ஆசார்யன் திருநக்ஷத்ரதினம் போல் திருவத்யயன தினமும் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும் என்று ஸ்ம்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. திருவத்யயனத்தை ஶ்ராத்தம் மாதிரியே ஒரு சிஷ்யன் பண்ணலாம். அது முடியாத போது அன்றைக்கு விசேஷமாக பெருமாள் திருவாராதனம் செய்து, ஆசார்யன் சம்பாவனை செய்து, ஆசார்யன் ஸ்ரீபாத தீர்த்தம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.