தளிகை ஆகிக்கொண்டிருக்கிறது என்றால், அலங்கார ஆசனம் அதாவது தூப தீபங்கலெல்லாம் சமர்பித்துவிட்டபின் மந்திர புஷ்பம் சொல்லும் வழக்கம். மந்திர புஷ்பம் ஆனபின் நமக்குத் தெரிந்த ஶ்லோகங்கள்/பாசுரங்கள் எல்லாம் தளிகை ஆகும்வரை சொல்லிக்கொண்டிருக்கலாம். அதாவது வேறு கார்யங்களுக்குப் போகாமல் பெருமாளுக்குச் சம்பந்தப்பட்ட கார்யங்கள், கைங்கர்யங்கள் நாம் பண்ணிக்கொண்டு இருக்கலாம். தளிகை ஆனபின் தொடர்ந்து திருவாராதனம் பண்ணலாம்.

