பொதுவாக தர்ப்பணம் செய்யும் போது இரண்டு வர்கங்களுக்கும் தர்ப்பணம் செய்கிறோம். சந்தேகம் என்னவென்றால், சுமங்கலியாக பரமபதித்த பார்யாளுக்கு மகன் ப்ரத்யாப்திக ஶ்ராத்தம் மட்டும் செய்கிறான். மற்ற தர்ப்பணாதிகள் செய்வதில்லை. பரமபதித்த மனைவியாகிற அந்த ஜீவனுக்குப் பிதா இருக்கும்போது அமாவாஸை தர்ப்பணாதிகள் அந்த ஜீவனுக்குச் செய்வதில்லை. பிதா தன்னுடைய பித்ரு மற்றும் மாத்ரு வர்கத்தக்கு மட்டும் தர்ப்பணம் செய்கிறான். சுமங்கலியாகப் பரமபதித்த அந்த ஜீவன் தன்னுடைய வர்கத்துடன் சபிண்டிகரணத்தில் சேர்ந்தாலும் அந்த ஜீவன் தர்ப்பணாதிகள் செய்யும்போது தனித்து விடப்படுகிறதா தன்னுடைய கணவன் பரமபதம் அடையும் வரை அதன் நிலை என்ன? பெரியோர்கள் விளக்கம் அளிக்க ப்ரார்த்திக்கிறேன்.

தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் எந்தெந்த சமயத்தில் எந்தெந்த ஆகாரம் என்று சாஸ்த்ரம் வகுத்துக்கொடுத்திருக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த குறைவும் வராது நாம் சாஸ்த்ரத்தில் கூறியிருப்பதைச் செய்தால் போதும்.
குறிப்புகள்:
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ப்ரபத்தி ஆகி சுமங்கலியாகப் போயிருந்தால் சாக்ஷாத் மோக்ஷத்திற்குப் போய் விடுவாள். அதன் பின் அவளுக்குப் பசி தாகம் எதுவும் கிடையாது. நாம் செய்யும் தர்ப்பணத்தை எதிர்பார்த்து அந்த ஜீவன் இல்லை. நாம் தர்ப்பணம் பண்ணுவது அந்த ஜீவனுக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவைக் குறித்து.
நாம் செய்யும் தர்ப்பணாதிகளில் நம் தகப்பனாரையோ பாட்டனாரையோ உத்தேசித்துச் செய்கிறோம். ஆனால் அது அவர்களுக்குச் செய்வது இல்லை அவர்களுக்குள் அந்தர்யாமியாகிய இருக்கும் பரமாத்மாவிற்குச் செய்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top