அடியேன் கணவர் சமீபத்தில் பரமபதித்து விட்டார்.அவருக்கு வருஷாப்திகம் வரை என் மச்சினர் பிள்ளை காரியம் செய்கிறான் என்றும் அதன்பின் வரும் ஶ்ராத்தம் யார் செய்யலாம் என்ற என் கேள்விக்கு அடியேனுக்கு பேரன் இருக்கிறானா என்று கேட்டிருந்தீர்கள். எனக்கு இரண்டு பெண்கள்.சிறிய பெண் மூலமாக ஒரு பேரன் இருக்கிறான்.அந்த என் பேரனுக்கு வயது 12. உபநயனம் ஆகிவிட்டது.

ஒருவருக்கு (அது ஸ்த்ரீயானாலும், புருஷனானாலும்) அவர்கள் இறந்த பிறகு கைங்கர்யங்கள் பண்ணவேண்டியது அவர்களுக்குப் பிறந்த ஆண் பிள்ளைகள். பிள்ளையில்லை என்றால் பெண்ணின் பிள்ளைகள் முக்கியமாக மூத்த பிள்ளை பண்ணவேண்டும்.
இந்த விஷயத்தில் உங்கள் கணவரின் கைங்கர்யத்தை உங்கள் மச்சினர் பிள்ளை பண்ணுகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள் அவர் நேரே செய்திருக்க மாட்டார் உங்களிடம் கைப்புல் வாங்கிதான் செய்திருப்பார். இதை அப்படியே தொடர்ந்து பண்ணுவது தான் ந்யாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top