ரஜஸ்வலா காலத்தில் பூர்வாசார்ய ஶ்லோகங்களையும் திவ்ய ப்ரபந்தத்தையும் ஸேவிக்கக்கூடாது.
குறிப்புகள்:
நாம் பால்ய காலத்திலிருந்தே ஸ்தோத்ரங்களை நித்யாநுஸந்தானம் பண்ணி ஸதா ஸர்வகாலமும் எம்பெருமானையே த்யானித்துக் கொண்டிருந்தால் பகவானுடைய ஸ்தோத்ரங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அதுவே நமக்கு மனச்சாந்தியைத் தரும். அதை நம்மால் கட்டுப்படுத்துவது கடினம்.
அதற்காக ரஜஸ்வலா காலத்தில், வாயால் முணுமுணுத்துக்கொண்டோ அல்லது சத்தமாகவோ, ஶ்லோகங்களைச் சொல்லக்கூடாது.