தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த ஆகாரம் என்று சாஸ்த்ரம் வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த குறைவும் வராது நாம் சாஸ்த்ரத்தில் கூறியிருப்பதைச் செய்தால் போதும்.
குறிப்புகள்:
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ப்ரபத்தி ஆகி சுமங்கலியாகப் போயிருந்தால் சாக்ஷாத் மோக்ஷத்திற்குப் போய் விடுவாள். அதன் பின் அவளுக்குப் பசி தாகம் எதுவும் கிடையாது. நாம் செய்யும் தர்ப்பணத்தை எதிர்பார்த்து அந்த ஜீவன் இல்லை. நாம் தர்ப்பணம் பண்ணுவது அந்த ஜீவனுக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவைக் குறித்து.
நாம் செய்யும் தர்ப்பணாதிகளில் நம் தகப்பனாரையோ பாட்டனாரையோ உத்தேசித்துச் செய்கிறோம். ஆனால் அது அவர்களுக்குச் செய்வது இல்லை அவர்களுக்குள் அந்தர்யாமியாகிய இருக்கும் பரமாத்மாவிற்குச் செய்கிறோம்.