ஸ்த்ரீ தர்மம் பற்றிய கேள்விகள்

அகத்தில் ரஜஸ்வலை காலத்தில் இருக்கும் பெண் பாத்திரம் தேய்த்துக் கொடுக்கலாமா? (வேலைக்கு ஆள் இல்லை என்பதால்) அவ்வாறு தேய்த்துக் கொடுக்கலாம் என்றால் எப்படிச் சுத்தி செய்து எடுத்துக்கொள்வது?

எனக்கு 40 வயது ஆகிறது. ரஜஸ்வலை சமயத்தில் quilt மெத்தை பயன்படுத்தலாமா? அல்லது பாயுடன் சேர்ந்த மெத்தை பயன்படுத்தலாமா? எனக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கிறது. பயன்படுத்தலாம் என்றால் எப்படிச் சுத்தி செய்வது என்பதையும் சொல்லவும்.

நம் ஸ்ரீ வைஷ்ணவ மணப்பெண் கல்யாணத்தின் பொழுது எந்தப் பக்கம் ஆண்டாள் கொண்டை அணிய வேண்டும்? இடது பக்கமா? வலது பக்கமா? எது சரி ?

ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் எந்த ஶ்லோகம் வரை சேவிக்கலாம்? எனக்கு வெகு நாட்களாக இந்தச் சந்தேகம் இருக்கிறது. அதனால் நான் இதுவரை பல ஶ்ருதி மட்டுமே சேவித்து வருகிறேன். தயவுசெய்து விளக்கவும்.

பெண்கள் ரஜஸ்வலை காலத்தில் (மாதவிலக்கு சமயத்தில்) தேஶிக ஸ்தோத்ரம், தேசிகப்ரபந்தம், மற்றும் நாலாயிர திவ்யப்ரபந்தம் ஆகியவற்றைச் சேவிக்கலாமா?

பெண்கள் லக்ஷ்மி அஷ்டோத்ர நாமாவளி சொல்லும் பொழுது ப்ரணவாகாரத்தைத் தவிர்க்க வேண்டுமா?

ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் (ஆத்ல வேறு யாருக்கும் புஷ்பம் தொடுக்கத் தெரியாத பக்ஷத்தில்)புஷ்பம் (வாழை நார்)தொடுத்துக் கொடுத்து அதை புருஷா ஜலம் தெளித்து பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா?

ஸ்த்ரீகள் புராணத்தில் இருக்கும் குந்தி ஸ்துதி, கோபிகா கீதம், இந்திரன் செய்த ஸ்ரீஸ்துதி போன்ற புராண ஸ்துதிகளைச் சேவிக்கலாமா?

நவராத்திரியில் தாயாருக்காக வைக்கப்படும் கலசம் மரப்பாச்சி பொம்மைக்கு முன் வைக்கவேண்டுமா? அந்தக் கலசத்தை ஸ்த்ரீகள்தான் வைக்கவேண்டுமா? கைம்பெண்கள் மட்டும் இருக்கும்போது அவர்கள் வைக்கலாமா?


பெரிய திருமொழியில் ஒரே ஒரு திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள் இருப்பதன் தாத்பர்யம் என்ன?

கர்பமாய் இருக்கும் பெண் மனையில் அமர்ந்து க்ரஹப்ரவேசம் பண்ணலாமா?

ரஜஸ்வலை காலத்தில் ஏகாதசி வ்ரதம் கடைபிடிக்கலாமா? அக்காலத்தில் துவாதசி பாரணை எப்படிச் செய்வது?

புது வஸ்திரம் மடி இல்லை என சுதர்சனத்தில் படித்து இருக்கிறேன்.எனக்கு இரண்டு சிறு வயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ரஜஸ்வலை(மாதம் தீட்டு) காலத்தில் அடியேன் தனியாக ஓய்வு எடுக்கிறேன். என் குழந்தைகளை நான்தான் குளிக்க வைத்து சாதம் கொடுக்கிறேன்.

சிறு குழந்தைகள் என்பதால் அகத்தில் எல்லாம் இடத்திற்கும் செல்கிறார்கள்.அவர்களுக்குக்கு ஒவ்வொரு மாதமும் புது வஸ்திரம் தான் போடுகிறேன். இது சரியா.

ஸ்த்ரீகள் கருட காயத்ரி மந்திரத்தைக் குழந்தைகளின் ஆரோக்யத்திற்காக சேவிக்கலாமா? சேவிக்கலாம் என்றால் எப்படிச் சேவிக்கணும்?

அடியேன் கேட்ட கேள்விக்கு ஆடி மாத சுதர்சனத்தில் பதில் கிடைத்தது. மேலும் சில ரஜஸ்வலை கால சந்தேகங்கள் :

1. எம்பெருமான் நம் அகத்தில் இருப்பதால் தீட்டு காக்கவேண்டும் நம் அகத்தில் அசுத்தி ஏற்படாமல் இருத்தல் வேண்டும் என்ற காரணம் புரிகிறது அந்தர்யாமியாக நம் ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமான் ரஜஸ்வலை காலத்தில் நம் ஹ்ருதயகுகையிலிருந்து வெளியேறிவிடுவானா? என்று என் மகள் கேட்கிறாள்.

2. அடியேனின் கேள்வியானது : எங்கள் அகத்தில் கடந்த 22 வருடங்களாக ரஜஸ்வலை காலத்தில் நானேதான் தளிகை பண்ணும்படியாக இருக்கிறது. என் அகத்துக்காரர் அலுவல்வேலைக்காகப் பயணம் செய்ய நேரிடும் . 3/4 நாட்களும் வெளியில் வாங்கிச் சாப்பிட முடியாது ஆகையால் நானேதான் தளிகை செய்யும்படி உள்ளது. 4ஆம்நாள் குளித்துவிட்டு அனைத்தையும் சுத்தம்செய்து மீண்டும் பெருமாளுக்குத் தளிகைச்செய்கிறேன்.இது தவறு என்றால் இதற்கு வேறு வழி இருக்கிறதா?

மேலும் என் அகத்துக்காரர் அத்தனை உறுதுணையாக இல்லாததாலும் நானே அவர்க்கும் சேர்த்து அந்த3/4 நாட்களிலும் தளிகைப்பண்ணுகிறபடி உள்ளது. தெரிந்தே பல வருடங்களாக வேறு வழியின்றி பாபம் செய்கிறேன். இதற்கு பலமுறை எனக்குள்ளே அழுதும்கொண்டிருக்கிறேன்.

3. எனக்கு ரஜஸ்வலை காலம் மட்டுமல்லாது இதர நாட்களும் எதிர்மறையான் எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.அதையும் மீறி எப்படியோ பெருமாள் திருநாமங்களைச் சொல்கிறேன். இதற்கு என்னதான் வழி?

பால்கொடுக்கும் தாய்மார்கள் எப்படி ஏகாதசி வ்ரதம் கடைபிடிக்கவேண்டும்?

மாதவிடாய் காலத்தில் ஸ்த்ரீகள் விலகி இருப்பதின் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? இன்று இருக்கும் வசதிகள் அன்று இல்லை. நாம் ஏன் தொடர வேண்டும். எனது அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள் இதை விரிவாக அறிந்து கொண்டு தொடர விளக்குமாறு ப்ரார்த்திக்கின்றேன்.

மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் சுமங்கலிப் பெண்கள் சாதாரமான நூல் புடவை 9 கஜம் தான் உடுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது பட்டு ஜரி வைத்த புடவை அல்லது கல்யாணி காட்டன் புடவைகள் உடுத்தலாமா? 6 கஜ புடவையை 9 கஜமாக உடுத்திக் கொள்ளலாமா?

ஸ்த்ரீகள் அகத்தில் நித்யானுசந்தானத்தின் ஒரு அவ்யமாக கத்ய த்ரயத்தைச் சேவிக்கலாமா? அல்லது அது புருஷாளுக்கு மட்டும்தானா? அப்படி சேவிக்க கூடாது என்றால், ஸ்த்ரீகள் அர்த்தம் புரிந்து கொள்வதற்காக கத்ய த்ரய உபன்யாசத்தை கேட்கலாமா?

மாங்கல்ய ஸ்தவம் ஶ்லோகத்தைச் சுமங்கலிகள் மட்டும்தான் சேவிக்கலாமா அல்லது கணவரை இழந்த கைம்பெண்களும் சேவிக்கலாமா?

ஸ்த்ரீகள் லக்ஷ்மீ காயத்ரி மந்திரம் சேவிக்கலாமா?

அடியேன் நமஸ்காரம். நான் கணவரை இழந்தவள். நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் சிறியதாக இட்டுக்கொண்டு கீழே திருமண் v போல இட்டுக்கொள்கிறேன். இது சரியா? எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும். என் போன்ற பர்த்தா இல்லாதவர்கள் (கைம்பெண்கள்) நெற்றியில் குங்குமமோ, மஞ்சள் காப்போ இட்டுக்கொள்ள கூடாதா?

நாவல்பாக்கம் ஶ்ரீ உ வே வாஸுதேவாசார்யார் ஸ்வாமி ஸ்ரீ சுதர்ஶனாஷ்டக உபந்யாஸத் தொடரில் குறிப்பிட சுதர்ஶன ஷட்கோண கோலம் எப்படி போடுவது?

கல்யாணமான ஸ்த்ரீ தனது தாயாரின் ஆப்தீகத்திற்கு கலந்துகொள்ளலாமா? அதன் ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா?

ஆத்துப் புருஷர்கள் ஊரில் இல்லாத சமயம் ஸ்த்ரீகள் ஆத்து சாளக்கிராம பெருமாளுக்கத் தளிகை சமர்பிக்கலாமா?

ஆஶௌசம் மற்றும் ரஜஸ்வலா காலத்தில் ஸ்த்ரீகள் மானஸீக ஆராதனம் செய்யலாமா? அப்படிச் செய்தல் அபசாரமாகுமா?

பெண்கள் ஸ்ரீ காமாஸிகாஷ்டகம் பாராயணம் செய்யலாமா?

சுமங்கலிகள், ஏகாதசி வ்ரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?

பெண்களின் ரஜஸ்வலா காலத்தில் அவர்களுக்குப் பதில் வேறொருவர் தளிகை செய்து ஆத்து பெருமாளுக்கு அமுது செய்வர். அந்த காலத்தில் பெருமாள் அமுதுண்ட தளிகையை ஸ்த்ரீகள் க்ரஹிக்கலாமா? இல்லை தனியாக அவர்களுக்கென்று தளிகை செய்ய வேண்டுமா?

பெண்கள் அடியேன், தாஸன் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா? சம்பந்தப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேறு ஏதேனும் சொற்றொடர்கள்

உள்ளனவா? நீண்ட காலமாக, இதை யாரிடம் கேட்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். எனவே எனது சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். தன்யோஸ்மி

ஸ்த்ரீகள் பகவத் கீதை இதிஹாச புராணம் ஸேவிக்கலாமா?

கோவில்களில் ஆண்டாள் கோஷ்டி மட்டுமே திவ்ய ப்ரபந்தம் மற்றும் பாதுகாஸஹஸ்ரம் ஸேவிக்க முடியுமா?

ஸ்த்ரீகள் ஸ்வாமி தேசிகன் அருளிய அதிகரண ஸாராவளீ மற்றும் தத்வமுக்தாவளீ ஸேவிக்கலாமா?

அடியேன் நமஸ்காரம். ரஜஸ்வலா காலத்தில் பூர்வாசார்ய ஶ்லோகங்களையும் திவ்ய ப்ரபந்தத்தையும் ஸேவிக்கலாமா? தன்யோஸ்மி ஸ்வாமி. தயவுசெய்து தெளிவுபடுத்தவும். அந்தக் குறிப்பிட்டக்காலத்தில் ஶ்லோகங்களைச் சொல்லமுடியாமல் தவிக்கிறேன்.

ஸ்த்ரீகள் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணலாமா?

அடியேன் விஞ்ஞாபனம் சுவாமின். நித்ய அர்தாநுஸந்தானமாக : திருவஷ்டாக்ஷரம் த்வயம் சரம ஸ்லோகம் க்ரமமாக ஸேவிக்க விருப்பம். எப்படிச் ஸேவிப்பது? தன்யோஸ்மி

மடி, பத்து என்பது யாது? அதை எவ்வாறு இக்காலத் தலைமுறையினருக்கு விளக்குவது? அடியேன்.

ஸ்த்ரீகள்/ கைம்பெண்கள் சாளக்கிராம ஆராதனை செய்யலாமா? இன்றைய கால நடைமுறையில் ஶரணாகதி ஆன ஸ்தீரிகள், திருவாராதன சமயத்தில் மனோவாக்காயத்தினால் செய்ய வேண்டிய கர்மங்களை, தயை கூர்ந்து சாதிக்கவேண்டும்.

ஸ்தீரிகள் தளிகை ஸமர்ப்பிக்கும் போது என்ன ஶ்லோகங்கள்/பாசுரங்கள் சேவிக்க வேண்டும் என்பதை விளக்க ப்ரார்திக்கிறேன்.

ரஜஸ்வலா காலத்தில் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? அப்படி அனுஷ்டிப்பது பாபமா? மேலும் ராம கிருஷ்ண நாம ஜெபமோ அல்லது த்வய மந்திரமோ அந்தச் சமயத்தில் சொல்லலாமா? அடியேன்.

ப்ரபந்நஸ்த்ரீகளுக்கு ஏகாதசி வ்ரதம் தவிர நடைமுறையில் சிலர் அனுஷ்டிக்கும் இதர வ்ரதங்களை சாஸ்த்ரம் அனுமதிக்கின்றதா? அடியேன்.

ஸ்த்ரீ தர்மம் பற்றிய சில கேள்விகள்: குறிப்பாக ரஜஸ்வலா காலம் பற்றியது அடியேனுக்கு உடல் ரிதீயாக சில பிரச்சனைகாள் இருப்பதால் என் ரஜஸ்வலா காலம் 4 முதல் 30 நாட்கள் கூட நீள்கின்றது.

அப்படியிருக்க அடியேன் அக்காலம் முழுவதும் ஒதுங்க வேண்டுமா? இல்லை 4 நாட்கள் மட்டும் ஒதுங்கி இருந்தால் போதுமா?

அடியேன் 5 நாட்களுக்குப் பின் தளிகை செய்யலாமா?

அடியேன் 5 நாட்களுக்குப் பின் பெருமாள் திருவாராதனை பாத்திரங்களை சுத்தம் செய்யலாமா?

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எது சரியான முறை என்று வழிக்காட்டவும். அடியேன்.

ஸ்த்ரீகள் துளசிச்செடிக்கு நீர் சேர்த்து, ஸ்லோகங்கள் சொல்லி, கோலம் போட்டு சேவிக்கின்றோம். அதே போல், க்ருஷ்ணபகவானை த்யானித்துக்கொண்டு ஸ்த்ரீகள் துளசியைப்பறித்து பெருமாளுக்குச் சமர்ப்பிக்கலாமா?

ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யலாமா? அல்லது சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானம் மட்டுமே சேவிக்க முடியுமா?

மேலும், ஸ்த்ரீகள் காரியசித்திக்காக சுந்தரகாண்டத்தின் வ்யாக்யானத்தை வாசித்தால் மூலம் பாராயணம் செய்யும் அதே பலன் கிட்டுமா? தெளியப்படுத்த ப்ரார்த்திக்கின்றேன்.

ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணத்திற்கு பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கலாமா? அல்லது பரந்யாஸத்திற்கு பிறகு தான் ஜபிக்க வேண்டுமா?

அடியேன் நமஸ்காரம், என்னுடைய கணவர் ஊரில் இல்லாத சமயத்தில் திருவாராதனை செய்யமுடியாத சமயத்தில் (பண்டிகை நாளிலோ அல்லது வெள்ளி சனி கிழமைகளில் ஆத்து பெருமாளுக்கு நான்(ஸ்திரிகள்) கற்பூரார்த்தி காட்டலாமா, தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

அடியேன், இப்போது நான் ஆறு மாத கர்ப்பிணி. கர்ப்பிணிகள் மலயேறக்கூடாது என்பர். திருமலை போன்ற திவ்யதேசங்களைத் தவிர இதர திவ்யதேசங்களை இந்தச்சமயம் அடியேப் சென்று சேவிக்கலாமா? ஸ்வாமி. அடியேன்.

சுமங்கலி ப்ரார்த்தனை செய்யும் போது ஒரு கன்னிப் பெண்ணையும் மற்ற சுமங்கலிகளுடன் அமர வைக்கின்றோம். 1. கன்னியாப்பெண் என்றால் யார்? திருமணமாகாத பெண்ணா? அல்லது ஏதேனும் குறிப்பிட்ட வயதுக்குள் உள்ள குழந்தையா?. 2. சுமங்கலி ப்ராத்தனையில் கன்னியா பெண்ணும் சேர்த்து எத்தனை பேர் அமர வேண்டும்? அடியேன் தெளியப்படுத்த விண்ணப்பிக்கிறேன்.

அடியேனின் தாயார் கடந்த மாதம் மதுரை திருமோகூர் கோயில்களுக்குச் சென்று சேவித்து விட்டு திரும்ப வரும்பொழுது விபத்தில் இறந்து விட்டார். காரியங்களைத் தம்பி செய்தான். பெண் என்ற முறையில் அடியேன் அம்மாவின் ஆத்ம சாந்திக்கு என்னச் செய்ய வேண்டும்? தயவு செய்து பதில் அளிக்கவும்.

அடியேன், ஜன்மாஷ்டமி மற்றும் திருவாடிப்பூரம் போன்ற பண்டிகை நாட்களில் பெருமாள் மற்றும் தாயார் சித்திரத்தை கோலமாக இடலாமா?

என் மகள் இப்போது கல்லூரியில் இருக்கிறாள். ரஜஸ்வலா காலத்தில் பெருமாள் சந்நிதியை சேவிக்கவோ அல்லது கோவிலுக்குச் செல்லவோ கூடாது என்று சொன்னால் ஏற்க மறுக்கிறாள். ஏன் என்று விளக்கம் கேட்க்கிறாள். எங்களால் விளக்கம் கூற முடியவில்லை. இது சம்பந்தமாக நாங்கள் எதைச் சொன்னாலும் அவள் காதில் வாங்காமல் இருக்கிறாள். அவள் ஈடுபாடு இல்லாமல் எங்கள் வற்புறுத்தலின் பேரில் ஆத்து பெருமாளைச் நித்யமும் சேவித்து மாதம் ஒரு முறை கோவிலுக்கு வருகின்றாள்.தங்களின் விளக்கம் அவளை த்ருப்த்திப்படுத்தும் என்கின்ற நம்பிக்கையில் இதற்கான காரணத்தை விளக்க ப்ரார்த்திக்கிறேன்.ஆசார்யன் திருவடிகளே சரணம்”

ஸ்த்ரீகள் ப்ரபந்தம் சேவிக்கலாமா?

பெண்கள் ஏன் ஆசமனம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் சரியாக முறைப்படி செய்வது? மற்றும் ஆசமனம் செய்யும் பொழுது எந்தத் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும்?ஆசமனம் செய்வதற்கு நியமம் ஏதேனும் இருக்கின்றதா? ரஜஸ்வலா காலத்திலும் ஆசமனம் செய்யலாமா?

ஸ்த்ரீகள் பாகவதம், வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் மற்றும் பகவத் கீதையின் மூலம் சேவிக்கலாமா?

ஸ்த்ரீகள் ஸ்ரீசூர்ணம் மற்றும் திருமண் இட்டுக்கொள்ளும்பொழுது பெருமாளுடையத் திருநாமங்கள் ஏதாவது சொல்லி இட்டுக்கொள்ள வேண்டுமா? தன்யாஸ்மி

உடல் நிலை காரணமாக ரஜஸ்வலை காலம் நீடித்தால் என்னென்ன ஆசாரத்தை பின்பற்ற வேண்டும்.

மஞ்சள் சரடிற்கு பதிலாக தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறதா? இப்போது சமீபத்தில் திருமணமான பெண்கள் அப்படி அணிவதையே விரும்புகின்றனர். இதை தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கிறேன். இளம் பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தாய்மார்களுக்கும் கூட அவ்வாறே அணிவதை காணமுடிகிறது.

அடியேன், ஸ்த்ரீகள் ஆளவந்தாருடைய ஜிதந்தே ஸ்தோத்ரம் சேவிக்கலாமா?

அடியேன் ஆத்து விக்ரஹங்களை ஸ்த்ரீகள் தொட்டு சுத்தி செய்யலாமா? புது வஸ்த்ரங்கள் அணிவிக்கலாமா?

மஹாளய பக்ஷத்தில் சுமங்கலிப் பெண்கள் வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டுமா?

த்வய மந்த்ர உபதேசத்தின் போது ஸ்த்ரீகள், ப்ரணவத்திற்கு பதிலாக உம் என்று உச்சரிக்க வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டேன். பல இடங்களில் ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ரஜஸ்வலை காலத்தின் ஐந்தாவது நாள் ஸ்த்ரீகள் ஶ்ராத்த காரியங்களில் அந்நியா தீட்டு ஸ்நானம் செய்தபிறகு பங்கு எடுத்துக்கொள்ளலாமா?

க்ருஹத்தில் புருஷர்கள் இல்லாத நாட்களில், ஸ்த்ரீகள் பெருமாள் பெட்டியை திறந்து (பெருமாளைத் தொடாமல்) தளிகை அம்சை பண்ணலாமா அல்லது பெருமாள் பெட்டியைத் தொடாமல் தளிகை அம்சை பண்ண வேண்டுமா?

ஒரு பெண் முதன் முதலில் ருது பருவம் அடையும் போதுச் செய்ய வேண்டிய சம்ஸ்காரங்கள் என்ன?

க்ருஹங்களில் பெருமாளுக்கு ஸ்த்ரீகள் கற்பூரஆரத்தி காண்பிக்கலாமா? பெருமாளுக்கு செய்யும் கற்பூர ஆரத்தியை நாம் கண்களில் ஒற்றிக்கொள்ளலாமா?

பாஞ்சாராத்ர க்ரந்தங்களை ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?

நமஸ்காரம். திருமணமான ஸ்த்ரீகள் தினமும் துளசி மாடத்தை எப்படி அலங்கரித்து வழிபட வேண்டும்? பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் அதற்கான குறிப்பிட்ட ஏதேனும் ஸ்லோகங்கள் இருக்கின்றதா என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம் சந்தை சேவிக்கலாமா? க்ருஹத்தில் பாராயணம் பண்ணலாமா? தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்த்ரீகள் ஸ்ரீ ஸூக்தம் சேவிக்கலாமா?

“தீர்தாமாடியபின் வஸ்த்ரம் உடுத்தி நெற்றியிட்டுண்டு ஆசமனம் பண்ணனுமா அல்லது வஸ்த்ரம் உடுத்தியதும் ஆசமனம் பண்ணிவிட்டு நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டுமா? (For Sthree)

அஷ்டாக்ஷர ஜபம் செய்ய ஆசமனம், சங்கல்பம், பின் ஜபம் இந்த க்ரமம் சரியா? ஸ்திரீகள் ஜபம் செய்ய சங்கல்பம் பண்ண வேண்டுமா? த்வயம் மற்றும் ஶரம ஸ்லோகம் ஜபிக்க ஸ்திரீகள் பின்பற்ற வேண்டிய க்ரமத்தை தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவ வடகலை ஸம்ப்ரதாயத்தின் படி ஒரு ஸ்திரீ எப்படி நெற்றியிட்டுக்கொள்ள வேண்டும். சிலர் ஸ்ரீசூர்ணம் மட்டும் இட்டுக்கொள்கிறார்கள், சிலர் சிறிய திருமணுடன் (ஆசார்யன் ஸம்பந்தம் கிடைக்கப்பெற்ற பின்) ஆசார்யன் காட்டிய படி இட்டுக்கொள்கிறார்கள், வேறு சிலர் வட்டமாக குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள் எது சரியான ஸ்வரூபம்.

அமாவாஸை அன்று தளிகைக்கு மஞ்சள் சேர்க்கக்கூடாது என்கிறார்கள். அப்படியானால், நாம் ஸ்நானம் செய்யும்போது முகத்திற்கோ , சரடிற்கோ மஞ்சள் சேர்க்கக்கூடாதா? மேலும் அன்று எண்ணெய் குளியல் பண்ண வேண்டுமா?

சுமங்கலி ப்ரார்த்தனைக்குத் தவிர்க்க வேண்டிய நாட்கள் எவை?”

நம் ஸம்ப்ரதாயத்தின் படி ஸ்திரீகள் கண்ணாடி வளையல் அணியலாமா?

ரஜஸ்வலையின் 4வது நாளில் பண்டிகைகள் வந்தால் எப்படிக் கொண்டாடுவது?

அந்யா தீட்டு ஏகாதசி, துவாதசி, அமாவாசை போன்ற நாட்களில் வந்தால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?

ஸ்திரீகள் சாளக்கிராமத்தைத் தொடக்கூடாது என்கிறார்கள். அடியேனின் தாயார் கூறியதாவது, என் பாட்டி பெருமாள் ஏளியிருக்கும் பெட்டியைச் சுத்தம் செய்யும் சமயம் பெருமாளைத் தொடுவார் என்றார். பாட்டி அப்படிச் செய்ததால் பெருமாளின் சாநித்யம் குறைந்து போய்விடுமா? என்பது அடியேனின் சந்தேகம். மேலும் அடியேன் தொடர்ந்து அந்தப் பெருமாளுக்கு திருவாராதனை செய்யலாமா?

ரஜஸ்வலை காலங்களில் உபன்யாசங்கள், நாமசங்கீர்த்தனங்கள் கேட்கலாமா? டிஜிட்டல் க்ரந்தங்களை வாசிக்கலாமா?

ஸ்த்ரீகள் ரஜஸ்வலை காலத்தில் ஸ்லோகங்களைச் சொல்லலாமா? அப்படிச் சொல்வதாக இருப்பின் எந்தெந்த ஸ்லோகங்களை சேவிக்கலாம்? நன்றி தாஸன்

நமது ஸம்ப்ரதாயத்தில் பெண்கள் கேசத்தை மற்றும் புருவங்களைத் திருத்திக் கொள்வது அனுமதிக்கப்படுகிறதா என்று அடியேன் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

பெண்கள் கம்பராமாயணம் சேவிக்கலாமா? அடியேன்

பெண்கள் ரஜஸ்வலை 5ம் நாளிலிருந்து ரஜஸ்வலை நீடித்தாலும் கோயிலுக்கு செல்லலாமா? அடியேன்

பண்டிகை, ஶ்ரார்த்தம் போன்ற நாட்களில் சுமங்கலி ஸ்த்ரீகள் குங்குமத்தினால் திலகம் இட்டுக்கொள்ள வேண்டுமா, ஸ்ரீசூர்ணத்தில் இட்டுக்கொள்ள வேண்டுமா, நெற்றிவகுடு துவக்கத்தில் குங்குமம் இட்டு கொள்வது ஸம்ப்ரதாயபடிச் செய்யலாமா.

மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் ஆசார்ய உபதேசம் பெற்று தான் சேவிக்க வேண்டுமா? ஸ்த்ரீகள் சேவிக்கலாமா?

என் மகளுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனை இருக்கிறது, இது குணமடைய வேண்டி எம்பெருமானிடம் ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் இருக்கிறதா?

ஸ்த்ரீகள் சாளக்கிராம மூர்த்தியைத் தொட்டு திருவாராதனம் பண்ணக்கூடாது என்று சுதர்சனம் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் ஆண்டவன் ஆஶ்ரமம் வெளியிட்டுள்ள ஸ்த்ரீ திருவாராதனம் செய்யும் முறையில் அனைத்து குறிப்பும் அதாவது ஸ்த்ரீகள் பெருமாளை தொட மந்திரம் உட்பட எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எதை பின்பற்றுவது என்று குழப்பமாக உள்ளது.

எங்கள் அகத்தில் எப்போதும் படுக்கையில் படுக்கும் வயதானவர்கள் இருக்கா. சிறு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு அல்பசங்கை போக உதவ வேண்டி இருக்கும். இதுபோன்றவைகளால் ஏற்படும் விழுப்புடன் மாலை பெருமாள் விளக்கு ஏற்றலாமா? இல்லை குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டுமென்றால் சாயங்காலம் (சூர்யாஸ்தமனத்திற்கு பின்) பெண்கள் குளிக்கலாமா?

பார்த்தாவை இழந்த ஸ்த்ரீகள் நெற்றிக்கு (திருமண் ஸ்ரீ சூரணம்) எவ்வாறு இட்டுக்கொள்ள வேண்டும்?

ஸ்த்ரீகள் பொதுவாக அனுஷ்டிக்க வேண்டிய நியமங்கள்/தர்மங்கள் என்னென்ன? தீர்த்தாமாடுதல், ஆஹாரம், பெருமாள் விள்ளக்கேற்றுதல் போன்றவை தொடங்கி நித்யமும் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

நமஸ்காரம், சூரிய உதயத்திற்கு முன் சிரோஸ்நானம் பண்ணக்கூடாதா? அப்போ வேலைக்குச் சீக்கிரம் போகும் ஸ்த்ரீகள் என்ன செய்வது.

அடியேன் ஆத்தில் ப்ரத்யாப்திக ஶ்ராத்தத்திற்குத் தளிகை கைங்கர்யம் செய்கிறேன். அதற்கு ஸ்த்ரீகள் முதல்நாள் மற்றும் ஶராத்த நாளன்று கடைபிடிக்கவேண்டிய ஆசாரங்களை விளக்கவும்.

திருமாங்கல்ய சரடை பொதுவாக நாள் பார்த்து மாற்றிக்கொள்ளலாமா? இது சரியா?

இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டுமா?

பெண்களுக்கு மாதம் வரும் தீட்டு இரவு எத்தனை மணிக்கு மேல் வந்தால் அடுத்த நாள் கணக்காக கொள்ளவேண்டும்?

ஆடிப்பண்டிகையின் போது ஸ்த்ரிகள், குழந்தைகள் எண்ணெய் ஸ்நானம் பண்ணலாமா?

நமஸ்காரம், வேலைக்குச் செல்லும் ஸ்த்ரீகள் தவிர்க்காமல் அனுஷ்டிக்க வேண்டியவை என்று ஏதேனும் உள்ளதா?

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஸ்த்ரீகள் சேவிக்கக்கூடாது என்று புரிகிறது. அதில் வனமாலி கதீ சார்ங்கி மற்றும் ஸ்ரீ ராம ராம ராமேதி போன்ற இரண்டு ஶ்லோகம் மட்டும் சேவிக்கலாமா?

சுமங்கலித்தன்மையுடன் இருக்க வேண்டி ப்ரார்த்திக்க ஏதேனும் ஶ்லோகம் உண்டா?

பிள்ளை பிறந்து ஓர் வருடத்திற்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்து 17 வருடம் ஆகிறது.புக்ககத்தில் மாமியார் ஶ்ராத்தம், இதர தர்ப்பணாதி கர்மானுஷ்டாத்தை விவாகரத்து ஆன ஸ்திரீ எந்த முறையிலாவது கடைபிடிக்க வேண்டுமா?அல்லது தேவையில்லையா? புக்காத்திலிருந்து எந்த ஜீவனாம்சமும் சொத்தும் பெறவில்லை.மேற்படி விஷயத்திற்கு அருள் கூர்ந்து பதில் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ரஜஸ்வலை காலத்தில் ஸ்த்ரீகள் எத்தனை நாடகள் ஸ்தோத்ரம்.ப்ரபந்தம் சேவிக்காமல் இருக்க வேண்டும்? ரஜஸ்வலையின் சமயம் பெண்கள் பின்பற்ற வேண்டிய அனுஷ்டானங்கள் பற்றி தனித் தலைப்பாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்த்ரீகள் ஸுதர்ஶன ஶதகம் சேவிக்கலாமா?

ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் (ஸ்மார்த்தர்கள்/ தேவதாந்தர சம்பந்தம் உடையவர்கள்) நவராத்ரி நேரம் தாம்பூலத்துடன் தரும் முழுத் தேங்காயை (ப்ரந்யாஸம் ஆனவர்கள்) தளிகைக்கு உபயோகிக்கலாமா? மேலும் அவர்கள் அளித்த மஞ்சள், பாக்கு போன்றவற்றை பெருமாள் சந்நிதியில் வைக்கலாமா?

பெண்களும் பிள்ளைகளும் தாயாரோடு இல்லை. தாயார் கைம்பெண். அவள் ஆகத்தில் கொலு வைத்து வெத்தலை பாக்கு வரவாளுக்குக் கொடுக்கலாமா?

ஸ்த்ரீகள் பொதுவாக நெற்றியிலும் பின்கழுத்திலும் திருமண்காப்பு தரிக்கும்போது துவாதச மந்திரம் கூறி இடவேண்டுமா? அல்லது கேசவாய நம:/ஸ்ரீயை நம: என்றும் தாமோதராய நம:/சுரசுந்தர்யை நம: என்று மட்டும் கூறி இட்டுக்கொள்ளலாமா?

பொதுவாக ஸ்த்ரீகள் பின்பற்ற வேண்டிய தினசர்யாவைம் மாசப்பிறப்பு போன்ற நாட்களில் என்ன தளிகை செய்யவேண்டும் என்பதையும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

a. கல்யாணம் ஆகாத ஸ்ரீவைஷ்ணவ பெண்பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய தினசர்யா என்ன என்று தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன். ஒருவேளை அந்தப் பெண்பிள்ளை ஸ்மாஶ்ரயணம் ஆகவில்லை என்றால் அவள் பின்பற்ற வேண்டிய நித்யகர்மா அனுஷ்டானம் (காலையும் மாலையும்) என்ன என்றும் தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

b. அடியேன் திருமணமாகாத ஒரு ஸ்ரீவைஷ்ணவ பெண்பிள்ளை எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி அடியேன் கேட்டதின் காரணம் அடியேன் ஸ்ரீவைஷ்ணவர் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள், மேலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் வெளிநாட்டில்தான். சில காரணங்களால் தற்போது இந்தியா வந்து ஸமாஶ்ரயணம் செய்துக்கொள்ள முடியாத சூழலில் உள்ளேன். அதுவரை ஒரு ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட விதிகளுக்குட்பட்டு ஸ்ரீவைஷ்ணவ நெறிகளைப் பின்பற்ற ஆசையாக உள்ளது என்று தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும், எங்கள் அகத்து புருஷர்கள் பூஜை போன்றவை செய்வதில்லை. அடியேன் மட்டும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஈர்க்கப்பட்டு இயன்றளவு கடைபிடிக்கவேண்டும் என்ற ஆசையால் இக்கேள்வியை பதிவிட்டுள்ளேன்.

பெண்கள் ஆசமனம் செய்வது பற்றி வேதத்திலோ, அல்லது இதிஹாஸ புராணங்களிலோ ஏதேனும் குறிப்புள்ளதா?

மஞ்சள்காப்பை சுமங்கலி ஸ்த்ரீகள் நெற்றியில் இட்டுக்கொள்ளலாமா? முக்கியமாக திருமண் ஸ்ரீசூர்ணத்தின் மேல் குங்குமம் மற்றும் மஞசள் காப்பை இட்டுக்கொள்ளலாம? ப்ரணாமஙகள்

ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ ஹனுமான் சாலிசா சேவிக்கலாமா?

ஆண்டாள் கோஷ்டி மட்டும் கத்ய த்ரயம் கோயிலில் சேவிக்கலாமா?

பரிசேஷணத்திற்கு இணையான ஒன்று ஸ்த்ரீகளுக்கு உண்டா?

ஸ்த்ரீகள், யாகம் நடக்காத போது யாகசாலைக்குச் சென்று ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் திவ்ய ப்ரபந்தம் ஆகியவற்றை அங்கு சேவிக்கலாமா?

க்ருஹங்களில் புருஷர்கள் திருவாராதனம் செய்துவிட்டு அலுவலகத்திற்குச் சீக்கிரம் கிளம்பிச் சென்றுவிட்டால், அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள், குழந்தைகள் மற்றும் அகத்தில் இருக்கும் பெரியோர்களுக்கும் பெருமாள் தீர்த்தம் சாதிக்கலாமா?

நமஸ்காரம் அடியேன். நம் வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஸ்திரீகள் கருகமணி கோர்த்த செயின் அணிந்து கொள்ளலாமா? அடியேனுக்குத் தெளிவு படுத்தவும்.

ஸ்த்ரீகள் யாரேனும் நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்களாக இருந்தனரா? ஆம் என்றால், அவர்களைப் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.

அடியேன் தினமும் ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதனை செய்கின்றேன் அதன் அருளிச்செயலில் என் பாரியாளும் பங்கேற்பார். இது சரியா?

ஆத்துக்காரர் பரமபதித்து சுபம் முடிந்த பிறகு ஆழ்வார் ஆசார்யர் ஸ்ரீஸுக்திகள் கற்றுக்கொண்டிருக்கிறவர்கள், மீண்டும் அந்த வகுப்புகளில் தொடர்ந்து ஸேவிக்கலாமா/கற்கலாமா?

பொதுவாக எத்தனை நாட்கள் மாசி நோன்பு சரடை (கன்யா பெண்கள் மற்றும் சுமங்கலி ஸ்த்ரீகள் என இருவரும்) நாம் அணிந்துகொள்ளலாம்?

க்ஷௌரம் செய்யும் நாளில் என்ன கர்மங்கள் செய்யவேண்டும் என்று விளக்க வேண்டுகிறேன்.

எங்கள் அகத்தில் குமார ஷஷ்டி (அன்றைய தினம் ப்ரஹ்மச்சாரிகளுக்கு போஜனம் இடுவது)பல வருடங்களாகச் செய்து வருகிறோம். அடியோங்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பரந்யாஸமும் ஆகிவிட்டது, இதற்குப் பின் அவ்வழக்கத்தைத் தொடரலாமா?

ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீகள் நித்யம் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் எவை? மேலும் கோவில்களுக்கு அல்லது ஆசார்யனைச் சேவிக்க செல்லும்போது எப்படிப் போகவேண்டும்? அதாவது எப்படி தலைவாரிக் கொள்ளவேண்டும், நெற்றி இட்டுக்கொள்ளவேண்டும், குங்குமம் வைத்துக்கொள்ளலாமா போன்றவற்றை விரிவாகத் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்த்ரீகள் ஸ்ரீ கிருஷ்ணன் டாலர் மஹாலக்ஷ்மி‌ டாலர் செயினில் போட்டுக் கொள்ளலாமா. எப்பொழுது எல்லாம் போட்டுக் கொள்ள கூடாது.பெரியவர்களைச் சேவிக்கும் போது போட்டு கொள்ளலாமா சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்த்ரீகள் சுந்தரகாண்டம்,ஸ்ரீமத் பகவத்கீதை மூலம் கற்றுக்கொள்ளலாமா? பாராயணம் செய்யலாமா? ஏதேனும் விதிமுறை உள்ளதா?

ஒரு ஸ்த்ரீ கர்பமாக இருக்கும்போது ஏன் வீடு மாற்றிப்போகக்கூடாது?

பதியை இழந்த பத்னி ஒரு வருஷ காலத்தில் தீர்த்த யாத்திரை போவது கிடையாது என்று சொல்லியிருந்தீர்கள்.திவ்ய க்ஷேத்ரம் இல்லாத மற்ற கோயில்களுக்கு ஆத்துக்குப் பக்கத்தில் இருக்கிற கோவில்களுக்குப் போகலாமா?செய்யத் தகுந்தது செய்யத் தகாதது சொல்ல வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.

புருஷர்கள் இல்லாதபோது ஆத்துப் பெருமாளுக்குத் தளிகை கண்டருளப் பண்ணும்போது ஸ்தீர்கள் திருமணி சேவிக்கலாமா?

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி ஸ்த்ரீகள் நாராயணீயம் மற்றும் சங்க்ஷேப இராமாயணம் சேவிக்கலாமா?

நம் ஸம்ப்ரதாயத்தில் ஜபம் செய்யும்போது துளசி, வேப்ப அல்லது தாமரை மாலைகளை ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஏன் உபயோகிப்பதில்லை? ஸ்த்ரீகள் ஜபம் செய்ய என்ன மாலையைப் பயன்படுத்தவேண்டும்?

ரஜஸ்வலை காலம் முடிந்த நான்காம் நாள் சில க்ருஹங்களில் அரிசி மற்றும் உப்பு / புளி மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. இதற்குப் பின்னால் ஏதேனும் விஞ்ஞான ரிதீயாக காரணம் இருக்கிறதா என்று விளக்கவேண்டுகிறேன்.

ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் வரும் அபாமார்ஜந ஸ்தோத்ரம் சேவிக்கலாமா?

Loading

Scroll to Top