“ஸர்வ தேவ நமஸ்கார: கேஶவம் ப்ரதிகச்சதி” என்று சொல்லும் ரீதியில் தேவாதிதேவனான எம்பெருமான் இருக்கும்போது, அவருக்கு ஸமர்ப்பித்தால் இவர்களுக்கு திருப்திவரும். “அங்காந்நந்யா தேவதா:” என்று வேதம் சொல்கிறது. அதாவது நாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்றால் பகவானுக்கு ஸமர்ப்பித்தால் மற்ற தேவர்களுக்கு ஸமர்ப்பிக்கவில்லையே என்ற கோபம் வரும் என்று. உண்மை என்வென்றால் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தால் எல்லாருக்கும் திருப்திவரும். எல்லா தேவர்களும் பகவானைச் சேர்ந்தவர்கள் என்று எல்லா ஶாஸ்த்ரங்களும் சொல்லியிருக்கிறது.
ஆகையால் பகவானுக்கு ஸமர்ப்பித்தால் பகவானுக்கு திருப்தி வரும். எம்பெருமான் திருப்தியடைந்தால் மற்றவர்களுக்கு கோபம் வராது, திருப்திதான் வரும் என்று இருக்கிறது. மேலும் அவர்கள் அனைவரும் எமெருமானுக்கு அங்கமாக இருக்கின்றபடியால் கோபிக்க மாட்டார்கள், சந்தோஷம் அடைவார்கள் என்று இருக்கிறது. இதை எடுத்துச் சொல்லலாம்.
பகவானுக்கு ஸமர்ப்பிப்பது வேரில் ஜலம் ஸமர்ப்பிப்து போலே என்று புராணங்கள் சொல்கிறது. வேரில் ஜலம் சேர்த்தால் மரத்தில் இருக்கும் புஷ்பம், இலை என்ற அனைத்துக்கும் போய் சேரும். அதுபோல்தான் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதும்.