ப்லவ – கார்த்திகை – ஆசாரம் மற்றும் அனுஷ்டானம்


நமக்கு ஒரு நல்லது நடக்கும் பொழுது பகவானுடைய க்ருபை மற்றும் நம் பெரியோர்களின் ஆசீர்வாதம் என்று சொல்கிறோம். ஆனால் அதே நமக்கு ஒரு கஷ்டம் வரும் பொழுது இது நாம் செய்த கர்மா என்று சொல்கிறோம் இது சரியா . இதை எப்படி புரிந்து கொள்வது . அடுத்த தலைமுறையினருக்கு எப்படி புரிய வைப்பது என்று விளக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
நமக்கு நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது நம் கர்மாதான். கர்மா என்றால் புண்ணிய பாபங்கள். புண்ணியத்தின் பலனாக நல்லது நடக்கும். பாபத்தின் பலனாக துக்கம் வரும்.

நமக்கு நல்லது நடக்கும்பொழுது, “என்னால்”/“நான்” சாதித்துக்கொண்டது என்று சொல்வது கூடாது. ஏனென்றால், பகவத் கீதையில் கண்ணன் கூறியபடி “மனுஷ்யன் தனிப்பட்ட முறையில் எதையுமே சாதிக்கமுடியாது. பெருமாளுடன் கூட இருந்துதான் அவன் எதையுமே சாதிக்க இயலும். அதனால் நான் சாதித்தேன் என்கின்ற அகம்பாவத்தை ஒழிக்க வேண்டும்”. மேலும் இது கீதையினுடைய அடிப்படை சித்தாந்தம்.

குறிப்புகள்

தேர் இழுப்பது போல் பெருமாளுடன் கூட இருந்துதான் நாம் காரியங்களைச் சாதிக்க முடியும். அதாவது, நான் தேர் இழுத்தேன் என்று சொல்வது எப்படி முட்டாள்தனமோ அது போல் தான், நான் சாதித்தது என்று சொல்வதும்.

சில சமயங்களில் நாம் ஒன்றும் செய்யாமலே பெருமாளினுடைய அனுக்ரஹத்தால் நமக்கு நல்லது நடக்கும்.அதுவும் கர்மாவினுடைய பலன் தான். நமக்கு தெரியாதபடியினால், அது பகவானுடைய அனுக்ரஹம் என்பதாக சொல்கிறோம். இதுவே துக்கம் வரும்போது பெருமாளினுடைய அனுக்ரஹம் என்று கூற முடியாது, ஏனென்றால் அவர் துக்கத்தை அனுக்ரஹம் செய்ய மாட்டார். நாம் பாபம் செய்த பலனை எம்பெருமான் வேறு வழியில்லாமல் நமக்கு கொடுக்கிறார்.


ஜீவ இம்சை கூடாது என்கிற பக்ஷத்தில் பட்டு புடவை அணிந்து கொள்வது சரியா? பட்டு வஸ்த்ரம் மடி என்றும் சொல்கிறார்கள். இந்த தலைமுறையினர் கேட்கும் இக்கேள்விக்கு அடியேனால் பதில் கூற முடியவில்லை. விளக்கம் தர ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
இதற்கு க்ரய சுத்தி என்று பெயர். நாம் கடைகளில் பணத்தை கொடுத்து பட்டு வஸ்த்ரம் வாங்குவதனால், அந்தத் தோஷம் நமக்கு வராது. ஆகையால் பட்டு வாங்கலாம், வாங்கி பெருமாளுக்கு, பாகவதர்களுக்கு ஸமர்பிக்கலாம்.

இதில் தீவிரமாக அடுத்தவரைக் கொண்டு ஜீவஹிம்சை செய்வது தவறு என்று நினைத்தால் பட்டு வஸ்திரங்களைத் தவிர்க்கலாம்.

குறிப்புகள்

பணம் கொடுத்து பட்டு வாங்குபவர்களுக்கு தோஷம் ஏற்படாது. தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் தோஷத்திற்கு, வ்யாபார முறையில் பரிஹாரம் உள்ளது.


ஶ்ரார்த்த திதி ஏகாதசி அன்று வரும் பக்ஷத்தில்

a. ப்ராமணர்களுக்கு அன்னம் சாதிப்பது பாவத்தில் சேர்த்தி ஆகுமா?

b. கர்த்தா, கர்த்தாவினுடைய அம்மா மற்றும் ப்ராதாக்கள் அன்னம் ஸ்வீகரிக்கலாமா?

c. கைம்பெண்ணாக இருக்கும் ஸ்த்ரீ அம்மா அப்பாவினுடைய ஶ்ரார்த்த உணவை ஸ்வீகரிக்கலாமா?

Vidwan’s reply:
ஶ்ராத்த திதி ஏகாதசி அன்று வரும் பக்ஷத்தில், ப்ராமணார்த்தகாரர்களுக்கு அன்னம் தான் சாதிக்கவேண்டும். ஏன்னென்றால் அன்று அன்னத்தில் தான் ஹோமம் பண்ண வேண்டும். ஹுத சேஷம் என்பதெல்லாம் அதில் உண்டு. அதனால் அன்னம் தான் அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்.

ஆனால் கர்த்தாவானவர் அன்றைய தினம் ஏகாதசி என்பதினால், அன்னம் ஸ்வீகரிக்கக்கூடாது.

கைம்பெண்ணாக இருக்கும் ஸ்த்ரீ, அம்மா அப்பாவினுடைய ஶ்ராத்த உணவை தாராளமாக ஸ்வீகரிக்கலாம். ஆனால் ஏகாதசியாக இருந்தால் அன்னம் ஸ்வீகரிக்கக்கூடாது.

குறிப்புகள்

ஏகாதசி அன்று ஶ்ராத்தம் வந்தால் அன்று அன்னத்தை கட்டாயமாக ஸ்வீகரிக்கக்கூடாது. பித்ரு சேஷம் இல்லாமல் வேறு எதுவும் தளிகை செய்து ஸ்வீகரிக்கக்கூடாது. அதனால் உபவாஸம் இருக்கலாம் அல்லது பக்ஷணங்கள் , காய்கறிகள் இவை மட்டுமே ஸ்வீகரிக்கலாம்.


அடியேனுக்கு ஶ்ராத்த விஷயமாக ஒரு சந்தேகம், தெளிவுப்படுத்த ப்ரார்த்திக்கிறேன். 4-5 சகோதரர்கள் இருந்து, மூத்தவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அல்லது பிற காரணங்களால் ஶ்ரார்த்தம் செய்ய முடியவில்லையென்றால், மற்ற சகோதரர்களில் யாரேனும் ஒருவர் அதைச் செய்ய முடியுமா?

Vidwan’s reply:
அனைவரும் சேர்ந்து ஶ்ராத்தம் பண்ணுகின்றார்களா அல்லது தனித்தனியாக பண்ணுகின்றார்களா என்பது முதல் விஷயம்.

சேர்ந்து செய்கின்றர்கள் என்றால், மூத்தவரிடம் இருந்து கைப்புல் வாங்கி அவருக்கு அடுத்திருப்பவர் பண்ணுவதே வழக்கம்.

தனித்தனியாக செய்பவர்களாக இருந்தால், அவரவர் செய்யும் ஶ்ராத்தத்தை அவரவர் பண்ண வேண்டும். மூத்தவரிடம் இருந்து கைப்புல் வாங்கி வேறு யாராவது ஒருவர் தான் தனியாக பண்ண வேண்டும் என்று இருக்கின்றது.


அமாவாஸை மற்றும் ப்ரதமை நாட்களில் திவ்யப்ரபந்த பாசுரங்களைச் சேவிக்கலாமா?

Vidwan’s reply:
அமாவாஸை மற்றும் ப்ரதமை நாட்களில் திவ்யப்ரபந்த பாசுரங்களை, தாராளமாகச் சேவிக்கலாம்.ஆனால் சந்தை சொல்லக்கூடாது.


ஆடி மற்றும் தை அமாவாஸை நாட்களில் மேலும் ஆடி, தை, சித்திரை மற்றும் துலா மாச பிறப்பு நாட்களில் என்ன தளிகை செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்த பிரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
அமாவாஸைக்கு பயத்தம் பருப்பு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு , பாகற்காய், வெள்ளரிக்காய் ,அகத்திக்கீரை இவை எல்லாம் உபயோகிப்பது விசேஷம். ஶ்ராத்தத்திற்கு என்னவெல்லாம் விசேஷமோ அவையெல்லாம் இதற்கும் விசேஷம்.

குறிப்புகள்

தை அமாவாஸை அன்று வைத்ய வீரராகவப் பெருமாளுடைய திருவவதார தினம். அதனால் அன்றைய தினம் சிலர் விசேஷ தளிகை செய்து கொண்டாடுவதும் உண்டு. மற்ற தளிகை எப்பவும் போல் குழம்பு, சாற்றமுது என்று செய்து கொள்ளலாம்.

தர்ப்பண தினத்தில் கத்திரிக்காய், பீன்ஸ் போன்றவை சேர்க்கக்கூடாது. மாசப்பிறப்பு அன்று துவரம்பருப்பு சேர்த்துக்கொண்டு கல்யாண ரீதியில் விசேஷமாக தளிகைச் செய்வதென்பது ஒரு வழக்கம். மற்றொரு வழக்கமும் இருக்கின்றது, அதாவது தர்ப்பணம் செய்யும் நாள் என்பதினால் பயத்தம்பருப்பு சேர்த்து பண்ணவதும் சம்ப்ரதாயத்தில் உள்ளது.


ப்ராத: சந்தியாவந்தனம் செய்ய வேண்டிய நேரம் கடந்துவிட்டால் ஸ்நானம் பண்ணாமல் செய்யலாமா அல்லது ஸ்நானம் செய்துவிட்டு ப்ராயச்சித்தத்துடன் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:
ப்ராத: சந்தியாவந்தனம், நேரத்தில் செய்ய முடியவில்லை என்றால், பின் ஸ்நானம் செய்து அதற்கான ப்ராயச்சித்தம் செய்து பண்ணலாம். துரியார்கியப்ரதானம் என்னும் ப்ராயச்சித்தத்துடன் பண்ண வேண்டும். “காலாதீத்த ப்ராயச்சித்தார்த்தம் துர்யார்க்யப்ரதானம் கரிஷ்யே” என்றுதான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

ஸ்நானம் பண்ணாமல் சந்தியாவந்தனம் பண்ணுவது வழக்கமில்லை.


ப்ரபத்திக்குப் பின் , ஸ்மார்த்தர்கள் செய்யும் பஜனைகளைக் கேட்கலாமா? ஸ்ரீமன் நாராயணன் பற்றிய பாடல்களுக்கு மட்டும் பங்கேற்க முடியுமா. பெருமாள் அல்லாது அந்நிய தேவதாந்திரங்களின் கர்நாடக சங்கீத பாடல்களை நம் கலைஞர்கள் கச்சேரிக்காகப் பாட முடியுமா? விளக்கம் கோரி ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
ப்ரபத்திக்குப் பின் பெருமாள் சம்பந்தப்பட்ட எந்த பஜனையையும் கேட்கலாம். இதர தேவதாந்தரங்களுடையதைத் தவிர்ப்பது நல்லது.


ஸ்மார்த்த உபந்யாஸ்கர்களுடைய ராமாயணம் பாகவதம் உபந்யாஸங்கள் போன்றவற்றைக் கேட்கலாமா? அவர்களுக்கோ அல்லது அவர்களுடைய அமைப்பிற்கோ நன்கொடை வழங்கலாமா? அது கைங்கர்யத்தில் சேர்த்தி ஆகுமா?.

Vidwan’s reply:
ஸ்மார்த்த உபந்யாஸகர்களுடைய ராமாயணம் ,பாகவத உபந்யாஸங்களைக் கேட்கலாம். அந்த கைங்கர்யத்திலும் பங்கு கொள்ளலாம்.

பொதுவாக “ஹரி கதா” என்பது தான் அதற்கு பெயர். அவர்களும் அப்படித்தான் சொல்வார்கள். ஒருகால் பகவான் பெருமையைத் தவிர வேறு சொன்னால், அதை உதாசீனப்படுத்துவது நல்லது.


ஸுதர்ஶன யந்த்ர ப்ரதிஷ்டா விதிமுறைகளை விளக்குமாறு ப்ரார்த்திக்கிறேன்?

Vidwan’s reply:
இது பாஞ்சராத்ர ஆகம ரிதீயாக விளக்க வேண்டும், அதற்குரிய பெரியவர்களைத் தான் கேட்க வேண்டும்.


ஆத்து பெருமாளுக்குத் திருவாராதன காலத்தில் திருமஞ்சனம் செய்யும் பொழுது ஸுக்தம் மட்டும் தான் சேவிக்க வேண்டுமா அல்லது திருமஞ்சன கட்டியம் அதன் பின் ஶீக்ஷாவல்லீ, ஆநந்தவல்லீ, ப்ருகுவல்லீ போன்றவற்றையும் சேவிக்கலாமா ? அமாவாஸை , ஏகாதசி , மற்றும் விசேஷ நாட்களில் விஸ்தார திருவாராதனம் செய்து மற்ற நாட்களில் மானசீக திருவாராதனம் செய்யலாமா?

நித்யம் மடி வேஷ்டி, மற்றும் சுத்தம் செய்வதும் என்னுடைய சோம்பேறித்தனத்தினால் பின்பற்ற முடியாமல் இருக்கின்றது. எனக்கு கஷ்டமாக இருப்பதால் இந்தக் கேள்வியை கேட்கிறேன். நித்யமமும் சாளக்கிராம மற்றும் விக்ரஹங்களுக்கு எல்லா உபசாரங்களை மேற்கொண்டு திருவாராதனம் செய்கின்றேன். அடியேன் மிகவும் லௌகீகமானவன்.

Vidwan’s reply:
ஆத்துப் பெருமாளுக்குத் திருவாராதன காலத்தில் திருமஞ்சனம் செய்யும் சமயம் புருஷ ஸுக்தம் சொல்ல வேண்டும் என்று ஆஹ்நிக க்ரந்தங்களில் சாதித்திருக்கிறார்கள். மேலும் திருமஞ்சன கட்டியம், ஶீக்ஷாவல்லீ போன்றவை சமயம் இருப்பின் சேவிக்கலாம். ப்ரதானமாக புருஷ ஸுக்தம் சேவிக்க வேண்டும் என்றிருக்கிறது.

ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹமாக இருந்தால் கட்டாயம் நித்ய திருவாராதனம் செய்தல் வேண்டும். அப்படிச் செய்யாவிடில் விக்ரஹத்தில் சான்நித்யம் குறையும், பெரிய அபச்சாரத்தில் போய் முடியும். ப்ரதிஷ்டை செய்யாத விக்ரஹமாக இருந்தால், பெரிய தோஷமில்லை.

சாளக்கிராமத்தைப் பொறுத்தவரை நித்யபடி செய்தால் தான் அது விசேஷம், மெல்ல செய்ய ஆரம்பித்தால் நலம். அமாவாஸை, ஏகாதசி, வெள்ளிக்கிழமை என விசேஷ நாட்களில் முதலில் ஆரம்பித்து பின் மெல்ல பழக்கத்தில் கொண்டு வர முடியும் என்று தோன்றுகிறது.

திருவாராதனம் பண்ணவே முடியவில்லை எனும் போது, மானசீக ஆராதனம் செய்யலாம். ஆனால் திருவாராதனம் செய்வது பெரிய கஷ்டமில்லை எனத் திருக்குடந்தை ஆண்டவன் சாதிப்பார், பெருமாளை ஏளச்செய்து திருமஞ்சனம் பண்ணி, அம்சை பண்ணாலே போதுமானது அதில் என்ன கஷ்டம் இருக்கின்றது.

பெருமாளைத் தொட்டு ஆராதனம் செய்ய ஓரளவு சுத்தமாக இருக்க வேண்டும்.முதல் நாள் உளர்த்தி அடுத்த நாள் உடுத்துவதற்கு தகுந்த இடம் பார்த்தால் நலம் அல்லது முதல் நாள் சால்வைக்கொண்டு (கம்பளி) அந்த வேஷ்டியை மடித்து வைத்து உடுத்தலாம்.

திருவாராதனம், சந்தியா வந்தனம் போன்ற முக்கியமான அநுஷ்டானங்களில் சோம்பேறித்தனத்தை தவிர்க்க வேண்டும் என்று ஸ்வாமி தேஶிகன் சாதித்துள்ளார்,.


அமாவாஸை தினங்களில், தர்ப்பணம் பண்ணுபவர்கள் அகத்தில், பெருமாள் திருவாதனத்திற்கு பயத்தம்பருப்பு, சுண்டைக்காய் குழம்பு பண்ணுவது உண்டு. ஆனால் சில அமாவாஸை தினங்களில் (ஐப்பசி, தை) துவரம் பருப்பு மற்றும் மோர்க்குழம்பு பண்ணுவது உண்டு. இந்த இரண்டு மாதங்களில் வரும் அமாவாஸை தவிர வேறு மாதங்கள் ஏதேனும் உண்டா என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.

Vidwan’s reply:
ஆடி அமாவாஸை தினத்தை பண்டிகையாக கொண்டாடுவது சிலர் உண்டு, மேலும் ஆசார்யர்கள் திருநக்ஷத்ர தினம் அமாவாஸை அன்று வந்தாலும் திருநக்ஷத்ரமாக கொண்டாடும் போதும், அகத்தில் உள்ளவர்களின் பிறந்தநாள் வந்தாலும் பண்டிகைப் போன்ற தளிகைச் செய்வதுண்டு.


108 திவ்ய தேசங்களின் பட்டியல் எப்பொழுது தொகுக்கப்பட்டது? ப்ருந்தாவனம், வெண்ணாற்றங்கரை போன்ற க்ஷேத்திரங்களுக்குத் தனிப்பட்ட பாசுரங்கள் இருந்தும், அவை திவ்ய தேசங்களாக ஏன் கருதப்படவில்லை?

Vidwan’s reply:
சுமார் 800 வருடங்களுக்கு முன், பிள்ளைப்பெருமாள் ஐங்கார் என்பவர் முதலில் 108 திருப்பதி அந்தாதி என்று சாதித்தார். அது தொடக்கமாக தான் 108 என்ற கணக்கு ஆரம்பமாயிற்று என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

அதற்கு முன் இப்படி கணக்கு இட்டோ பட்டியலிட்டோ இருந்ததாக தெரியவில்லை. அவருக்குப் பின் 108 திவ்ய தேசங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. இக்கணக்குகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டும் இருக்கும். அந்த ரிதீயில் ஆழ்வார்கள் பாடல் பெற்ற ஸ்தலம் என நாமும் கணக்கு செய்யலாம். ஒரு கணக்குக்காக சொல்லப்பட்டதேன்றி இப்படித்தான் என்ற நிர்பந்தம் ஏதும் கிடையாது.

உதாஹரணமாக திருநாராயணபுரம், காஞ்சி வரதராஜ பெராள் கோவில் இவைகளை 108ல் சேர்க்கலாமா என்பதாக அக்காலத்தில் சர்ச்சைகளும் எழுந்தன என்பர்.


திருமணமான புருஷர்கள் மற்றும் ஸ்த்ரீகளை ஏன் கச்சம்/ மடிசார் அணிந்துக் கொள்ளச் சொல்கின்றார்கள்? அதாவது, அவர்கள் மட்டுமே அதை அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உள்ளதா? விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்?

Vidwan’s reply:
மடிசார் என்பது ஸ்த்ரீகளின் கச்சம். மேலும், இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அந்தரங்கப் பாதுகாப்புக்காகவும் இப்படி ஒரு அமைப்பை ஶாஸ்த்ரங்கள் வகுத்துள்ளன. கல்யாணமான ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்களை இனம் கண்டுகொள்ள ஏதுவாகவும் இவ்வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

Text, letter

Description automatically generatedQ20KAR21015

பந்துக்களில் ஒருவர் ஆசார்யன் திருவடியை அடைந்தால் எத்தனை நாட்கள் அஶௌசம் என்பதை அறிய கணகியல் புத்தகம் அல்லது விளக்கப்படம் ஏதேனும் உள்ளதா? ஒருவருக்கு எத்தனை நாட்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது ? விளக்க ப்ரார்த்திக்கிறேன்

Vidwan’s reply:
ஆஶௌசம் எத்தனை நாட்கள் என்பதை அறிய புத்தகங்கள் இருக்கின்றன. “ப்ராசீனாசார ஸங்க்ரஹம்” என்று ஸ்ரீ உ வே மஹாவித்வான் நாவல்பாக்கம் ஸ்ரீ அய்யா தேவநாத தாதயார்ய ஸ்வாமி எழுதிய புத்தகம் உள்ளது. “ஆஶௌச ஶதகம்” என்பதாக ஸ்ரீ உ வே மஹாவித்வான் மேல்பாக்கம் ஸ்வாமியால் திருத்தி அச்சிடப்பட்ட புத்தகமுள்ளது. இது போல் பல் வேறு புத்தகங்களும் இருக்கின்றது.


“1. ஸூன்ய திதி என்றால் என்ன? அன்றைய தினத்தின் திதியாக எதை எடுத்துக் கொள்வது. அன்று ஏகாதசியாக இருந்தால் என்னச் செய்வது.

2. அதே போல், அதிதி என்றால் என்ன. அன்றைய தினத்தின் திதியாக எதை எடுத்துக் கொள்ள வேண்டும்.”

Vidwan’s reply:
ஒரு மாதத்தில் இரண்டு ஶ்ராத்த திதி வரும் போது, இரண்டாவது திதியில் ஶ்ராத்தம் செய்ய வேண்டும் முதல் திதியை ஸூன்ய திதி என்று குறிப்பிடுவார்கள். பின்பு வரும் திதிக்கு தோஷமிருந்தால், உதாஹராணமாக சங்க்ரமண, க்ரஹன தோஷம் போன்றவை இருந்தால் அப்போது முன்புள்ள திதியை ஶ்ராத்த திதியாக கொள்ள வேண்டும், பின்புள்ள திதியை ஸூன்ய திதி என்பர்.

அதிதி என்பது அபராஹ்ன வ்யாப்தியைக் குறித்துச் சொல்லப்படுவது. அது உதாஹரண பூர்வகமாகச் சொன்னாலே புரியும். ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய “ஆஹ்நிகத்தின்” அனுபந்தத்தில் உதாஹரணத்தோடு நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. கண்டு தெளிந்து கொள்ளவும்.

குறிப்புகள்

தற்போது ஸ்ரீமத் வில்லிவலம் அழகிய சிங்கர் அருளிய ஆஹ்நிக க்ரந்த காலக்ஷேபம் (உபனயநம் மற்றும் ஸமாஶ்ரயணம் ஆன புருஷர்களுக்கு மட்டும்) GSPKயில் தொடங்கியிருக்கிறது. விருப்பம் இருப்பின் கீழே உள்ள படிவத்தைப் பூர்த்திச் செய்யவும். மேலும் விவரங்கள் அறிய இந்த Telegram group ல் சேரவும்.

https://forms.gle/ob8JhquSN5BHRGBT6

Telegram group

https://t.me/dgspk


கல்யாணம் அன்று மற்றும் பெருமாள் ஆத்துக்கு ஏளும்போதும் எடுக்கும் மஞ்ச நீரில் மூணாவது சேர்க்கலாமா?

Vidwan’s reply:
பொதுவாகவே மஞ்சநீர் கலக்கும் பொழுது அதில் மூணாவது சேர்ப்பது என்பதைப் பெரியோர்கள் வழக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மூணாவது என்பது ஒரு சுத்தீகரணப் பொருள். அதனால், கல்யாண அகத்திலும் மற்றும் பெருமாள் ஏளும் சமயங்களிலும் மூணாவதை மங்களகரமாக உபயோகப்படுத்துவது உண்டு.


ஆஶௌசத்தினால் ஒரு வருடத்திற்குப் பண்டிகை இல்லையென்றால், எந்தப் பண்டிகையை கொண்டாட வேண்டும், எதைக் கொண்டாடக்கூடாது? பெருமாளுக்கானப் பண்டிகைகளை நாம் கொண்டாட வேண்டும் என்றும் , நமக்காக கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் எங்கள் வாத்தியார் கூறினார். உதாரணமாக, திருவாடிப்பூரம் அன்று அது தாயார் திருநக்ஷத்ரம் என்பதால் பெருமாள் தாயாருக்கு ப்ரசாதம் அம்சை பண்ணலாமா? அல்லது எதையும் கொண்டாடக்கூடாது என்பதால் எதையும் செய்யக்கூடாதா? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
பண்டிகை ஒரு வருடத்திற்கில்லை என்றால், பொதுவாக எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில்லை.

பண்டிகை இருக்கும் காலமோ அல்லது இல்லாத காலமோ நித்யமும் அவசியம் பெருமாளுக்குத் தளிகை பண்ணி அம்சை பண்ணவேண்டும். ஆனால் அந்த ஒரு வருடம் இனிப்பு பதார்த்தங்கள் செய்து எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவது வழக்கமில்லை.ஆழ்வார்கள்,ஆசார்யன் திருக்ஷத்ரங்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்குண்டு.

குறிப்புகள்

ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்ர தினத்தன்று எம்பெருமானுக்கு ஒரு திருக்கண்ணமுது அல்லது ஏதாவது இனிப்பு பதார்த்தங்கள் பண்ணி அம்சை பண்ணலாம்.


துவாதசி அன்று ஆசார்யன் பாதுகைக்கு திருமஞ்சனம் முதலில் செய்ய வேண்டுமா?. அல்லது பெருமாள் திருவாராதனம் முதலில் செய்ய வேண்டுமா?

Vidwan’s reply:
துவாதசியன்று, முதலில் பெருமாள் திருவாராதனம் செய்துவிட்டு அதற்கு பின்னரே பாதுகா ஆராதனம் செய்ய வேண்டும்.


ஸ்ரீ பாத தீர்த்தத்தின் முக்கியத்வம் யாது?எப்படி ஸ்வீகரித்துக்கொள்ள வேண்டும்? யார் ஸ்வீகரிக்கக்கூடாது? எப்போதெல்லாம் ஸ்வீகரிக்கலாம் விளக்க ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:
ஸ்ரீ பாத தீர்த்தம் ஸர்வ பாபா நாசினி ஆகும். ஸ்ரீ பாத தீர்த்தத்தை, ஆசார்யன் திருநக்ஷத்ரத்தன்று அவசியம் ஸ்வீகரிக்க வேண்டும். துவாதசிதோறும் க்ருஹத்திலே அவசியம் பாதுகா ஆராதனம் பண்ணி அந்த தீர்த்தத்தை ஸ்வீகரிக்க வேண்டும்.

அதே போல் பிழைகள் ஏற்பட்டுவிட்டது எனத் தோன்றினாலோ அல்லது எங்காவது சென்று ஆசாரம் குறைவாகி விட்டது எனத் தோன்றினாலோ அப்பொழுதும் ஸ்ரீ பாத தீர்த்தம் சேர்த்து ஸ்வீகரிப்பது வழக்கத்தில் உண்டு.

பொதுவாக ஆசார்யனுடைய சிஷ்யர்கள் எல்லோரும் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்வீகரித்து கொள்ளலாம். அவர்கள் மட்டுமலாது அந்த ஆசார்யனிடத்தில் அபிமானம் உள்ளவர்களும் அவரின் ஸ்ரீ பாத தீர்த்தத்தை ஸ்வீகரிக்கலாம்.

குறிப்புகள்:

ஸ்ரீ பாத தீர்த்ததை ஸ்வீகரித்து கொள்ளும் பொழுது ஒரு மந்த்ர ஸ்லோகம் சொல்லுவதுண்டு. அது என்ன என்பதை அவரவர்கள் ஆசார்யனிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீகரிக்கும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம் : ஏதத் ஸமஸ்த பாபானாம் ப்ராயஶ்சித்தம் மநீஷிபி4: ।

நிர்ணீதம் ப4க3வத் ப4க்த பாதோ3த3க நிஷேவனம் ।।


துவாதசி நாட்களில் காலையில் பொதுவாக எத்தனை மணிக்குள் பாரணை செய்யத் தொடங்க வேண்டும்? துவாதசி நிறைய நாழிகள் இருந்தால் எத்தனை மணிக்குள் செய்தல் வேண்டும்?

Vidwan’s reply:
அல்ப துவாதசி இல்லை என்றால் 8:15 மணிக்குள் பாரணை செய்வது உசிதம். அல்ப துவாதசி இருந்தால், எவ்வளவு காலம் துவாதசி இருக்கின்றதென்று பார்த்து, அதற்குள் பாரணை செய்தல் வேண்டும்.

துவாதசி நிறைய நாழிகள் இருந்தால் கால விளம்பம் ஆனாலும் துவாதசிக்குள் பாரணை செய்தால் பரவாயில்லை என்றும் ஒரு சம்ப்ரதாயமுள்ளது.


தற்சமயம் வித்வான்கள் மூலம் சந்த்யாவந்தனம், ஸம்ஹிதா தானம் எனப் பல இணைய வழி வகுப்புகளின் வாயிலாக கற்றுக்கொள்கிறேன்.ஒருவன் இக்கர்ம்மாக்களைச் செய்வதனால் ப்ராமணன் ஆகிறான், மேலும் இதில் தன்னை மேம்படுத்தவும் அதாவது தேஜஸ், அரோக்கியம் வேண்டி ப்ரார்த்திக்கவும் ஸ்லோகம் வருகிறது. அடியேனின் கேள்வி யாதெனில், ப்ராமணர்கள் என்பவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு எந்த வித்தில் தேவை. சமூகம் அவர்கள் மூலம் பெறும் பயன் யாது? ஸ்வாமி. அடியேன் இதை ப்ராமணனான ஒருவர் அறிந்தால் அருவம் சரி இச்சமூகமும் சரி இத்தனை நல்லது உள்ளதா என்று அறிய முடியும் மேலும் ப்ராமணர்களும் தங்கள் கர்மாக்களை விடாதுச் ஶ்ரத்தையாக செய்வார்கள். மேலும், ஒரு புரிதல் இருந்தால் இவர்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் நாங்கள் ஏன் செய்யக்கூடாது என பல விதண்டாவாதக் கேள்விகள் தவிர்க்கப்படலாமோ என்று ஒரு எண்ணம்.

Vidwan’s reply:
எப்போதும் வைதீக கார்யங்கள் மூலமும், தேவதா ஆராதனங்கள் மூலமும் லோகக்ஷேமத்தை சிந்திப்பவன் ப்ராமணன்.


நீர் என்பது ஓர் அசித்தாக இருக்கும் பக்ஷத்தில், ஒருவர் தலைக்கு தீர்தாமாடுவதினால் எப்படி சுத்தி அடைவார்கள்? அதனால் தீட்டு எப்படி நீங்கும் என்பதை தெளியப்படுத்த விண்ணப்பிக்கின்றேன். அதே போல் மஞ்சள் குங்குமம் ஏன் மங்களகரமானதாக கருதப்படுகிறது? ஏதனால் அதை மங்களப் பொருட்கள் என்று கூறுகின்றோம்? தெளிவிக்க ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:
ஜலம் என்பது ஶாஸ்த்ர ரீதியிலும் உலக ரிதீயிலும் சுத்தப்படுத்தும் வஸ்து. சரீரத்தை நீர் கொண்டு சுத்தமாக்குவதால் உலக ரிதீயிலும் சரீரத்தில் உள்ள அழுக்கு போகும், ஶாஸ்த்ர ரிதீயிலும் சுத்தமாகும். மேலும் சரீரத்தை சுத்திப்பண்ணால் ஆத்மாவும் சுத்தமாகும் என்று ஶாஸ்த்ரங்கள் சொல்கின்றது.

அதே போல் மஞ்சள், குங்குமம் இவை எல்லாம் மங்களகரமான வஸ்துக்கள் என்று சம்ப்ரதாயத்தில் வழி வழியாக சொல்லப்படுகின்றது. சம்ப்ரதாயம் நமக்கு காண்பித்து கொடுத்தது என்பதனாலேயே ஆசையுடனும், ஶ்ரத்தையுடனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் என்பது மனித சரீரத்திற்குத் தேவையான மிக உயர்ந்த வஸ்து. உயர்ந்த வஸ்துக்களில் பகவானின் அம்சம் இருக்கும் என்று சொல்கின்ற படியால் இதிலும் பகவானின் அம்சம் இருக்கும். மேலும் மஞ்சள், தாமரைப்பூ -, ஸ்வர்ணம் போன்ற வற்றில் தாயாரின் அம்சம் இருக்கும்.


ப்ரதோஷகாலத்தின் சமயம் நாம் ஏன் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகிறார்கள்?

Vidwan’s reply:
ப்ரதோஷ காலத்தில் மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளைச் சேவிக்க கூடாது என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆகமம் சொல்லுவது படி பகவானுக்கு ஆராதனம் நாம் செய்வது தான் கைங்கர்யம். அந்த முறையில் ப்ரதோஷகாலத்தில் மூலஸ்தானத்தில் இருக்கும் பெருமாளைச் சேவிக்காமல் இருப்பது தான் நாம் செய்யும் கைங்கர்யம். ஆனால் ப்ரதோஷகாலம் ஸ்ரீந்ருஸிம்ஹ பெருமாளுக்குரிய காலம் என்பதினால் அவரைச் சென்று சேவிக்கலாம் என ஆகமங்கள் கூறுகிறது.

ஏன்னென்றால், மஹாப்ரதோஷம் என்பது தோஷ காலம், ரௌத்ரகாலம் அது, அதாவது ருத்ர தாண்டவமாடும் காலம். ஆகையால் ஆத்திலிருந்துக் கொண்டு நாம் மௌன வ்ரதம் இருக்க வேண்டும் அது தான் நாம் செய்யும் கைங்கர்யம். பெரியவர்கள் எல்லாரும் சங்கல்பித்துக் கொண்டு மௌன வ்ரதமிருப்பார்கள்.

ப்ரதோஷ காலம் என்பது அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னும் ஒன்றரை மணி நேரம்.


நித்யமும் நமக்கு யார் ஸமாஶ்ரயணம் செய்வித்தார்களோ அந்த ஆசார்யனின் தனியன் மட்டும் சேவித்தால் போதுமானதா? அல்லது அவரின் ஆசார்யன் தனியனும் சேர்த்து சேவிக்க வேண்டுமா?

Vidwan’s reply:
நித்யமும் நமக்கு ஸமாஶ்ரயணம் செய்துவித்த ஆசார்யன் தனியனை சேவித்து அவருடைய ஆசார்யன் தனியனையும் சேர்த்துச் சேவிக்க வேண்டும். ஆசார்யன் உபதேசித்திருப்பார்.

பூர்த்தியாக குரு பரம்பரையை வணங்க வேண்டும். குரு பரம்பரையை வணங்கக்கூடிய க்ரமங்களை அவரவர்களுடைய ஆசார்யர்கள் உபதேசித்திருப்பார்கள். அந்த க்ரமத்தில் பூர்த்தியாக அனைத்து தனியன்களையும் சேவிப்பது மிகவும் உசிதம். ஒவ்வொரு ஆசார்யனையும் தனிப்பட்ட முறையில் அவரின் திருநாமமோ, தனியனோ சொல்லி வணங்க வேண்டுமென்று ஶாஸ்த்ரம் சொல்கிறது.


பாகவதர்கள்/சிஷ்யர்கள் தங்கள் ஆசார்யன் அல்லது அவரின் தேவிகளின் திருவத்யயன ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? தெளிவிக்க வேண்டுகிறேன். அடியேன்.

Vidwan’s reply:
பாகவதர்கள், ஆசார்யன், ஆசார்யனின் தேவிகள் இருவருடைய திருவத்யயண ப்ரசாதத்தை தாராளமாக ஸ்வீகரிக்கலாம்.


ஆஹார நியமனம் படி, ஸாத்வீக குணமும் பகவத் த்யானமும் வளர, ஒருவர் எந்தெந்த காய்களும் பழங்களும் உட்கொள்ள வேண்டும் என்ற பட்டியலைத் தர வேண்டுகிறேன். அதை ஒரு காணொளியாக போட்டால் மிகவும் சௌகர்யமாக இருக்கும் என்று ப்ரார்த்திக்கிறேன். அடியேன்

Vidwan’s reply:
விரிவாக விரைவில் வெளியிடவுள்ளோம்.


பெரிய நம்பி அவர்கள் மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம க்ரியைகள் எதன் அடிப்படையில் ஒற்றுக்கொள்ளப்பட்டது? இது எப்படி அவரின் வர்ணாஶ்ரம தர்மத்திற்கு விரோதமாகாது? தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
பெரிய நம்பிகள் மாறனேரி நம்பிக்கு செய்த கைங்கர்யம் பற்றி நம் குருபரம்பரையில் கிடைக்கவில்லை, ஸ்வாமி தேஶிகனும் எடுத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி அவர் மாறனேரி நம்பிக்கு கைங்கர்யம் செய்திருந்தால் கூட வர்ணாஶ்ரம தர்மத்திற்குட்பட்டு தான் செய்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் ஒவ்வொரு நிமிடமும் வர்ணாஶ்ரம தர்மத்திலிருந்து தவறாதவர், பூர்ணமான அநுஷ்டானபரர், யாகம் முதலியவைகள் எல்லாம் செய்தவர் என்று ஸ்வாமி தேஶிகன் ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் சாதித்திருக்கிறார்.

குறிப்பாக மாறனேரி நம்பி, அவரின் உறவினர்கள் யாரும் ஸ்ரீ வைஷ்ணவர்காளாக இல்லாத போதும் அவர் பரம ஸ்ரீ வைஷ்ணவராக இருந்தவர்.ஆகையால் தன் சரீரத்தை தன் உறவினர்களிடத்தே கொடுக்கக்கூடாது எனும் ஆசை இருந்தது அதை ப்ராத்தித்தும் இருந்தாராம். ஆகவே அந்த ரிதீயிலும் , ஶாஸ்த்ரத்திற்குட்பட்டும் சில வித சம்ஸ்காரங்கள் செய்யலாம் என்று இருக்கிறது.

ஆகவே ஶாஸ்த்ரத்திற்குட்பட்டு, வர்ணாஶ்ரம தர்மத்திற்குட்பட்டு பெரிய நம்பிகள் மாறனேரி நம்பிக்கு சம்ஸ்காரம் பண்ணியிருக்கலாம். மேலும் மாறனேரி நம்பியின் வர்ணாஶ்ரம முறையிலே பண்ணலாம், என ஶாஸ்த்ரம் சொல்லியிருக்கிறது. அதாவது கர்த்தாக்கள் யாருமில்லை என்றால் அந்திம சம்ஸ்காரங்கள் பண்ணலாம் என்றும் அப்படிச் செய்தல் விசேஷம் என்றும் ஶாஸ்த்ரம் கூறியிருக்கிறது. அந்த நெறிக்குட்பட்டு பெரிய நம்பிகள் செய்திருக்கலாம்.


ஹரிவாஸரம் என்றால் என்ன?

Vidwan’s reply:
மொத்த துவாதசி திதியின் முதல் கால் பாகத்துக்கு ஹரி வாஸரம் என்று பெயர். இது ஏகாதசிக்கு சமம். சாதம் சாப்பிடுவது மஹா பாபம். பெரும்பாலும் ஏகாதசி வ்ரத தினத்தன்று த்வாதசி திதி ஆரம்பித்துவிடும். ஆகையால் கால் பாகம் அன்றே கழிந்து விடும். சில சமயம் மறுநாளும் இருக்கும். அப்போது ஹரிவாஸரம் முடிந்தபின் பாரனை செய்தல் வேண்டும். ஹரி பெருமாளுக்கு உகந்த சமயம் என்பதால் ஹரி வாஸரம் என்று பெயர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top