பரஸமர்ப்பணம் செய்துகொண்டபின் கொலுவைப்பதைப் பொருத்தவரை அது பகவத் ஆராதனம் தான். இதை நம் GSPKயில் நவராத்திரியின் சிறப்பு என்ற கீழேயுள்ள காணொளியில் விவரமாக சொல்லப்பட்டுள்ளது.
புற்றுக்குப்பால் தெளிப்பதென்பது, சில க்ருஹங்களில் வழக்கில் இருக்கின்றது, பெரியவர்கள் வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்று நினைப்பதும் உண்டு. அப்படிச் செய்யும் போது அதையும் பகவத் ஆராதனமாகவே நினைத்தல் வேண்டும், தேவதாந்த்ராதனமாக நினைத்தல் கூடாது. ஆதிசேஷனுக்குச் செய்யும் கைங்கர்யமாக நினைத்து செய்தால் அதில் தவறில்லை என்று சில ஆசார்யர்கள் நிர்ணயிக்கிறார்கள். இதில் மிக முக்கியமானது நாம் புற்றுக்குப் பால் தெளிக்கும் போது மானசீகமாக பகவத் ஆராதனம் என்று நினைக்க வேண்டும்.

