ஒரு தேங்காயை உடைத்து ஒரு மூடியை மட்டும் உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் அந்த மற்றொரு மூடியை உபயோகப்படுத்தி பெருமாளுக்கு அம்சை பண்ணுவது வழக்கமில்லை. ஒரு தேங்காயை உடைத்து விட்டோமேயானால் அன்றே அதைப் பூர்த்தியாக உபயோகப்படுத்த முடிந்தால் அந்தப் பதார்த்தங்களை எம்பெருமானுக்கு அம்சை பண்ணலாம்.
அப்படி முழுவதுமாக உபயோகப்படுத்த முடியாமல் மீந்துவிட்டால், அதை பகவானுக்கு அம்சைப்பண்ணிய பிறகு, வேறு பதார்த்தங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்:
ஒரு மூடி என்பது தனித்து இருக்கக்கூடியதுதான். அதனால் உபயோகப்படுத்தாத மற்றொரு மூடியை அடுத்த நாள் தளிகையில் சேர்த்து பெருமாளுக்கு அம்சை பண்ணுவது சில க்ரஹங்களில் வழக்கத்தில் உள்ளது. அதனால் அவரவருடைய க்ருஹ வழக்கத்தை கடைப்பிடிப்பதே உசிதம்.