சில ஸ்தோத்ரங்கள், ப்ரபந்தங்களின் பலஸ்ருதி மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று கூறுவதின் கருத்து என்னவென்றால், அந்த ஸ்தோத்ரத்தையோ ப்ரபந்தத்தையோ அனுசந்தானம் செய்தால் நமக்கு நிச்சயம் ஒரு சதாசார்யர் சம்பந்தம் ஏற்பட்டு அவர் மூலமாக ஶரணாகதி ஆகி நாம் மோக்ஷத்தைப் பெறுவோம். படிப்படியாக நமக்கு மோக்ஷம் கிட்டும் என்பதே இதன் கருத்து.