அடியோங்கள் ஶ்ரீமதழகியசிங்கரிடம் பரந்யாஸம் செய்துள்ளோம். எங்களது மூன்று குழந்தைகளுக்கும் ஆசார்யன் மூலம் பரந்யாஸம் செய்யப்பட்டுள்ளது. அகத்திலுள்ள பெரியவர்களிடம் குழந்தைகளுக்குக் கோவிலில் அர்ச்சனை செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளோம். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்கிறார்கள். இதை நாங்கள் எப்படி கையாள்வது? இது எங்களின் மஹாவிஶ்வாசத்தைப் பாதிக்குமா? நாங்களோ அல்லது குழந்தைகளோ செய்யாதபோது, எம்பெருமான் இதைத் தவிர்த்துவிடுவாரா? தாயாருக்குச் செய்யப்படும் அர்ச்சனையாக இருந்தாலும், நாங்கள் அர்ச்சனை வேண்டாம் என்றே சொல்லியிருக்கிறோம்.

அர்ச்சனை சமயத்தில் குழந்தைகள் பெயரைச் சொன்னதால் பெரிய தோஷம் என்றெல்லாம் கிடையாது இது மஹாவிஶ்வாசத்தைப் பாதிக்காது. சிலர் ஆசையோடு சொல்லிகிறார்கள். சொன்னால் சொல்லிவிட்டுப்போகட்டும். பெருமாளிடம் ப்ரார்த்தித்துக்கொண்டால் போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top