வ்ரத நாட்கள், பித்ருகார்ய நாட்கள், அமாவாஸை , மாசப்பிறப்பு போன்ற நாட்களில், புது வஸ்திரம் சாதாரணமாக தரித்துக்கொள்வதில்லை.
தீபாவளி, பொங்கல் அன்று மட்டும் விதிவிலக்கு. அந்த நாட்களில் அமாவாஸை, மாசப்பிறப்பு வந்தாலும், குறிப்பாக தீபாவளி அன்று கண்டிப்பாக புது வஸ்திரம் தரித்துக்கொள்ளவேண்டும். பொங்கல் அன்றும் புது வஸ்திரம் உடுத்திக்கொள்ளும் பழக்கம் சில க்ரஹங்களில் உண்டு.

