a) ஸ்ரீ ராமபிரான் தன் அவதார முடிவில் அயோத்தி வாழ் உயிரினங்களை ஸ்ரீவைகுண்டத்திற்கு ஏன் அழைத்துச் சென்றார்? அவைகள் பக்தி யோகம் செய்தனவா அல்லது ஶரணாகதி செய்தனவா? b) ஒரு ப்ராமணனின் இறந்து போன குழந்தைகளை வைகுண்டலோகத்தில் இருந்து கிருஷ்ணரும் அர்ஜுனனும் மீட்டு வந்ததாக மஹாபாரதத்தில் கதை வருகிறது. வைகுண்ட லோகம் சென்றவர்கள் திரும்ப வரமாட்டார்கள் என்று இருக்க ( ந ச புநராவர்த்ததே) பெருமாள் எப்படி அந்தக் குழந்தைகளையும் அர்ஜுனனையும் வைகுண்டலோகத்தில் இருந்து அழைத்து வந்தார் ?

a.ஶ்ரீ பரதாழ்வார் சித்ரகூடத்தில் செய்த ஶரணாகதியில் அயோத்திவாழ் மக்களும் அடங்குவர். ஆகையால் அவர்களும் ஶராணாகதி செய்ததாகக் கணக்கு. இந்த ஶரணாகதியை பற்றியும், அபய ப்ரதாணம் பற்றியும் ஸ்வாமி தேஶிகன் அபய ப்ரதாணத்தில் சாதிக்கிறார். அபய ப்ரதாண காலக்ஷேபத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அக்காலக்ஷேபத்தின் பதிவுகளைக் கேட்க : https://www.sampradayamanjari.org/register/ என்ற linkல் பதிவு செய்து GSPK ID கிடைத்த பின், https://t.me/Mukunth_SR என்ற Telegram ID யை தொடர்பு கொள்ளவும்.
b.அர்ச்சிராதி கதி வாழியாக யார் ஶ்ரீவைகுண்டத்திற்குப் போகிறார்களோ அவர்கள்தான் திரும்பி வரமாட்டார். பகவானே ஸ்வதந்திரனாக இருந்து அவர்களை அழைத்துக்கொண்டு போய்வந்தார் என்பது மோக்ஷமாகாது, அதாவது மோஷம் பெற்றனர் என்ற அர்த்தம் ஆகாது. ஆகையால் பகவானே அழைத்துப்போய் வந்தார் என்பது சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top