Acaram Anushtanam - Tamizh

எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கோயில் ப்ரசாதத்தை அகத்திற்கோ அல்லது கோவிலை விட்டு வெளியே எடுத்துவந்தோ உட்கொண்டால் அதன் உயர்வு (புனித தன்மை) குறைந்துவிடுமா?

பெருமாள் ப்ரசாதத்திற்குப் புனிதத் தன்மை குறையாது. ஆனால் ப்ரசாதத்தைக் கொண்டுவரும் மார்கம் (வழி) எப்படிப்பட்ட மார்கம் என்பதுதான் பார்க்கவேண்டும். கொண்டுவரும் மார்கம் சரியில்லையென்றால், ப்ரசாதத்தின் ஆசாரத்தனம் குறைவு படலாம், புனித தன்மை குறையாது. அது ப்ரச்சனையில்லை என்றால் தவறில்லை.

எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கோயில் ப்ரசாதத்தை அகத்திற்கோ அல்லது கோவிலை விட்டு வெளியே எடுத்துவந்தோ உட்கொண்டால் அதன் உயர்வு (புனித தன்மை) குறைந்துவிடுமா? Read More »

US போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்குத் தர்ப்பண சங்கல்பம் என்ன என்று தெரிவிக்க வேண்டும்? இங்கே சித்திரைத் தர்ப்பணம் ஒருநாள் முன்னதாகவே பண்ணும்படி வருகிறது. ஏன் இப்படி வருகிறது?

US போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தர்ப்பணம் நாள் மாறிவரும் என்பது வழக்கம்தானே. அதன் சங்கல்பம் என்ன என்பதைக் கேட்டுதான் சொல்லவேண்டும்.

US போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்குத் தர்ப்பண சங்கல்பம் என்ன என்று தெரிவிக்க வேண்டும்? இங்கே சித்திரைத் தர்ப்பணம் ஒருநாள் முன்னதாகவே பண்ணும்படி வருகிறது. ஏன் இப்படி வருகிறது? Read More »

ப்ரபத்தி செய்த முன்னோர்களுக்கு ஶ்ராத்தம் சமயம் வ்யாஸ பிண்டம் வைப்பதுண்டா?

வ்யாஸ பிண்டம் பற்றி கேள்விபட்டத்தில்லை.

ப்ரபத்தி செய்த முன்னோர்களுக்கு ஶ்ராத்தம் சமயம் வ்யாஸ பிண்டம் வைப்பதுண்டா? Read More »

1)திருவாராதனம் நின்றுகொண்டா, அமர்ந்து கொண்டா எப்படிப் பண்ணவேண்டும்? எது சரி? 2) ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யனிடம் போகுமா? 3) திருவாராதனத்தில் எப்போது எந்த ஆசனத்தில் ஶ்லோகங்கள், ப்ரபந்தங்களைச் சேவிக்க வேண்டும்? 4)அனைத்து ஆசனம் போதும் ஷோடஸ உபசாரம் செய்யவேண்டுமா? அல்லது சர்வோபசாரம் ஸமர்ப்பயாமி என்று செய்தால் போதுமா? 5) திருவாராதனம் செய்த பின் சேவிக்கும் போது என்ன சொல்லவேண்டும்?

1.திருவாராதனம், பூத சுத்தி, மானஸ ஆராதனம் வரை உட்கார்ந்து கொண்டும் பிறகு நின்று கொண்டும் பண்ணும் வழக்கம். 2.“சிஷ்ய பாபம் குரோரபி” என்ற வசனத்திற்கான விஷயம் வேறு. அதாவது சிஷ்யனை திருத்தாமல் இருந்தால் அப்போது அந்த பாபம் போகும். ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யரிடம் போகாது. ஆனால் ஒரு ஆசார்யன் சிஷ்யனை திருத்தவேண்டிய சமயத்தில் திருத்தாமல் விட்டால் அப்போது அவருக்குத் தோஷம் போகும். 3.திருவாராதனத்தில் அலங்கார ஆசனம், பிறகு சாற்றுமுறை சமயம் ஶ்லோகங்கள், பாசுரங்களைச் சேவிப்பார்கள். அதை

1)திருவாராதனம் நின்றுகொண்டா, அமர்ந்து கொண்டா எப்படிப் பண்ணவேண்டும்? எது சரி? 2) ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யனிடம் போகுமா? 3) திருவாராதனத்தில் எப்போது எந்த ஆசனத்தில் ஶ்லோகங்கள், ப்ரபந்தங்களைச் சேவிக்க வேண்டும்? 4)அனைத்து ஆசனம் போதும் ஷோடஸ உபசாரம் செய்யவேண்டுமா? அல்லது சர்வோபசாரம் ஸமர்ப்பயாமி என்று செய்தால் போதுமா? 5) திருவாராதனம் செய்த பின் சேவிக்கும் போது என்ன சொல்லவேண்டும்? Read More »

காலையில் நின்று கொண்டு காலை சற்று உயர்த்தி அர்க்யம் விடுகிறோம். மத்தியானமும், சாயங்காலமும் சாமவேதிகளுக்கு எத்தனை முறை அர்க்யம் விடவேண்டும்? எப்படி விடவேண்டும்? மேலும் எத்தனை வ்யாஹ்ருதி மஹா ந்யாஸம் செய்யவேண்டும்? காயத்ரி மந்திரத்தை எந்தச் சந்தஸ்ஸில் சொல்லவேண்டும்? (தேவி காயத்ரியா/ந்ருசத் காயத்ரியா?)

சாம வேதிகளுக்குக் கேட்டுச் சொல்கிறோம்.

காலையில் நின்று கொண்டு காலை சற்று உயர்த்தி அர்க்யம் விடுகிறோம். மத்தியானமும், சாயங்காலமும் சாமவேதிகளுக்கு எத்தனை முறை அர்க்யம் விடவேண்டும்? எப்படி விடவேண்டும்? மேலும் எத்தனை வ்யாஹ்ருதி மஹா ந்யாஸம் செய்யவேண்டும்? காயத்ரி மந்திரத்தை எந்தச் சந்தஸ்ஸில் சொல்லவேண்டும்? (தேவி காயத்ரியா/ந்ருசத் காயத்ரியா?) Read More »

பையன் ஶ்ரீவைஷ்ணவ அல்லாத பெண்ணை மணந்தால் பெற்றோர்களுக்குக் கைங்கர்யம் செய்யலாமா?

பையன் ஶ்ரீவைஷ்ணவரல்லாத பெண்ணை மணந்தால் பெற்றோர்களுக்குக் கைங்கர்யம் பண்ணலாம்.

பையன் ஶ்ரீவைஷ்ணவ அல்லாத பெண்ணை மணந்தால் பெற்றோர்களுக்குக் கைங்கர்யம் செய்யலாமா? Read More »

நாட்டேரி ஸ்வாமியின் ஶரணாகதி தீபிகா உபந்யாஸம் கேட்டு அடியேன் ஶ்ரீமுஷ்ணம் ஆண்டவனிடத்தில் பரந்யாஸம் பெற்றுக்கொண்டேன். அடியேன் அப்போதே தென்னாசார் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த அகத்தில் மாற்றுப்பெண்ணாக ஆகிவிட்டேன். ஆண்டவன் அடியேனின் பின்புலம் பற்றி ஏதும் கேட்காமல் பரம கருணையோடு பரந்யாஸம் பண்ணிவைத்தார். அடியேனுக்கு முதலியாண்டான் திருமாளிகையில் ஸமாஶ்ரயணம் ஆனது. இன்று சிலர் அந்த பரந்யாஸம் பலிக்காது என்றும், ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அடியேனுக்கு பரந்யாஸம் பண்ணிவைத்த ஆசார்யன் மீதும், ஸ்வாமி தேஶிகன் மீதும், எம்பெருமான் மீதும் ஶரணாகதி பலிக்கும் என்று மஹாவிஶ்வாசம் இருக்கிறது. மஹான்கள் இதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்.

மறுபடியும் ப்ராயஶ்சித்த ஶரணாகதி பண்ணும் வழக்கம், நம் ஸம்ப்ரதாயத்திலும் சரி, தென்னாசார்யார் ஸம்ப்ரதாயத்திலும் கிடையாது. ஒரு தடவை ஶரணாகதி பண்ணவர்கள் மறுபடியும் ப்ரயாஶ்சித்தமாக கூட ஶரணாகதி பண்ணக்கூடாது என்று பெரியவாச்சான் பிள்ளை சாதித்திருக்கிறார்.

நாட்டேரி ஸ்வாமியின் ஶரணாகதி தீபிகா உபந்யாஸம் கேட்டு அடியேன் ஶ்ரீமுஷ்ணம் ஆண்டவனிடத்தில் பரந்யாஸம் பெற்றுக்கொண்டேன். அடியேன் அப்போதே தென்னாசார் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த அகத்தில் மாற்றுப்பெண்ணாக ஆகிவிட்டேன். ஆண்டவன் அடியேனின் பின்புலம் பற்றி ஏதும் கேட்காமல் பரம கருணையோடு பரந்யாஸம் பண்ணிவைத்தார். அடியேனுக்கு முதலியாண்டான் திருமாளிகையில் ஸமாஶ்ரயணம் ஆனது. இன்று சிலர் அந்த பரந்யாஸம் பலிக்காது என்றும், ப்ராயஶ்சித்த ப்ரபத்தி செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அடியேனுக்கு பரந்யாஸம் பண்ணிவைத்த ஆசார்யன் மீதும், ஸ்வாமி தேஶிகன் மீதும், எம்பெருமான் மீதும் ஶரணாகதி பலிக்கும் என்று மஹாவிஶ்வாசம் இருக்கிறது. மஹான்கள் இதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன். Read More »

அடியோங்களுக்கு பெண் குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகிறது. வரும் சித்திரைக்குள் முடிகாணிக்கை (மொட்டை போடுவது) பண்ணும்படி அகத்துப் பெரியோர்கள் சொல்கிறார்கள் இல்லையென்றால் குழந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். சிலர் பெண் குழந்தைக்கு முடி கொடுக்கும் வழக்கமில்லை என்றும் கூறுகிறார்கள். இதில் எது நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்களின் வழக்கத்தில் உள்ளது என்றும், எது சரி என்றும் தெளிவிக்கவும்.

சில க்ருஹங்களில் பெண்குழந்தைக்கு முடி கொடுக்கும் வழக்கமெல்லாம் உண்டு. அவரவர் வழக்கப்படிச் செய்யலாம்.

அடியோங்களுக்கு பெண் குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகிறது. வரும் சித்திரைக்குள் முடிகாணிக்கை (மொட்டை போடுவது) பண்ணும்படி அகத்துப் பெரியோர்கள் சொல்கிறார்கள் இல்லையென்றால் குழந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். சிலர் பெண் குழந்தைக்கு முடி கொடுக்கும் வழக்கமில்லை என்றும் கூறுகிறார்கள். இதில் எது நம் ஸம்ப்ரதாயத்துப் பெரியவர்களின் வழக்கத்தில் உள்ளது என்றும், எது சரி என்றும் தெளிவிக்கவும். Read More »

1.ஸந்தியாவந்தன மந்திரங்களை உரக்க சொல்லவேண்டுமா? அல்லது காயத்ரி மந்திரம் போல் மனதிற்குள்ளேயே சொல்லவேண்டுமா? 2.அமாவாசை போன்ற தர்ப்பணங்களை தெற்குப் பார்த்துதான் பண்ணவேண்டுமா? சிலர் கிழக்கு நோக்கி பண்ணுகிறார்களே. 3.ஸந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர மந்திர ஜபத்தை காயத்ரி உபஸ்தானம் முன்பா அல்லது பின்பா? எப்போது செய்யவேண்டும்? 4.ப்ராத: ஸந்தியாவந்தனம் நின்றுகொண்டு பண்ணவேண்டும் என்றால், சந்தியாவந்தனம் பூர்த்தியாக ப்ராணாயாமம்,காயத்ரி ஜபம் என அனைத்தும் நின்றுகொண்டுதான் பண்ணவேண்டுமா?

1.ஸ்ந்தியாவந்தன மந்திரங்களை உரக்கச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வாயால் உச்சரித்தாலே போதும். 2.அமாவாசை தர்ப்பணத்தை கிழக்குப் பார்த்து பண்ணும் வழக்கமுண்டு. சிலர் தெற்குப் பார்த்தும் பண்ணுகிறார்கள். இரண்டு ஸம்ப்ரதாயமும் உண்டு. கேட்டுக்கொண்டு பண்ணவும். 3.ஸந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர மந்திர ஜபம் முன்பா பின்பா என்பதற்கு ஸம்ப்ரதாய வித்யாசமுண்டு. அஹோபில மடத்திலே உபஸ்தானம் முன்பு பண்ணுகிறார்கள். முனித்ரயத்திலே பின்பு பண்ணுகிறார்கள். இதிலும் பல வித்யாசங்கள் உண்டு. விஸ்தாரமாக பின்னர் பார்க்கலாம். 4.ப்ராணாயாமம், காயத்ரி ஜபம் எல்லாம் காலையில் நின்று கொண்டு பண்ணவேண்டும்.

1.ஸந்தியாவந்தன மந்திரங்களை உரக்க சொல்லவேண்டுமா? அல்லது காயத்ரி மந்திரம் போல் மனதிற்குள்ளேயே சொல்லவேண்டுமா? 2.அமாவாசை போன்ற தர்ப்பணங்களை தெற்குப் பார்த்துதான் பண்ணவேண்டுமா? சிலர் கிழக்கு நோக்கி பண்ணுகிறார்களே. 3.ஸந்தியாவந்தனத்தில் அஷ்டாக்ஷர மந்திர ஜபத்தை காயத்ரி உபஸ்தானம் முன்பா அல்லது பின்பா? எப்போது செய்யவேண்டும்? 4.ப்ராத: ஸந்தியாவந்தனம் நின்றுகொண்டு பண்ணவேண்டும் என்றால், சந்தியாவந்தனம் பூர்த்தியாக ப்ராணாயாமம்,காயத்ரி ஜபம் என அனைத்தும் நின்றுகொண்டுதான் பண்ணவேண்டுமா? Read More »

முனித்ரய ஸம்ப்ரதாயம் பற்றிய சந்தேகம்: ஶ்ரீ ஜயந்தி, ஶ்ரீ ராம நவமி, ஶ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி போன்ற நாட்களில் நாம் வ்ரதம் இருந்து மறுநாள் பாரணை பண்ணவேண்டும் என்றிருக்கிறது, அப்படியானால் அன்றைய நாட்களில் எம்பெருமானுக்கு பண்ணிய பானகம், வடைபருப்பு, கோசம்பரி போன்றவைகளையும் உட்கொள்ளக்கூடாதா? எம்பெருமானுக்குப் பண்ணியதை உட்கொள்ளாதது சரியா? மேலும் இவைகளை அடுத்த நாள் வரை வைத்துக்கொள்ளவும் முடியாதல்லவா?

உபவாஸ தினத்திலே எம்பெருமானுக்குப் பண்ண வடைபருப்பு , பானகம் முதலியவற்றை உபவாஸம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. பலகாரம் பண்ணுபவர்களுக்குக் கொடுக்கலாம். உபவாஸ வ்ரதம் இருக்கிறபடியால் அதைச் சாப்பிடாவிட்டால் தோஷம் கிடையாது.

முனித்ரய ஸம்ப்ரதாயம் பற்றிய சந்தேகம்: ஶ்ரீ ஜயந்தி, ஶ்ரீ ராம நவமி, ஶ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி போன்ற நாட்களில் நாம் வ்ரதம் இருந்து மறுநாள் பாரணை பண்ணவேண்டும் என்றிருக்கிறது, அப்படியானால் அன்றைய நாட்களில் எம்பெருமானுக்கு பண்ணிய பானகம், வடைபருப்பு, கோசம்பரி போன்றவைகளையும் உட்கொள்ளக்கூடாதா? எம்பெருமானுக்குப் பண்ணியதை உட்கொள்ளாதது சரியா? மேலும் இவைகளை அடுத்த நாள் வரை வைத்துக்கொள்ளவும் முடியாதல்லவா? Read More »

Scroll to Top