இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டுமா?

இரவு நேரங்களில் தினமும் சுமங்கலிகள் குழந்தைகள் கண்டிப்பாக சாதம் சாப்பிடவேண்டும் என்ற நியமங்கள் கிடையாது. ஆனால், சில பேருக்கு சில தினங்களில் (அமாவாஸை போன்ற தினங்களில்) பலகாரம் உண்டு. அந்த நியமங்கள் குறிப்பாக சுமங்கலி ஸ்த்ரீகளுக்குக் கிடையாது.
அதனால் இரவில் கண்டிப்பாக சாதம் சாப்பிட வேண்டும் என்று கிடையாது. பலகாரம் பண்ணவேண்டிய அவசியமில்லை என்பதாலும், பலகாரம் என்று ஆகிவிடுமே என்ற பயத்தினாலும் சாதம் சாப்பிட வேண்டும் என்பதாகச் சொல்வதுண்டு. இன்றும் சில க்ருஹங்களில் கண்டிப்பாக சாதம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள், அதில் தவறில்லை. இது ஶாஸ்த்ரம் இல்லையென்றாலும் ஒருவிதமான ஜாக்கிரதை உணர்வு என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top