ஏன் நாம் 4 முறை நமஸ்காரம் செய்கிறோம்?

அதற்கு ஒரேபதில் என்னவென்றால் ஶாஸ்த்ரத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது பெருமாளுக்கு நாம் செய்யக்கூடிய கைங்கர்யங்கள் என்று பார்க்கும்போது ப்ரதக்ஷிணம், ப்ரணாமம், அஞ்சலி இவையெல்லாம் என்று ஶாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஶாஸ்த்ரத்தில் ஒவ்வொன்றும் எப்படி பண்ணவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரதக்ஷிணம் என்றால் எத்தனை தடவை பண்ண வேண்டும், எப்படிப் பண்ணக்கூடாது , ஓடிக்கொண்டு பண்ணக்கூடாது என்றெல்லாம் ஶாஸ்த்ரம் சொல்கிறது. அஞ்சலி எப்படி பண்ணவேண்டும், ஏக ஹஸ்தாஞ்சலி பண்ணக்கூடாது என்றும் இருக்கின்றது.
அதேபோல் ப்ரணாமத்தை பற்றி சொல்லும் பொழுது இரட்டைப்படையில் தான் பண்ணவேண்டும், “प्रदक्षिणान् प्रणामान्श्च युग्मानेव समाचरेत्। ப்ரதக்ஷிணான் ப்ரமாணான்ஶ்ச யுக்மானேவ ஸமாசரேத்” என்று சொல்லி, அதற்கு காரணமும் சொல்லுகிறது. பெருமாளுக்கு எல்லாமே இரட்டைப் படையில் தான் இருக்க வேண்டும் ஒற்றைப்படையில் இருப்பது ஸ்ரேஷ்டமில்லை.
பொதுவாக ஒன்று என்பது பித்ருக்களுக்கு. தேவர்களுக்கு வரும்பொழுது இரண்டு தான் வரும். “ஏகாமன்வா: , ஏகாஹிபித்ருனாம், த்ருரன்வா:, த்ருஹிதேவானாம்” என்பது வேதத்தில் மிகவும் ப்ரசித்தம். அதனால் தேவாதிதேவனான பெருமாளுக்கு சுருக்கமாக இரண்டு என்று பண்ணாமல் நான்கு, ஆறு என்று பண்ணலாம். இதில் நிறைய யுக்திகளும் ஸ்வாமி தேஶிகன் சொல்லியிருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top