எம்பெருமானுக்கு அமுது செய்த திருக்கோயில் ப்ரசாதத்தை அகத்திற்கோ அல்லது கோவிலை விட்டு வெளியே எடுத்துவந்தோ உட்கொண்டால் அதன் உயர்வு (புனித தன்மை) குறைந்துவிடுமா?
பெருமாள் ப்ரசாதத்திற்குப் புனிதத் தன்மை குறையாது. ஆனால் ப்ரசாதத்தைக் கொண்டுவரும் மார்கம் (வழி) எப்படிப்பட்ட மார்கம் என்பதுதான் பார்க்கவேண்டும். கொண்டுவரும் மார்கம் சரியில்லையென்றால், ப்ரசாதத்தின் ஆசாரத்தனம் குறைவு படலாம், புனித தன்மை குறையாது. அது ப்ரச்சனையில்லை என்றால் தவறில்லை.