ப்ரதோஷ காலத்தில் என்றால் அது மஹாப்ரதோஷ காலத்தில் இவையெல்லாம் கூடாது. நித்யமிருக்கும் ப்ரதோஷ காலத்தில், வேதாத்யயனம் பண்ணக்கூடாது என்பார்கள். அது சந்தியாவந்தனம் பண்ணவேண்டிய காலம். சந்தியாவந்தனம் பண்ணி, அஷ்டாக்ஷர ஜபமெல்லாம் அந்தக் காலத்தில் பண்ணவேண்டும்.
சந்தியாவந்தனத்தை விட்டுவிட்டு மற்றதெல்லாம் பண்ணக்கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம். உதாஹரணத்திற்கு சிலர் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரபாராயணம் செய்துவிட்டு சந்தியாவந்தனம் பண்ணலாம் என்றிருப்பார்கள். அப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்பதற்காகச் சொல்லியிருக்கலாம்.