இதில் சந்தேகமே வேண்டாம். வீட்டில் மற்றும் கோவிலில் இருக்கும் சாளக்கிராம மூர்த்திக்குத் திருமஞ்சனம் செய்தபிறகு சந்தனம் தாராளமாக சந்தனம் சாற்றலாம்.
நிறைய மூர்த்தங்கள் இருந்தால் எல்லாருக்குமே சந்தனம் சாற்றுவது விசேஷம் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. ஒரு மூர்த்திக்கு மட்டும் சாற்றி மற்ற மூர்த்திகளுக்குச் சாற்றாமல் இருப்பது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. தூபம் தீபம் என்றால் எல்லா மூர்த்திகளுக்கும் பொதுவாக ஆகிவிடும். ஆனால் சந்தனம் என்பது அப்படியில்லை, அதனால் எல்லா மூர்த்திகளுக்கும் சாற்றுவதே விசேஷம். அதனால் திருமஞ்சனம் ஆனபிறகு அந்த க்ரமத்தில் சந்தனம் ஸ்மர்ப்பிக்கலாம்.