பாவ கர்மாக்களினால் ஒரு ஜீவன் விலங்கு, தாவரம் போன்ற கீழான நிலையை அடைந்து விட்டால் அந்த ஜீவன் புண்ணியம் செய்வது கஷ்டம்.
குறிப்புகள்:
புண்ணிய பாபம் செய்வது என்பது மனித ஜன்மாவில் தான் முடியும். மிருக, ஸ்தாவர ஜன்மத்தில் செய்ய முடியாது (தானாக அவைகளுக்குப் புண்ணிய பாபம் சம்பவித்தால் அந்த விஷயம் வேறு).
பக்ஷி மிருக ஸ்தாவர ஜன்மம் எடுக்க நேர்ந்தால் பாபம் கழியும் என்பது மட்டும் தான். அந்த ஜன்மமெடுத்து புண்ணிய பாபம் கழிந்தப்பின் நாம் மனித ஜன்மம் எடுப்போம். அதில் புண்ணியம் செய்ய, உயர் கதிக்குப்போகலாம். அப்போதும் பாபம் செய்தால் புழு, பூச்சி முதலிய ஜன்மம் எடுக்க நேரிடும். ஆக இந்த ஜன்மங்கள் புண்ணிய பாபம் கழிக்க வந்தவையே தவிர அதைச் செய்ய வந்தவை அல்ல.