சுபகிருது – ஐப்பசி – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


அடியோங்கள் ப்ரபத்தி ஆனவர்கள்.வடகலை. இங்கு தென்கலை ஸம்ப்ரதாய திவ்ய தேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகள் உத்சவம் பத்து நாட்கள் நடைபெறும் போது அடியேன் சில கைங்கர்யம் ‌‌‌செய்து கலந்து கொள்வேன். இது சரியா?

Vidwan’s reply:

மணவாள மாமுனிகளும் இராமானுஜதாஸர்தான், ஆகையால் அவரின் திருநக்ஷத்ர கைங்கர்யத்தில் பங்கேற்பது தவறில்லை.


குழந்தைகள் பிறக்காத தம்பதிகள் எப்படி ஷட்டியப்தபூர்த்தி செய்துகொள்ள முடியுமா?

Vidwan’s reply:

குழந்தைகள் பிறக்காத தம்பதிகளின் ஷட்டியப்தபூர்த்தியை அவர்களின் உடன்பிறந்தவர்கள் நடத்தி வைக்கலாம்.


வெள்ளை சங்குப்பூ பூக்கிறது.பெருமாளுக்குச் சாத்தலாமா?

Vidwan’s reply:

வெள்ளை சங்குப்பூ பெருமாளுக்குச் சேர்ப்பிப்பது உண்டு.


அடியோங்கள் ஆத்துப் பெருமாள் சாளக்கிராமம் மற்றும் நிறைய திவ்ய தேசங்களின் பெருமாள் படம் , அபிமான ஸ்தலப்பெருமாள் படங்கள் இருக்கிறது.ஆனால் சில பேர் பரன்யாஸம் ஆனவர்கள் சாளக்கிராம் மற்றும் ஆசார்யன் வைத்து கொள்.இந்த பெருமாள் படம் வேண்டாம் என்கிறார்கள்.அப்படியா? குழப்பம் தீர ப்ரார்த்திக்கிறேன்.
Vidwan’s reply:

அகத்தினுள்ளே சுற்றி பெருமாள் படம் வைத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை. திவ்யதேச பெருமாள்கள், அபிமான ஸ்தலப்பெருமாள்களின் படங்கள் அவசியம் வைத்துக்கொள்ளலாம். தேவதாந்திர படங்கள்தான் கூடாது.

மேலும், அகத்து திருக்கோயில் ஆழ்வாரின் உள்ளே படங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. இதுவே பெரியோர்களின் வழக்கத்தில் உள்ளது.


நாய் போன்ற செல்லப்ராணிகளை ஏன் நாம் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடாது?

Vidwan’s reply:

நாய் நம் மேல் பட்டாலே தீட்டு என்றிருப்பதனால், நாய் போன்ற செல்ல ப்ராணிகள் அகத்தில் வளர்க்கக்கூடாது.


அடியேனின் ஆசார்யன் ஸ்ரீமத் அழகியசிங்கர். அவர் மடாதிபதி ஆனபடியால் உத்தமமான கைங்கர்யபர்களைக் கொண்டுள்ளதால் அடியேனைப்போன்ற சாமானியர்களுக்கு பெரிதாக ஶரீரரூபமாக கைங்கர்யம் செய்யும் வாய்ப்போ அல்லது தகுதியோ இல்லை. இருப்பினும் ஆசார்யனுக்கு கைங்கர்யம் செய்ய இயலவில்லையே என்று மனம் வருந்துகிறது. அடியேனைப் போன்ற சாமானியன் அழகியசிங்கர் போன்ற மடாதிபதிக்கு அவர் மனமுகக்கும்படி வேறு எவ்விதங்களில் கைங்கர்யங்களைச் செய்யலாம்?

Vidwan’s reply:

ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும்படி கைங்கர்யம் பண்ணவேண்டும். அவரின் ஆக்ஞையைக் கடைபிடிக்க வேண்டும், அதுவே அவர்களின் திருவுள்ள உகப்புக்குக் காரணமாய் அமைந்துவிடும்.

நேரே போய் ப்ரத்யக்ஷமாய், அதாவது அவருக்கு பிக்ஷை சாதித்தல் அல்லது பிஷை இலை எடுத்தல் போன்ற கைங்கர்யங்கள் செய்தால்தான் அவரின் திருவுள்ளம் உகக்கும் என்றில்லை. ஸ்ரீமதழகிய சிங்கர் ஸமாஶ்ரயணம் செய்து வைக்கும்போது தினமும் மந்திர ஜபம், திருவாராதனம் எல்லாம் பண்ணவேண்டி ஆக்ஞை இட்டிருப்பார் அவர் சொன்னபடி செய்தாலே போதும் அவரின் திருவுள்ளம் உகக்கும். நம் வர்ணாஶ்ரம தர்மம் பிசகாமலும், நித்ய கர்மானுஷ்டானம் விடாமலும் பண்ணினாலே ஆசார்யன் திருவுள்ளம் உகந்துவிடும்.


கடையில் வாங்கிய புது வஸ்த்ரத்தை, முதல் முறை துவைக்கும் வரை அதை மடிவஸ்த்ரமாகத் தரிக்கலாமா?

Vidwan’s reply:

கடையில் வாங்கிய வஸ்த்ரம் பட்டு வஸ்த்ரமாக இருந்தால் அப்படியே தரித்துக்கொள்ளலாம். பஞ்சினால் (Cotton) நெய்ததாக இருந்தால், அதை மஞ்சள் தடவி நனைத்து ஆசாரமாக உலர்த்தியபின் தரிப்பது என்ற அனுஷ்டானத்தை ஆவணி அவிட்டத்தின் சமயம் பெரியோர்கள் செய்வதை நாம் காணலாம். ஆவணி அவிட்டத்திற்குப் புதுவஸ்த்ரம் தரிப்பது என்று அனுஷ்டிக்கும் பெரியோர்கள் இவ்வாறாகவே செய்வர்.

தீபாவளி முதலான மங்கள சமயங்களில் புது வஸ்த்ரத்தை (துவைப்பதற்கு முன்) உடுத்தலாம். ஆனால், அது சற்றே மடி குறைவு (தீட்டு அல்ல்); மேலும் அது திருவாராதனம் செய்வதற்கேற்ற மடி கிடையாது.


மஹாளய பக்ஷம் பற்றி:

மஹாளய பக்ஷம் முழுவதுமே ஶ்ராத்த தளிகை பண்ண வேண்டுமா? மஹாளய தர்ப்பணம் (மத்யாஷ்டமிக்குப் பின்) செய்தாயிற்று என்றால் அதன்பின் எப்போதும் போல் தளிகை பண்ணலாமா?

தம்பதிகள் இருவரும் 15 நாட்கள் முழுவதுமே தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா?

Vidwan’s reply:

மஹாளய பக்ஷம் முழுவதும் ஶ்ராத்த தளிகை பண்ணவேண்டாம். என்றைக்கு மாஹாளய தர்ப்பணம் பண்ணுகிறார்களோ அன்றும் மற்றும் மாஹாளய அமாவாஸை அன்றும் ஶ்ராத்த தளிகை பண்ணுவது வழக்கம்.

மஹாளயபக்ஷம் 15 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்களாக இருந்தால், தம்பதிகள் இருவருமே 15 நாட்களும் ஸ்நானம் (தலைக்குத் தீர்த்தமாடுதல்) செய்யவேண்டும். சக்ருத்மஹாளயம் (அதாவது ஒரே ஒருநாள் மட்டும் தர்ப்பணம்) செய்பவர்கள், அன்று ஒருநாள் மட்டும் தீர்த்தமாடினால் போதும்.


உப்பு போட்டு அடுப்பில் ஏற்றினால் அந்த உணவு பத்தாக கருதப்படுமா?

Vidwan’s reply:

உப்பு போட்டு அடுப்பில் ஏற்றினால் அது பத்தாக ஆகிவிடாது. சாதம் கலந்ததாக ஆகும். பலகார நாட்களில் உப்பு போட்டுதான் பண்ணுகிறோம். அதே போல் இட்லி மாவில் உப்பு கலந்து தான் அடுப்பில் ஏற்றுகிறோம் அவையெல்லாம் பத்து கிடையாது.


பஞ்சஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமாளை காம்யார்த்தமாக சேவிக்கின்றார்கள் என்றால் அவர்களை பாகவதர்கள் என்று கொள்ளலாமா?

Vidwan’s reply:

பஞ்சஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள், எம்பெருமானை மட்டுமே சேவிக்கிறார்காள் என்றால், அவர்கள் பாகவதர்கள்தான். அது காம்யார்த்த விஷயமாகவோ, பரமைகாந்திகளோ எப்படியிருந்தாலும் எம்பெருமானை மட்டுமே வழிபடுபவர்களாகயிருந்தால் அவர்கள் பாகவதர்கள்தான்.


நமஸ்காரம், அடியேனுக்கு வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்தாலும், அது எடுபடுவது இல்லை, சில நாட்கள் கழித்து அவ்விடத்தில் வேலை செய்ய முடியாமல், திரும்ப வேலை தேட வேண்டி உள்ளது, வேலை கிடைக்கும் வரை வருமானத்திற்கு கஷ்டமாக உள்ளது, இதற்கு உபாயம் ஏதும் உண்டா.

Vidwan’s reply:

இதற்கு உபாயமாக, ஶ்ரத்தையாக பிராட்டியை நினைத்து ஸ்ரீஸ்துதியை சேவிக்கலாம் என்று தோன்றுகிறது.


பாகவத அபசாரம் பட்டுவிட்டால் மோக்ஷத்திற்குத் தடை ஏற்படுமா? அல்லது எம்பெருமாள் சிக்ஷை கொடுத்து மோக்ஷம் அளிப்பாரா?

Vidwan’s reply:

பாகவத அபசாரம் ஏற்பட்டால் மோக்ஷத்திற்குத் தடையும் ஏற்படலாம் என்று சொல்லியிருக்கு. அது அத்தனை தீவிரமானது ஆகையால் அவசியம் தவிர்க்க வேண்டியது.


பெருமாள் தாயர் படங்கள் தனித்தனியே இருந்தால் தாயர் படம் பெருமாளின் வலது புறம் அல்லது இடது புறம் வைக்க வேண்டுமா? இந்தப் பக்கம்தான் தாயர் படம் என்று ஏதேனும் முக்கியத்வம் இருக்கிறதா?

Vidwan’s reply:

பெருமாள் தாயார் படங்கள் தனித்தனியே இருந்தால் ஒரு பாவத்தோடு, லக்ஷ்மீதேவியாக இருந்தால் வலது பக்கத்திலும், பூமாதேவியாக இருந்தால் இடது பக்கத்திலும் வைத்து அனுபவிக்கலாம். நியமம் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் அனுபவத்தைக் கொண்டு ஒரு பக்திபாவத்தில் எப்படி வைக்கலாமோ அப்படி வைத்துக்கொள்ளலாம்.


வேலைக்குச் செல்வோர்கள் பணி முடிந்து திரும்பிய பின் சாயம் சந்தியாவனம் செய்யும் முன் தலைக்குத் தீர்த்தமாட வேண்டுமா அல்லது சந்தியாவனத்தில் வரும் ப்ரோக்ஷன மந்திரங்களே சுத்தியைத் தருமா? அஷ்டாக்ஷர ஜபம் அதில் செய்யவேண்டியிருப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்தது.

Vidwan’s reply:

பொதுவாக முடிந்தவரை சந்தியாதிகர்மாக்களைச் சுத்தமாகச் செய்வது உசிதம்.

ஸ்நானம் செய்யமுடிந்தால், ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.

அப்படி முடியாதவர்கள், தலைக்குத் தீர்த்தமாடாமல் கண்ட ஸ்நானம் (அதாவது, தலைக்குத் தீர்த்தமாடாமல், கழுத்துவரை ஸ்நானம் செய்து) முகத்தை அலம்பிக்கொண்டு பண்ணலாம், அதுவும் முடியாதவர்கள் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு நெற்றியிட்டுக்கொண்டு மந்திரஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.

இது ஶக்த,அஶக்த விஷயங்களாகும்.


பழைய உணவு சாப்பிட்டப்பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாமா? கோவிலுக்குச் செல்லலாமா?

Vidwan’s reply:

பழைய உணவு சாப்பிட்டப்பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றலாம். கோவிலுக்கும் செல்லலாம்.


பரந்யாஸம் செய்துகொண்ட ஐயங்கார் பையன் வடதேச க்ஷத்ரிய பெண்ணை மணக்கலாமா? அப்படி மணந்தால் அவன் தன் தந்தைக்கு அந்திம கார்யம் செய்ய முடியுமா?

Vidwan’s reply:

விவாஹங்கள் பொதுவாகவே அவரவர்களுச் சமமான வர்ணத்திலும், ஜாதியிலும் செய்வதுதான் உசிதம்.

வடதேசத்தில் க்ஷத்ரயர்கள் என்பதில் பல கலப்புகள் கலந்திருக்கின்றன. ஆகையால் அது சரியான க்ஷத்ரிய ஜாதியா என்று சொல்லவும் தெரியாது. ஆகையால் அப்படி விவாஹம் செய்யாமல் இருப்பதே உசிதம்.


அடியேன் முந்தைய இதழில் கேட்ட ப்ரஹ்ம யஜ்ஞம் கேள்வியின் தொடர்ச்சி, இந்த ப்ரஹ்ம யஜ்ஞத்தின் ஆசமனத்தின் சிறப்பு என்ன? ஏன் மந்திர உச்சாடனம் இல்லாமல் செய்யவேண்டும்? அடியேன்.

Vidwan’s reply:

தைத்திரீயஆரண்யகத்தில் இரண்டாவது ப்ரஶ்நத்தில் ப்ரஹ்ம யஜ்ஞம் பற்றி வருகிறது. அங்கு மூன்று முறை ஆசமனம் பண்ணவேண்டும் என்பதாகவே சொல்லியிருக்கிறது. அங்கு மந்திரங்கள் சொல்லப்படவில்லை என்பது முதல் விஷயம். இரண்டாவது இந்த ஆசமனம் செய்வதினாலே, ரிக்குகள் ப்ரீத்தி அடைவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகையால் அதை அப்படியே அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.


சந்தியாவந்தனம் என்பது நேரத்தின் சம்பந்தத்தோடு செய்யவேண்டிய ஒன்று என்றும் ஸ்நானம் செய்யும் முன்னரும் செய்யலாம் என்றும் புரிகிறது. ஸ்நானம் செய்யாமல் சந்தியாவந்தனம் செய்ய என்ன க்ரமம்? மேலும் அதற்கு எவற்றையெல்லாம் நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்?

Vidwan’s reply:

சந்தியாவந்தனம் நேரத்துடன் சம்பந்தப்பட்டது, அதற்குரிய நேரத்திலேயே செய்யவேண்டும். முடிந்தவரை, ஶக்தியுள்ளவரை குளித்தே சந்தியாவந்தனம் செய்யவேண்டும். உடம்பு அசௌகர்யமாக இருந்தால் உ.தா: ஜுரம் இருந்தால், குளிக்காமலேயே சந்தியாவந்தனம் செய்யலாம்.

அதாவது தீர்த்தமாட ஶக்தியில்லாதவர்கள் முகத்தை அலம்பிக்கொண்டு, நெற்றியிட்டுக் கொண்டு மந்திர ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் செய்யலாம்.

ஆனால், தீர்த்தமாடாமல் சந்தியாவந்தனம் செய்வதென்பது உடம்புக்கு உபாதையிருந்தால் மட்டுமே. உபாதைகள் இல்லாத பக்ஷத்தில், தீர்த்தமாடி விட்டுதான் சந்தியாவந்தனம் செய்வது பெரியவர்கள் வழக்கம்.


ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பது ஸ்நானம் செய்வதற்குச் சமம் என்கிறார்கள். எந்த ஸ்நானம்? விரிவாக விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:

முகத்தைஅலம்பி திருமண்காப்பு தரிப்பதற்கு, புண்ட்ரஸ்நானம் என்று பெயராகும்.


வர்ஷாப்தீக க்ரமத்தில் போக்தாக்கும் கர்த்தாவிற்கும் என்ன நியமங்கள்? அடியேன்

Vidwan’s reply:

வர்ஷாப்தீகம் த்ரிபுருஷோதேஶ்யமாக பார்வணமாகவே செய்யவேண்டியது. கர்தாவிற்கு மறுநாள் பரேஹனி தர்ப்பணம் கிடையாது. ஆனால், ஒரு ததீயாராதனை செய்விக்கவேண்டும். ப்ராஹ்மண போஜனம் செய்விக்கவேண்டும்.

வர்ஷாப்தீகத்தில் போக்தாவாக இருந்தால், மூன்று நாட்களுக்கு ஶ்ராத்த போஜனம் கூடாது மேலும் 300 காயத்ரி ஜபமும் செய்யவேண்டும்.


“GSPKவில் வேத மஹிமை உபன்யாசத் தொடரில் நாவல்பாக்கம் ஸ்ரீ உ.வே. கண்ணன் ஸ்வாமி சாதித்த விஷயங்களில் அடியேனுக்கு சில சந்தேகங்கள்.

1. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வானிடமோ அல்லது பாடசாலையிலோ வேதம் கற்றுக்கொள்ளலாமா?

2. ஸ்ரீவைஷ்ணவர்கள் வேறு ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வேதவித்வான்களை, கீழேவிழுந்து சேவிக்க வேண்டுமா? இங்கே வேதவித்வான்கள் என்று எண்ணி கீழேவிழுந்து சேவிப்பது சரியான அனுஷ்டானமா அல்லது ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லர் என்று எண்ணி அஞ்சலி நமஸ்காரத்தோடு நிறுத்தி விடுவது சரியா? நம் ஆழ்வார் ஆசார்யர்கள் இதில் எந்த அனுஷ்டானத்தை ஆதரிக்கின்றனர்? ”

Vidwan’s reply:

காலத்தை அனுசரித்து பார்த்தால், முடிந்தவரை நம் ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் அத்யயனம் செய்வது உத்தமமான கல்பம். முடியாவிட்டால், இக்காலத்தில் அத்யயனம் செய்தவர்களும் குறைவு அதை செய்விப்பவர்களும் (கற்றுக்கொடுப்பவர்கள்) குறைவு, ஆகையால் அத்யயனம் செய்வது முக்கியமானபடியினாலே அவர்களிடத்தில் அத்யயனம் செய்தால் தவறில்லை என்று தோன்றுகிறது.

வேதாத்யயனம் செய்த ப்ராஹ்மணரிடத்தில் எல்லா தேவதைகளும் குடியிருப்பதாக வேதமே சொல்லிகிறது. க்ருஷ்ணனும், அக்னிஹோத்ரியை நான் நமஸ்காரம் செய்கிறேன் என்று சொல்லுகிறான். ஆகையால், இதர ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேதாத்யயனம் செய்திருந்தால் அவர்களைச் சேவிப்பதில் தவறில்லை.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top