ஆண்டாள் கோஷ்டி மட்டுமே தனியாகச் சேவாகாலம் செய்வதோ, அவர்கள் சேவாகாலம் செய்வதென்பதே எந்தக் கோவிலிலும் வழக்கத்தில் இல்லை. பிற்காலத்தில் நூதனமாக ஏற்பட்டக் கோவில்களில் அவர்களும் சேர்ந்து ஸ்தோத்ர பாடங்களை சேவாகாலம் செய்வதென்பது ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டுமே கத்ய த்ரயம், ஸ்தோத்ரபாடங்கள், ப்ரபந்தங்கள் சேவிப்பதென்பது வழக்கத்தில் இல்லை.