கைவல்யார்த்திகள் என்றால் இந்த ஜன்மம் முடிந்தபிறகு ஜீவாத்மா அனுபவம் வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள். அதற்கென்று தனி லோகம் இருக்கிறது அந்த லோகத்திற்குச் சென்று ஜீவாத்மா அனுபவம் பெறுவார்கள். ஆனால் அந்த லோகத்திற்கும் ப்ரளயகாலத்தில் முடிவு வந்துவிடும்.
முமுக்ஷூகள் என்றால் பரமாத்மா அனுபவத்திற்கு ஆசைப்படுபவர்கள்.மோக்ஷம் பெற்றவர்கள் ஸ்ரீ வைகுண்ட லோகத்திற்குச் செல்வார்கள். அங்கே பகவத் அனுபவத்தைப் பெற்று ஆனந்தமாக இருப்பார்கள்.