அடியேன் 2017-ல் பிரக்ருதம் ஶ்ரீமதழகியசிங்கரிடம் ஸமாஶ்ரயணமும் பரந்யாஸமும் பெற்றேன். அப்போது வழங்கப்பட்ட புத்தகத்தில் உள்ள ஶ்லோகங்களையும், அஷ்டாக்ஷரம், த்வயம், சரம ஶ்லோகம் மற்றும் ஸ்ரீயை ஆகிய மந்திரங்களை தினமும் காலை ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு பெருமாள் ஸந்நிதியில் நித்யானுஸந்தானமாகச் சொல்லி வருகிறேன். இவற்றை தினமும் சொல்லலாமா? இதனுடன் சேர்த்து வேறு என்ன மந்திரங்கள் / ஶ்லோகங்கள் சொல்லலாம்?

தினமும் ஸந்த்யாவந்தனத்துடன் இந்த மந்திரங்களெல்லாம் ஜபமாக பண்ணவேண்டும். உட்காந்துகொண்டு ப்ராணாயாமத்துடன் சங்கல்பம் பண்ணி ஜபமாகச் செய்தல் வேண்டும். இதை நித்யானுசந்தானமாச் சொல்வதைவிட ஜபமாக பண்ணால் நல்லது. சில சமயம் திருவாராதன சமயம் அர்ச்சனையில் சொல்வார்கள். என்னென்ன மந்திரங்கள் தெரியுமோ அதையெல்லாம் சொல்லலாம். மந்திரங்கள் தெரியாவிட்டால் ஶ்லோகங்கள் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top