திருவாரதனம், தர்ப்பணம் அல்லது சந்தியாவந்தனம் செய்யும் சமயங்களில் அற்பசங்கை போன்றவை வந்தால் என்ன செய்யவேண்டும், மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டுமா? எப்படித் தொடர வேண்டும். தெளிவுபடுத்தவும் அடியேன்.

திருவாரதனம், தர்ப்பணம் அல்லது சந்தியாவந்தனம் செய்யும் சமயங்களில் அற்பசங்கை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று நமக்கே தெரியும் . முன்பே சங்காநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். ரொம்ப வயதான பிறகு வந்துவிடும், அந்தச் சமயம் வேறு வழியில்லாமல் ஸ்நானம் பண்ணனும். அப்படிப் பண்ண முடியாவிட்டால் மந்த்ர ஸ்நானமாவது பண்ணவேண்டும், அதன் பின் சந்தியாவந்தனாதிகள் முதலிலிருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும்.
திருவாராதனம் செய்யும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பார்கள். அற்பசங்கை போகும்படி நேர்ந்தால் மறுபடியும் ஸ்நானம் செய்து ஆரம்பத்திலிருந்து செய்வது உண்டு. இல்லாவிட்டால் வேறு ஒரு ரீதியில் அதாவது புத்திரனை வைத்து பண்ணுவதும் உண்டு. அதாவது முக்கியமான ஸ்நானம் பண்ண முடியாவிட்டால் மந்த்ர ஸ்நானம் பண்ணலாம்.
இதெல்லாம் ரொம்ப வயதானவர்கள் விஷயத்தில்தானே தவிர சக்தி உள்ளவர்கள் எல்லாம் சங்காநிவர்த்தி எல்லாம் செய்துவிட்டு தான், சந்தியாவந்தனம் திருவாராதனம் எல்லாம் ஆரம்பிக்க வேண்டும். அதில் எந்த விதமான தளர்வும் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top