தர்ப்பண நாட்களில் திருவாராதனம் செய்து முடித்தப்பின் தர்ப்பணம் பண்ணுவது உசிதம். ஏனென்றால் முதலில் தேவ கார்யம்; பின்பு பித்ரு கார்யம்.
குறிப்புகள்:
ஆனால் சில நாட்களில், மாதம் சீக்கிரம் பிறக்கலாம் அப்போது அதிகாலையில் எழுந்தவுடன் தர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதால் அந்நேரத்தில் திருவாராதனம் பண்ண முடியாது. மேல் குறிப்பிட்ட நாட்களில், மாதப்பிறப்பு தர்ப்பணம் முதலில் செய்துவிட்டுப் பிறகு திருவாராதன காலத்தில் திருவாராதனம் செய்வது உசிதமாக இருக்கும். பெரியோர்களுடைய அனுஷ்டானமும் இப்படி இருக்கின்றது.