திருவாரதன சமயம் ஸ்லோகங்கள், ராமாயணம், பாகவதம் சேவிக்கும் போது அலங்காரஸ்நானம் அல்லது பர்யங்கஸ்நானம் எது செய்யவேண்டும்? மேலும் பாகவதம் மூலம் பாராயணம் திருவாராதனத்திற்கு பின் செய்ய வேண்டுமா? தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் சேவிக்கும் போது அலங்கார ஆசனமா அல்லது பர்யங்க ஆசனமா என்றால் அவரவர் சௌகர்யம்படிச் செய்யலாம்.
அலங்கார ஆசனத்தில் பெருமாளுக்குத் தூபதீபாதிகள் எல்லாம் சமர்ப்பித்து முடித்தபின் ஸ்தோத்ரங்கள் சொல்ல வேண்டிய சமயம் இருக்கிறது. இல்லையென்றால் பர்யங்க ஆசனத்தில் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி செய்துவிட்டு பின் ஸ்தோத்ரங்கள் சொல்ல வேண்டிய சமயம் இருக்கிறது. இந்த இரண்டில் எது சௌகர்யமோ அதற்கேற்றார் போல் சேவிக்கலாம்.
அகத்தில் தளிகை எல்லாம் ஆகிவிட்டது என்றால், தளிகை ஸமர்ப்பித்துவிட்டு பர்யங்க ஆசனத்தில் கூட நாம் சேவிக்கலாம்.
பாகவதம் மூலம் பாராயணம் ஆராதனை திருவாராதனத்திற்குப் பிறகு கட்டாயம் செய்யவேண்டும் என்பது கிடையாது. அது நமது சௌகர்யத்தைப் பொறுத்தது.
குறிப்புகள்:
எந்தத் தாத்பர்யத்தில் கேட்கிறார் என்பது தெரியவில்லை. திருவாராதனத்திற்குப் பிறகு பாகவதம் மூலம் பாராயணம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top