திருவஷ்டாக்ஷர ஜபம் என்பது சந்தியாவந்தனத்துடன் சேர்த்து பண்ணுவது தான் அதிகமாகவும் பண்ணலாம். அதனால் தான் பல இடங்களில் குறிப்பாக விசேஷமான சமயங்களில் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணும் வழக்கமுண்டு. ஸ்த்ரீகள் சந்தியாவந்தனத்திற்கு பதிலாகத்தான் திருவஷ்டாக்ஷர ஜபம் பண்ணுகிறார்கள். எப்படி என்பதை முன் சுதர்சன இதழ்களில் இருக்கிறது.
ரிஷிகள் தபஸ் ஜபம் போன்றவை பண்ண திருவஷ்டாக்ஷரம் தவிர வேறு பல மந்திரங்கள் உள்ளது வேத மந்திரங்களே இருக்கிறது. வேத பாராயணத்திற்கே ஜபம் என்று பெயர் உண்டு அதற்கு வேதவாக்யமே இருக்கிறது. ரிஷிகள் எல்லோரும் ஓயாமல் வேத பாராயணம் செய்து செய்து தான் நமக்கு வேதத்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். வேதத்திற்கென்று புத்தகம் கிடையாது அவர்களின் ஜபத்தின் மூலமாகதான் ரிக், யஜூர், சாம வேதங்கள் நமக்கு கிட்டியிருக்கிறது. அதாவது காட்டில் அவர்கள் சொல்லிக்கொண்டே போவார்களாம். அப்படிப் பாராயணம் மூலமாகதான் நமக்கு அவர்கள் காப்பாற்றி கொடுத்திருக்கிறார்கள்.