பகவானுக்கு தாஸன் என்பது நமது ஸ்வரூபம். அதற்கேற்றால் போல் சாஸ்த்ரம் சொன்ன ரீதியில் 12 திருமண் இட்டுக்கொள்ளுதல், வஸ்த்ரம் உடுத்திக் கொள்ளுதல், முதலியவை தேவை.
இவைதான் ஸ்வரூபத்துடன் இருத்தல் என்று சொல்கிறார்கள்.
பகவானுக்கு தாஸன் என்கிற நம் ஸ்வரூபத்திற்கேற்ற வேஷம் தரிக்க வேண்டும் அது இல்லாவிட்டால் நாம், நம் ஸ்வரூபத்தை உணரவில்லை என்று அர்த்தமாகிவிடும்.
குறிப்புகள்:
ஒருகாலத்தில் அனைவருமே சிகையுடன் இருந்தார்கள் இன்று காலதேச அர்த்தபாரங்களை அனுசரித்து பலபேர் அதை வைத்துக்கொள்வது இல்லை.
குறைந்தபக்ஷம் கச்சம் உடுத்திக்கொண்டு 12 திருமண் இட்டு கொண்டு ஸ்வரூபத்துடன் தான் திருவாராதனம், பித்ரு கர்மாக்கள், காலக்ஷேபம்கேட்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

