ஏகாதசி தவிர, பெருமாளைக்குறித்து பிற வ்ரதங்கள் இருந்தால் அதை செய்யலாம்.
உதாஹரணமாக திருவோண வ்ரதம், சனிக்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் வ்ரதம் என நிறைய பேர் செய்வதுண்டு. பெருமாளைக்குறித்து, பெருமாளின் திருநாமத்தில் வ்ரதமிருப்பதில் தவறில்லை.
குறிப்புகள்:
சில க்ரஹங்களில், பங்குனி மாசப்பிறப்பு காலத்தில் மாசி சரடு கட்டிக்கொள்வது அதாவது நோன்பு நூற்கும், அனுஷ்டானம் வழக்கமாக இருக்கும். நோன்பு நூற்று வ்ரதம் மேற்க்கொண்டு, சரடு கட்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. அதுவும் நிர்ஜலமாக அனுஷ்டிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஏதாவது பலகாரம் பண்ணி விட்டு அனுஷ்டிக்கலாம். ஆத்துப்பெரியோர்கள் சொன்னால் அந்த வ்ரதம் இருக்கலாம். ப்ரபந்ந ஸ்த்ரீகள் இருக்கக்கூடிய சில க்ருஹங்களில் இந்த வழக்கமும் கிடையாது.