திருவாராதனத்தின் சமயம் பெருமாளுக்குப் பழம் ஸமர்ப்பிக்க மிகக் குறைந்த அளவே இருந்தால் (1 அல்லது 2 பழம் மட்டும்) பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? மேலும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்த பின் அப்பழங்களை என்ன செய்வது?

வாழைப்பழமாக இருந்தால் இரண்டாக ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். நாம் சாப்பிட ஏற்றதாக பழம் இல்லையானால் அதை அர்ப்பணம் செய்வதில்லை. ஆப்பிள் முதலிய பழங்களை ஒன்று அல்லது இரண்டு இருந்தால் ஸமர்ப்பிக்கலாம்.
குறிப்புகள்
ஏற்கனவே ஸமர்ப்பித்த பழத்தின் மீதியை ஸமர்ப்பிக்கக் கூடாது. நாம் சாப்பிட்ட மீதி, எலி சாப்பிட்ட மீதி முதலியவை கூடாது. இந்தத் தோஷங்கள் இல்லாமல் அரை பழம் இருந்தால், அதை துண்டுகளாக நறுக்கி சமர்ப்பிக்கலாம். அதை பிறகு நாம் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top