ஸ்வாமி தேசிகன் சாதித்த நவமணிமாலையில் கடைசியில் வரும் “பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல், பரவு நவமணிமாலை….”வரியில் உள்ள “பரவு” என்ற சொல்லுக்கு, அனைவராலும் கொண்டாடப்படக்குடிய (பரவுகின்ற) நவமணிமாலை என்று வ்யாக்யானத்தில் இருக்கிறது.
பந்து, கழல், அம்மானை, ஊசல், ஏசல் என்ற 5 ப்ரபந்தங்களும் லுப்தம்; நவமணிமாலை மட்டும் நமக்கு இன்றளவும் கிடைக்கின்றது.

