரார்த்திகிறேன்

கயா ஶ்ராத்தம் செய்யும்போது நம் வைகுண்டவாசியான ஆசார்யனுக்கும் சேர்த்து ஶ்ராத்தம் செய்ய வேண்டுமா?

அகத்தில் பள்ளிக்குச் செல்லும் பேரன் இருக்கிறான் அடியேனுக்கு பரந்யாஸம் ஆகிவிட்டத்து. விநாயகசதுர்த்தி கொண்டாடலாமா?

35.a. என் மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.எனது புத்திரனின் உபநயனம் ஜூலை மாதம் 6 அன்று நடந்தது.அவனுக்கு எப்பொழுது ஆவணி அவிட்டம் நடத்த வேண்டும்.கணவருக்கு அமாவாசை தர்ப்பணம் உண்டா ஒரு வருடத்திற்கு. b. எனது மாமனார் ஆகஸ்ட் 5 அன்று காலமானார்.கணவருக்கு மஹாளயபக்ஷம் உண்டா

34. a. புக்ககத்தில் எல்லோரும் வயதில் மூத்தவர்கள்.அடியோங்கள் இளயவர்களாக இருக்கும் பக்ஷத்தில், அவர்களைச் சேவிக்கும் சந்தர்ப்பம் வருகிறது.அவர்கள் ப்ரபத்தி பண்ணிக்கல.இதர தேவதா சம்பந்தம் இருக்கு.என்ன பண்ணலாம்? b. நவராத்திரி கொலு நாட்களில் இதர ஜாதியினர். வீட்டுக்கு வந்தால் வெற்றிலை பாக்கு கொடுக்கலாமா?கொலுவிற்கு அய்யர் வீட்டில் அடியேன் போய் வெற்றிலை பாக்கு எடுத்துக் கொள்ளலாமா? c. இதர ஜாதியினர் வீட்டு நல்லது கெட்டதுக்கு தலை காமிக்க போலாமா? d. ப்ரபத்தி ஆனவர்கள் (ஆத்து வழக்கம் ) சுமங்கலி ப்ரார்த்தனை செய்யலாமா? e.

திருமஞ்சன கட்டியம் சேவிப்பதின் விசேஷம் என்ன?

அடியேன் உக்தி நிஷ்டையில் பரந்யாஸம் செய்துகொண்டேன். சில சமயங்கள் நம் பரந்யாஸம் சரியாக நடந்ததா என்று பயத்தினாலும், அறியாமையினாலும் யோசித்திருக்கிறேன். பரந்யாஸத்திற்கு, ஆசார்யன் மற்றும் எம்பெருமான் மீது மஹாவிஶ்வாஸம் வேண்டும் என்று புரிந்துகொண்டேன். தவறுதலாக நினைத்ததை எண்ணி இன்று வருந்துகிறேன். அகத்தில் இருக்கும் சாளக்கிராம் எம்பெருமானிடமும் ஆசார்யன் பாதுகையிடமும் பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறேன். என் பயமே என்னை இவ்வாறு தவறுதலாக நினைக்கச் செய்ததென்று. இதற்கு ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?

நாம் வெளிநாடு செல்லும் போது எத்தனை சாளக்கிராம மூர்த்திகள் எடுத்துச் செல்ல வேண்டும்? ஏதேனும் கணக்கு உண்டா?

பெரிய திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம், புரட்டாசி அனுஷமா? அல்லது வைகாசி ஸ்வாதியா? இந்தக் கட்டுரையில் ஸ்ரீமத் பஞ்சமத பஞ்ஜநம் தாததேஶிகன் அவர்கள் திருமலைநம்பிகளின் திருநக்ஷத்ரத்தில் அவதரித்தார் என்று உள்ளது. மேலும் திருமலை திருப்பதியில் புரட்டாசி அனுஷத்தில்தான் திருமலை நம்பிகளின் திருநக்ஷத்ரம் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

ஶாஸ்த்ரத்தின் படி ஒருவர் தானே க்ஷௌரம், முடிதிருத்தம் போன்றவை கூடாதென்று சொல்லுகிறது. ஆனால் இக்காலத்தில் வேலை இருக்கும் இடம் காரணமாக, அப்படிக் கடைபிடிக்க முடியவில்லை. இதற்கு ப்ராயஶ்சித்தம் உள்ளதா?

எகல் முடிந்தபின் (13ஆம் நாள்) பரிவட்டங்களை என்ன செய்ய வேண்டும்?

அடியேன் தஞ்சாவூரில் இருக்கும் ராஜ மடம் சந்தான ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் கைங்கர்யத்திற்காக இயன்றளவு பணம் அனுப்பிவந்தேன். அங்கே பிள்ளையார் இருப்பது சமீபமாகதான் அடியேனுக்குத் தெரியவந்தது அதன்பின் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். மேலும் அடியேனின் பணம் அப்பிள்ளையார் சந்நிதி கைங்கர்யத்திற்கும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். இதனால் அடியேனுக்குத் தேவதாந்தர சம்பந்தம் என்ற தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி?

ப்ரஹ்ம யக்ஞத்தின்போது செய்யப்படும் ஆசமனம், மந்த்ரம் இல்லாமல் செய்யப்பட வேண்டுமா?

அடியேன் அகத்தில் சாளக்கிராம பெருமாளுடன், சிறிய க்ருஷ்ணர் போன்ற விக்ரஹ எம்பெருமான்கள் எழுந்தருளியிருக்கின்றனர். அவர்கள் பக்கத்தில் வேறுஒரு சிறிய விக்ரஹம் இருந்தது மிகச்சிறியளவில் இருந்ததால் என்ன விக்ரஹமென்று தெரியாமல் எம்பெருமானுக்குச் சமர்ப்பிப்பதுபோல் புஷ்பாதிகள் சமர்ப்பித்து சேவித்தும் வந்தேன். இப்போதுதான் அது சரஸ்வதி விக்ரஹம் என்று தெரிய வந்தது இதனால் பரந்யாஸம் ஆன அடியேனுக்குத் தேவதந்தர தோஷம் ஏற்பட்டிருக்குமா ஸ்வாமி? ஏதேனும் ப்ராயஶ்சித்தம் உண்டா?

கோயிலில் இருக்கும் த்வாரபாலகர்கள்,ஆஞ்சநேயர் போன்றவர்களை எப்படிச் சேவிக்க வேண்டும்.

சாளக்கிராம திருவாராதனை எப்படிச் செய்ய வேண்டும்? அடியேனின் ஆத்துக்காரர் தினமும் சாளக்கிராம மூர்த்திக்கு பால் தயிர் கொண்டு திருமஞ்சனம் மட்டும் செய்வார். முறையாக எப்படிச் செய்வது?

“விருத்தி தீட்டு உள்ள நாட்களில் காலக்ஷேபங்களில் அன்வயிக்கக் கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். உபந்யாஸங்கள் கேட்கலாமா? தெரிவிக்க பிரார்த்திக்கிறேன்.

இங்கு USAல், தென்னாசார்யர் ஸம்ப்ரதாயத்தைப் பின்பற்றும் கோயில்தான் அகத்துப் பக்கத்தில் உள்ளது. சாற்றுமுறை சமயம் நம் ஸம்ப்ரதாயத் தனியனைச் சேவிக்கலாமா? மேலும் தென்னாசார்யர்கள் சொல்லும் அவர்கள் ஆசார்யன் (ஸ்ரீபாஷ்யகார ஸம்ப்ரதாயத்தைப் பின் பற்றுபவர்கள் என்பதால் அவர்களின்) தனியனையும் சேவிக்கலாமா?

அடியேன் USAல் இருப்பதால் ஸ்ரீரங்கம், காஞ்சி போன்ற திவ்யதேசங்களுக்கு போகமுடியாமல் இருக்கின்றோம். இங்கே இருக்கும் எம்பெருமானின் திவ்யமங்கள ரூபத்தில் ஈடுபட்டால், எங்கே திவ்யதேச எம்பெருமானைப் போய்ச் சேவிக்கும் பாக்கியம் கிட்டாதோ என்ற ஒரு ஐயம் எழுகிறது. இப்படி எம்பெருமானின் அர்ச்சாமூர்த்தியில் பேதம் பார்ப்பது சரியா ஸ்வாமி? ஏதேனும் தேஷமாகுமா?

வரப்போகும் சூர்ய க்ரஹணம் பற்றிய கேள்வி: – க்ரஹண காலத்தில் பொதுவாக அடியேன் மடியாய் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், அஷ்டாக்ஷர ஜபம் பின் க்ரஹணகால முடிவில் தர்ப்பணம் பண்ணுவது வழக்கம் a. இந்தக் காலத்தில் சாளக்கிராம மூர்த்திக்கு (நித்யபடிச் செய்யும்) திருவாராதனை பண்ணலாம் என்று கேள்விபட்டேன். இது சரியா? b. க்ரஹணகால திருவாராதனை என்று ஏதேனும் விசேஷ திருவாராதனை இருக்கிறதா? c. க்ரஹணகால திருவாராதனையின் போது பால், பழம், கற்கண்டு மட்டும் பெருமாளுக்கு அம்சைபண்ணலாமா?

நித்யபடி திருவாராதனை சமயம் பலா, அன்னாசி போன்ற பழங்கள் முழுவதாக இல்லாமல் உரித்த (சிறு துண்டுகளாக அரிந்து) பழங்களை வாங்கி ஸமர்ப்பிக்கலாமா? அதே போல் முழுப்பாக்குதான் வெற்றிலையோடு ஸமர்ப்பிக்க வேண்டுமா? அடியேன் உடைத்த பாக்குதான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன்.

கோயிலில் கொடுக்கும் பவித்ர மாலைகளை என்ன செய்ய வேண்டும்? பழைய பவித்ரமாலைகள் இருந்தால் அதை என்ன செய்தல் வேண்டும்?

சென்ற சுதர்சன இதழில் அகத்திலிருப்பவர்களுக்குப் பெருமாள் தீர்த்தம் மூன்று முறை கொடுக்கலாம் என்று பதில் அளித்திருந்தீர்கள். அகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் மூன்று முறையா அல்லது ஸமாஶ்ரயணம் ஆனவர்களுக்குத்தான் மூன்று முறையா என்பதை தெளியப்படுத்தவும்.

இத்தனை மணிக்காலத்திற்குள் என்ற நேர நிர்ணயம் சந்தியாவந்தனம் செய்ய இருக்கின்றதா? உதா: இரவு 10மணிக்குள் என்பது போல். சில நேரம் பயணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண இயலாது, அந்தச் சமயம் என்ன செய்வது ஏதேனும் ப்ராயஶ்சித்தம் இருக்கிறதா?

நமஸ்காரம், அடியேனுக்கு வேலை காரணமாக நிறைய ஶ்லோகங்கள் சேவிக்க முடியவில்லை, எளிமையான நித்தியபடி என்ன சேவிக்கலாம்

சமீபத்தில் அடியேன் கேட்டறிந்து கொண்டது பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது பரந்யாஸம் ஆனவர்கள்தான் ரஹஸ்ய த்ரயத்தை அனுசந்திக்க வேண்டும் என்று. அடியேனுக்கு இவை இரண்டும் இன்னும் ஆகவில்லை.ஆனால் அடியேன் வேதமும், ஸ்ரீமத் பகவத் கீதையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதன் மூலம் அஷ்டாக்ஷரம் மற்றும் சரம ஶ்லோகம் கேட்டறிந்தேன். மேலும், அடியேன் புரிந்துகொண்டது த்வயம் ஸ்ரீமத் இராமாயணத்தில் ஒரு பகுதியாக வருகிறது என்று. அடியேன் கேள்வி பரந்யாஸம் அல்லது ஸமாஶ்ரயணம் ஆகாதவர்கள் ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீமத் பகவத் கீதா மற்றும் உபநிஷத்கள் சேவிக்கக்கூடாதா?

பெருமாளுக்குத் தீர்த்தவாரி கண்டருளிய சமயம் எம்பெருமாள் உடுத்திக் களைந்த வஸ்த்ரத்தை அப்படியே உலர்த்தி மீண்டும் உபயோகிக்கலாமா அல்லது நன்கு சலவை செய்து தான் உபயோகிக்கவேண்டுமா?

நித்யமும் பெருமாள் சன்னிதியில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாமா?

ஆசார்யன் தனியனை மடிசார் உடுத்திக்கொண்டுதான் சேவிக்க வேண்டுமா?

அகத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளுக்கு ஏலக்காய் மாலை அணிவிக்கலாமா. அவருக்கு அணிவித்த ஏலக்காய் மாலையை என்ன செய்வது?

மடி வஸ்த்ரத்தைக் கையால் எடுத்து உலர்த்தலாமா அல்லது குச்சிகொண்டுதான் உலர்த்த வேண்டுமா? மேலும் தற்போது வந்துள்ள வயர் (போன்ற கயிறு) அல்லது ஸ்டீல் குச்சிகளில் மடி வஸ்த்ரம் உலர்த்தலாமா?

“ஸ்தீரிகள் அஷ்டாக்ஷ்ர மந்த்ரம், த்வயம் மந்த்ரம், சரமஸ்லோகம், ஸ்ரீ மந்த்ரம் எவ்வளவு ஜபிக்க வேண்டும். 108,10,10,108 என்ற எண்ணிக்கை சரியானதா? மேலும் இவற்றிற்கு த்யான ஸ்லோகம் அவசியம் சொல்லணுமா”

அடியேன் பரந்யாஸம் செய்துள்ளேன், அடியேன் கேள்விபட்டது பரஸமர்ப்பணம் செய்தவர்கள் தேவதாந்த்ர சம்பந்தம் கொண்டவர்களை நமஸ்கரிக்கக் கூடாதென்று. அடியேனின் மாமனார் மாமியார் இருவருக்கும் தேவதாந்த்ர ஸம்பந்தம் கொண்டவர்கள். அவர்களைச் சேவிக்க நேரும்போது என்ன செய்வது? எம்பெருமான் அனைத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று எண்ணி அவர்களைச் சேவிக்கலாமா? இதனால் மோக்ஷம் தடையாகுமா?

எத்தனை முறை ஒருவர் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்துகொள்வது? எப்போதெல்லாம் தவறிழைக்கிறோமோ உடனே செய்ய வேண்டுமா? அல்லது ஒருமுறைதான் செய்ய வேண்டுமா?

ப்ரபத்தி செய்துகொண்டபின்னும் பல காலம் தேவதாந்தரம் சம்பந்தத்துடன் ஒருவர் இருக்கிறார், பின் தன் கடைசிகாலத்தில் பெருமாள் மீது மஹாவிஶ்வாஸம் வந்து பரமைகாந்தியாக மாறினால் அவர் முன் செய்த ப்ரபத்தியை பெருமாள் ஏற்பாரா? அல்லது மீண்டும் ப்ராயசித்த ப்ரபத்தி செய்ய வேண்டுமா? இப்படிச் செய்வதால் அவரின் தேவதாந்தர ஸம்பந்தத்தால் ஏற்பட்ட பாபம் போகுமா? அல்லது பெருமாள் சிக்ஷை கொடுத்து தான் மோக்ஷம் கொடுப்பாரா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

அடியேன் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ஒப்பில்லியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும் உட்கொண்டேன். பரந்யாஸம் செய்தவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுக்கும் பெருமாள் ப்ரசாதத்தை ஏற்கலாமா? இல்லை தோஷமாகுமா?

தக்ஷிணாயன புண்ய காலம் தர்ப்பணம் பற்றியதான சந்தேகம். ஸ்ரீமத் வில்லிவலம் அழகியசிங்கரின் ஆன்ஹிக க்ரந்த அனுபந்தம் பக்கம் 24லின்படி தக்ஷிணாயன புண்ணியகால தர்ப்பணம் உத்தராயணத்தில் பண்ணவேண்டும் என்று இருக்கிறது.ஆகிலும் சேவா ஸ்வாமி Diary மற்றும் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் தர்ப்பணம் ஞாயிற்றுக்கிழமை என்று குறித்துள்ளது.வைதீக மித்ரனில் சனிக்கிழமை அன்று தர்ப்பணம் என்றுள்ளது.தயை கூர்ந்து தர்ப்பணம் என்று செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தவும்

யதிகளின் ப்ருந்தாவனத்திற்குச் சென்று வந்தபின் தீர்த்தமாட வேண்டுமா?

ஜன்ம நக்ஷத்ரம் கொண்டாட என்று அந்த நக்ஷத்ரம் அதிகமாக இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா அல்லது என்று சூர்யோதய சமயம் அந்த நக்ஷத்ரம் இருக்கின்றதோ அன்று கொண்டாட வேண்டுமா தெளியபடுத்தவும்.

பெருமாள் தீர்த்தம் எத்தனை தடவை ஸ்வீகரிக்கவேண்டும்.

வடகலை நித்யானுசந்தானங்கள் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.

அடியேன் ஸ்வாமி திருவோண நக்ஷத்ரம் முதல்நாள் மதியம் 2 மணி முதல் மறுநாள் மதியம் வரை இருந்தால் திருவோண விரதம் என்று இருக்க வேண்டும்? முதல்நாள் என்றால் அன்று விரதம் மேற்கொள்ள முடியாத பட்சத்தில் மறுநாள் இருக்கலாமா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன். தன்யோஸ்மி.

நம் ஸ்ரீவைஷ்ணவ நித்யகர்மானுஷ்டானம் பற்றி அறிவது எப்படி?

நாங்கள் இருவரும் ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் பெற்றுக்கொண்டவர்கள். என் அகவை 70, என் மனைவி வெளியூர் செல்லும் நேரங்களில் நான் கடைகளிலிருந்துதான் உணவு வாங்கும்படி நேர்கிறது. மேலும் நான் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்கிறேன். இப்படி வெளியே சாப்பிட நேரும்போது என்ன செய்ய வேண்டும். வழிகாட்டவும்.

திருவாராதனத்தின் போது பெருமாளுக்குச் சாற்றிய புஷ்பங்கள், துளசியை என்ன செய்வது (அகத்தில் எல்லாருக்கும் கொடுத்தபின்). அப்படியே பெருமாள் பெட்டியிலே வைத்திருப்பதா அல்லது எங்கே ஸமர்பிப்பது?

என் பேரன் 17 ஜூன் அதிகாலை 01.18am IST அப்போது பிறந்தான், அவனுக்கு புண்ணியாகவாசம் 27ஆம் அல்லது 28ஆம் செய்ய வேண்டுமா?

” ஆசார்யன் திருநக்ஷத்ரம் நிர்ணயம்: 1. சூர்யோதயத்தில் ஜன்ம திருநக்ஷத்ரம் 1 விநாடி இருந்தாலும்கூட போதுமானதா ? 2. நக்ஷத்ரம் 2 நாட்களில் வந்தால் எந்த நாளைக் கொள்வது? 3. வேதை : திருநக்ஷத்ரத்தில் வேதை விலக்கு (முந்தைய நக்ஷத்ரம் நேரம்) உண்டா? 4.திருநக்ஷத்ரம் குறைந்தது 12 அல்லது 16 நாழிகைகள் போன்று இருக்க வேண்டுமென்றால், அது சூர்ய அஸ்தமனத்திற்குள் இருக்க வேண்டுமா? அல்லது அடுத்த நாள் காலை சூர்யோதயம் வரைக்கும் இருந்தால் கூட போதுமானதா ? 5. மேற்கூறிய நிர்ணயத்தை ஶ்ரவண நக்ஷத்ரம் அல்லது நக்ஷத்ரம் ஆதாரமாகக் கொண்ட (வாமன, ஹயக்ரீவ) ஜயந்திக்கும் கொள்ளலாமா?

அடியேன் கோயிலில் திருமஞ்ஜன கைங்கர்யம் ஏற்றக்கொள்ளும் பொழுதும் அகத்தில் ஸுதர்ஶந ஹோமம் செய்யும் பொழுதும் ப்ரபன்னர்கள் “பகவத் ப்ரீத்யர்த்தம்” என்று சங்கல்பம் செய்யவேண்டுமா அல்லது கோத்ரம் நக்ஷத்ரம் பெயர் சொல்லுவது சரியா?

நாம் வெளிநாட்டிற்கோ அல்லது வேறு ஊருக்கோ செல்வதானால் அமாவாஸை அன்று ப்ரயாணம் செய்யலாமா? எந்த ஒரு நல்ல காரியத்தையும் அமாவாஸை அன்று தொடங்கலாமா?

சென்ற சுதர்சனத்தில் அடியேனின் கேள்விக்கு ஸ்வாமி ஸாதித்தது ஒரு ஸ்ரீவைஷ்ணவர், ஸ்ரீவைஷ்ணவரல்லாதவர் கொடுத்த ப்ரசாதம் (பெருமாள் ப்ரசாதமாக இருந்தாலும்) உட்கொண்டால் அது தோஷம்தான் என்று தெளிவுபடுத்தினீர்கள். அடியேன் அன்று தெரியாமல் (ஒப்பிலியப்பனின் ப்ரசாதம்(சர்க்கரைப்பொங்கல்) மற்றும் திருப்பதி லட்டு ப்ரசாதமும்) உட்கொண்டேன் இதனால் ஏதேனும் பாபம் ஏற்பட்டிருக்குமா? அப்படியானால் ஏதேனும் ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுமா?

அடியேன் ஏதோ உபந்யாஸத்தில் கேட்ட விஷயம், ப்ரபத்தி செய்தபின்னும் தன் கடைசிகாலம் வரை ஒருவருக்கு தேவதாந்தரம் சம்பந்தம் இருந்ததென்றால் அவருக்கு ப்ரபத்தி சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம் என்று சாதித்தார்கள். இது சரியா ஸ்வாமி? ஆசார்ய நிஷ்டை அல்லது உக்தி நிஷ்டையில் செய்யப்பட்ட ப்ரபத்தி தவறாகது அல்லவா ஸ்வாமி? அப்படியானால் அவர்காள் குறிப்பிடும் தவறு என்பது ஸ்வநிஷ்டை அல்லது ப்ரபத்தியை செய்து வைக்கும் தகுதி பெறாதவர் செய்திருந்தால் அப்படி நடக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்வது ஸ்வாமி. அடியேன்

சந்த்ராஷ்டமம் என்றால் என்ன? சந்த்ராஷ்டமத்தின் போது செய்யத் தக்கன, மற்றும் செய்யத் தகாதன யாவை? ஸ்ரீவைஷ்ணவர்கள் இதற்கு முக்கியத்துவம் தரலாமா? எவ்வாறு இதை எதிர்கொள்வது?

பூணூல் போட்ட பிராமச்சாரி பையன் 12 திருமண் இட்டு கொள்ளலாமா?

என்னுடைய தகப்பனாரின் ஶ்ராத்த திதி ஆவணி ஸப்தமி. இந்த வருட பஞ்சாங்கத்தில் ஆவணி ஸப்தமி என்று 3 தினம் கொடுத்திருக்கிறார்கள் (ஆவணி 2,17,32) இதில் எந்தத் தேதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். மேலும் பொதுவாக கோகுலஷ்டமிக்கு ஒருநாள் முன்னதாக அவரின் திதி வரும். குழப்பத்தைத் தெளிவுபடுத்தவும்.

அடியேன், நித்யப்படி நம் ஆத்துப்பெருமாளுக்கு, சாளக்கிராம மற்றும் விக்ரஹம் இருப்பின் இரண்டுவேளை திருவாராதனம் செய்யலாமா அல்லது ஒருவேளை திருவாராதனம் மட்டுமா அடியேன்?

ஶரணாகதி பற்றியது. அடியேன் ஶரணாகதி செய்துகொள்ள விழைகிறேன். அசௌகர்யம் என்னவென்றால், அடியேன் நரம்பு மண்டலம் பாதிப்பால் ஆசார்யார் வைபவத்தில் உட்காந்து எழுந்திருக்க /சேவிக்கமுடியாதவனாக இருக்கிறேன். எனக்கு ஶரணாகதி உபதேசம் பெறும் பாக்கியம் கிடைக்குமா?

ஏகாதசி அன்று உளுத்தம்பருப்பைத் தளிகைக்குச் சேர்த்துக்கொள்ளலாமா? வயதானவர்களுக்காக ரவை உப்புமா மற்றும் குழம்பு அல்லது அரிசி உப்புமா, இட்லி போன்றவை செய்ய நேரிடும். இதில் உளுத்தம்பருப்பு உபயோகிக்கலாமா (தாளிப்பதற்கு)?

பரந்யாஸம் செய்துகொண்ட நாளை எந்த அடிப்படையில் கொண்டாட வேண்டும்? அதாவது நக்ஷத்ரம்/திதி/தேதி இதில் எதன் அடிப்படையில் கொண்டாட வேண்டும்.

எங்கள் பூர்வர்கள் திருநெல்வேலி கீழ்ப்பாட்டத்தில் இருந்து நெடுந்தெருவிற்கும் அதன்பின் ஸ்ரீரங்கத்திற்கு வந்து குடியேறினார்கள். எங்களின் குலதெய்வம் யார் என்று சரியாகத் தெரியவில்லை. ஒருகாலத்தில் கீழ்ப்பாட்டத்தில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிக்கோவில் இருந்ததாகவும் தற்போது அந்தக் கோவில் இல்லை மேலும் சக்கரத்தாழ்வார் அருகில் இருக்கும் வேறு ஒரு கோவிலில் ஏளியிருக்கிறார். நாங்கள் சிலநாட்கள் முன்பு நெடுந்தெருவில் இருக்கும் ப்ரசன்ன ராஜகோபால ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்தோம். நாங்கள் யாரைக் குலதெய்வமென்று ஏற்பது?

ஒருநாளில் எத்தனை முறை ஆசார்யன் தனியனைச் சேவிக்க வேண்டும்? அஸ்மத் தேஶிகம் அஸ்மதீய ஶ்லோகம் கற்க ஏதேனும் வழியுண்டா?

சாயம் ஸந்தியாவில் (தற்போது உபயோகிக்கும் மணைக்குப் பதிலாக) தர்ப்பத்தினாலான பாய் மீது அமர்ந்து கொண்டு காயத்ரி மஹாமந்திரம் ஜபிக்கலாமா? தர்ப்பண காலத்திலும் ஆசனமாக பயன்படுத்தலாமா?

ஆசாரம் பற்றி விரிவாக அறிய என்ன வழி? அதே போல் விஶிஷ்டாத்வைத தத்துவத்தின் அடிப்படை என்ன என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஆஹார நியமப்படி பொதுவாக நிஷித்தமான காய்கறிகள், பழங்கள் எவையெவை என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன் (தர்பூசணி, தக்காளி, முருக்கை போன்றவை).

பூண்டு போன்ற நிஷித்த வஸ்துவை மருந்தாக உட்கொள்ளலாமா? (இருமல், சளி போன்ற சமயம் பூண்டு பால் நல்லது என்பார்கள்)

பரிசேஷனத்துக்கு நெய் சேர்க்கும்போது இரண்டு தடவை சேர்க்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். சரியா என்று தெரிவிக்கப் பிரார்த்திக்கிறேன்.

ஶரணாகதி செய்து கொண்ட தம்பதியர் ஶஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளலாமா? எந்த முறையில் செய்தால் உசிதம்? அடியேன் திவ்ய தேசங்களில் வசிக்கிறோம். கிராமமாக இருப்பதால் இதர தேவதை கோயில்கள் உள்ளன. அதற்கு நிதி கேட்கிறார்கள்.பகவத் ஆராதனமாக குடுக்கலாமா? சிலபேர் புரிந்து கொள்வதில்லை. அடியேன் வடகலை. இங்கு தென்கலை கோயில் உள்ளது தினமும் பெருமாள் சேவிக்கிறேன். தென்கலை கோயில்களில் இதர தேவதைகள் இருக்கிறது. அதனால் அந்தக் கோயிலுக்குப் போலாமா?

1.பூஜை அறையில் ஸ்வாமி படங்களை எந்தத் திசை நோக்கி இருக்கக்கூடாது? 2.பித்ரு படங்கள் எந்தத் திசை நோக்கி இருக்க வேண்டும்?

ஒருவர் தன் சிறுவயதிலேயே ப்ரபத்தி செய்துவிட்டார். அதன் பின் அறிந்தும் அறியாமலும் அவர் பல பாபங்கள் செய்கிறார். அப்படியிருக்க அடியேன் புரிந்துகொண்டவரை அறியாமல் செய்த பாபங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆனால் அவர் தெரிந்துச்செய்த பாபத்திற்கு ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்தால் தான் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படாது. அடியேனின் இந்தப் புரிதல் சரியா ஸ்வாமி? மேலும் ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யாவிட்டால் என்ன ஆகும் ஸ்வாமி?

காஞ்சி மற்றும் மேல்கோட்டையில் உற்சவப்பெருமாள் அருகில் இருக்கும் இரண்டு நாச்சியார்களும் ஒரே மாதிரி வடிவத்துடன் அதாவது இருவரும் வலக்கையில் தான் தாமரை ஏந்தியிருப்பார்கள். அதே மற்ற திவ்யதேசங்களில் ஸ்ரீதேவி நாச்சியார் வலக்கையிலும், பூதேவி நாச்சியார் இடக்கையிலும் வைத்திருப்பார்கள். மேற்சொன்ன இருக்ஷேத்ரத்தில் ஒரே கையில் புஷ்பம் இருப்பதற்கு ஏதேனும் குறிப்பிட்டக் காரணம் இருக்கிறதா?

எம்பெருமான் திருமஞ்சனம் கண்டருளுவதை அனைவரும் சேவிக்கின்றோம். ஆனால் எம்பெருமான் அம்சை பண்ணும்போது திரையிடக்காரணம் என்ன?

தர்பணம் செய்த பிறகு மீதம் இருக்கும் எள்ளை என்ன செய்ய வேண்டும், நாம் எங்கு இருந்து எடுத்தோமோ அதே பெட்டியில் மீண்டும் சேர்த்துவிட்டு அடுத்த முறைக்கு உபயோகிக்கலாமா? சிலர் அது சேஷம் அப்படிச் செய்யக்கூடாது அதை புக்னத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

சேமியாவை உபயோகப்படுத்தி செய்யும் திருக்கண்ணமுதைப் பெருமாளுக்கு நைவேத்தியம் பண்ணலாமா?

நாம் எந்தெந்த ஸமயங்களில் பூணூலை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்தெந்த தீட்டுக்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். தெரியப்படுத்த ப்ரார்த்திக்கிறேன்

திருவாராதனம் போன்ற வைதீக க்ரமங்களுக்கு “மடி” வஸ்த்ரம் மற்றும் “ஊர்த்வ புண்டரம்”அணிவதின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன், நமஸ்காரம். ஒரு ஆசார்யனிடம் ஸமாஶ்ரயணமும், அதே மடத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசார்யனிடம் பரந்யாஸமும் செய்து கொண்டால் , யாரை நம் ஆசார்யன் என்று சொல்ல வேண்டும்? மேலும் அதற்கான காரணத்தையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி .

அடியேனுடைய தகப்பனார், தாயார் இருவருமே ஒரே வருடத்தில் அடுத்தடுத்து பரமபதித்துவிட்டனர். அண்ணாவுக்கு இருதய நோய் வந்து ஆபரேஷன் செய்யது கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது . இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அண்ணாவின் போக்கு மிகவும் கவலையாக உள்ளது. ரொம்பவும் கோபப்படுவது, கண்டபடி பேசுவது என்று நடந்து கொள்கிறார். இதனால் மன்னி மிகவும் வேதனை படுகிறார். அண்ணாவின் இந்தப் போக்கு மாறுவதற்கு பரிகாரம் ஏதேனும் உண்டா? என்ன ஸ்லோகம் சொல்லவேண்டும். இதற்கு ஒருவழி சொல்லும்படி ப்ரார்த்திக்கிறேன் ஸ்வாமி. அடியேன் தன்யாஸ்மி.

நான் 45 ஆவது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கரிடம் ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொண்டேன். ஒரு தகுதியான குருவின் கீழ் ரஹஸ்ய த்ரயம் காலக்ஷேபம் செய்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. அது ஒரு தடையா? எனது பேரனைப் பார்த்துக்கொள்வதற்காக நான் அடிக்கடி அமெரிக்காவிற்குச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. 12 மணிநேரம் கால வித்தியாசம் இருப்பதால் என்னால் இணையவழி நிகழ்நிலை காலக்ஷேபத்தில் கலந்துகொள்ள முடிவதில்லை. நான் நித்ய மற்றும் நைமித்திக கர்மாக்களைத் தவறாமல் செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை ஸ்லோகங்களை சொல்கின்றேன். காலக்ஷேபம் செய்வது கட்டாயமா? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி

அடியேன் க்ருஹத்தில் பெருமாள் திருவராதனையை கோவிலுக்குச் சென்று திரும்பி வந்த பின் பண்ணலாமா அல்லது குளித்துவிட்டு பண்ணவேண்டுமா? இல்லை கோவிலுக்கு போவதற்க்கு முன்னே பெருமாள் திருவராதனையைப் பண்ணிவிட்டுதான் செல்ல வேண்டுமா? தவறாக இருந்தால் க்ஷமிக்கவும். தன்யாஸ்மி

நமஸ்காரம் ஸ்வாமி. ஒருவர் உபநயனமும், ஸமாஶ்ரயணமும் செய்து கொண்ட பின் த்ரிகால சந்தியாவந்தனம் செய்யாமல் இருக்கும் பக்ஷத்தில், ஆசார்யனிடம் ப்ரபத்தி செய்துகொண்டால் பலன் கிட்டுமா? ப்ரபத்திக்கு த்ரிகால சந்தியாவந்தனம் செய்வது அவசியமா? சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பவர்களுக்கு எந்த வைதிக கர்மாவும் செய்யத் தகுதி இல்லை என்று சொல்வார்கள். ப்ரபத்தி செய்துகொள்வதற்கும் இந்த விதி பொருந்துமா? அடியேன் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்கணும்.

அஶௌச காலத்தில் நம் மனதுக்குள் ஆசார்ய தனியன் மற்றும் த்வய மந்திரங்களை சேவிக்கலாமா?

ஒரு ப்ராமணன் மணமகன் ஒரு ப்ராமணன் அல்லாத பெண்ணை மணந்தால், அவன் சந்தியாவந்தனம்கூட செய்யமுடியாத அளவுக்கு அவனது ப்ராமணத்வத்தை இழந்து விடுகிறான் என்று அடியேன் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முந்தைய சுதர்சனம் வெளியீட்டில் பெண் பரந்யாஸம் செய்யலாம் என்று கூறப்பட்டருக்கிறது. அந்தச் சிறுவனுக்கு ஶாஸ்த்ரத்தின்படி சடங்குகளைச் செய்ய இன்னும் உரிமை இருக்கிறதா என்பதை தயவுசெய்து தெளிவுபடுத்தவும். தன்யாஸ்மி அடியேன்

ஸ்தோத்ரஙகள் வேகமா சேவிக்கலாமா. ஸ்தோத்ரஙகளில் பலஸ்ருதி மட்டிலும் சேவித்து வரலாமா? பலன் ஒன்றுதானா? ஸ்தோத்ரஙகள் இரண்டுபேராக சேவிக்கும்பொழுது, முதல் பங்க்தியை வாய்விட்டு சத்தமாக சேவித்து அடுத்த பங்க்தியை மனதிற்குள் சந்தையில் சேவிப்பதைப்போல சேவிப்போம். அது சரியா? ஸ்தோத்ரம் பூர்ணம் ஆகுமா. அதற்கு பலன் உண்டா. பெரிய ஸ்லோகங்கள் சேவிக்கும்பொழுது ஒருபாதி ஸ்லோகத்தை சேவித்துவிட்டு அடுத்தபாதியை சேவிக்காமல் மௌனமாகவும் இருக்கலாமா? தேவரீர் அடியேனுக்கு தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன். தன்யாஸ்மி அடியேன்

தாங்கள் வெளியிட்ட ஆஶௌச விவரங்கள் நூல் ஆங்கிலத்தில் கிடைக்குமா? ஆங்கிலத்தில் வெளியிட வேண்டுகிறேன்?

அடியேன் ஸாமவேதத்தைச் சேர்ந்தவன். யஜூர்வேத முறையில் அச்சித்ரம் மற்றும் காடகம் கற்றுக்கொண்டேன், இப்போது அருணம் கற்றுக்கொண்டு வருகிறேன். ஸாம வேதமும் கறக் ஆரம்பித்திருக்கிறேன், 62 அகவையானபடியால் ஸாமவேதம் கற்பது சற்று கடினமாக உள்ளது. அடியேனின் சந்தேகம் அடியேன் யஜுர்வேதத்தைத் தொடர்ந்து கற்கலாமா? 2. யஜுர்வேதத்தில் கற்றதைப் பாராயணம் செய்யலாமா?

“தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டுண்டு ஆசமனம் பண்ணனுமா அல்லது வஸ்த்ரம் உடுத்தியதும் ஆசமனம் பண்ணிவிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டுமா?(புருஷர்களுக்கு)

ஏகாதசி தினத்தன்று துளசிச்செடிக்கு நீர் சேர்க்கலாமா? அடியேனின் தோழி ஒருவர் ஏகாதசியன்று துளசியும் ஏகாதசி வ்ரதம் இருப்பதாகவும், ஆகையால் நீர் சேர்க்கக்கூடாது என்று சொன்னார் அதனால் ஏற்பட்ட சந்தேகம் அடியேன்.

ஒரு வருடத்தில் எந்தெந்த மாதத்திலும், ஒரு வாரத்தின் எந்தெந்தக் கிழமைகளிலும் வபனம் செய்யக்கூடாது என்று தெளிவுபடுத்தவும். அடியேன். தற்சமயம் அடியேன் யதாமதிக்கு எட்டியபடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாஸை, பௌர்ணமி, ஏகாதசி,துவாதசி மற்றும் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் வரும் அந்த முழு பக்ஷத்திலும், மார்கழியிலும் பண்ணுவதில்லை.

துவாதசி அன்று வாழைப்பழமோ அல்லது வாழைமரம் ஸம்பந்தமான எதையும் உபயோகிக்க மாட்டோம். அப்படியிருக்க மாசப்பிறப்போ/ தர்ப்பண தினமோ துவாதசியன்று வந்தால் வாழைக்காயை உபயோகிக்கலாமா? எது சரியான வழிமுறை தெளிவிக்கவும்.

புருஷர்கள் எப்படி ஆசமனம் செய்ய வேண்டும்? என்ன நியமங்கள் கடைபிடிக்க வேண்டும் மேலும் எப்போதெல்லாம் செய்தல் வேண்டும் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஒரு ப்ரபந்னன், ப்ரபத்தி பண்ணாத வேறுவொருவருக்காக காம்யார்த்தமாக எம்பெருமானிடம் ப்ரார்த்திக்கலாமா?

கோத்ரம் என்றால் என்ன? எல்லா வர்ணாஶ்ரம தர்மங்களுக்கும் உண்டா? அவரவர் கோத்ரம் மூலம் வர்ணாஶ்ரமத்தை அறிய முடியுமா? விளக்க வேண்டுகிறேன்.

“நித்யப்படி க்ருஹ திருவாராதன ஸேவா காலத்தில் கீழே உள்ள ப்ரபந்தம் / ஸ்லோகங்களை எந்த க்ரமத்தில் ஸேவிக்க வேண்டும். திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணினுன்சிறுத்தாம்பு, இராமானுஜ நூற்றந்தாதி, ந்யாஸ தஶகம், அடைக்கலப்பத்து, பிள்ளையந்தாதி, ஆசார்யர்கள் தனியன். தாஸன்.”

ஆசார்யன் பொன்னடிசாற்றிக் கொடுத்த பாதுகைகளை ஏளப்பண்ணி வந்துள்ளேன். ஆத்தில் அந்தப் பாதுகைகளை எதில் ஏளப்பண்ண வேண்டும். தினமும் செய்ய வேண்டிய ஆராதனை (பாதுகைகளுக்கு) என்ன என்பதையும் விளக்க ப்ரார்த்திக்கிறேன் . ஊர்களுக்கு போகும்போது பாதுகைகளை ஏளப்பண்ணிக்கொண்டு போகவேண்டுமா? அடியேன்

10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஸ்மார்த்தர்களில் சிலர் பீஷ்மஅஷ்டமி அன்று பீஷ்மதர்ப்பணம் செய்கிறார்கள். ஸ்ரீவைஷ்ணவர்களும் அவ்வாறு செய்யலாமா?

அடியேன். ஜனனமரண தீட்டு விஷயத்தில் அடியேனுக்கு ஒரு சந்தேகம். தசராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தன்னுடைய தலைமுறையும் தனக்கு முன் உள்ள 6 தலைமுறைகளையும் (மொத்தம் 7 தலைமுறைகள்) சேர்ந்தவர்கள். த்ரிராத்ரி ஞாதிகள் என்பவர்கள் தனக்கு அடுத்த 7 தலைமுறைகளை சேர்ந்தவர்கள். தனக்கும் தன்னுடைய முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு (தசராத்ரி ஞாதிகள்) ஜனன மரண விஷயத்தில் 10 நாட்களும், தனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய ஜனன மரண விஷயத்தில் 3 நாட்களும் தீட்டு. இது சரியா? தங்களின் விளக்கத்தைப் ப்ரார்த்திக்கிறேன். தன்யோஸ்மி.

பெருமாள் திருவாராதனம் புத்தகத்தின் துணைகொண்டு செய்யலாமா, அல்லது ஒரு ஆச்சார்யனிடமோ அல்லது நன்கு கற்றறிந்தவர்களிடமிருந்தோ கற்றுக்கொண்ட பின்னரே செய்யவேண்டுமா?

காலையில் திருவாராதனம் செய்வதற்கான சரியான நேரம் என்ன? காலையில் செய்ய முடியவில்லை என்றால் மாலையில் செய்யலாமா?

திருமலை திருப்பதியில் கவுண்டர்களில் கொடுக்கும் லட்டு பிரசாத்தை ப்ரபத்தி செய்தவர்கள் ஸ்வீகரிக்கலாமா?

நமஸ்காரம் ஸ்வாமி. ப்ரபத்தி செய்து கொள்ளும்பொழுது (யாருக்கு ப்ரபத்தி செய்யப்படுகிறதோ) அந்த நபர் முழு மடியாகவும் ஆசாரமாகவும் இருப்பது அவசியமா? ப்ரபத்தியை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்து கொள்ளலாம் என்பதை அடியேன் அறிவேன். மேலும் திரௌபதி வேறு ஒரு ஸ்திதியில் இருந்த போது ப்ரபத்தி செய்துகொண்டாள். ப்ரபத்திக்கு முழு ஆசாரம் தேவையில்லையா ஸ்வாமி. அடியேன் தவறாகக் கேட்டிருந்தால் க்ஷமிக்கணும்.

துவாதசி அன்று தளிகைக்கு எந்தப் பருப்பை உபயோகப்படுத்த வேண்டும். துவரம்பருப்பா அல்லது பயத்தம்பருப்பா?

ஶ்ரீவைஷ்ணவர்கள் அகத்தில் சங்கு வைத்துக்கொள்ளலாமா? ஆமெனில் எவ்வாறு ஆராதிப்பது? இல்லையெனில் அகத்தில் இருக்கும் சங்கை எவ்வாறு உபயோகிப்பது?

எங்கள் பெற்றோர்கள் இருவரும் பரமபதித்துவிட்டார்கள். எங்கள் தமையனார் தான் கார்யங்களைச் செய்து வந்தார். தற்போது அவரும் பரமபதித்துவிட்டதால், பெண்களாகிய நாங்கள் வருடாவருடம் பெற்றோர்களுக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? மேலும் பரமபதித்த எங்கள் தமையனார் ஒரு ப்ருஹ்மச்சாரி, உடன் பிறந்தவர்கள் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஶ்ராத்தம் செய்யலாமா? பெற்றோர்கள் இல்லாத, ஒரு திருமணமாகாத ஸ்திரீக்கு யார் அந்திமகார்யம் செய்யலாம்?

கொடியில் உலர்த்திய மடி வஸ்த்ரத்தை ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுக்கலாமா அல்லது மரக்குச்சியில் தான் எடுக்கவேண்டுமா? ப்ளாஸ்டிக்கவர் கொண்டு எடுத்தால் அது விழுப்பாகிவிடுமா? அறியாமல் கேட்கிறேன் தவறாக இருந்தால் க்ஷமிக்கவும்.

அடியேனின் தந்தை அமாவாஸ்யை தர்ப்பணம் செய்கிறார், அன்றைய தினம் தலைக்கு தீர்த்தமாட கூடாதென்று என் அம்மா கூறுகிறார். அடியேன் லகுவாக பாதுகா திருவாராதனம் நித்யமும் செய்து வருகிறேன். அமாவாஸ்யை போன்ற தினங்களில் தலைக்கு தீர்த்தமாடாமல் எப்படிச் செய்வது என்று தெளியப்படுத்தவும்.

சென்ற சுதர்சனம் இதழில் அடியேன் ப்ரபத்தி செய்யும்போது மடி ஆசாரம் கடைபிடிக்க வேண்டுமா என்ற அடியேனின் சந்தேகத்திற்கு ஸ்வாமியின் மூலம் பதிலை அறிந்துகொண்டேன். மேலும் அதில் நம்மால் இயன்றளவு மடியோடு இருக்கவேண்டுமென்றும் வேறுவழியில்லை என்றபோது விழுப்புடன் செய்வது பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அடியேனுக்கு ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரந்யாஸம் ஆனது. அன்றைய தினம் அடியேன் உடுத்திய கச்சம் மடியில்லை. இக்கேள்வியின் பதிலைக்கண்டு அன்று மடியின்றி பரஸ்மர்ப்பணம் செய்துகொண்டோம் என மிகவும் வருத்தமாகவுள்ளது. மேலும் இதனால் ஏதேனும் பாபம் உண்டாகுமா என்று தெளிவிக்க வேண்டுகிறேன்.

அடியேனின் பரந்யாஸ ஆசார்யன் திருக்குடந்தை ஆண்டவன். நீண்டகாலமாக கிராமத்து கோவிலில் ப்ரதோஷம் உபயம் எங்கள் ஆத்து பெரியோர் செய்து வந்தனர். இப்போது சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது அதைத் தொடரலாமா, பணம் அனுப்புவது தவறாகுமா. இல்லை ப்ரதோஷத்தன்று அந்தக் கோயிலில் நேரே போய்தான் செய்யவேண்டுமா?

நாங்கள் எங்கள் வீட்டை (flat) விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அது நல்லபடியாக நடந்துமுடிய வேண்டும் என்று ப்ரார்திக்க ஏதேனும் ஶ்லோகம் உண்டா? அடியேனுக்கு தெரியப்படுத்தவும் ஸ்வாமி. தன்யோஸ்மி.

வெளிநாட்டில் வாழும் எங்களால், ஸ்ரீரங்கம் போன்ற பஞ்சாகங்களைப் பின்பற்ற முடியவில்லை நாங்கள் இணையதளத்திலுள்ள பஞ்சாங்கத்தைத் தான் பின்பற்றி வருகிறோம் ஆகையால் எங்களைப் போன்றோருக்காக ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி நிர்ணயம் அருள ப்ராத்திக்கிறேன்.a. ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி வைகாசி ஸுக்ல பக்ஷ – த்ரயோதசியா அல்லது சதுர்தசியா?b. அவதார கால திருவாரதனைக்கு சூர்யோதயம் அல்லது சூர்ய அஸ்தமன திதி பின்பற்ற வேண்டுமா?c. குறைந்த பக்ஷம் 6 நாழிகையாவது திதி (சூர்ய உதயமோ/அஸ்தமனமோ) இருக்க வேண்டும் என்று இருக்கிறது அப்படியில்லாவிட்டால் அடுத்த நாளில் செய்ய வேதை/தோஷத்தின் விவரங்கள் அளிக்க வேண்டுகிறேன்.

அடியேனுக்கு கேட்கும்திறன் குறைபாடு சரியாக, எம்பெருமாளிடம் ப்ரார்த்திக்க என்ன ஶ்லோகம் சேவிக்க வேண்டும்.

அடியேன் பணியில் இருக்கும் நேரம் அலுவலகத்தின் உணவகத்தில் தினசரி வெங்காயம் பூண்டு சேர்த்த உணவை உட்கொள்ள வேண்டி உள்ளது. அலுவலகம் சென்று திரும்ப மிகுதியான நேரம் ஆகிறது. மாலை ப்ரயாணத்தில் (வெங்காயம் பூண்டு சாப்பிட்ட பின்) கிடைக்கும் நேரத்தில் ஸஹஸ்ரநாமம் சொல்லலாமா? வீடு திரும்பியவுடன் கைகால் வாய் மட்டும் சுத்தம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாமா?

அடியேனின் வபனம் சம்பந்தமான கேள்விக்கான (Q28CHIT21006) விளக்கத்திற்கு நன்றி. அடியேனின் குழப்பம்: முதலில் ஆடி, மார்கழி, மாசியில் கூடாது என்றும் பிறகு ஆடி முன்பாதி மார்கழி, மாசியில் பின்பாதியில் செய்யலாம் என்றும் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. அடியேன் குழப்பத்தை தெளிவிக்கவும்.

திருவாரதனம், தர்ப்பணம் அல்லது சந்தியாவந்தனம் செய்யும் சமயங்களில் அற்பசங்கை போன்றவை வந்தால் என்ன செய்யவேண்டும், மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டுமா? எப்படித் தொடர வேண்டும். தெளிவுபடுத்தவும் அடியேன்.

திருவாரதன சமயம் ஸ்லோகங்கள், ராமாயணம், பாகவதம் சேவிக்கும் போது அலங்காரஸ்நானம் அல்லது பர்யங்கஸ்நானம் எது செய்யவேண்டும்? மேலும் பாகவதம் மூலம் பாராயணம் திருவாராதனத்திற்கு பின் செய்ய வேண்டுமா? தெரிவிக்க வேண்டுகிறேன்.

அனுஷ்டானத்தின் படி ஸ்நானம் செய்யும் முன் ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு ஸ்நான சங்கல்பம் செய்யவேண்டுமென்று இருக்கிறது. லௌகீக கார்யங்களை கருத்தில் கொண்டால் நித்யமும் விஸ்தாரமாக செய்ய சம்யமில்லை, ஆகையால் லகுவாக ஸ்நான சங்கல்ப முறையை தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். மேலும், எந்த வஸ்திரத்தை ஸ்நானஸாடியாக உபயோகிக்கலாம் என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன். உ.தா ஒரு கிழிந்த வேஷ்டியின் அங்கவஸ்திரம் உபயோகிக்கும்படியிருந்தால் அதை ஸ்நானஸாடி உடுத்திக்கொள்ளலாமா?

கைவல்யார்த்திகளுக்கும் முமுக்ஷூக்களுக்கும் என்ன வேற்றுமை? கைவல்யார்த்திகள் எங்கே செல்வார்கள் என்று விரிவாக சாதித்தருள ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன் அஷ்டாக்ஷர ஜபம், காயத்ரிஜபம் போல் தினமும் மூன்று வேளையும் பண்ணவேண்டும் என்கிற விதி புரிகிறது. காயத்ரிஜபம் போல் எத்தனை எண்ணிக்கை வேண்டுமானாலும் பண்ணலாமா? ஸ்ரீ ஸ்ந்நிதி சிஷ்யர்கள் நித்யமும் ஆசார்ய தனியன், த்வயம், சரம ஶ்லோகம் அஷ்டாக்ஷ்ரம் சேவிக்கும் வழக்கமுள்ளது. சுதர்சனத்தின் சென்ற இதழில் அளிக்கப்பட்ட பதிலை அடியேன் சந்தியாவந்தனம் பண்ணும் சமயம் மட்டும் அஷ்டாக்ஷரம் செய்தால் போதும் என்று புரிந்துகொண்டேன் இது சரியா? அஷ்டாக்ஷரம் மற்ற நேரங்களில் பண்ணக்கூடாதா? ஆசார்யர்கள் வித்வான்கள் அஷ்டாக்ஷர ஜபம் பற்றி நிரம்ப பேசியிருக்கிறார்கள் மேலும் 45ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் பத்ரிநாத் எழுந்தருளியிருந்த போது அங்கே அஷ்டாக்ஷர ஜபம் செய்ததாக எப்போதோ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் படித்த ஞாபகம். ஸ்த்ரீகளுக்கு சந்தியாவந்தனம் செய்யும் விதியில்லை. அஷ்டாக்ஷரம் சந்தியாவந்தன காலத்தில் மட்டும் செய்தால் போதும் என்றால், ஸ்த்ரீகள் எப்படி பண்ணமுடியும்? ரிஷிகள் தபஸோ அல்லது ஜபமோ எந்த மந்திரம் கொண்டு செய்திருப்பார்கள் அஷ்டாக்ஷரம் தவிர. அடியேனின் புரிதலில் பிழையிருந்தால் க்ஷமிக்கவும்.

சாதாரணமாக சாளக்கிராம கல் கருப்பு நிறத்தில் இருக்கும். நான் அதற்கு தினமும் திருமஞ்சனம் செய்து வருகிறேன். என் அம்மா சில வருடங்கள் முன்பு வெள்ளைக் கல்லில் சாளக்கிராம கல் என்று சொல்லி, அது தன் தாயாருடைய கல் என்னும் சொல்லிக்கொடுத்தார். அதற்கு திருமஞ்சனம் செய்யக்கூடாது என்றும் கூறியிருந்தார். (இப்பொழுது என் அம்மா உயிருடன் இல்லை.)அதைப்பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. விளக்கவும்.

உபநயனம் மற்றும் சீமந்தோந்நயனத்தில் முஹூர்த்த காலம் முடியும்வரை போஜனம் கூடாதென்று இருக்கிறது இதன் தாத்பர்யம் என்ன என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

அடியேனின் அகத்துக்காரரின் தமக்கை போன வாரம் பஞ்சமி திதி அன்று பரம பதித்து விட்டாள். விவாஹம் ஆகாதவள்.அடியேனுக்கும், அடியேனின் பசங்களுக்கும் எத்தனை நாள் தீட்டு. பெருமாள் விளக்கு ஏற்றுவது, திருவாராதனம் பண்ணுவதெல்லாம் தீட்டு முடிந்த பிற்பாடு தான் ஆரம்பிக்க வேண்டுமா?. அடியேன் அகத்துக்காரரும் 11 மாதங்கள் முன்பு பரம பதித்து விட்டார். அடியேன் விளக்கமாக பதில் எதிர்பார்க்கிறேன்.

புருஷர்கள் (ஆண்கள்) திருமண் இட்டுக்கொள்ளும்போது ஸ்ரீ சூரணத்திற்குத் தாயார் குங்குமத்தை இட்டுக்கொள்ளலாமா?

சாளக்கிராம மூர்த்தி மற்றும் ஆசார்யனின் பாதுகைக்கு மடி ஆசாரமாக திருமஞ்சனம் செய்தல் வேண்டுமா? இல்லாவிட்டால் அபச்சாரம் ஆகும் என்று கேள்விபட்டுள்ளேன். ஒரு ப்ரபந்னன் அப்படி மடி ஆசாரமாக செய்யாவிட்டால் அது அவனது மோக்ஷத்திற்கு தடையாகுமா? அல்லது பெருமாள் சிறு சிக்ஷை மட்டும் கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா? அடியேனால் மடி ஆசாரம் முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை என்பதால் இந்த சந்தேகம், இயன்ற அளவு முயற்சிக்கிறேன்.

வெளியில் இருந்து பூக்கள் வாங்கும் சமயம் அவர்கள் எந்த அளவு ஆசாரமாக இருக்கின்றார்கள் என்று தெரியாது. பெருமாளுக்கு ஸம்பர்பிக்கும் முன் வெளியில் இருந்து வாங்கிய புஷ்பங்களை சுத்தி செய்ய ஏதேனும் மந்திரம் உண்டா? அல்லது நீர் தெளித்தால் போதுமா?

அடியேன், ப்ரம்மோத்ஸவத்தின்போது தீர்த்தவாரிக்கு முன் ருத்ரமும், சமகமும் ஏன் சேவிக்கிறார்கள்.

பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் செய்வது வழக்கில் இருக்கிறது, ஆனால் திருமணத்திற்கு முன்பே ஆசையிருந்தால் ஒரு ஸ்த்ரீ ப்ரந்யாஸம் பண்ணிக்கொள்ளலாமா. மேலும், அப்படி பரந்யாஸம் செய்வித்த ஆசார்யனும் வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாரின் ஆசார்ய சம்பந்தமும் வெவ்வேறாக இருந்தால் செய்த பரந்யாஸம் பலிக்குமா/ஒத்துக்கொள்ளப்படுமா? அடியேனின் அறியாமைகயை க்ஷமிக்கவும்.

பெருமாளுக்குச் சர்க்கரை சேர்த்த பாயசம் அம்சை பண்ணலாமா?

இந்தக் கலியுகத்தில் பக்தியோகம் சாத்தியப்படாததினால் ப்ரபத்தி ஒன்றே எம்பெருமானை அடையும் மார்கம் என்று புரிகிறது. ஸ்வாமி தேசிகன் “ஆக்ஞா மற்றும் அனுக்ஞா கைங்கர்யம்” பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் என்று எப்படி ஸ்ருதி ஸ்ம்ருதிகள் கூறுகிறதோ அதே போல் ஒரு ஜீவன் ப்ரபத்தி மார்கத்தில் செல்ல ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டுமா? மேலும் பகவான் க்ருஷ்ணன் கீதையில் “கர்ம யோகம்” என்று எதை உரைத்திருக்கிறானோ அவையும் ஆக்ஞா கைங்கர்யமும் (சத்யம் வத, தர்மம் சர,..போன்றவை) ஒன்றா அல்லது வெவ்வேறா?

அடியேன் இருப்பது ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு ஒரு விநாயகர் கோவில் உருவாக்க குடியிருப்பு வாசிகள் முடிவு எடுத்துள்ளார்கள். அதற்கு எல்லா உரிமையாளர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். எங்கள் ஆத்தில் அனைவருக்கும் பரஸமர்ப்பணம் ஆகி விட்டது. பிற கோவில்களுக்கு போவதில்லை. ஆனால் இந்தப் பணிக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம். மறுக்க முடியாது. நிர்மாணம் ஆன பிறகு வேறு எதுவும் செய்ய முடியாது வேண்டியதும் இல்லை.இது குறித்து அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.

அடியேன் ப்ராமணன் அல்லாத ஸ்ரீவைஷ்ணவன். சந்தியாவந்தனம் செய்வது ஒருவருடைய பாபங்களைப் போக்கும் என்று கேள்வியுற்றுள்ளேன். ஆனால் அடியேனால் சந்தியாவந்தனம் செய்ய இயலாது என்றிருக்க, அடியேன் அறியாது செய்த பாபங்களைப் போக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

பெருமாளுக்குத் திருவாராதனம் நின்றுகொண்டு அல்லது அமர்ந்துகொண்டு செய்ய வேண்டுமா?

அடியேனுக்கு ஸமாஶ்ரயணம் பரந்யாஸம் செய்துகொள்ள ஆசை. ஆனால் அகத்தில் இருப்பவர்கள் ஏதோ காரணங்கள் கூறி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள். என் இருபது வயது மகளுக்கு அதன் முக்கியத்வத்தை கற்றுக்கொடுக்க முடியவில்லை ஏனென்றால் ஆத்தில் இருக்கும் பெரிய்வர்கள், என் அகத்துக்காரார் என அனைவரும் இந்த சம்ஸ்காரங்கள் முக்கியம் இல்லை என்று கூறுகிறார்கள். எங்கள் ஆசார்யன் இருக்கும் இடம் வெகு தொலைவில் இருப்பதால் அதையே பல முறை காரணம் காட்டி ஆசார்யன் தரிசனம் பெறவும் தடுக்கின்றனர். என் மகளாவது இந்த ஸம்ப்ரதாயத்தில் வர ஆசை கொண்டுள்ளேன். மாற்றம் ஏற்பட ஏதேனும் வழியுண்டா?

எப்போதெல்லாம் அஷ்டாக்ஷரம் சொல்ல வேண்டும் உ.தா ஆசார்யன் தனியன் சேவிக்கும் சமயமா அல்லது சந்தியாவந்தனம் சமயமா? எத்தனை முறை ஜபிக்க வேண்டும்?? அதன் ப்ரபாவம் மற்றும் பலன், வித்வான்களின் திருவாக்கினால் அறியப்பெற்றேன் ஆனால் எப்பொது, எப்படி, எத்தனை முறை சொல்ல வேண்டும் என்ற தெளிவு மட்டும் இல்லை.

துவாதசி அன்று உப்பு போடாமல் உட்கொள்ளும் பாரணையை பல்லில் படாமல் சாப்பிடவேண்டுமா? 3 கவளம் சாப்பிடனும் என்று சிறுவயதில் கேட்ட ஞாபகம் ஆனால் தெளிவாக தெரியவில்லை தெளிவிக்க வேண்டுகிறேன்.

ஏகாதசி அன்று பெருமாளுக்கு அன்னத்தை நிவேதனம் பண்ணலாமா? நித்யமுமே பெருமாளுக்குப் பால் அல்லது பழங்கள் மட்டும் அம்சை பண்ணலாமா?

அமாவாஸை தினத்தன்று தர்ப்பணம் செய்யும் சமயம் அடுப்பு மேடை (GasStove) மற்றும் தரையை சுத்தம் செய்தபின் கோலம் போடலாமா?

என் தகப்பனார் ஜூன்2021 அன்று பரமபதித்துவிட்டார். வரும் ஜூன் ஒன்றாம் தேதி அவருக்கு வர்ஷாப்தீகம் வருகிறது. அம்மா என்னுடன் இருக்கிறாள். a. கயா ஶ்ரார்த்தம் எப்போது செய்தல் வேண்டும்? அதன் மகத்துவம் என்ன? b. அக்ஷய வடம் என்றால் என்ன? c. இராமமேஸ்வரம் சேது ஸ்நானமும் கயா ஶ்ரார்த்தத்துடன் செய்ய வேண்டுமா? d. இவை அனைத்தும் செய்த பின் தான் க்ஷேத்ராடனம் செல்ல வேண்டுமா? e. எனது தாயாருக்கு உடம்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பதால் கயா போன்ற ஸ்தலத்திற்கு அவரால் வர இயலாது. அடியேனும் என் மனைவியும் மட்டும் சென்று கயா ஶ்ரார்த்தம் சேது ஸ்நானம் செய்யலாமா?

எவர்சில்வர் பாத்திரத்தில் பெருமாளுக்குத் தளிகை அம்சை செய்யலாமா? பொதுவாக எந்த மாதிரியான பாத்திரத்தில் அம்சை செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

மறுமணம் என்பது சரியா தவறா? ஶாஸ்த்ரம் என்ன கூறுகிறது?

இதர சன்யாசிகள் நம் க்ருஹத்திற்கு அருகில் வந்தால் என்ன செய்ய வேண்டும்(அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கின்றோம்).

ஸ்ரீராமநவமி அன்று ஏகாதசி போல் அனுஷ்டித்து அடுத்தநாள் துவாதசி தளிகை பண்ணனுமா, ஸ்ரீராமநவமி அன்று பெருமாள் திருவாரதனத்திற்கு என்ன தளிகை ஸமர்பிக்கணும்.

என்னுடைய பெரியம்மா (என் பெரியப்பாவின் பத்னீ) ஆசார்யன் திருவடி தசமியன்று அடைந்துவிட்டார். அடுத்தநாள் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? சில மாதங்களாகவே நிர்ஜலமாய் வ்ரதம் அனுஷ்டித்து வருகிறேன்.

ஆசார்யனின் திருவத்யயன தினத்தன்று என்னென்ன அனுஷ்டானங்கள் கடைபிடிக்க வேணடும்? அவரின் திருநக்ஷத்ர தினம் போல் இதற்கும் நியமங்கள் இருக்கின்றதா என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

GSPK குழுமத்தில் எப்படி இணைவது?

Loading

Scroll to Top