ஸ்த்ரீ தர்மம் பற்றிய சில கேள்விகள்: குறிப்பாக ரஜஸ்வலா காலம் பற்றியது அடியேனுக்கு உடல் ரிதீயாக சில பிரச்சனைகாள் இருப்பதால் என் ரஜஸ்வலா காலம் 4 முதல் 30 நாட்கள் கூட நீள்கின்றது. அப்படியிருக்க அடியேன் அக்காலம் முழுவதும் ஒதுங்க வேண்டுமா? இல்லை 4 நாட்கள் மட்டும் ஒதுங்கி இருந்தால் போதுமா? அடியேன் 5 நாட்களுக்குப் பின் தளிகை செய்யலாமா? அடியேன் 5 நாட்களுக்குப் பின் பெருமாள் திருவாராதனை பாத்திரங்களை சுத்தம் செய்யலாமா? இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எது சரியான முறை என்று வழிக்காட்டவும். அடியேன்.

ரஜஸ்வலா காலம் 4 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நீடிக்கும்பொழுது, சாஸ்த்ரப்படி முதல் மூன்று இரவுகள் ஒதுங்கி இருந்து, நான்காவது நாள் ஸ்நானம் செய்து விட்டு உள்ளே வருகின்றோம். அந்த நான்காவது நாளே விழுப்புக்குச்சமானம் தான். அந்த நான்கு நாட்களுக்குப்பிறகு, சரீரத்தில் சிரமம் இருந்தாலும் ஒதுங்க வேண்டிய அவசியமில்லை.
15 நாட்கள் வரை ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. 16 மற்றும் 17வது நாளில், நான்காவது நாள் போல் விழுப்புக் கணக்கில் இருக்கவேண்டும்.
17 நாட்களுக்கு மேலும் சரீர சிரமம் இருந்தால், விலகி இருத்தல் வேண்டும். இந்த க்ரமத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
பெருமாள் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, பெருமாள் சந்நிதியில் விளக்கு ஏற்றுவது இவையெல்லாம் நம் மனதுக்கு ஒப்பவில்லையென்றால் அவற்றைச் செய்யாமல் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. சாஸ்த்ரப்படி தடையில்லை என்றாலும், அது அவரவர் மனதைப் பொருத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top