நித்யபடி ப்ரதோஷ காலம் என்பது எவ்வளவு நேரம்? அப்போது செய்ய வேண்டியவை/கூடாதவை எவை? அந்தச் சமயத்திலும் அனத்யயன நாட்களிலும் திருக்கோயில்களில் வேத பாராயணம் செய்யலாமா? மஹாப்ரதோஷம் விசேஷ விதிகள் உள்ளனவா? அன்று கோயில் பாராயணம் செய்யலாமா?

நித்யபடி அஸ்தமனகாலம்தான் ப்ரதோஷ காலம். அந்தச் சமயத்தில் செய்யவேண்டியது சந்தியாவந்தனம் முதலானவை, செய்யக்கூடாது வேதாத்யயனம், உறங்குதல் முதலானவை.
கோயில்களில் வேத பாராயணம் அந்தச் சமயத்தில் ப்ரசக்தமாக இருந்தால் பண்ணலாம்.
மஹாப்ரதோஷத்திற்கு விசேஷ விதிகள் உள்ளது. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்யக்கூடாது போன்றவை.கோயில் பாராயணம் உத்சவாதி சமயங்களில் செய்யலாம். மஹாப்ரதோஷத்தில் மௌனம் சொல்லியிருக்கு ஆனால் அந்தச் சமயத்தில் கோயில் பாராயணம் இருந்தால் செய்யலாம்.
அனத்யயன நாளில்கூட கோயிலில் வேத பாராயணம், நித்யபடி பாராயணம் என எல்லாம் பண்ணலாம். அகத்தில் சொல்லக்கூடாது என்பது மட்டும்தான்.
நித்யபடி ப்ரதோஷம் என்று குறிப்பிட்டு ஏதும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top