மாத்யாஹ்நிகம் வடக்கு திசை நோக்கி பண்ண வேண்டும். இது ஒரு சாரார் கடைபிடிக்கிறார்கள். வடகலை திரிகால சந்தியா வந்தனம் (lifco edition) இதை கூறுகிறது. “Prapatti,com” ஸ்ரீ சுந்தர்கிடாம்பி ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்துடன் வெளியிட்டுள்ள சந்தியாவந்தனம் pdf ல் மாத்யாஹ்நிகம் கிழக்கு நோக்கி பண்ண வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்மார்த்தர்களில் ஒரு சிலர் கிழக்கு நோக்கி தான் மாத்யாஹ்நிகம் பண்ணுகிறார்கள்.நான் பார்த்து வளர்ந்ததில் சூரியன் தலைக்கு நேராக வரும் வரை கிழக்கு பார்த்தும், பிறகு வடக்கு பார்த்தும் பண்ணணும். மேலும் அனுஷ்டானங்களில் வேறுபாடுகள் இருப்பதால், அவர் அவர் குடும்ப வழக்கப்படி / ஆத்து பிருஹஸ்பதி கூறுகிறபடி செய்யவும்னும் கேள்விப் பட்டிருக்கிறேன். சரியா? ஏன் இந்த முரண்பாடு? இதற்கு காரணம் என்ன? விளக்கம் தர வேண்டுகிறேன்

மாத்யாஹ்நிகம் கிழக்குப் பார்த்தும் பண்ணலாம், வடக்குப் பார்த்தும் பண்ணலாம். நீங்களே சொல்லியிருக்கிறமாதிரி முற்பகலில் பண்ணுவதாக இருந்தால் கிழக்குப் பார்த்தும், மத்யாஹ்னம் பண்ணுவதாக இருந்தால் வடக்குப் பார்த்தும் பண்ணுவார்கள். இதில் முரண்பாடு என்றொன்று கிடையாது.தங்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்களோ அப்படிப் பண்ணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top