அனுஷ்டானத்தின் படி ஸ்நானம் செய்யும் முன் ஸ்நானஸாடி உடுத்திக்கொண்டு ஸ்நான சங்கல்பம் செய்யவேண்டுமென்று இருக்கிறது. லௌகீக கார்யங்களை கருத்தில் கொண்டால் நித்யமும் விஸ்தாரமாக செய்ய சம்யமில்லை, ஆகையால் லகுவாக ஸ்நான சங்கல்ப முறையை தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். மேலும், எந்த வஸ்திரத்தை ஸ்நானஸாடியாக உபயோகிக்கலாம் என்றும் தெரிவிக்க வேண்டுகிறேன். உ.தா ஒரு கிழிந்த வேஷ்டியின் அங்கவஸ்திரம் உபயோகிக்கும்படியிருந்தால் அதை ஸ்நானஸாடி உடுத்திக்கொள்ளலாமா?

லகுவாக ஸ்நான சங்கல்பம் அதாவது சுருக்கமாக என்று கேட்டால் “கர்மண்யதா சித்4யர்தம் ப்ராதஸ்நானம் அஹம் கரிஷ்யே” என்று சுருக்கமாக சொன்னால் போதும். ஆனால் பொதுவாக ஸ்நானத்தில் மஹா சங்கல்பம் சொல்வது வழக்கம். அன்றைய திதி , வாரங்கள் எல்லாம் சொல்லி, எந்த வருடம் , எந்த மாதம், “விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்3ய ப்4ரஹ்மண:” என்று ஆரம்பித்து , ஸ்நானம் பண்ண வேண்டும். சந்தியாவந்தனம் , திருவாராதனம், இவற்றுக்கெல்லாம் மஹா சங்கல்பம் கிடையாது. அதனால் நாளினுடைய தொடக்கத்தில் ஸ்நானத்தில் மஹாஸங்கல்பம் செய்து ஸ்நானம் செய்யலாம்.
நாம் குளிப்பதற்காக உபயோகப்படுத்துகிற வஸ்திரம் ஸ்நானஸாடி என்று பெயர். ஸ்நானஸாடி வஸ்திரம் என்று கடைகளில் விற்கப்படுகிறது. அதை வாங்கி உபயோகிக்கலாம். இல்லாவிட்டால், பழைய வேஷ்டி, அங்கவஸ்திரம் இவற்றை உபயோகிப்பதால் ஒன்றும் தப்புகிடையாது. ஆனால் ஸ்நானஸாடியாக உபயோகித்தபின் அது உத்திரியமாக உபயோகிக்க கூடாது. ஸ்நானஸாடி என்பது கீழ் துணி, உத்திரியம் என்பது ஜபத்திற்காக உபயோகிக்கப்படும் மேல் துணி. அதனால் பழைய உத்திரியத்தை ஸ்நானஸாடியாக உபயேகிக்கலாம். ஆனால், அதை மறுபடியும் உத்திரியமாக உபயோகிக்கக் கூடாது என்பதே பதில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top