ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, இந்த மாதங்களில் வபனம் கூடாது.
ஒரு வசனத்தில் என்ன இருக்கிறது என்றால், தனுஷ் கும்பௌ , அப்படியென்றால் மார்கழியிலும் மாசியிலும் பின் பாதியிலும் ஆடி மாதத்தில் முன்பாதியிலும் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் செய்யக்கூடாது என்ற வசனமும் இருக்கின்றது.
வேறு வழி இல்லாவிட்டால் மேற்கூறிய வசனத்தை அனுஷ்டானம் செய்வது என்பது பெரியோர்கள் வழக்கத்தில் இருந்துகொண்டிருக்கிறது. எதுவும் குழப்பம் வேண்டாம். எப்பொழுதுமே ஶாஸ்த்ரம் என்பது இரண்டு கல்பம் சொல்லும். முதல் கல்பம் முடியாவிட்டால் அடுத்தது என்ற ரீதியில் வரும். இது எல்லா இடத்திலேயும் உண்டு.
ஞாயிற்றுக்கிழமையில் செய்துகொள்கின்ற வழக்கம் இருக்கின்றது. திதி மற்றும் நக்ஷத்ர தோஷங்கள் இல்லாவிட்டால் பண்ணிக்கொள்ளலாம்.
குறிப்புகள்:
அதனால் உங்களால் முடியுமானால் ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி இந்த மாதங்களில் வபனம் செய்துகொள்ளக்கூடாது என்பது முதல் பக்ஷம்.
சிலரால் அது முடியாமல் போகலாம். அப்படி முடியாமல் போனால் மார்கழி மாசி மாதங்களில் முன் பாதியிலும் ஆடி மாதத்தில் பின் பாதியிலும் வபனம் செய்துகொள்ளலாம். இது இரண்டாவது பக்ஷம்.