நித்யபடி ஸ்நானம் செய்யும்போது ஆசமனம், ப்ராணாயாமம் பண்ணி, திதி வார நக்ஷத்ரங்களெல்லாம் சொல்லி ம்ஹா சங்கல்பம் பண்ணவேண்டும். அதன் பின் “கர்மந்யதா ஸித்யர்த்தம் ப்ராத: ஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்யவேண்டும்.
ஸ்நானம் என்றால் பொதுவாக தலைக்குத் தீர்த்தமாடுவது என்றுதான் அர்த்தம்.
ப்ரஹ்ம்மசாரிகள் நித்யம் தலைக்குத் தீர்த்தமாட அவசியமில்லை என்று சொல்லுவர்கள்.
ஸ்நானம் என்றால் தலைக்குத் தீர்த்தமாடுதல்தான் அது முடியாதபோது ஸ்நானத்தில் ப்ரபேதங்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது ஸ்நானங்களில் பலவிதமான் ஸ்நானம் உண்டு. உதாஹரணத்திற்கு எப்போதாவது உடம்பு சரியில்லையென்றால் கண்ட ஸ்நானம் முதலானவ சொல்லியிருக்கிறது.