தர்ப்பண நாட்களில் பண்டிகை கலந்து வந்தால், பண்டிகை தளிகை செய்து எம்பெருமானுக்குச் சமர்பிக்க வேண்டும்.
குறிப்புகள்:
சங்க்ரமணத்தைப் பற்றி கூறும்போது சாதாரண சங்க்ரமணத்தைக் கூட ஒரு பண்டிகை போல் ப்ரதானமாக கொண்டாடுவது வழக்கம். தர்ப்பணம் செய்து மாதப்பிறப்பு நாட்களில் சாதாரணமாகப் பண்ணுவதே வழக்கம். அதனால் சங்க்ரமணத்துக்கு இந்தக் கேள்வி அவசியமில்லை.
பண்டிகை நாட்களும் அமாவாஸையும் சேர்ந்து வருகின்றபோது, பண்டிகை கொண்டாட வேண்டும். குறிப்பாக அமாவாஸை மற்றும் தீபாவளி சேர்ந்து வரும்போது இக்கேள்வி தோன்றும்.
தர்ப்பண நாட்களில் பிறந்தநாள் அல்லது வேறு பண்டிகை வரலாம். அப்படி அமையும்போது தர்ப்பணம் செய்தப்பின்பு, பண்டிகை ரீதியில் அதற்கான தளிகையைச் செய்து, பெருமாளுக்குத் திருவாராதனை செய்த பின் கொண்டாட வேண்டும்.