பெருமாள் திருவாராதனம் செய்ய, தளிகை தயாராக இருக்க வேண்டுமா? தளிகை இன்னும் ஆகவில்லையென்றால் ஆராதனத்தை நடுவில் எங்கு நிறுத்திவிட்டு பின்னர் தொடர் வேண்டும் என்று விளக்கவும்.

தளிகை ஆகிக்கொண்டிருக்கிறது என்றால், அலங்கார ஆசனம் அதாவது தூப தீபங்கலெல்லாம் சமர்பித்துவிட்டபின் மந்திர புஷ்பம் சொல்லும் வழக்கம். மந்திர புஷ்பம் ஆனபின் நமக்குத் தெரிந்த ஶ்லோகங்கள்/பாசுரங்கள் எல்லாம் தளிகை ஆகும்வரை சொல்லிக்கொண்டிருக்கலாம். அதாவது வேறு கார்யங்களுக்குப் போகாமல் பெருமாளுக்குச் சம்பந்தப்பட்ட கார்யங்கள், கைங்கர்யங்கள் நாம் பண்ணிக்கொண்டு இருக்கலாம். தளிகை ஆனபின் தொடர்ந்து திருவாராதனம் பண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top